Quantcast
Channel: படலை
Viewing all 494 articles
Browse latest View live

எங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை

$
0
0

 

அவை வணக்கம்.

180437_495364482381_6536877_nதமிழுக்குள் என்னை ஆட்கொண்ட
எழுத்துக்கு வேந்தர் சுஜாதா
எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ்
இருவரையும் மனதார பணிந்து வணங்கி.

கூழுக்கு ஆசை கொண்டு ஓடி வந்த தேசத்திலே
ஆளுக்கு அடித்து பிடித்து அரங்கமைக்கும் காலத்திலே
கேசியிலே உருவெடுத்து மொத்த ஆஸிக்குமே புகழ் சேர்க்கும்
மாசற்ற மன்றமிதை நடத்துவதோ வெட்டி பேச்சு இல்லே.

தமிழுக்கு பாடை சாய்த்து பாலை ஊத்தும் நேரத்திலே
ஆடிக்கு பிறப்பு எண்டு கூழை ஊத்தி கொண்டாடுவது
காலத்தின் தேவையிது; அதில் கவியரங்கம் அமைத்து
என்னையும் சேர்த்தது மட்டும் தேவையற்ற வேலையது.

 

 

அவைத்தலைவர் கும்மி

அரங்குக்கு தலைவர் எவர் என்றபோது
எங்கட தம்பி கேதா தான்
இருக்கப்போறான் என்றார்கள்.
ஐயோ கேதாவா? என்று திடுக்கிட்டு போனேன்..
சின்ன பெடியன் ஆச்சே. சில்மிஷம் செய்வானே.
இல்லாள் இருக்கும் நேரத்திலும் இலியானாவை ரசிப்பானே!
இவனை நம்பி ஏறுவது
பட்டி இல்லாத வேட்டியோடு சட்டசபை செல்வது போல.
எப்போ அவிழ்ப்பான்? எங்கே அறுப்பான்?
அவனுக்கே தெரியாது – ஆனால்
தக்க சமயத்தில் கட்டியும் கொடுப்பான்!  - என்
கற்பனைகளை நிஜமாக்கிய தோழன்.

ஆஸியிலே இருக்கின்ற ஒரே ஆசு கவி என் நண்பன்
பேசும் போதே வார்த்தையிலே சந்தம் பொங்கும்,
பேராற்றல் வயப்பட்ட சொல் வேந்தன்.
அவன் சந்தத்தில் புதைந்திருக்கும் பொருள் புரிய
1075890_480870192005290_1488855121_nஜென்மங்கள நான்கு எடுக்கவேண்டும்.
இதயத்தில் நல்லான்.
எம்மிலும் இளையான்.
இன்றைக்கு இம்மன்றில்
இவன் எமக்கு சுவாமி நாதன்.

இவன் எழுதிக்குடுத்த கவிதை எல்லாம்
சொல்லி இங்கு முடித்துவிட்டேன்.
இனி எண்ட கவி கொஞ்ச நேரம்
சொல்லிபுட்டு போயிடுறன்.

என் செய்வேன்?

இங்கே கவி புனையும் புருடர்களோ
தங்கள் இலக்கியங்களுக்கு சேலை கட்டி
அவர்கள் முன்னே
கையை கட்டி
வாயை பொத்தி
மேடையில் மட்டும் புருடா விடும்
இரும்பொறை ஏந்திழைகள்.
இவர்கள் மத்தியில் மாட்டிய நானோ
பாவம் ஒரு இலக்கணப்பிழை.
இலக்கணப்பிழையை கொண்டாடுகின்ற
புதுக்கவிதையின் காதலன்!
காதலியின் வரவுக்காய்
படலையிலே காத்திருக்கும்
பரிதாபத்துக்குரிய இலக்கிய ஏழை.
என்னைப்போய் இல்லத்து
இலக்கியம் இயம்பு என்றால்
என் செய்வேன்?

ஏனிந்த தலைப்பு?

நானொரு முற்றங்கள் தொலைத்த
ஈழத்து இளைஞன் - என்
சமையலறையோ பிஃரிட்ஜுக்குள் இருக்கிறது.
படுக்கையறையுள் நுழைந்தாலோ புத்தகங்கள் மட்டுமே
என்னை காதலாய் பார்க்கிறது.
பூஜையறையின் கடவுள்களோ
எப்போது நான் போனாலும்
ஏளனமாய் சிரிக்கிறார்கள்.
எதுவுமே செய்வதில்லை.
IPKF-Srilanka01_Smallஇல்லை இல்லை
செய்வது எதுவுமே
எனக்கு தெரிவதில்லை - என்
வரவேற்பறையின் வெறுமை
இருளிடை ஏறி துரத்துகிறது.
ஒளிந்து கொள்ள இடம் தேடி
ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
இன்றைக்கு வீட்டில்.
அன்றைக்கு நாட்டில்.

ஓட்டம் எனக்கு புதிதல்ல.
எமக்கு புதிதல்ல.
ஏழு வயதில் இந்தியன் ஆர்மி துரத்தையிலே
நல்லூரடியில் தடக்கி விழுந்த
நாலு சிராய்ப்பின் தழும்பு இன்னும்
எந்தன் காலில் இருக்கிறது.
பதினைந்து வயதில் நாலு எட்டானது.
இருபதில் கன்னம் பழுத்தது.
துரத்தும்போதெல்லாம்
விழுந்து எழுந்து தொடர்ந்து ஓடினேனே ஒழிய
ஒரு கணமேனும்
நின்று நிமிர்ந்து திரும்பி
நேர்கொண்டு பார்த்திலேன்.
அரும்பு மீசையை கூட மழித்து விட்டு
ஐஸியை காட்டி முழித்து நிற்கும்
பயந்தாங்கொள்ளி இளைஞன் நான்.
இறங்கு கண்ணினன்.
வெறுங்கை நாற்றினன்.
விரல் நிலம் கிளைந்திட நிற்கையிலே
மண்டை கிறுகிறுக்கும்.
கோபம் வரும்.
கொஞ்சம் வீரமும் வரும்
கூடவே உயிர் போய்விடுமோ
என்ற பயமும் சேர்ந்துவரும்.

இன்றைக்கு மேடை ஏறி
வீட்டில் இலக்கியம் பேசுகிறேன்.
இப்போது புரிகிறது
ஏனிந்த தலைப்பு என்று!
துணிந்தவர்கள் இறந்தபின்னே பயந்தவர்கள் ஒன்று கூடி
படம் காட்ட வேணுமானால் வேறு தலைப்பு இங்கு ஏது?

எந்தன் அறை.

எங்கள் வீட்டு இலக்கியத்தை இட்டு கட்ட சொன்னவேளை
கற்பனைகள் வறண்டு நானும் ஒளிந்து கொண்ட ஒரே அறை.
அந்த சிறை போனபோது வாரி அணைத்து வாசம் கொடுத்து.
தண்ணீர் தெளித்து கூட எனக்கு ஐடியாவும் கொடுத்த அறை.
அந்த அறை? எந்த அறை?
அது எங்கள் வீட்டின் குளியலறை!

அறிமுகப்படலம்

சின்னவயதில் இந்த அறை
உயிர்காப்பான் உறவு முறை!
பொம்மர் வரும் ஷெல்லு வரும்
40039_420717221414_7043841_nபோது எல்லாம் பதுங்கும் அறை.
கள்ளன் பொலிஸ் விளையாட்டிலே
முதலில் லலியை போய் தேடும் அறை.
தவணை பரீட்சை ரிப்போர்ட் கார்ட்டு
அப்பா கையில் போகும்போது
அடிக்கு பயந்து நான் ஓடும் அறை.
இந்த அறை என்றைக்கும்
இருட்டாய் தான் எமக்கிருக்கும்.
வெளிச்சம் உள்ள நாட்களிலும்
உள்ள போயி உச்சி பார்த்தால்
லாம்பு விளக்கு புகை பிடித்து
கரி எல்லாம் படர்ந்திருக்கும்.

பாம்போடு மல்லுக்கட்டல்

எங்க ஊரில் குளியலறை கிணற்றுமேடை அருகிருக்கும்
அருகிருக்கும் நாவல்மர பழங்கள் விழுந்து பழுத்து கிடக்கும்
எம்மோடு குளிக்கவென்று கரப்பான் கூட்டம் கூடி இருக்கும் - உள்ளே
குடியிருந்த பாம்பு ஒன்று அரவம் கேட்டு படமெடுக்கும்.

படமெடுத்த பாம்ப பார்த்து எனக்கு ஒரு குலப்பன் வரும்
அடித்து பிடித்து அலறி ஓட கால் தடக்கி காயம் வரும்
அம்மா வந்து பார்த்திட்டு அம்மாளோட பாம்பென்று
அடிக்காம கலைக்கவெண்ணி அரிக்கன் லாம்பு எண்ணை ஊத்தும்.

நுழைவுப்படலம்

பாம்பு ஓடிப் போனபின்னே படத்தில் வரும் போலிஸ் போல
ஜிம்மி வந்து குலைத்துவிட்டு வீட்டை சுற்றி ஓடிவரும்
உள்ள போயி செக் பண்ணி டேஞ்சர் இல்லை எண்டபின்னே
கதவை தூக்கி சாய்த்துவிட்டு சரத்தை அதிலே கொளுவவேணும்.

குளிக்கும் போது என்னை பார்த்து பொட்டுப்பூச்சி வெட்கப்படும்.
புலிநகச்சிலந்தியோ எண்டு எனக்கு கொஞ்சம் டவுட்டு வரும்.
மறந்து போயி பைப்பை திறந்தா கரப்பான் பூச்சி வெளியே வரும்
வெளியே இருந்த காகம் வேறு சவுக்காரத்தை தூக்கிவிடும்!

குளியலறை யன்னல் தட்டில் சோப்பு ஷம்போ தட்டுப்படும்
சன்லைட்டும் லைப்போயும் இரட்டையர் போல் ஒட்டிக்கிடக்கும்
பற்பொடியும் ஊமல்உமியும் தரை பூரா விரவி இருக்கும்.
தீர்ந்து போன சிங்னல் பேஸ்டு கத்தரியால கடையப்படும்!

அம்மாவோடு சில்லெடுப்பு.

சில்லென்ற குளிரில வெள்ளன எழும்பி குளிப்பதெண்டா
சின்னனில எனக்கு பொல்லாத கள்ளம்.
நல்லெண்ணெய் கிண்ணத்தோடு அம்மா பின்னால் துரத்தும்போது
நெல்லிக்காய் மரத்தில் ஏறி ஒளிஞ்சுடுவன் கொப்பில் நானும்.

ஒரு கையில் கொக்கத்தடி,
மற்றக்கையில் விறகுக்கட்டை
கீழிருந்து அம்மா மேலே நோக்கி பார்க்கையிலே
மேலிருந்து சுப்பர் சொனிக் பதியிற ஒரு பீல் கிடைக்கும்!.

40039_420717326414_3334117_nமெல்ல நானும் இறங்கி வந்து
அம்மா கிட்டே நெருங்கி வந்து
காய்ச்சல் எண்டு கழுத்தை தொட்டு
காட்டுவேன் ஒரு தாளம்.

தென்னம் பொச்சு நூலை மூக்கில்
கொஞ்சம் நானும் ஓட்டிவிட்டு
ஹாச்சும் எண்டு தும்மி அம்மா
முட்டு வந்து விட்ட தென்று

முழுகினா இன்னும் கூடுமம்மா
மூண்டு நாளில் பரீட்சை அம்மா
இல்லாத நாட்டியம் எல்லாம்
ஆடி வேறு காட்டுவேன் அன்று!

எனக்கு முன்னே மூண்டு பெத்து
வளர்த்த அன்னை அவளல்லோ – எண்ட
அம்மாவை சுத்துவது
லேசுப்பட்ட வேலையில்லை.
பம்மாத்து காட்டாம
படலையை ஒருக்கா சாத்து எண்டு
ஊத்தை உடுப்பு கட்டோடு
கிணற்றடியில் வந்து நிப்பா.
தனக்கும் சேர்த்து இறை எண்டு
குறுக்குக் கட்டில் வந்து நிப்பா.
ஊத்தும் போது கொஞ்ச தண்ணி
கிணற்றுள் தெறித்து பறந்தாலோ
அப்பருக்கும் சேர்த்து – அஞ்சு
திட்டி வேறு தீர்த்திடுவா.

அம்மா பாசம்.

பத்து வாளி இறைச்சபின்னே திரும்பி நில்லு தம்பி எண்டு
பொச்சு மட்டை எடுத்து வந்து முதுகில் எனக்கு தேச்சிடுவா.
அம்மா
தேய்க்கும் போது சேர்த்த பாசம் – பசு
தன் குட்டியை நாக்கால் நக்கிடுமே
அந்த விலையற்ற தாய்ப்பாசம்!

