“The present determines the past”
-- Veera’s Theorem
இன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில் இன்னொரு ஆயிரம் தடவைகள். “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” -- வீராவின் விதி. என்னாலேயே நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் சரி பார்த்துவிட்டேன். நிறுவல்கள் எல்லாமே சரியாக இருக்கின்றன. உலகத்தில் அத்தனை விஞ்ஞானிகளாலும் கணித மேதைகளாலும் தீர்க்கமுடியாமல் தண்ணி காட்டிகொண்டிருந்த நிறுவல். உலகத்தையே புரட்டிப்போடப்போகின்ற சமன்பாடு. என் கைகளில். மொத்தமாக முன்னூற்றுப்பத்து பக்கங்கள். உலகமே வீராஸ் விதி என்று அலறப்போகிறது.
யோசித்துப்பார்க்கவே ... உள்ளயிருந்து ஸ்ஸ்ஸ் என்று ஒரு பட்டாம்பூச்சி.
“நீ சாதிச்சிட்டாய் வீரேயிங்கம்”
வரும் வாரங்களில் எல்லாமே நான் நினைப்பதுபோல சரியாக அமைந்துவிட்டால் பேராசிரியர் வீரசிங்கம் என்ற பெயர் விஞ்ஞான உலகின் தவிர்க்கமுடியாத பெயராக அமைந்துவிடும். உலகின் அத்தனை மூலைகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்தும் உரையாற்ற அழைப்புகள், டெட் டோக், பட்டங்கள், கௌரவ பேராசிரியர் பதவிகள் தேடிவரும். முயன்றால் லூக்கேசியன் பேராசிரியராகக்கூட நியமிக்கப்படுவேன். ஆளாளுக்கு விருது வழங்கி கையில் வேல் தந்து கௌரவிப்பார்கள். எலிசபெத் மகாராணி சொக்ஸ் போடாமல் கை தருவார். பேஸ்புக்கில் தமிழனை தலை நிமிரச்செய்தவன் என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான ஷெயார்கள் கிடைக்கும். பத்திரிகை, டிவியில் என் பேட்டி வரும். அடுத்த வருடமே நோபல் பரிசு எந்த அரசியல் பண்ணாமலேயே கிடைக்கும். அக்ஸப்டன்ஸ் ஸ்பீச் தயார் பண்ண வேண்டும். திருக்குறள் ஒன்றோடு முடிக்கவேண்டும். வேண்டாம். வீராஸ் தியரத்தையே சொல்லலாம்.
மேலும் வாசிக்க »“வினை அறுப்பவன் வினை விதைப்பான்”