மேலும் வாசிக்க »கார்த்திகை என்ற அந்தச் சிறுவன் தனது கண்களில் நீர் படரப்பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் தனது கைகளை உயர்த்தியவாறு “ப ப ப ப ப” எனக்கத்திக் குழறியவாறே அந்த விளையாட்டை நிறுத்துமாறு சிறுவர்களிடம் சைகைகளால்மன்றாடினான்.
ஆனால் சிறுவர்கள் விளையாட்டை இலேசில் நிறுத்துவதாகயில்லை.அவர்கள் உண்மையிலேயே இராணுவமாகவும் புலிகளாகவும் சனங்களாகவும் காயம்பட்டவர்களாகவும் செத்தவர்களாகவும் உடல்களாகவும் இரத்தமாகவும் தசையாகவும் அந்தப்பெட்டிக்குள் சந்நதத்தில் இயங்கிக்கொண்டிருந்தனர்.
-- BOX கதைப் புத்தகம்