இன்று
ஆஸி வந்து தேடி ஓடி உழைச்ச காசை எடுத்தபடி
ஊரு போய் பார்த்தாலே அங்கே எல்லாமே போயிட்டுது.

அம்மாவோட கிணற்றடியில் மல்லுக்கட்டும் தம்பி எங்கே?
அவ்வையும் முருகனுமாய் நாம் சில்லுக்கட்டிய நெல்லி எங்கே?
பாசத்தின் ஊற்றெல்லாம் தேசத்தில் தொலைத்துவிட்டு
பேஸ்புக்கில் அம்மாக்கு மதர்ஸ் டே விஷ் சொல்லும்
வேஸ்ட்டான இனமாக மாறிவிட்டோம் பார்த்தியளா!
இதுக்கு என்ன செய்வம் எண்டு கொஞ்சமேனும் யோசிப்பேளா?

 

கிணற்றடியில் கம்பன் விழா

வெட்ட வெளி, உச்சி வெய்யில்
உயரமான கிணற்று கட்டில்
தனிய நிண்டு குளிக்கும்போது –  எண்ட
கம்பன் விழா நடப்பதுண்டு.
இளையராஜா இசை விருந்தும்
பிற் போடாமல் இசைப்பதுண்டு!

காவாலி பயலோட கூத்தை நல்லா பார்த்தபடி
வேலியோர பனைகள் எல்லாம்
கைதட்டி குதூகலிக்கும்.
ஒரு பக்கம் நாய்க்குட்டி வாலாட்டாம தூக்கம் போடும்.
கழுத்துவெட்டி சேவல் கெக்கேன்னு கொக்கரிக்கும்.
மதில் மேல் பூனைகள் விழிகள் கெஞ்சி வீழும்.
கொய்யா மரத்தில் அணில்களோ - தன்பாட்டுக்கு
நெஸ்பிறே பைகளை பிரித்து கொறிக்கும்!
இந்த பக்கம் கம்பனோ
பாவம் தூக்கில் தொங்குவான்.

மிதிலைக்காட்சி!

முன் வீட்டு ராதா முற்றம் கூட்டையிலே
என் பாட்டு ராமனின் மிதிலை படலமாகும்.
அவள் கண்ணோடு கண்ணினை கவ்வ - கவ்வி
ஒன்றை ஒன்று உண்ணிட
உள்ளம் படபடக்கும்.
கால்கள் தகிட தகமி போடும்.
நிலை பெயராது உணர்வு ஒன்றிட
பூங்காற்று திரும்புமா எண்டு
ஒரு இசைப்பாட்டை எடுத்துவிடுவன்.

என்ன ஆச்சரியம்.
இவனுக்கும் எசப்பாட்டு கேட்கும்!
யாரது பூங்குயில் என்று ராதாவை தேடினால்
“கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க” எண்டு
புகைக்கூட்டு உச்சியிலே
வடை ஒண்டை கொறித்தபடி
அண்டங்காக்கா நிண்டு
என்ன பார்த்து சிரிக்கும்.
ராதாவோ முற்றம் கூட்டி ஒதுக்கி விட்டு
பத்தி கூட்ட சென்றுவிடுவாள்!

அரோகரா

கிணற்றடியில் குளிப்பு – அது
கின்னசு ரெக்கொர்டு.

கப்பி வாளி அள்ளி எடுத்து
கையில் பிடித்து வார்த்தபடி
மற்ற கையால் உடம்பு முழுதும்
ஊத்தை உலக்கும் விந்தையடி
அது ஒலிம்பிக்ஸில் வரவேண்டிய வித்தையடி!

வித்தையது விவரமாய் தெரியாது போனாலோ
கட்டிய இடுப்பு சாரம் அவசரத்தில் அவிழுந்துவிடும் - அந்தரங்கங்கள்
அடுத்தவீட்டின் விடுப்பு தேடும் ஆச்சிக்கு தெரிந்துவிடும்.
அக்கம் பக்கம் பூரா அரசல் புரசலா விஷயம் பரவிவிடும்.
அடுத்தநாள் டியூஷனிலே அபிராமி வேறு
அரோகரா எண்டு என்னை பார்த்து கும்பிடு போடும்.

குளியலறையில் காதலி

அந்த நிலை தாண்டி இந்த நாடு வந்த போது
கட்டிய வீட்டுக்குள்ளே குட்டியாய் குளியலறை.
நிலை கெட்ட மாந்தரின் நிர்வாணம் தாங்காமல்
எனக்கு நானே அடைத்துக்கொண்ட இனிய சிறை என் குளியலறை.

தினமும் நான் குளித்தபின்னே - முகத்தை
திரையில் பார்க்கையிலே இன்னும்
காணாத காதலி நின்று அங்கே கைகொட்டி சிரிப்பாளே.

அவளின் பெயரை கொஞ்சம் படிந்திருக்கும்
ஈரத்திலே எழுதையிலே
எனை அறியாமல் என் சிரிப்பு
வெட்கத்தோடு வெளிப்படுமே.

இவ்வறையில் நான் பேசும் பேச்சுகள் சொதப்புவதில்லை.
என்னோட பாட்டிண்ட சுருதி என்றும் பிசகியதில்லை
எந்தன் வீட்டு குளியலறை ஏர்டேல் சுப்பர் சிங்கரிலே
எந்த சீசன் என்றாலும் எனக்கு தான் வீடு வரும்!

அன்று பிறந்த குழந்தை.

குளியலறை
எனக்கொரு போதிமரம்.
குளித்து முடித்து அனுதினமும்
புத்தனாகவே நான் வெளிவருகிறேன்.
நிர்வாணா எனக்கு இங்கேயே கிடைக்கிறது.
என் கேள்விக்கு பதில்கள்
கேள்விகளாய் விரிகிறது.
நீர்த்திவலைகள் என்னை தழுவும்போது
அன்று பிறந்த குழந்தை ஆகிறேன்.

knifeநான் யார்? என்று கேட்கும் கேள்விக்கு
யாருமே இல்லடா என்று அது கழுவித்துடைக்கும்.
நான் நானாக இருக்க வைக்கும்.
நல்லவனாக வெளியே நடிக்க வைக்கும்.

குளியலறை
எனக்கொரு கோயில்- என்
கடவுள்கள் குடியிருக்கும் சுவாமியறை
என் தவறுகள் பலதினை தடுத்தாட்கொண்ட
தயாவான தத்துவன்களின் இருப்பிடம் - அவர்கள்
நான் குளிக்கும்போது என்னோடு குளிக்கிறார்கள்.
தலை துவட்டும்போது
துவாயை பார்த்துக்கோ என்கிறார்கள்!

குளியலறை
கடவுளும் மனிதனும் நிர்வாணமாய் இருக்கும் ஒரே அறை
இந்த அறையில் அரக்க பறக்க ஒருநாளும் குளிக்காதீர்கள்
அழுக்கு போனால் போதும் என்று நிறுத்தாதீர்கள்.
அலையும் மனம் அடங்கும் மட்டும்,
அகத்தூய்மை அடையுமட்டும்,
தண்ணி பில்லை யோசியாமல்,
தவமாய் தவமிருங்கள்!

உங்களை நீங்கள் உணர்வீர்கள்.

நன்றி வணக்கம்

**********************

அவுஸ்திரேலிய கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிக்கூழ் 2013 நிகழ்வின் போது வாசிக்கப்பட்ட கவிதை. “எங்கள் வீட்டில் இலக்கியம்” தலைப்பில் என்னையது “குளியலறை”. மொத்த கவியரங்கத்தையும் இங்கே காணலாம்.


போயின … போயின … துன்பங்கள்!

$
0
0

 

dentist-love-41

“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே”

சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான்.  “எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே” எனும்போது டிஷூ பொக்ஸில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து வாய் துடைத்தான். “கண்ணம்மா கண்ணம்மா” என்று ஸ்ரீனிவாசுடன் சேர்ந்து முணுமுணுத்தபடியே service.doBnExtract(req);    லைனை செலக்ட் பண்ணி Alt + Ins கீயை அழுத்தி try, catch block போட்டான். கைகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் டைப் பண்ணிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் பாடல் முடிந்ததை உணர்ந்தவனாய், மீண்டும் விண்டோ சுவிட்ச் பண்ணி, பாட்டை ரீபிளே பண்ணிவிட்டு, ரிப்பீட் மோடுக்கு மாற்றினான். ஜாவாவுக்கு திரும்பி லொகர் சேர்த்தான்.

டாஸ்க் பாரில் ஸ்கைப் ப்ளின்க் பண்ணியது. முன் டெஸ்க்கில் இருக்கும் ருச்சித் தான். இயர்போன் எடுக்காமலேயே நிமிர்ந்து என்ன? என்று அவனை பார்த்து தலை உயர்த்தினான். ருச்சித் ஏதோ சொன்னது போல, கேட்கவில்லை. iTunes ஐ pause பண்ணிவிட்டு மீண்டும் உயர்த்தினான்.

“யுவர் போஃன் இஸ் வைப்ரேட்டிங்”

“ஓ” என்றபடி அவனுக்கு “தாங்க்ஸ்” சொல்லிவிட்டு கவனித்தால் போனில் அம்மா. ஏழு மிஸ் கோல்கள், அவசரம் என்று சொன்னது. அம்மா அலுவலக நேரத்தில் கோல் பண்ணமாட்டாள். மெஷினை லொக் பண்ணி, மொனிட்டரை டேர்ன் ஓப் செய்துவிட்டு, மீட்டிங் ரூம் விரைந்தான். அம்மாவுக்கு ரிங் பண்ணினான்.

“என்னடா செய்து கொண்டிருந்தனி?”
“ஹலோ”
“ஹலோ கிடக்கட்டும் விடு .. பேர் மேகலா … டென்டிஸ்ட்  .. உன்னை போலவே மியூசிக் எண்டா..”
“ஹங் ஓன் .. ஹங் ஓன் .. பொறுங்கம்மா .. என்ன அடியுமில்லாம நுனியுமில்லாம ..”
“உண்ட அம்மாடா..”
“எனக்கேவா? .. என்னம்மா இதெல்லாம் .. ஹூ த ஹெல் இஸ் திஸ் மேகலா?”
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் தம்பி … இது நீ தேடிக்கொண்டிருந்தியே .. அந்த பிள்ளைடா”
“ஆ தட் கேர்ள் .. அப்பிடி ஒரு பொம்பிளையே இல்ல .. அது வந்து வெறும் ..”
“தெரியும் .. ஆ ஊ எண்டா பாரதிண்ட கண்ணம்மா எண்டுவாய்… நீ கொஞ்சம் பொறுமையா கேளேன்..”
“என்னம்மா இது .. இவ்வளவு அவசரமா இத இப்ப கதைக்கோணுமா?”
“விட்டா அப்பர் நாளைக்கே கலியாணம் நடத்திடுவார் .. உனக்கு பிள்ளைய தெரியவேண்டாமா? இல்லையா?”

குமரன் கண்ணாடி கதவால் வெளியே பார்த்தான். புரொஜெக்ட் டீம் ஸ்டாண்ட அப் மீட்டிங்குக்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். நேற்றைய கிளையன்ட் வேப்செர்விஸ் SSL செர்ட்டிபிகட் எக்ஸ்பையர் ஆனதை பிஎம் க்கு சொல்லவேண்டும் என்பது ஞாபகம் வந்தது. பம்பூ வேறு பெயில் ஆகி, ப்ச் .. நிறைய வேலைகள் இருக்கிறதே.

“லஞ்சுக்கு கதைக்கட்டா?”
“90% போருத்தமாம் .. ரகுநாத குருக்கள் பார்த்திட்டு அப்பாவை கட்டிப்பிடிச்சவராம்”
“ஆரு? அப்பா சொன்னாரா? கிழிஞ்சுது .. அவர் இப்பிடி கனக்க டைம் கட்டிப்பிடிச்சிருக்கிறார் அம்மா … அவங்கட சைட் ஒகேயாமா?”
“அதுக்கு முதல் நீ என்ன சொல்லுறாய்?”
“திங்கக்கிழமை காலமை இப்பிடி திடீரென்று கோல் பண்ணி சொன்னா எப்பிடி? ஆரெண்டே தெரியா..”
“ஷி இஸ் எ டென்டிஸ்ட் .. உன்னை விட ஐஞ்சு வயசு குறைவு .. இப்ப டிக்மென்ஸ் ரோட்ல இருக்கிற கிளினிக்ல ப்ராக்டீஸ் பண்ணுதாம் .. மேகலா தேவானந்தன்..”
“ஈபிடிபி யா?”
“கடவுளே .. கலியாண முற்றாகி தாலிகட்டும் மட்டும் நீ மௌனவிரதம் இருக்கிறியா ப்ளீஸ்?”

