Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 494

ஊரோச்சம் : வட்டக்கச்சி 1

$
0
0

ADseventeen ROAD (1)

நன்றாக இருட்டி விட்டிருந்தது. படகிலே ஒரு நாற்பது ஐம்பது பேர் இருந்திருப்போம். எல்லோரும் கடல் தண்ணீர் தெறிக்காவண்ணம் துவாயையோ சாரத்தையோ சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தோம். ஒரு சிலர் ஒல்லிக்கோம்பைகளை இடுப்பில் கட்டியிருந்தனர். சிலர் இடுப்பில் தேங்காய் மட்டைகள். சந்நிதியானுக்கும் அம்மாளுக்கும் அவசர நேர்த்திகள் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. குழந்தைகள் அழ ஆரம்பித்திருந்தன. சிறுவர்கள் பாணும் வாழைப்பழமும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் எவருமே பேசவில்லை.  

அக்காவும் நானும் அம்மாவின் கைகளை இறுக்கப்பற்றியிருந்தோம். அல்லது அம்மாதான் எங்கள் கைகளை பற்றியிருந்தாரா என்று தெரியவில்லை. எம்மிடம் பேசுவதற்கு எதுவுமே இருக்கவில்லை. வாயைத் திறக்கும்போதெல்லாம் தாடைகள் தம்பாட்டுக்கு அடித்துக்கொண்டன. பயத்தாலும் மார்கழி கடல்காற்றின் குளிராலும் உடல் நடுங்கியது.   படகின் ஓரமாக கட்டப்பட்டிருந்த டயர்களில் பட்டுத்தெறிக்கும் கடலலைகளின் சத்தம்மட்டும் அவ்வப்போது உப்புத்தண்ணியோடு காதுகளில் விழுந்துகொண்டிருந்தது.

எம் படகுக்குப்பின்னே இரண்டு படகுகள் கட்டி இழுக்கப்பட்டு வந்தன. ஒரு படகு முழுதும் சைக்கிள்களும் சில மோட்டார் சைக்கிள்களும். மற்றையதில் பயணிகளின் சாமான் சக்கட்டுகள் குவிக்கப்பட்டு படங்கு ஒன்றினால் மூடிக்கட்டப்பட்டிருந்தது. எங்களது ஒரு ஒரேன்ஜ் கலர் சூட்கேஸ். இருட்டில் தெரியவில்லை. ஏற்றும்போது அதனை ஒழுங்காக அடுக்காமல் சும்மா மேலே வைத்தே கட்டினார்கள். புறப்படும்போதும் ஒரேன்ஞ் படங்கினூடாக பாவமாய் எட்டிப்பார்த்தது. படகு ஆடிய ஆட்டத்தில் அது கடலுக்குள் சரிந்து விழுந்துவிடுமோ என்று யோசனையாயிருந்தது. அதற்குள்தான் என் சொத்து அத்தனையும் இருக்கிறது. சில் புத்தகங்கள். உடுப்புகள். டபிள் கொம்பாஸ் பெட்டி. டெனிஸ் போல். பிக் மட்ச் தொப்பி. செஸ் போர்ட்…  சித்தி வாங்கித்தந்த சந்தனக்கட்டையில் செய்த ஒரு குட்டிப்பிள்ளையார். ஒவ்வொரு அலையின்போதும் படகு ஏறி விழுகையில் பிள்ளையாரும் கடலுக்குள் போயிடுவாரோ என்கின்ற கவலை எனக்கு.

மேலும் வாசிக்க »

Viewing all articles
Browse latest Browse all 494

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>