Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 494

சமாதானத்தின் கதை : புதிய வெளியீடு

$
0
0



ஆதிரை வெளியீடாக நான் எழுதிய ‘சமாதானத்தின் கதை’ என்கின்ற நூல் இப்போது கடைகளில் கிடைக்கிறது.
000
கதைகளைச் சொல்லாமலேயே விட்டுவிட்டால் என்ன என்று எண்ணிய காலமது. சொல்லாத கதைகள் எப்போதுமே எம்மோடு அமுங்கியபடி கூடவே இருக்கின்றன. இரகசியங்களைப்போல. சொல்லியபின் அவை எம்மைவிட்டுப் பறந்துபோய்விடும். பின்னர் கூப்பிட்டாலும் அவை செவிமடுப்பதில்லை. எப்போதேனும் தெருவோரம் யாரோ அவற்றைக்கூட்டிச்செல்லும்போது எம் வாசலை எட்டிப்பார்ப்பதோடு சரி. அதற்குமேல் அவற்றுக்கும் எமக்குமான உறவு நெருங்குவதேயில்லை.
“சமாதானத்தின் கதை” நூலில் உள்ள பதினொரு கதைகளும் எப்போதோ என்னோடு கோபித்துக்கொண்டு பிரிந்துபோன கதைகள். அவற்றை மீள எழுதும்போது நிரம்பிய அன்பும் அதற்கும்மேலாகச் சண்டையும் அவற்றோடு பிடிக்கவேண்டியிருந்தது. சில கதைகள் வளர்ந்தும் இன்னும் பல ஒடுங்கியும் கிடந்தன. ‘விசையறு பந்து’ மதுவந்திகாவைக் காணும்போது புதிதாக இருந்தது. ‘தூங்காத இரவு வேண்டும்’ சிவலிங்கத்தின் வாழ்வை நினைத்துப்பார்க்கவே ஒரு கலக்கம் வந்துபோனது. கிட்டத்தட்ட ஒரு நான்கைந்து மாதங்கள் இக்கதைகளின் களங்களிலும் கதை மாந்தரோடும் செலவிட்ட காலைப்பொழுதுகள் இனிமேல் வராது என்றெண்ணுகையில் ஏன் இவற்றைப் பறக்க அனுமதித்தோம் என்று கவலையே பிறக்கிறது.
000
‘சமாதானத்தின் கதை’யை தானே வெளியிடுகிறேன் என்று முன்வந்த ‘ஆதிரை வெளியீடு’ சயந்தனுக்கு (Sayanthan Kathir) நன்றி. இக்கதைகள்மீதும் வாசகவெளிமீதும் அதீத நம்பிக்கைவைத்து செய்யும் முயற்சி இது. இதில் என்னுடைய பங்கு கதைகளைக் கொடுத்தது மாத்திரம்தான். சயந்தன் இந்த வெளியீட்டுக்கு கடந்த ஒர் மாதத்துக்கும்மேலாகப் பட்ட அவதியை அறிவேன். இப்போது ‘சமாதானத்தின் கதை’ சென்னைப்புத்தகக் கண்காட்சியிலும் யாழ்ப்பாணம் வெண்பா புத்தக நிலையத்திலும் அவுஸ்திரேலியாவிலும் கிடைக்கிறது. புத்தகங்கள் வாங்கி வாசிக்கப்பட்டாலேயே ஒரு வெளியீட்டாளராக சயந்தன் எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைக்கும். படலைக்குத் தொடர்ந்து ஆதரவு தருகின்ற வாசகர்கள் ‘சமாதானத்தின் கதை’ நூலையும் வாங்கி வாசித்து மற்றவரிடமும் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இக்கதைகளில் சிலவற்றை முன்னர் வெளியிட்ட ‘புதிய சொல்’, ‘ஆக்காட்டி’, ‘காலச்சுவடு’, ‘ஜீவநதி’, ‘இளவேனில்’ ஆகிய சஞ்சிகைகளுக்கு நன்றி. கதைகளை ஒரு தொகுப்பாக முதலில் வாசித்து கருத்துகள் பகிர்ந்த Shanthi Sivakumar க்கும் நன்றி.
“சமாதானத்தின் கதை” - ஜேகே
ஆதிரை வெளியீடு
அட்டைப்பட புகைப்படம் - வைதேகி Vythehi Narendran
அட்டைப்பட வடிவமைப்பு - சத்யன்
லே அவுட் - ஜீவமணி
பின்னட்டைப் புகைப்படம் - கேதா Ketharasarma Ledchumanasarma
புத்தக விநியோகம் - வெண்பா புத்தக நிலையம், இலங்கை. Discovery Book Palace, சென்னை.
தற்பொழுது புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்.
சென்னையில் : Discovery Book Palace

சென்னைப் புத்தகக் கண்காட்சி : - அரங்கு எண் F - 26
அவுஸ்திரேலியாவில் : ஜேகே - 📞 0403406013
இலங்கையில் : வெண்பா புத்தக நிலையம் - 📞 021 2 225090
000
இனி இது உங்கட சோலி . சொல்லிட்டன்.



Viewing all articles
Browse latest Browse all 494

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>