குமரன் சிரித்தான். அம்மாவுக்கு இந்த பதட்டத்திலும் இருக்கின்ற நகைச்சுவை உணர்வை பார்க்க வியப்பாக இருந்தது. இத்தனை வரிகளில் அந்த பெண்ணின் அழகு பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் இருந்தது பெருமையாக இருந்தது. “அம்மா” என்றான் தனக்குள்ளே. திடீரென்று அந்தப்பெண் அழகாக மீட்டிங் ரூமின் லைப்ரரி காபினை திறந்து கொண்டு வந்து நிற்பது போல தோன்றியது. “கண்ணம்மா” என்றான்.

“மேகலாடா”
“யியா .. ஐ நோ .. யோசிச்சிட்டு சொல்லட்டா?”
“அவங்களுக்கு நான் என்ன சொல்ல? ஒகேண்டு சொல்லட்டா?”
“யூ கிரேசி .. முதலில விசாரிப்பம் .. கிம்மி டூ டேஸ்”
“பேஸ்புக்ல இருக்கிறாவாம் .. நீ தானே பிஸி .. நேரம் கிடைக்காது .. சரி விடு .. இரவு கதைக்கிறன்”

“யூ .. நோட்டி அம்மா” என்று சிரித்தபடியே சொல்லிக்கொண்டு மீட்டிங் ரூமை விட்டு வெளியே வரும்போது மொத்த டீமும் இவனுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தது. முகம் முழுக்க சிரித்தபடி சொரி சொன்னான்.  புரொஜெக்ட் மனேஜர் ஹாய் கைஸ் சொல்லி ஆரம்பித்தார்.

டென்டிஸ்ட் குலோக் அணிந்தபடி.

&&&&&&&&&&&&&&

“மாப்பிள்ளைக்கு மீசையே இல்லையப்பா .. இவர போய் என்னெண்டு ..

ஐபாடில் முகத்தை சரியாகவே பார்க்காமல் மேகலா அப்பாவை முறைத்தாள். அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. சேர்ஜரி படிக்க தயாராகிக்கொண்டிருந்தவளிடம் திடீரென்று திருமணம் செய் என்றால் எப்படி இருக்கும். அதுவும் படத்தை பார்த்து. மேகலாவுக்கு அப்பாவிடம் கோபம் கோபமாய் வந்தது. நேற்று வரைக்கும் குட்டி, கண்ணுக்குட்டி என்றவர் திடீரென்று பிள்ளை, காலையில் மேகலா என்று கூட கூப்பிட்டிருந்தார். ஏறிக்கொண்டு வந்தது. யாரென்றே தெரியாதவன், என்ன ஏது ஒரு விவரமும் தெரியாது, வெறுமனே சாத்திரி பொருத்தம் என்று சொன்னால் நம்பிவிடுவதா? இதுக்கு பேசாமல் நான் லவ் பண்ணியே இருந்திருப்பேனே. டாம்ன். ஹூ த ஹெல் இஸ் ஹீ ஹா?

“குமரன் … அந்த .. நல்லூர் திருவிழா அல்பத்தில பார் … மீசை இருக்கு”

சொல்லியபடியே அப்பா மரனின் பேஸ்புக்கில் நல்லூர் திருவிழா அல்பத்தை ஓபன் பண்ணினார். குமரன் வேஷ்டி கட்டி சால்வை இல்லாமல் நெற்றி முழுக்க பட்டையோடு, தேர் இழுத்து முடித்த களையில், இளித்துக்கொண்டு நின்றான். தலைக்கு பின்னாலே ரெண்டு விரல் கொம்பு வேறு யாரோ காட்டிக்கொண்டிருந்தார்கள்.

“இத பாரு”

“வேண்டாம் .. பார்க்கமாட்டன் .. எனக்கு இப்ப என்ன அவசரம்? .. இப்ப .. ஒரு வருஷம் கூட பிராக்டீஸ் பண்ணி முடியேல்ல .. அங்கால சேர்ஜரி படிக்க லண்டன் போகோணும்.. ஒர்தோடோண்டிக்ஸ் செய்யப்போறன் .. குழப்பாதீங்க ப்ளீஸ்”

“நீ கலியாணம் கட்டீட்டும் படிக்கலாம் மேகலா .. அவர் ஜாவா ப்ரோகிராமர்”

“ப்ரோகிராமரா? ஓ மை கோட், … தே ஆர் லூசர்ஸ் அப்பா … எப்ப பார்த்தாலும் கோடிங் கோடிங் எண்டு .. ஒரு டேஸ்ட் இல்லாத ஆக்கள் .. கிளியை வளர்த்து பூனைண்ட கையில குடுக்கிறனெண்டு சொல்லுறீங்களே”

அப்பா சிரித்தார்.

“அவருக்கு ரகுமான் பிடிக்குமாம் .. பேஸ்புக்ல கிடக்கு”

“ஆருக்கு தான் ரகுமானை பிடிக்காது?”

“Before Sunrise எண்டு ஏதும் படம் வந்ததா? Favourite Movies ல அது கிடக்கு”

“அட கடவுளே .. அந்த படமா .. பேசி பேசி கொல்லுவாங்களே!”

“விஜய் பாஃன்”

“ஷிட்”

பிள்ளை, இப்பிடி ஷிட் எண்டு சொல்லுறத எல்லாம் இனி நிப்பாட்டுறியா? பொம்பிளை பிள்ளை இப்பிடியா கதைச்சுக்கொண்டு திரியிறது.

அம்மா குசினிக்குள் இருந்து புறுபுறுக்க,

“பார்த்தீங்களாப்பா? ஒரே நாளில எல்லாமே மாறீட்டுது .. அம்மா கூட .. நான் நானா கூட இருக்கேலாட்டி அந்த கலியாணம் என்னதுக்குப்பா?”

“எல்லாத்துக்கும் வேண்டாம் .. மாட்டன் எண்டு சொல்லாத .. இப்ப முடிவு பண்ண தேவையில்ல .. பிறகு யோசிச்சுட்டு சொல்லு ..”

சொல்லியபடியே திரும்பிப்பார்க்காமல் அப்பா எழுந்து உள்ளே போனார்.  மேகலா குழப்பத்தோடு வேலைக்கு புறப்பட தயாரானாள். குசினி போய் பேசாமல் அம்மா தயார் செய்திருந்த லஞ் பொக்ஸ் எடுத்து ஹாண்ட்பாக்கில் வைத்துவிட்டு, தெர்மோ பிளாக்ஸில் கோப்பி ஊற்றி நிரப்பினாள். பின்னர் உள்ளே போய் பிரஷ் எடுத்து பேஸ்ட் இல்லை என்று அப்பாவை ஒரு முறை திட்டிவிட்டு,  கத்திரிக்கோலால் பேஸ்ட்டை வெட்டி வழித்து எடுத்து பிரஷில் வைத்து பல்லு விளக்கியபடியே ஐபாடை சவுண்ட் சிஸ்டத்தில் டொக் பண்ணி பாட்டு போட்டாள். ஷானியா ட்வைன் “From This Moment” என்று ஆரம்பிக்க, கூட்டிவிட்டு, கிரைண்டர் போட்ட அம்மாவை, பாட்டு முடியும் மட்டும் மூச்சு காட்டக்கூடாது என்று வெருட்டி விட்டு, டவல் எடுத்து பாத்ரூம் விரைந்தாள்.

ஷவர் ஹீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. தண்ணீர் முகத்தில் பட்டு குளிர்ந்தது. “I give my hand to you with all my heart, can’t wait to live my life with you .. “ ஷானியாவோடு சேர்ந்து பாடினாள். பாட்டின் ஒருவித cry இவளுக்கும் தொத்தியது. ஷவரை கூட்டிவிட்டு தொடர்ந்து பாடினாள். ஹீட்டர் திடீரென்று வேலை செய்ய தொடங்கியது போல….  சடக்கென்று உடல் முழுதும் வெப்பம் படர்ந்து… அவனின்ட பெயர் என்ன .. குமரேஷ் …. ஷிட் நோ ..  குமரன் .. யெஸ் குமரன். “Before Sunrise” பிடிச்சிருக்கு ஆளுக்கு. Not bad ha. அப்பாவிடம் அவசரப்பட்டு பேசிவிட்டோமோ. ப்ச் … யாரென்று விசாரித்திருக்கலாமோ. ஒருவேளை அவனாக தான் இருந்துவிட்டால்? குமரன். யார் நீ? அவனா? அவரா .. .ஹூ த ஹெல் ஆர் யூ?

மேகலா அவசர அவசரமாக டவல் எடுத்து, துவட்டி, பாத்ரூமால் வெளியே வரும்போது அம்மா “என்னடி பாத்ரூமில கச்சேரியா? நேரம் போகுது” என்று கத்திக்கொண்டிருந்தார். பதில் சொல்லாமல் நீல நிற நைலக்ஸ் சாறி செலக்ட் பண்ணி சுற்றினாள். பின்னர் ஏதோ நினைப்பு வந்தவளாக வெள்ளை நிறத்தில் நீல போர்டர் போட்டதை எடுத்து கட்டினாள். அம்மா மீண்டும் கத்த தொடங்க “வாறன் அம்மா” என்று சொல்லியபடியே வோட்ச் கட்டி ஹாண்ட் பாக் எடுத்து, கழுத்து சங்கிலி ஓம் பெண்டனை தொட்டு “பிள்ளையாரப்பா” என்று கும்பிட்டுவிட்டு சாப்பிடாமலேயே புறப்பட்டாள். அப்பா நடு ஹோலில் வீரகேசரியோடு இருந்தார். வாசலில் சாண்டில்ஸ் போட்டுக்கொண்டிருந்தவள் “போயிட்டு வாறன்” என்றாள். இரண்டடி தள்ளிப்போயிருப்பாள். தயங்கியபடியே மீண்டும் திரும்பிவந்து …

“அப்பா..”

வீரகேசரியில் இருந்து  கண் எடுக்காமலேயே ம்ம் கொட்டினார்.

“குமரன்ட புல் நேம் என்னப்பா?”

வீரகேசரியை மடித்து ஸ்டூலில் வைத்துவிட்டு, முன்னே வந்து நின்று திடீரென்று வெட்கப்பட்டுக்கொண்டிருக்கும் மேகலாவை மெல்லிய புன்னகையுடன் பார்த்தபடியே பெயரை சொன்னார் அப்பா.

&&&&&&&&&&

“மேகலா தேவானந்தன் .. “ குமரன் நாற்பதாவது முறையாக பக்கத்து டெஸ்க்கில் இருந்த ரொஷாணி பார்க்காத சமயம் பார்த்து Facebook இல் டைப் பண்ணி ப்ரோபைல் போனான். Profile படத்தில் ஒரு வெள்ளைக்காரி இருந்தாள். ஜெர்க் ஆனான்.Photos of Mehala என்று graph search செய்ய ஐந்தாறு படங்கள் வந்தது. தூக்கி வாரிப்போட்டது. இவளா? அம்மா ஒரு வார்த்தை சொல்லாமல் போனாளே என்று கோபப்பட்டான்.  டெஸ்க்டொப்பில் படத்தை சேவ் பண்ணி ஓபன் பண்ணினால். Ctrl++ அழுத்தி அழுத்தி ஸூம் பண்ண, மேகலா கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் வியாபிக்க ஆரம்பித்தாள். எப்படி இது நிகழ்கிறது என்று புரியவில்லை. அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்” என்று பாரதி ரிப்பீட்டினான். இன்சேன் என்று குமரனின் வாய் முணுமுணுத்தது.

programmer-staring-at-computer

உள்ளே ஷானியா டவைன் பிடிக்கும் என்றிருந்தது. கூகிள் போய் ஷானியா டிவைன் யார் என்று தேடினான். இரண்டு பாட்டு டவுன்லோட் பண்ணி கேட்டான். நன்றாகவே இருந்தது. பொன்னியின் செல்வன், அப்துல் கலாம் என்று வரிசையாக இருக்க நிமிர்ந்து உட்கார்ந்தான். கோப்பியை உறிஞ்சியபடி டைம்லைனை உருட்டிக்கொண்டு போக, பிடித்த ஹீரோ என்ற கேள்விக்கு சூரியா என்று இருந்தது.  ஷிட்.

குமரனுக்கு டெஸ்ட் கேஸ் ஒன்றுமே ரன் பண்ணுவதாக காணும். பவுண்டரி கொண்டிஷன் லிஸ்ட் எழுதி முடிக்கவே ஒரு மணி நேரம் கடந்தது. அதற்குள் மூன்று தடவை Facebook, நான்கு தடவை Linkedin, கூகிள் சேர்ச்சில் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கிளிக் பண்ணி அடிக்கட்டை மட்டும் மேகலா பற்றி தேடிவிட்டான். மைன்ட்மப் போட்டான். அடிக்கடி பின்னாலே யாரும் போகும் சமயம் மாத்திரம் டெஸ்ட் கேஸை பெயில் ஆகும் என்று தெரிந்தும் ரன் பண்ணி தலையில் கைவைத்து யோசிப்பது போல பீலா விட்டான். மேகலா இரண்டு மணிநேரங்களில் யாதுமாகி நின்றாள்.

