அன்புள்ள சுகாசினிக்கு!
எங்கள் ஊரிலே தம்பிமுத்து அண்ணர் என்று ஒருவர் இருந்தார். அவர் எப்போதுமே வெற்றிலையும் கையுமாய்த் திரியும் ஆள். நாற்பது வருடங்களாக யாழ்ப்பாணத்திலேயே வண்டி ஒட்டிய கேஸ். நாற்பத்தொரு வயதில் அவருக்கு கனடா போகும் ஆசை வந்துவிட்டது. எப்படியோ சுத்துமாத்து பண்ணி, இயக்கத்திடம் பாஸ் எடுத்து கொழும்பு வந்துவிட்டார்.
கொழும்பு பற்றி உங்களுக்கு தெரியுமோ தெரியாது. "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்து சில காட்சிகளும், சென்யோரே பாட்டும் அங்குதான் எடுக்கப்பட்டது. ஷூட்டிங்குக்கு இயக்குனர் வரவில்லை. அவர் இந்தியாவில் மட்டுமே ஷூட்டிங் பண்ணுவேன் என்று சபதம் எடுத்திருப்பவர். அதனால் படக்குழுவை அனுப்பி ஷூட் பண்ணியிருப்பார். நீங்களும் படம் பார்த்திருப்பீர்கள்! கருமுகிழ் தாங்கிய மலை சூழ்மாங்குளம், சண்முகம் சிவலிங்கம் கவிதை, கொழும்பு தமிழ்சங்கத்தில் இஞ்சினியர் எழுத்தாளர் பேசினது எல்லாம் உங்களுக்கு மறந்திருக்காது என்று நினைக்கிறேன்.
இந்தக் கதையும் கொழும்புலதான் நடந்தது.