Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 498

மடொல் டூவா என்கின்ற கிராஞ்சி

$
0
0


சிங்கள இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு நாவல் மடொல் டூவா. நாற்பதுகளில் மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய இந்த நாவல் ஆங்கிலத்தில் அதே பெயரிலும் தமிழில் மடொல் தீவு என்றும் மொழிபெயர்க்கப்பட்டு இன்றைக்கும் பரவலாக வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கைக் கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்து ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்திலும் இந்த நூல் உள்ளடங்கியிருக்கிறது.

நாவலில் கதை இதுதான்.

ஒரு கிராமத்து முதலாளியின் மகனான ஏழு வயது உபாலி கினிவெலவும் அவர்களுடைய வீட்டு வேலைக்காரச் சிறுவனான ஜின்னாவும் சேர்ந்து அந்த ஊரிலே பல்வேறு குழப்படிகளைச் செய்கிறார்கள். அவன் தொல்லை தாங்கமுடியாமல், பாடசாலையை மாற்றி ஒரு ஆசிரியரின் வீட்டில் தங்க வைத்துப் படிப்பித்தாலும் உபாலியின் கொட்டம் அடங்குவதாகயில்லை. ஒரு நாள் உபாலியும் ஜின்னாவும் கிராமத்திலிருந்த ஓர்சார்ட் பண்ணைக்குள் புகுந்து அதை நாசமாக்குகிறார்கள். பின்னர் பொலிசில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவர்கள் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். அப்படி ஓடி வேறொரு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்யும்போது, அங்கு ஒடும் ஆற்றுக்கு மத்தியில் மனித நடமாட்டமில்லாத சதுப்பு மரக்காடுகளாலான தீவு ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அதுதான் மடொல் தீவு. அந்தத் தீவில் அடிக்கடி சிறு வெளிச்சம் தெரிகிறது என்றும் அங்கே ஒரு பேய் வாசம் செய்கிறது என்றும் கிராமத்தவரிடையே பேச்சு நிலவியதால் யாருமே அங்கு செல்வதில்லை. ஆனால் உபாலியும் ஜின்னாவும் தாம் வேலை செய்யும் தோட்டத்து முதலாளியின் உதவியோடு அங்கு சென்று நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பேய் வெளிச்சத்துக்குக் காரணம்கூட அந்தத் தீவில் ஒளிந்துவாழும் ஒரு தப்பியோடிய குற்றவாளி என்றும் கண்டுபிடிக்கிறார்கள். நாளடைவில் இவர்களோடு புஞ்சி மாத்தையா எனும் ஒரு சோம்பல்கார நலிந்த இளைஞனும் அந்தத் தீவுக்கு வந்து சேர்கிறான். ஈற்றில் மூவரும் சட்ட ரீதியான அனுமதி பெற்று அந்தத் தீவையே ஒரு விவசாயம் செழிக்கும் நிலமாக மாற்றிச் சிறப்பாக வாழ்கிறார்கள்.
மேலும் வாசிக்க »

Viewing all articles
Browse latest Browse all 498

Trending Articles


King Kong (2005) Tamil Dubbed Movie HD 720p Watch Online


திருச்சி அன்னை ஆசிரமத்தில் … …


சாதி ஓட்டுக்கு 40 கோடி நண்கொடை/சிக்கலில் திமுக/DMK/STALIN/BJP/THIRUMAVAL...


ஒரு குழந்தையை தத்தெடுத்து கொடுங்கள்: நடிகருக்கு மெசேஜ் அனுப்பிய நடிகை


ரேப் ஸ்பெசலிஸ்ட்


கவியோகி சுத்தானந்த பாரதியார்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


சகல காரிய சித்திக்கான கணபதி மந்திரங்கள்


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>