திடீரென்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக கூகிள் போய், டிக்மேன்ஸ் ரோடில் இருக்கும் டென்டல் கிளினிக் தேடி, பஸ் ரூட் கண்டுபிடித்து, பிஎம்மிடம், “ஏர்லி லஞ், கிரடிட் கார்ட் பில் பே பண்ணவேண்டும்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவன், ஒரு ஞாபகம் வந்தவனாக ஓட்டோ ஸ்டாண்டில் போய் முன்னுக்கு நின்ற ஓட்டோவில் ஏறி உட்கார்ந்தான்.

“டிக்மேன்ஸ் பாரட்ட யன்ன!”

&&&&&&&&&&&&

ஸீ யூ சொல்லி சிறீசேனவை அனுப்பிவிட்டு பிளாஸ்கில் இருந்த கோப்பியை கொஞ்சம் உரிஞ்சபடியே கொம்பியூட்டரில் அடுத்த பேஷன்ட் ஹிஸ்டரியை நோட்டம் விட்டாள் மேகலா. ஹிஸ்டரி பேஜ் வெறுமையாக இருந்தது. யாராவது பல்லுக்கொதி கேஸ் போல. அவசரத்துக்கு புடுங்க வந்திருக்கு. கவனிச்சு அனுப்பிடலாம் என்று தனக்குள் சிரித்தபடியே அசுவாரசியமாக மேலே கவனித்தாள். கிளீனிங் என்று இருந்தது. கிளீன் பண்ணுவதற்கு ஏன் முதன் முதலாக இங்கே வரவேண்டும் என்று பெயரை மேலோட்டமாக கவனித்தபடியே கோப்பி குடிக்… திடுக்கென்றது. ஷிட்.

இளங்குமரன் சிவசேகரம்.

dentist-042812-web

“ஜீசஸ் கிரைஸ்ட். இவன் அவனல்லோ.  இங்க எதுக்கு வந்திருக்கிறான். கடவுளே” மேகலா அசிஸ்டன்ட் தருணீயிடம் சொல்லிவிட்டு அவசரமாக ரெஸ்ட் ரூமுக்குள் ஓடினாள். நெஞ்சம் படபடத்தது. ஏன் இங்கே வந்திருக்கிறான்? தெரிஞ்சு தானே வந்திருப்பான்? கடவுளே. மீசை வச்சிருப்பானா? இல்லையா?  ரிசப்ஷனில் தான் இருப்பான். போய் பார்த்துவிட்டால் கண்டுபிடித்துவிடுவானே. ஸ்டிக்கர் பொட்டு வேறு இடக்கண் பக்கமாய் விலகி இருந்தது போல தெரிய சரி செய்தாள். ஹாண்ட்பாக்கில் இருந்து சீப்பு எடுத்து நீவி விட்டாள். நிவியா கிரீமை கைகளில் தடவி ஷைன் செய்தாள். தடவும் போது விரல்கள் தன்னாலே நடுங்கின. கடவுளே, டியூட்டியை மாத்துவமோ. டொக்டர் ராஜசூர்யா இருப்பாரா? ஐயோ அவர் கிளீனிக் செய்யமாட்டாரே. தருணி புதுசே. கொடுக்கமுடியாதே. சேலையின் ப்ளீட் சரி செய்தாள். ஒதுக்கினாள். முந்தானையை அப்படியே பின்னாலே சுற்றி எடுத்து இடுப்பில் கொண்டுவந்து செருகிப்பார்த்தாள். ம்ஹூம். சொதப்பல். மீண்டும் தழையவிட்டாள். கை கால் ஒன்றுமே ஓடவில்லை. அப்பாவுக்கு கோல் போட்டாள்.

“என்னடா இந்த டைம்ல”
“அவன் வந்திருக்கிறான் அப்பா”
“அவன்டா .. யாரு?”
“அதான்பா .. குமரன் … உங்கட இளங்குமரன்”
“ஓ அங்கேயே வந்திட்டாரா .. உன்னை விட பாஃஸ்டா இருக்கிறார் போல!”
“வந்தனிண்டா மூஞ்சில வந்து ஒரே குத்தா குத்துவன் சொல்லீட்டன் .. குறவர் கூட்டம்”
”சத்தியமா உன்னை பார்க்க வாறதா சொல்லேல்ல கண்ணம்மா?”
“அப்ப என்னண்டு இங்க வந்திருக்கிறார்?”
“மாப்பிள்ளைக்கு உன்னை நல்லா பிடிச்சிருக்கு போல..”
“மாப்பிள்ளையா .. லூசாப்பா நீங்க?”
“சரி விடு கண்ணம்மா .. கிளீன் பண்ண தானே வந்திருக்கிறார்? பண்ணீட்டு அனுப்பீடேன்”
“பண்ணுறன் பண்ணுறன் .. பல்லையே புடுங்கீட்டு அனுப்புறன்!”
“பார்த்துடி…”

அப்பா பேசும்போதே போனை கட் பண்ணிவிட்டு, மீண்டும் ஒரு முறை நெற்றிப்பொட்டை கவனித்தாள். வலக்கண் பக்கமாக விலகியிருந்தது. சரி செய்தாள். திரும்பி வாசல் புறம் நடந்தவள், மீண்டும் உள்ளே போய், டோய்லட் அறைக்குள் தண்ணியை பிளஷ் பண்ணிவிட்டு வெளியேறி கிளினிக் ரூமுக்குள் நுழைந்தாள்.  கொம்பியூட்டர் ஸ்க்ரீனை டபிள் செக் பண்ணீட்டு தருணியை த்ரில் சிஸில், மவுத் மிரர் எல்லாம் தயார் படுத்த சொல்லிவிட்டு நெக்ஸ்ட் ப்ளீஸ் என்று சொல்லி திரும்ப ….

கதவடியில் நின்று சிரித்தான் குமரன். “ஒல்மொஸ்ட் சிக்ஸ் வரும். ஹீல்ஸ் போட்டிடலாம்” என்று நினைத்துவிட்டு “ச்சீ என்ன இது” என்று பல்லை கடித்தாள்.

“ஹாய் டொக்டர் மேகலா”

மேகலா குமரனை படபடப்பாக நோட்டம் விட்டாள்.

மீசை இருந்தும் இல்லாமலும் இருந்தது. ரெண்டு நாளைக்கு முதல் ஷேவ் செய்திருக்கவேண்டும். டிஷர்ட் ஜீப் என்றது. டெனிம் ஜீன்ஸ். சப்பாத்து வீக்கென்ட் கிரிக்கட் கிரவுண்டில் சேறு என்று சொல்லியது. எல்லாத்திலும் ஒரு வித உதாசீனம் திரிந்தது. ஹாண்ட்போனை கையில் வைத்து உருட்டியபடி இருந்தான். கையில் வோட்ச் இல்லை.

“ஹாய் … டொக்டர் மேகலா”

குமரன் இரண்டாம் தடவை ஹாய் சொன்னபோது சுயநினைவுக்கு வந்தவளாய் இவனை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தாள்.

“ஹாய் .. மிஸ்டர் இலங்குமரன் சிவசேக..”
“’ல’ னா பிரச்சனையா?”
“வாட்?”
“கோல் மீ குமரன்”
“ஹாய் .. குமரன் … ப்ளீஸ் டேக் யுவர் சீட் .. லை டவுன் .. அண்ட் .. தருணி..”

சொல்லிவிட்டு மேகலா மீண்டும் மொனிட்டரை திரும்பிப்பார்த்தாள். முகம் முழுதுமாய் சிரித்தது. தலையில் மெதுவாக அடித்து, அங்கும் இங்கும் அசைத்துவிட்டு மீண்டும் திரும்பிப்பார்க்க,  குமரனுக்கு தருணி பாதுகாப்பு கண்ணாடி அணியக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.

கண்ணாடிக்குள்ளால் நெருங்கி வந்து உட்கார்ந்த மேகலாவை கண்வெட்டாமல் பார்ப்பது குமரனுக்கு வசதியாக இருந்தது. சீரியஸாக இருந்தாலும் சிரிப்பாள் போல தெரிந்தது. கொஞ்சம் தலைக்கு அடங்காத தலைமயிரை கட்டுப்படுத்த ஒன்றுக்கு ரெண்டு கிளிப் போட்டு காப் போட்டிருந்தாள். தருணி ஏதோ தமிழில் சொல்ல, இவள் அதற்கு சிரித்தபடியே மவுத் மிரரை வாங்கும்போது ஐயோடா என்றது. அவன் கவனித்துவிட்டான் என்று அறிந்தவுடன் சிரிப்போடு வெட்கமும் சேர்ந்துகொள்ள கொஞ்சம் யன்னல் பக்கம் பார்த்து வெட்கப்பட்டுவிட்டு இவனிடம் திரும்பினாள். அம்மாவுக்கு அப்போதே கோல் பண்ணி “தெய்வமே” என்று சொல்லவேண்டும் போல இருந்தது. சிரித்தான்.

விளங்கிவிட்டது. கள்ளன். கண்ணாடியை போட்டபடி நான் கண்டுபிடிக்கமாட்டேன் என்று நினைத்து என்னை கவனிக்கிறான். பிடுங்கித்தின்றது. தருணியிடம் நம்பர் 23 என்றாள். இவன் இப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தான். கிராதகன். எக்ஸ்ப்ளோரரையும் மிரரையும் கிட்ட கொண்டுபோய்,

“ஆ எண்டுங்க”
“நான் ஆருக்குமே இது வரைக்கும் பல்லு காட்டினதில்ல மேடம் .. உங்களிட்ட தான் .. ”

தருணி கிளுக் என்று சிரித்தாள். மேடம் என்று இந்தியா தமிழில் நக்கலாக சொல்லுகிறான் என்று புரிந்தது. எக்ஸ்கியூஸ் மீ சொல்லிவிட்டு ரூமுக்கு வெளியே வந்து அப்பாவுக்கு அடித்தாள்.

“சிரிக்கிறான் அப்பா”
“நல்லது தானே ..”
“கண்ணாடியால உத்து உத்து பாக்கிறானே”
“அது கறுப்பு கண்ணாடியா .. அதான்”
“சரியான லொள்ளு கேஸ் அப்பா”
“அப்படி எண்டா ஒன்று செய் .. தலையிடி எண்டு சொல்லி வெளிய வா .. வேற டொக்டர் பார்க்கட்டும்”
“இல்ல இல்ல .. சரி வந்திட்டான் .. என்னவோ சமாளிச்சு அனுப்புறன்.. நீங்க போனை வையுங்க”

சொல்லியபடி போனை கட் பண்ணும்போது அப்பா அம்மாவிடம் சிரித்தபடி ஏதோ சொல்லியது கேட்டது. கோபத்துடன் உள்ளே நுழைந்த போது, அவன் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஆர் யூ ஒல்ரைட் மேகலா?”

“டொக்டர் மேகலா”வில் டொக்டர் காணாமல் போயிருந்ததை மேகலா கவனிக்க தவறவில்லை. ஒன்றும் பேசாமல் ஒவ்வொரு பல்லாக பார்த்தாள். எல்லாமே கிளீனாக இருந்தது. கவிட்டி கூட போர்ம் பண்ணி இல்லை. ஒரே ஒரு பல்லு தான், சாதுவாக, படு பாவி. என்னை பார்க்கத்தான் வந்திருக்கிறான். வெறுமனே கிளீன் பண்ணி தருணியிடம் சக்கிங் பைப் வாங்கி தானே அவன் வாயில் வைத்து குளோஸ் பண்ண சொன்னாள். டிஷூ குடுத்து எழும்ப சொன்னபோது.

“ஸோ ஒகே யா?”
“பெக் யூ எ பார்டன்?”
“எண்ட பல்லு எல்லாம் ஒகே யா? ஏதாவது பிரச்சனை?’
“இருக்கே .. லோவர் ரைட் தேர்ட் டிகே ஆயிட்டு .. நேர்வை டச் பண்ண போகுது .. பெர்மனன்ட் பில்லிங் செய்யோணும்”
“அப்ப ஈவினிங் ப்ரீயா இருப்பீங்களா?”
“எக்ஸ்கியூஸ் மீ”
“இண்டைக்கே முடிவு பண்ணினா நல்லம் இல்லையா.. நேர்வை டச் பண்ணீடும் எண்டு நீங்க தானே சொன்னீங்க!”

இராட்சசன். Before Sunrise ரசிகன் ஆயிற்றே. இப்பிடி தான் லொள்ளு பண்ணுவான். இவனை என்ன செய்வது.

“ம்ம்ம் .. மே பி .. வெள்ளிக்கிழமை வாங்களேன் .. ஒரு முடிவு பண்ணிடலாம்!”

