1990ம் ஆண்டு.
நமசிவாயம் மாமா, அப்போது ஒரு பிரபல பாடசாலையில் கணித ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். கந்தர்மடம் சனசமூக நிலையத்தலைவர். ரெயில்வே ரோட்டுக்கு பக்கத்தில் இரண்டு வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் “சாமி”யாடும் கோயிலின் தர்மகர்த்தா. இப்படி ஊரிலே அவருக்கு பல பதவிகள். மாமாவை அவ்வப்போது பரமேஸ்வராச்சந்தி கூப்பன் கடையிலும் காணலாம். மனேஜருக்கு பக்கத்தில் தகரக்கதிரை ஒன்ரைப்ப்போட்டு உட்கார்ந்திருப்பார். ஆட்களுக்கு கொமெண்ட் அடிப்பார். கியூ வரிசை குழம்பினால், சரத்தை மடித்துக்கட்டி, நாலு ஏச்சுப்போட்டு சரிப்பண்ணிவிடுவார். மனேஜர் சாப்பிடப்போகின்ற சமயங்களில் பில் போடுவார். கந்தர்மடம் பிள்ளையார் கோயில் திருவிழாவில் சாமி வீதியுலா வரும்போது, கும்பம் வைத்து சுண்டல், வடை எல்லாம் கொடுப்பார்.
நமசிவாயம் மாமா அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை.
மேலும் வாசிக்க »“இந்தச்சனத்துக்கு நாம செய்யாம வேற ஆரு செய்யிறது?”