‘மல்லி …’
கூப்பிடும் சத்தம் கேட்கிறது. ஆனால் ஆளைக் காணவில்லை. சின்னக் கக்கூசு. இதுக்குள்ள ஆரு ஒளிந்திருக்கமுடியும்? நான் சுற்றிச் சுற்றிப்பார்க்கிறேன். ம்ஹூம். மீண்டும் கொமெண்டியபடியே ஒண்டுக்கடிக்க ஆரம்பித்தேன்.
‘மல்லி உன்னைத்தான்’
அப்போதுதான் கவனித்தேன். கொமெடுக்குப் பின்னாலிருந்துதான் சத்தம் கேட்டது. அங்கே ஒரு சின்னக் கரப்பான் பூச்சி. தலைகீழாகப் பிரண்டுகிடந்து துடித்துக்கொண்டிருந்தது.
ஆச்சரியத்துடன் நான் கரப்பானிடம் கேட்டேன்.
‘நீயா பேசியது?’
‘யெஸ் யெஸ் … நான்தான் கடவுள், உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்தேன்..’