மேகலா சிரித்துக்கொண்டே சொல்ல, குமரன் டிஷூவால் வாயை துடைத்தபடியே தாங்க்ஸ் சொல்லிவிட்டு. தயங்கினான்.

“என்ன பேமென்டா? கவுண்டர்ல செய்யுங்க .. “
“இல்ல .. நான் ஆர் எண்டு .. உங்களுக்கு ”
“நீங்க ஆரு?”
“வந்து அம்மா தான் .. நீங்க .. மேகலா .. அந்த காற்று வெளியிடை .. யூ நோ .. பாரதியார்”

குமரன் தடக்கினான்.

“பாரதியாருக்கு என்ன?”
“சொறி .. எனக்கு கோர்வையாய் பேச தெரியாது .. நேரடியாகவே கேட்கிறேன்”
“சொல்லுங்க .. இட்ஸ் ஒகே”

மேகலாவுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. கை கால் உதறியது.

“ஆ ஊ என்று எவ்வளவோ கதைக்கிறம் .. பட் .. ஒரு வார்த்தை வருதில்ல ..ஒல்ரைட் .. அம்மாக்கு நான் என்ன சொல்ல?”

“உங்கட அம்மாக்கு? .. ஓ .. பல்லு அவ்வளவு பிரச்சனை இல்ல .. நல்லா தான் இருக்கு எண்டு சொல்லுங்க!”

இருவருமே சிரித்தார்கள். சிரிக்கும்போது மேகலா தேவதைகள் எல்லாமே இவளைப்போல தானே இருக்கும் என்று குமரன் யோசித்தான்.

“தாங்யூ மேகலா… .. தான்ங் கோட்”
“நம்பவே முடியேல்ல … நம்புவீங்களா?”

சிரித்தபடியே ஸீ யூ சொல்லி தயங்கி தயங்கி திரும்பி நடந்தவனை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள். திரும்படா .. திரும்படா.. திரும்படா .. கள்ளன். அமுசடக்கி. வேண்டுமென்று திரும்பமாட்டான். கதவை தாண்டி நடந்தவனை மேகலா மீண்டும் ரெண்டடி முன்னே போய் அழைத்தாள்.

“ஹேய் .. குமரன்”

திரும்பினான். என்ன? என்று தலை உயர்த்தினான்.

“அப்பாக்கு நான் என்ன சொல்ல?”

மேகலா கேட்க .. யோசித்துவிட்டு அவன் சிரித்தபடியே சொன்னான்.

“அவனுக்கு பல்லை நல்லா புடுங்கீட்டன் எண்டு சொல்லுங்க!”

இதை கேட்ட மேகலா தன்னையறியாமல் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்க அவளையே விழி வெட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் குமரன்.

ப்ப்பா….

&&&&&&&&&&&&&&&&&&

கதையில் பயன்படுத்தப்பட்ட பாடல்கள்:
காற்று வெளியிடை கண்ணம்மா
From this moment.

அவளேகினான்.

$
0
0


மௌனங்கள் வெட்கப்பட்டு பேச ஆரம்பிக்கின்றன.
இறைவர்கள் இமயத்தின் குளிர் தாங்கோணாமல்
1214_10151382156725791_1804901319_nஅவதாரங்களுக்கு தயாராகின்றனர்.
சூரியன் தீக்குளித்தவன் போல
வெப்பம் மேலேறி அலறுகிறான்.
தேவதைகள் ஒளிந்துகொள்ள இடம் தேடி
பதுங்குகுழிகள் தேடுகின்றார்கள்.

அவள் வருகிறாள்.

சித்தார்த்தர்கள் போதிமரத்து
குயிலிசையில் மயங்குகிறார்கள்.
ராஜாவின் வீட்டுக்கு ரகுமான் விரைகிறார்.
வரவேற்பரையிலோ வைரமுத்து.
எறும்புக்கும் கவிதை வருகிறது.

அவனிடம் வருகிறாள்.

சமயலறை வெந்நீர் கொதிக்கமாட்டேன்
என்று அடம்பிடிக்கிறது.
அவளுக்கான பருக்கை சோற்றோடு
அட்சய பாத்திரம் அப்படியே காத்து கிடக்கிறது.
மகிழூந்தின் பக்கத்து இருக்கை அனிச்சையாய் தூசு தட்டப்படுகிறது!
அகலிகை பயம் இன்றி கற்களில் பாதம் படுத்த முடிகிறது.
அறிவும் அறியாதனவும் அச்சம் அகற்றுகின்றன.

அவள் வந்து விடுவாள்.

943213_10151629082745791_880369636_nதோற்றவனை பார்த்து
"இன்று போய் நாளை வரவா?"
என்று மனம் பண்படுகிறது.
இந்த இப் புள்ளிக்கான கோட்டை
திரும்பி பார்க்கையில்
எதிர்கால துன்பங்களில்
நம்பிக்கை துளிர் விடுகிறது.
எதை நீ கொண்டுவந்தாய்? என்பவனிடம்
உனக்கெதுக்கு எல்லாமே? என்று கேட்க தோன்றுகிறது.

"எப்போதாவது காதலித்திருக்கிறாயா?"
நான் கேட்கும்போது மட்டும்
காடு விழுந்து விழுந்து சிரிக்கிறது.

அவளேகினான்.

வியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே

$
0
0

 

mqdefault

அதிகாலை இரண்டு மணி. பயங்கரமான மழை இருட்டு. டொக்.டொக்.டொக்.

“ஆருடா இந்த டைமில தட்டுறது?” என்று நினைத்தபடி கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால் வெளியே முப்பது பல்லு பளிச்சிட்டது. கஜன் தான். ஷேர்ட் ஏதும் போடாமல் வெற்று மேலோடு. கதவை திறந்தேன்.  கறுப்பு ஜீன்ஸ் போட்டிருந்திருக்கலாம். போடாமலும் விட்டிருக்கலாம். கவனிக்கவில்லை. காரணம் பக்கத்திலேயே .. என்ர கடவுளே. நம்ம ஸ்ருதி.

இஸிட்? நிஜமாகவே ஸ்ருதிஹாசன் தான். அடக்க ஒடுக்கமாக நாணிக்கோணி, ஒரு கையில் சூட்கேஸுடன். டைட் ஜீன்ஸ், லூஸ் டீஷேர்ட் போட்டு அதன் நுனியை அடிக்கடி ஜீன்ஸ் இடுப்புவரைக்கும் இழுத்துவிட்டு … “அண்ணா” என்றாள். ச்சே...

அப்போது தான் கவனித்தேன். தாலிக்கொடி வேறு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. அதை வினாடிக்கொருதரம் கண்களில் எடுத்து ஒற்றிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் கஜன் அதையும் பார்த்து, என்னையும் பார்த்து மீண்டும் இளித்தான். தலையில் அடித்துக்கொண்டேன்.

“என்னடா இது?”
“ஸ்ருதி மச்சான் .. நிறைய நாள் ட்ரை பண்ணினான்டா”
“இப்ப சேர்ந்திட்டா?”
“பாடிப்பார்த்தன் … போயிட்டுது”
”என்ன பாட்டு?”
“தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி”
“கட்டியிருக்கே”
“அதுவா …  இந்த பொண்ணு .. மூணு பட ஷூட்டிங்கில நின்னுகிட்டிருந்துது. தனுஷ காணேல்லியாம் .. அழுதுக்கிட்டு மெரீனா பீச் பக்கம் அலைஞ்சுதா? நானும் பார்த்தனா? பிரியா இருந்தா கண்ணாலம் பண்ணிக்கலாமானு கேட்டேன் .. வந்துட்டுது”

சொல்லிக்கொண்டிருக்கும்போது திடீரென்று கீழே படிக்கட்டில் கட கடவென்று சத்தம் கேட்க கஜன் அவசரப்பட்டான். இந்தியத்தமிழ் பதட்டத்தில் ஈழத்தமிழ் ஆனது.

“டேய் கதைவைத்திறவடா .. அவங்கள் துரத்திறாங்கள்.”
“அவங்கள் எண்டா யாருடா?”
“அதான் … சேரனும் .. சந்திக்கடைல நிண்டு தேத்தண்ணி குடிக்கிற அமீரும் ..”

எட்டிப்பார்த்தேன். கத்தி கோடாலியோடு ஆட்கள் ஓடிவருவது தெரிந்தது. சேரன் ஒவ்வொரு படியிலும் தள்ளாடி தள்ளாடி அழுதபடியே வந்துகொண்டிருந்தார். “அடி பாரதி கண்ணம்மா இது பாழ் பட்ட மண்ணம்மா” என்று கைகளால் கண்ணிரண்டையும் மூடி குலுங்கினார்.

“என்னடா மச்சி நீ பாட வேண்டிய பாட்ட அந்தாள் பாடுது”

நான் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்ருதி கையில் இருந்த ஷாப்பிங் பாக்கோடு அவசரத்தில் உள்ளே நுழைய காஞ்சிபுரம் சேலை கதவு பிடியில் பட்டு டர்ர்ரென்று அறுந்தது. அதை எடுத்து விட்டபடியே கஜனும் பின்னாலே நுழைந்து கதவை உள்ளே தாழ்பாள் போட்டான். வேட்டியை காணவில்லை.

“இப்ப என்ன செய்யிறது கஜன்?”
”டைம் இல்ல மச்சான் .. முக்கியமான செக்ஷனை மட்டும் பார்க்கலாம்”
”என்ன பாடமெண்டாவது தெரியுமா?”

அஜீக்கு போன் பண்ணினான். பேசினான். கேட்டான். முகம் பிரகாசித்தது.

“டேய் .. அம்மா கணவாய் கறி வச்சிருக்கிறாவாம் .. ஒருக்கா போய் சாப்பிட்டு வருவமா?”
”பாடம் என்னவாம்டா?”
”தெரியாதாம் மச்சி. அவன் வழமை போல பாமினியை கொப்பி அடிக்கபோறானாம்”
”அது சரிவராது கஜன். படிச்சிட்டு போவம்.. ஏதாவது ஒரு பாடம் சொல்லு”
”தேர்மோ டைனமிக்ஸ்?”
”ஷிட் .. துண்டா படிக்கேல்ல மச்சான் .. இப்ப என்ன செய்யிறது”
”உன்னட்ட நோட்ஸ் இருக்கா?”
”அந்த பாடம் என்ரோல் பண்ணினதே தெரியாது”
”ம்ம்ம் … அப்பிடி எண்டா இக்கொனமிக்ஸ் படிப்பம்”
”டேய் .. அது ஒரு மண்ணுக்கும் தெரியாது..”
”உன்னால ஆடேல்லாது .. நீயே சூஸ் பண்ணு”
”குவாண்டம் எப்பிடி?”
”நான் அஜியை கொப்பி அடிக்கப்போறன்டா”

“இல்ல மச்சான், சப்பை மாட்டார்டா.. குவாண்டம் கடவுள் எல்லாம் போட்டு குழப்பி அடிக்கலாம் .. இப்ப பாரு
”ஒன்றே எனின் ஒன்றே ஆம்
பல என்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே எனின் அன்றே ஆம்
ஆமே எனின் ஆமேயாம்
இன்றே எனின் இன்றே ஆம்
உளது உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை”

”மொக்கை கவிதை மச்சி, ஆனைக்கும் அடி சறுக்கும் .. எறும்புக்கு ஏன் வேண்டாத ஆசை?”
”இது கம்பராமாயணம்டா”
“ஓ .. அப்ப நல்லா இருக்கு .. கடவுள் தத்துவம் சுப்பர்டா .. கடவுள் இருகார்டா கோமாரு … கௌசல்யா அக்கா கோல் பண்ணினவா?”
”தம்பி ஒரே ஒரு கரண்டி சாப்பிடுங்க .. வளர்ற பெடியன்”
”எப்ப அக்கா கனடாவில இருந்து வந்தனீங்கள்?  .. எனக்கு வாழ்க்கைல மூன்று பேரிண்ட சமையல் தான் பிடிக்கும்”
”ஆரு தம்பி அவை?”
”அம்மா .. அக்கா .. மற்றது ..”
”கௌசல்யா … காமாட்சி, டேய் குமரன் .. இளந்தாரிபெடியள் .. எல்லாரும் ஓடுங்கோ .. ஊருக்க ஆமி பூந்திட்டான் .. ஓடுங்கோ ஓடுங்கோ”

ஒழுங்கை பூராக அல்லோகல்லப்பட்டது. சனம் கொஞ்சம் நகை நட்டை அவசரமாக கோழிக்கூட்டு மாஸ் டின்னுக்குள் ஒளித்துவைக்க ஓடின. நாய்கள் ஊளை இட்டன. ஸ்ருதி சேலையை மாற்றி சோட்டியை போட்டுக்கொண்டு வர, கஜன் சாரத்துக்கு மாறியிருந்தான். இருவருமே மாமரத்து பங்கருக்குள் ஓடி தகரத்தால் இழுத்து மூடினார்கள்.

“டேய் வெங்கலாந்தி, ஆமி வந்தா எவனாவது பங்கருக்க ஓடுவானா?”

நான் சொல்லிவிட்டு தின்னவேலிப்பக்கமாக ஓட ஆரம்பித்தேன். தூரத்தில் துவக்குச்சத்தம் கேட்டது. ஒரு ஓட்டோ அப்புகாமி பெத்தெடுத்ததை நிறுத்திவிட்டு  “அன்பார்ந்த தமிழீழ மக்களே” என்றது. “இவங்கள் வேற” என்று மிச்சத்துக்கு அன்னமா கிழவி வள்ளுவர் எழுத மறந்த குறளை எடுத்து வீசியபடியே ஓடியது.  நானும் ஓடினேன். ஓடிக்கொண்டே இருந்தேன். தபால் பெட்டி சந்திவந்துவிட்டது. இதுக்கு மேலே ஓட முடியாது. ட்ரெட்மில்லை பார்த்தேன்.  பதினோண்டில விட்டிட்டு ஓடியிருக்கிறேன். இருநூறு கலோரி எரிஞ்சிருக்கும். ஆமி கிட்ட வந்துவிட்டான். அவன் எப்பிடியும் பன்னிரண்டில் துரத்தியிருக்கவேண்டும். வரும் வழியில் சிவத்திரன் அண்ணாவின் அண்ணாவை சுட்டு போடுவது தெரிந்தது. கத்தமுடியாது. தபால் பெட்டிக்கு பின்னால் 83-riots3-436x343ஒளிந்திருக்கிறோமே. கண்டுபிடித்துவிடுவானா? பெட்டிக்கு பின்னால் பெரிதாக ஒன்றையும் மறைக்கமுடியவில்லை. ஒடுங்கிப்பார்த்தேன். முடியவில்லை.  பெட்டியை கொஞ்சம் பெரிதாக்க தொடங்கினேன். இப்போது ஒகே. உடம்பை மறைத்தாயிற்று. தலை மட்டும் தான் வெளியே. இட்ஸ் ஓகே. அவன் என்னை கண்டுவிட்டானா என்று பார்ப்பதற்கு எப்படியோ தலையை  வெளியே நீட்டதானே வேண்டும்? நினைத்துகொண்டிருக்கும்போது சடக்கென்று ஒரு கை என் தோளை பிடித்து கீழே பதித்தது. பார்த்தால் மனீஷா கொய்ராலா. பொட்டு வைக்காமல், சல்வார் முக்காடு போட்டு, அவிச்ச இறால் கணக்கா, கண்ணிலே எப்போதுமே முந்தநாள் இரவு டக்கீலா அடிச்சு மட்டையான ஒரு சோகம் குடி இருந்தது.


“பயமா இருக்கா?”
”பயமா? பயத்தை பற்றி உனக்கென்ன தெரியும்”

ஆர்மி சுட்டுக்கொண்டு வந்தான். சங்கக்கடை பெரேராவை பிடிச்சு போஸ்ட்டில கட்டிவிட்டு ஏதோ மிரட்டிக்கொண்டிருந்தான்.

“ஐயோ எனக்கு தண்ணி வேண்டாம் .. சோடா காணும்.. இனி தண்ணி தாங்க எண்டு கேக்க மாட்டன் விட்டிடுடுங்க .. ஐயோ ஐயோ”

“டப்” என்று சத்தம் கேட்க பெரேரா சரிந்தான். “தண்ணீ ஐயோ தண்ணீ.. விடாய்க்குது” என்று பிதற்றிக்கொண்டிருக்க இன்னொடு “டப்” பில் ஊமையானான். அதைக்கண்ட பயத்தில் “ஆ” என்று நான் கத்த ஆர்மி என்னை திரும்பி பார்த்துவிட்டான். சுடப்போறான். கடவுளே. அம்மாளாச்சி. சுட்டா படக்கூடாது. கடவுளே. சொல்லிக்கொண்டிருந்த நேரம் பார்த்து என்னை மனீஷா இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பிக்கிறாள். ஏ ஆர் ரகுமான் ஒலிம்பிக்ஸ் ஸ்டேடியத்தில் புகைகளுக்கு மத்தியில் மேலெழுகிறார். ஊஊஊஊஊஊஊஊ.

uyirae1cl”இருபூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே”

குண்டு வெடிக்கிறது. மனீஷா இழுத்துக்கொண்டு ஓடுகிறாள்.

“தில்சேரே தில்சேரே .. தில்சேரே தில்சேரே”

என்றபடி நெருப்பு பந்தத்தை விலத்திவிட்டு மனீஷா பார்த்தால் அதே காந்தக்கண்கள். ஆர்மி துரத்துகிறான். கூட்டிக்கொண்டு ஓடினேன்.

ச ச நி நி |  நி நி நி ப நி | ம ம நி நி| ம ம நி ப ப நி
ச ச நி நி | நி நி நி ப நி | ம ம நி நி| ம ம நி ப ப நி

ஓடி ஓடி, சிக் சிக் சாங் சிக் சாங், ஓட்டம், மனிஷாவின் சாண்டில்ஸ் அறுந்து விழுகிறது, ஓடுகிறோம். மக்கர் மாஸ்டர் வீடு பின்வளவால் நுழைந்து முன் ஒழுங்கைக்கு போய், முத்துத்தம்பி பள்ளிக்கூடத்துக்க போனா சனத்தோட சேர்ந்திடலாம். ஆடியபாதம் ரோட்டு கடக்கோணும். வன் டூ த்ரீ போர். கூட்டம் ரகுமானோடு சேர்ந்து அலறுகிறது.  .. உன்னோடு நான் கண்ட பந்தம். எட்டிப்பார்த்தாள். ஆர்மி. மெயின் ரோட்டால் வந்துவிட்டான். கடவுளே. உன்னோடு நான் கண்ட பந்தம். மனீஷாவை பார்க்கிறேன். மண்ணோடு மழை கொண்ட பந்தம். ஆர்மி கண்டுவிட்டான். மனீஷாவை பார்க்கிறேன். அவள் கண்கள் தீட்சாயாண்மாக சலனமில்லாமல் இருந்தது. காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும். என் கைப்பிடியை தளர்த்திக்கொண்டு நடக்க ஆரம்பித்த்தாள்.

போகாத .. போகாத பிளீஸ்.

போனாள். போகாத பிளீஸ். திரும்பி ஸ்லோ மோஷனில் சிரித்துக்கொண்டு, ப்ளீஸ் போகாத. ஆர்மிக்காரன் ஐயோ .. பார்த்திட்டான். அதே மோகனப்புன்னகை.

பேரன்பே உந்தன் நினைவு,
என் கண்ணை சுற்றும் கனவு.
இது உயிரை திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு.

சடக்கென்று திடுக்கிட்டு எழுந்தேன். திரும்பிப்பார்த்தாள் மேகலா நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள். தட்டினேன். முழித்தாள். பார்த்தாள். முழித்தாள்.

என்னடா இப்பிடி வேர்த்திருக்கிது? கனவு கண்டியா? ஆரு சமந்தா?

பேசவில்லை.

“ஹேய் .. ஆர் யூ ஓகே? என்ன சொல்லு?”
”உன் துன்பம் என்பது வரவு” இதுக்கு அர்த்தம் என்னடி?.

சிரித்தாள்.

“சும்மா படுடா”
”சொல்லு .. தல வெடிச்சிடும் போல”

மேகலா ஒருகணம் கண்ணைமூடி யோசித்துவிட்டு சொன்னாள்.

லூஸா.. அதாண்டா பாட்டே .. சந்தோஷ கண்ணீரே!

&&&&&&&&&&


கனவு காணுங்கள் Guys

காசி ஆனந்தன் தொட்டு அப்துல்கலாம் வரை ஆ ஊ என்றால் கனவு காண சொல்லுவார்கள். தெரிந்து தான் சொன்னார்களா தெரியாது. ஆனால் கனவு என்பது கண்ணால் காண்பது தானாம். கனவுகள் நித்திரையின் Rapid Eye Movement (REM) நிலையின் போது தான் உருவாகிறது என்கிறார்கள்.  அந்த நேரம் மூளை கவேகமாக, நாம் முழித்திருக்கும்போது இயங்குவது போல இயங்குமாம். கண்கள் கிடுகிடு என்று அசையுமாம். அதாவது கனவின் போது கண் காட்சிகளை டிவியில் பார்ப்பது போல இமையை மூடியபடியே பார்க்கிறது என்கிறார்கள். அப்படிப்பார்ப்பதால் வருகின்ற தூண்டல்களால் தான் மூளை பரபரப்பாக அந்த சமயம் இயங்குகிறது.

இப்படி மூளை இயங்குவதால் தான் சில நேரம் எங்களுக்கு வியர்க்கிறது. படக்கென்று எழும்பி தாகமெடுத்து தண்ணீர் குடிக்கிறோம். குமரனுக்கு ட்ரேட் மில்லில் ஓடும் களைப்பு வருகிறதே கதையில். இந்த விஷயம் தான்.  அது இருக்கட்டும்.

dream-theater-art-print

எங்கிருந்து இந்த கனவு உருவாகிறது? கனவு உருவாவதற்கான மூலங்கள் பற்றி பல வித ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இது தான் சரி என்று எவராலும் இன்னமும் நிறுவமுடியவில்லை. ஆனால் இருக்கும் தியரிகளுக்குள் ஜீ ஷாங் என்றவரின் Continual Activation Theory கொஞ்சம் லோஜிக்களாக இருக்கிறது.  விளங்கப்படுத்த ட்ரை பண்ணுகிறேன்.

எங்கள் மூளையில் நாளாந்த நடவடிக்கைகளை, நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தும் சுயநினைவுப்பிரிவு இருக்கிறது. அதை Conscious related memory (declarative memory) என்கிறார்கள். மற்றையது ரோட்டால போற மொக்கை பொண்ணை பார்த்தாலும் உள்ளுக்க ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்று சொல்லுமே. அது. Unconscious related memory(procedural memory). பெயரை விடுங்கள். சிம்பிளா சொல்லப்போனாள். சுயநினைவு, ஆழ்மனது நினைவு. இந்த இரண்டும் எப்படி தூக்கத்தின் போது தொழிற்படுகிறது என்பதை பொறுத்து தான் கனவு இடம்பெறுகிறதாம்.

Buckle up guys.

முன்னம் சொன்னேனே, REM, நித்திரை, அதாவது அடித்துபோடும் நித்திரை, அப்போது ஆழ் மனதின் நினைவுகள், அந்த டீப் மெமரி கொஞ்சம் பிஸியாக வேலை செய்யுமாம். அதே நேரம் உடல் ஓய்வில் இருப்பதால்,  சுயநினைவு மெமரிக்கான இன்புட்டுகள் குறைந்து இருக்குமாதலால் அந்த மெமரி கொஞ்சம் சுவரில சாவகாசமா சாய்ந்து ரெஸ்ட் எடுக்கும். இப்ப என்ன நடக்குது என்றால், ஆழ்மனதில் அலை அடித்துக்கொண்டிருக்கும் மெமரி சிக்னல்கள் சுயநினைவு பக்கம் ஓவர்ப்ஃளோ பண்ணப்படுது. அதனாலே ரெஸ்ட் எடுக்கின்ற சுயநினைவு மெமரி விழித்துக்கொள்கிறது. தனக்கு உடலில் இருந்து பிசிக்களாக தான் இன்புட் வருகிறது என்று தவறாக நினைத்துக்கொள்கிறது. விளைவு, மூளை முழுதும் சிக்னல்கள் பறக்கின்றன. மூளைக்கு மட்டும்தான். ஆர்மி வாறான் என்று ஓடச்சொல்கிறது. ஸ்ருதியை கட்டிக்கொண்டு வந்த கஜனை பொறாமையாய் பார்க்கசொல்கிறது. எக்ஸாமுக்கு படிக்கவில்லையே என்ற ஆழ்மனது தாக்கம் சுயநினைவு மெமரியில் தூண்டப்படுகிறது. காட்சியின் சிக்னல்கள் கண்ணுக்கு போய், reverse engineering மூலம் கண் காட்சியை காண ஆரம்பிக்கிறது. கனவின் போது உடல் ஒரு வேலையும் செய்வதில்லையே ஒழிய ஆழ்மனதின் தூண்டுதலால், சுயநினைவு, உடல் வேலை செய்கிறது என்றே நினைத்துக்கொள்கிறது. வியர்க்கிறது. நாவு வரள்கிறது. You get it?

REM-sleep

ஆக ஒரு கட்டத்தில் இந்த ஆட்டம் எல்லை மீறி, டென்ஷனாகி, புற இச்சைகளை உருவாக்கி, தாகமெடுத்து தண்ணீர் குடித்தே ஆகவேண்டுமென்ற நிலை வர, படக்கென்று கண் விழித்து, வியர்த்து விதிர்விதிர்த்து போய் செம்பில் தண்ணி வார்த்து மொண்டு மொண்டு குடிக்கும்போது, குறை கனவில் எழுந்ததால், உங்களுக்கு ஸ்டில் கனவு ஞாபகம் இருக்கும். ஏனெனில் சிக்னல்கள் இப்போது சுயநினைவில் இருக்கின்றன. ஆனால் எழும்பாமல் அப்படியே தூங்கிவிட்டிருந்தால் அதிகாலையில் எல்லாமே மறந்துபோயிருப்பீர்கள்.

Night at the museum படத்தை இந்த விஷயத்தோடு ஒப்பிட்டு யோசித்துப்பாருங்கள்.ஸ்ட்ரைக் பண்ணும்.


நானும் ஓர் கனவோ?

கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன தத்துவ அறிஞர் தான் கந்தசாமி. (உண்மை பெயர் Zhuang Zhouஐ தமிழில் எழுதினால் ஸ்கிப் பண்ணி விடுவீர்கள்). அவருடைய “Zhuangziஎன்ற தத்துவ நூல் மிக பிரபலம்.  அந்த புத்தகத்தில் “வண்ணத்துப்பூச்சியின் கனவு” என்று ஒன்று வருகிறது.

Once Zhuangzi dreamt he was a butterfly, a butterfly flitting and fluttering around, happy with himself and doing as he pleased. He didn't know he was Zhuangzi. Suddenly he woke up and there he was, solid and unmistakable Zhuangzi. But he didn't know if he was Zhuangzi who had dreamt he was a butterfly, or a butterfly dreaming he was Zhuangzi.

images

கொஞ்சம் லோக்கலாக மொழி பெயர்க்கிறேன்.

ஒரு நாள் கந்தசாமி, தான் ஒரு வண்ணாத்துப்பூச்சியாக பறப்பதாக கனவு காண்கிறார். அது சுற்றி சுற்றி படபடத்து பறக்கிறது. கந்தசாமிக்கு வலு  புளுகம்.  பறக்கிறார். ஏதாவது பூவின் மேலே இருந்து ரெஸ்ட் எடுக்கிறார். கேதா மக்ரோ லென்ஸ் வச்சு ஜூம் பண்ணி படம் எடுக்கிறான். அண்ணருக்கு இன்னும் புளுகம். போஸ் கொடுத்துவிட்டு பறக்கிறார். பறக்கும்போது இன்னொரு வண்ணத்துப்பூச்சியை பார்க்கிறார். மாட்டர் பண்ணுகிறார். யூ நோ. இப்படியாக வாழ்க்கை சூப்பராக போய்க்கொண்டு இருக்கிறது.

திடீரென்று கந்தசாமிக்கு கனவு கலைகிறது. தூக்கம் கலைந்து எழுந்தவர் கண்ணாடியில் முகத்தை பார்த்தால், ஷிட், அதே கந்தசாமி. தொப்பையோடு, குழி விழுந்து, நெஞ்சு முடி நரைத்து, தூரத்தில் செல்வராணி தொணதொணத்துக்கொண்டிருக்க,

கந்தசாமி குழம்பிவிட்டார். தான் வந்து வண்ணாத்துபூச்சியாக பறப்பது போல கனவு கண்ட கந்தசாமியா? இல்லை கந்தசாமி போல துன்பப்படுவதாக கனவு காணும் வண்ணாத்திப்பூச்சியா?

நம்மாளு பாரதி, இதே தத்துவத்தை தான் பாட்டில் சொன்னான். அவன் சுயமாகவே சொல்லியிருக்கலாம். அல்லது Zhuangzi வாசித்தும் கூட சொல்லியிருக்கலாம். பல்மொழி வித்தகன் இல்லையா. அவன் பாணியே தனி.

bharathiநிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?

என்றவன் இந்த இடத்தில் கந்தசாமி ஆகிறான்.

போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

Ontology பற்றி ஆராய்ச்சி செய்பவர்களை மண்டை காயவைக்கும் தத்துவம் இது. யோசித்துப்பாருங்கள். விசர் பிடிக்கும். ஐயோ சொல்லவைக்கும். தலையில் போட்டு இடிக்கவேண்டும் போல இருக்கும். நெற்றியில் இடி இடி இடி

திடுக்கிட்டு விழித்தாள் மேகலா. வியர்த்திருந்தது. அடடா என்னமாதிரி கனவு இது? எழுதவெல்லாம் செய்கிறேனே. அதுவும் ஆண் வேஷத்தில். தனக்குள் சிரித்தாள். பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் குமரன் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.  அவனை டிஸ்டர்ப் பண்ணாமல், எழுந்து போய், தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு, மீண்டும் வந்து படுக்கும்போது குமரன் புரண்டு கை போட்டான். நசுக்கிடாமல் அவன் கையை தூக்கி அப்பால் வைத்துவிட்டு கண்ணை மூடும்போது, கண்ட கனவு ஞாபகம் இருந்தது. அதை நினைத்தபடியே தூங்க ஆரம்பிக்க…

இடி இடி என்று இடிக்கவேண்டும் போல இருக்கிறதா? சரி விடுங்க பாஸ். இதுல காஞ்சது காணாட்டி Inception படத்த subtitles இல்லாம ஒருக்கா போட்டு பாருங்க. ஏற்கனவே பார்த்திருந்தாலும் காரியமில்லை. திரும்பிப்பார்க்கலாம். புதுசா இருக்கும்!



காதல் மயக்கம்!

நம்மாளு வள்ளுவர் அனேகமாக நான்கைந்து ரமணிச்சந்திரன் நாவல்கள், எஸ்.ஜே.சூரியா, அகத்தியன் படங்கள் பார்த்துவிட்டு தான் காமத்துப்பால் எழுதியிருக்கவேண்டும். கற்பனை சும்மா புறக்காம்மாஸ் அடிக்கும்.  இந்த குறளை பாருங்கள்.

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.

ஒகே இதை இப்போது தமிழிலே மொழிபெயர்க்கலாம்.

காதலி சொல்கிறாள் கேளுங்கள். அவள் ஒருநாளும் கண் இமைப்பதே இல்லையாம். இமைத்தால் இவள் கண்ணுக்குள்ளேயே எப்போதும் குடியிருக்கும் காதலன் அவள் இமைகளுக்கு உள்ளே மறைந்துவிடுவானாம். இந்த விஷயம் தெரியாத ஊரார் எல்லாம் காதலன் இவளிடம் அன்பு கொள்ளாமல் ஊரை விட்டு ஓடி ஒளிந்துவிட்டான் என்று தப்புக்கணக்கு போடுவார்களாம். எதுக்கு இப்பிடி ஒரு பிரச்சனை என்று அக்காகாரி கண்ணையே இமைக்க மாட்டாளாம். வள்ளுவர் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த குறளை எல்லாம் எடிட்டிங்கில் தூக்கியிருப்பார். சரி விடுங்க.

images (2)

வள்ளுவன் இப்பிடி எழுதிவிட்டால், கம்பன் பார்த்துக்கொண்டு இருப்பாரா? பாஷா படத்து தலைவர் மாதிரி, கொஞ்சம் மேலே பாரு கண்ணா என்கிறார். இடம் சுந்தரகாண்டம். அசோகவனத்தில் சீதை!

“துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும்  துறந்தாள்”

என்று சீதையின் தனிமைத்துயர் சொல்வார் கம்பர். அதாவது அசோகவனத்தில் சீதை கண் தூங்குவதோ, ஏன் இமைப்பதையோ கூட துறந்தாளாம். எதற்கு என்று யோசித்தால் வள்ளுவன் குரலுக்கு கம்பன் கொடுக்கும் விளக்கம் என்று அது புரியும். எங்கே தான் இமைக்கும் பொழுதில், இராமன் தன்னோடு இல்லை, தன்னினைவு இராமனுக்கு இல்லை என்று அசுரர்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது என்ற, இராமனை ஏதிலர் என்றிடுமே இந்த ஊர் என்கின்ற குறள் விளக்கம் அது. செம இல்ல. கமபராமாயணமே வள்ளுவன் குறளுக்கான காப்பிய விளக்கம் என்பார் கம்பவாரிதி. உண்மை தான் போலும்.

கம்பன் வெறும் கவிஞன் கிடையாது. அவன் ஒரு கதைசொல்லி. ஸ்க்ரீன் ப்ளே, Foreshadowing டெக்னிக் எல்லாம் தெரிந்த கேஸ் அவன். முன்னே இந்த இமைத்தாலும் முகிழ்த்தலும் மாட்டரும் சொன்னதால், பின்னாடிக்கு திரிசடை சீதையோடு பேசும் இடத்தில் அந்த விஷயத்தை நைசாக புகுத்துகிறான். மனப்பொருமலில் இருந்த சீதைக்கு திரிசடை சொல்லுகின்ற ஆதரவு வார்த்தை அது. அண்ணல் வந்து உன்னை காப்பதாக கனவு கண்டேன் என்கிறாள். அந்த கனவு தனக்கு வராமல் உனக்கு எப்படி வந்தது என்கின்ற லோஜிக்கல் டவுட் சீதைக்கு வராதமாதிரி வார்த்தை போடுகிறாள்.

'துயில்இலை ஆதலின், கனவு தோன்றல;
அயில்விழி! அனைய கண் அமைந்து நோக்கினேன்;

சீதா, உனக்கு தான் தூக்கமே இல்லையே. கண்ணே இமைப்பதில்லையே. உனக்கு எப்படி கனவு வரும்? அதனால் எனக்கு ஒரு நற்கனவு வந்தது. சொல்கிறேன் கேள் என்கிறாள் திரிசடை.

இனி வைரமுத்து இன்னிங்க்ஸ். கவிப்பேரரசர், காதல் என்றால் சும்மா சலங்கையை கட்டி ஆடும் வித்தகர். சும்மா இருப்பாரா. இப்போது தான் அவனுக்கும் அவளுக்கும் காதல் வந்து கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது. போக்கு வரத்து ஒரு சனியனும் விளங்குதில்ல. இது சிட்டுவேஷன்.

images (1)

இதிலே காதலன் ஒரு மண்டு. ஆனாலும் தான் ஒரு விண்ணன் என்ற நினைப்பிலே கற்பனை எடுத்துவிடுறார். இம்பரஸ் பண்ணணுமில்லையா.

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை

அவள் கேட்டுவிட்டு ஒரு சின்ன கிளுக் சிரிப்போடு சொல்லுகிறாள். கம்பன் வள்ளுவன் தெரிந்தவள் அல்லவா. இந்த மாட்டர் அண்ணருக்கு தெரியாது.

நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை.

அடச்சிக். இப்பிடி தாக்குவாள் என்று இவருக்கு தெரியாது. நம்பவே முடியவில்லை. கேட்கிறார்.

மெய்யா பொய்யா?

அவள் மீண்டும் கிளுக்.

மெய்தான் அய்யா.

கிராதகி. அய்யா என்று தன்னை நக்கலடிக்கிறாள் என்று அவனுக்கு புரிகிறது. காட்டிக்கொள்ள முடியாது. அவமானம்.



இவளுக்கு செய்யிறன் வேலை. சும்மா கற்பனை அடிச்சு தூக்கோணும் என்று நினைத்து அடுத்த வரியை தலைவர் பிய்த்து போடுகிறார்.

பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
மார்பினை தீண்டு மார்கழியே

அவள் அதற்கும் அசையவில்லை. பாடுகிறாள்.

பட்டும் படாமல், தொட்டும் தொடாமல்
என் பெண்மை திண்டாடும்,
உன்னோடு மன்றாடும்.

என்னடா இது. இன்னமுமே படவும் இல்லை தொடவும் இல்லை. இதில் என்ன திண்டாட்டம். இதற்கு ஏன் ஒரு மன்றாட்டம் என்று இந்த விவஸ்தை கெட்டவன் கேட்டு வைக்க, அவளோ பொறுமை கெட்டுவிட்டாள்.

அட பன்னிப்பரதேசி .. இந்த பன்னாடை படலையை முதலில சாத்துடா.
அப்ப தான் நீ எல்லாம் உருப்படுவ!

&&&&&&&&&&&&&&&&&

என் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டியன்

$
0
0

 

download

கூப்பன் அட்டை

தொண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள். அ, உ, இ என மூன்று வகையான அட்டைகள். எங்கள் வீட்டுக்கு “உ” அட்டை. அரசாங்க உத்தியோகத்தர் என்றால், பீயோனாக இருந்தாலும் “உ” அட்டை தான். சங்கக்கடை நிவாரணத்தில் “உ” அட்டைக்காரருக்கு கொஞ்சம் தான் தருவார்கள். அரைபோத்தல் மண்ணெண்ணெய், அரை கிலோ பருப்பு, அரைகிலோ சீனி என்று எல்லாமே அரைவாசி தான் கிடைக்கும். அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும். குறைந்த சம்பளம், கூடிய சம்பளம் என்ற கதை பேச்சு இல்லை. அரசாங்க உத்தியோகம் என்றால் சும்மாவா? பணக்காரர் இல்லையா?

அப்பாவின் சம்பளம் அப்போது ஐயாயிரம் ரூபாய். அவரின் செலவு போக, ஓமந்தை தாண்டி எங்கள் கைக்கு வருவது நாலாயிரம் ரூபாய். அதுவும் ஏதாவது அடிபாடு, பாதை மூடீட்டாங்கள் என்றால் கதை கம்மாஸ். அந்த நாலாயிரத்தில் தான் ஆறுபேர் கொண்ட குடும்பத்தை அம்மா பார்த்துக்கொண்டார். கோட்டை, மண்டைதீவு பக்கம் பிரச்சனை என்றால் கொட்டடி மாமி ஆக்கள் வேறு வந்து இறங்குவினம். ஆறு பத்தாகும். அம்மா சமாளிப்பார். அதுவும் சிக்கல் என்றால் இருக்கவே இருக்கிறது அடைவு, காப்பில் இருந்து தாலிக்கொடி வரைக்கும் போய்வரும். இல்லாவிட்டால் சிவன் ஸ்டோர்ஸில் கொப்பிக்கு சாமான் வாங்குவோம். மாசக்கடைசியில் இருக்கிற சிந்தாமணி, வீரகேசரியில் இருந்து, ஒருமுறை எண்டமூரி நாவல்கள் பத்தை ஒரே கட்டாக அரசடி ரோட்டு நூலகத்துக்கு நானே விற்று நூறு ரூபாய் வாங்கியிருக்கிறேன். இரண்டு மூன்று நாள் சமாளிக்கலாம். சமாளித்திருக்கிறோம். இப்படி விற்றிருக்கிறோமே ஒழிய, காசு இல்லை என்று ஒருநாளும் அடுத்த நாள் பேப்பர் வாங்காமல் விடமாட்டோம். எங்கள் குடும்பம் என்றில்லை, அந்த சமயம் எந்த அரசாங்க உத்தியோகத்தர் வீட்டிலும் இந்த பஞ்சப்பாடு இருந்தது. ஊர் முழுக்க கடன் இருந்தது. வீடு பாங்கிலே இருந்தது.

“உ” அட்டைக்காரர் நிலை இப்படியை இருக்க “அ”, “இ” அட்டைக்காரர் பாடு வலு கலாதி. அவர்கள் தான் இந்த “வருமானம் குறைந்தவர்கள்” பிரிவு. அவர்களுக்கு எல்லாம் நிவாரணம் டபுளாக கிடைக்கும். அவர்களில் ஒரு சிலர் நிஜமாகவே வசதி குறைந்தவர்கள். விட்டுவிடுவோம். ஆனால் தொண்ணூறு வீதமான அன்றைய “வசதி குறைந்தவர்கள்” வேறு யாருமல்லர். இந்த வெளிநாட்டுக்காரரும் பிஸ்னஸ்காரரும் தான்.

பொற்பதி ரோட்டில், எங்களுக்கு தெரிந்த குடும்பம் ஒன்று.  எட்டு பிள்ளைகளில் ஆறு பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டில். தகப்பனிடம் கேட்டால் ஒவ்வொரு நாட்டில் எத்தனை குழந்தைகள் என்று கணக்கு சொல்லுவார். கூட்டிப்பார்த்தால் ஏழு வரும். அவ்வளவு வீக்கு.  கடைசி பெடியன் டியூஷனுக்கு இரட்டைப்பட்டு சங்கிலி வெளில விட்டுக்கொண்டு தான் வருவான். அவ்வளவு காசு. ஆனால் எட்டு பேருக்கும் சங்கத்தில கணக்கு காட்டி, எல்லோருக்கும் வேலையில்லை என்று விதானைக்கு புகையிலை வாங்கி கொடுத்து எழுதிவாங்கி, கள்ள நிவாரணம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் வெறும் கூடையில் கியூவில் நின்று நிவாரணம் வாங்கும்போது, அவர்கள் போறைபாக்கில் நிவாரணம் எடுத்து சைக்கிள் காரியரில் வைத்து பாரம் தாளாமல் உருட்டிக்கொண்டு போவார்கள்.  அதை விட கடுப்பு என்னவென்றால் “கூப்பனுக்கு தாற புழுப்பிடிச்ச புழுங்கல் அரிசியை மனுசன் சாப்பிடுவானா?’ என்று அதை அம்மாவுக்கு விற்றுவிட்டு,  அவர்கள் விலை அதிகமான முத்துச்சம்பா வாங்கி புரியாணி செய்வார்கள். சரி அந்த வயித்தெரிச்சல் இப்ப எதற்கு?"

லச்சுமி வந்தாள்

வீட்டு நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. சாமான்கள் விலை எக்கச்சக்கம். பால்மா எல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு விலை. இந்த நிலையில் கூப்பனுக்கு தரும் விட்டாஸ்பிறே மாவை தேத்தண்ணியில் கலந்தடித்தால் வயித்தால போகுது என்று ஒரு பிரச்சனை. லக்ஸ்பிரே, நெஸ்பிறே எல்லாம் நாலு பிள்ளை சீதனம். சரிவராது. என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒரு ஆடு வளர்த்தால் தேசியப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தீர்மானமானது. கேட்டு அனுப்பிய கையோடு ஒரு சினை ஆட்டை ஆனந்தம் அண்ணா அராலியில் இருந்து அவிட்டுக்கொண்டுவந்து வீட்டில் கட்டிவிட்டார். “எவ்வளவு?” என்றதுக்கு “அவசரமில்ல, பேந்து பார்ப்பம்” என்றார். “பெயர் என்ன?” என்று நான் கேட்க “லச்சுமி” என்றார். 

Picture 001[4]

எங்கள் வீட்டுக்கு இப்படித்தான் லட்சுமி வந்தாள். பிள்ளைத்தாய்ச்சி. வெள்ளை நிறம். சமச்சீரான கொம்புகள். மடி மட்டும் ஒன்று நீண்டு மற்றயது குட்டையாக இருக்கும். முதன்முதலில் லட்சுமி என்று அழைத்தபோது திரும்பவில்லை. நெருங்கியபோது மிரண்டது. முதுகை தடவிவிட சென்றவேளை முட்ட வந்தது. வாளியில் தண்ணீர் கொண்டுபோய் கொடுத்தேன். தட்டி விழுத்திவிட்டு திமிறியது. நெல்லி மரத்தை சுற்றி சுற்றி வந்து கயிற்றை சுருக்கி இதற்கு மேல் சுற்றமுடியாமல் மரத்தோடு சாய்ந்த போது செய்வதறியாமல் மே மே என்று பாவமாய் பார்த்தது.

மீண்டும் போய் இம்முறை முகத்தை தடவிவிட்டு கயிற்றை இளக்கி, முட்டு எடுத்து கட்டிவிட்டேன். தண்ணீர் எடுத்து வந்து தலையை தடவியவாறே கொடுத்தேன். குடித்தது. மிரளவில்லை. நான் பிரச்சனை இல்லாத ஆள் என்று உணர்ந்திருக்கவேண்டும். அம்மா கழனித்தண்ணி சரிக்கட்டிக்கொண்டு வந்தார். பிளாஸ்டிக் வாளிக்குள் கத்தரிக்காய் வெட்டின மிச்சம், பூசணிக்காய் தோல், வாழைக்காய் தோல் என்று சமைக்கும்போது வந்த மரக்கறி மிச்சங்கள் எல்லாமே சோறு வடித்த கஞ்சிக்குள் கலந்த கழனி. கொடுத்தேன். அது குடித்து முடிக்கும் வரை தோய்க்கிற கல்லிலே ஏறி இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். குடித்துவிட்டு என்னை பார்த்து மூசியது. அதன் பாஷையில் நன்றி சொல்லி இருக்கவேண்டும். பின்னர் கொஞ்ச நேரம் நெல்லி மரத்தில் உடம்பை தேய் தேய் என்று தேய்த்துவிட்டு, கால் மடித்து உட்கார்ந்து தூங்க ஆரம்பித்தது. ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் இருந்த “புது இடம்”, “புது ஆட்கள்” என்ற சலனம் இப்போது இல்லை. ஹீரோ குரைக்கும்போது மட்டும், திடுக்கிட்டு கண் முழித்து, நான் முன்னே இருக்கிறேனா என்று செக் பண்ணிவிட்டு மீண்டும் அயர்ந்தது. பார்த்துக்கொண்டே இருக்க லட்சுமி மீது ஒருவித பாசம் பொங்க ஆரம்பித்தது.

லச்சுமி வீட்டுக்கு வந்த நாள் முதல் என் டெய்லி ரூட்டின் மாறியது. பாடசாலை முடிந்து, வீடு வந்து, சாப்பிட்டு, டியூஷன் இருந்தால் போய்வந்து,  இல்லாவிடில் ஒரு குட்டித்தூக்கம் போட்டு நான்கு மணிக்கு பவுடர் எல்லாம் அடித்தபடி குழை குத்தும் கம்பியை தூக்குவேன். அப்புறம் என்ன? அந்த ஏரியா பூராக கண்ணிவெடி அகற்றும் வேலை தான். பழுத்த பிலா இலை தான் ஆட்டுக்கு போட அசல் சாமான். குத்தி குத்தி குத்தி ஒரு இருபது இலை சேர்ந்தபின்னர் அப்படியே இழுத்து உச்சத்தில் விடவேண்டும். பின்னர் மீண்டும் குத்த தொடங்கவேண்டும். நன்றாக காய்ந்த இலை என்றால் குத்தும்போது ஒட்டி நிற்காது. நைசாக குத்தி செருகவேண்டும். ஒன்ற விட்ட ஒருநாள் எங்காவது சீமைக்கிளுவை கிடைத்தால் ஒடித்துக்கொண்டு வந்து கட்டித்தொங்கவிடலாம். கிளுவை கூட ஓகே. ஆனால் வாழை இலை குடுத்தால் மட்டும் லச்சுமி சீண்டாது. தவிடு ஸ்ரீ மில்லில் இருந்து வாங்கிவந்து கலந்து கொடுக்கலாம். புண்ணாக்கு கோண்டாவிலில் ஒரு செக்கு இருந்தது. எடுக்கலாம். லச்சுமிக்கு என்ன டைம் என்ன சாப்பாடு என்ற டீடைல் என் நுனிவிரலில் இருந்தது.

அந்த இரவு

மார்கழி மாசம். இரவு. மூன்று மணி இருக்கும். மழை அடிச்சு கொட்டுது. பெட்ஷீட்டை இழுத்துப்போர்த்திக்கொண்டு நான் நல்ல நித்திரை. திடீரென்று டேய் என்று அக்கா அடிச்சு எழுப்புறா. எழுந்து பார்த்தால் ஷெல்லடி, பொம்மர் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை. நான் பேசாமல் திரும்பவும் படுத்துவிட்டேன். அக்கா மீண்டும் எழுப்பினார். என்னக்கா? என்று எரிச்சலாக கேட்டேன். பூரிப்பாக சொன்னார்.

“லச்சுமி குட்டி போட்டுட்டுதடா”

சடக்கென்று பெட்ஷீட்டை உதறி எறிந்துவிட்டு பின்பத்திக்கு ஓடினேன். லச்சுமி ஒரு மூலையில் நின்றிருந்தது. அண்ணா  கோயிலடி ஆலமரத்தில் கொண்டுபோய் கட்டவென்று நஞ்சுக்கொடி எடுத்து உமலில் முடிஞ்சுகொண்டிருந்தார். அம்மா கடம்புப்பால் கறந்துகொண்டிருந்தார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு …. தேடினேன்.. எங்க? எங்க? எங்க?

லச்சுமிக்கு முன்னே குளிரில் நடுங்கியபடி .. குட்டி கால்கள்... குட்டி தலை… குட்டி உடம்பு. நல்ல நீண்ட செவி. நக்கி நக்கி ஈரமாய் உதிர்ந்து உதிராமலும் உரோமங்கள். கண் திறந்தும் திறக்காமலும்… “தலைவர்” .. நெருங்கினேன். அரவம் கேட்டு லச்சுமி திரும்பி என்னை பார்த்தது. சன்னமாய் “மே..” என்றது. அதன் கண்களில் ஒருவித பெருமை. அருகில் போய் தலையை தடவிட்டு நம்மட ஆளை இரண்டு கையாளும் தூக்கி முகத்துக்கருகே கொண்டுபோக … கண் திறக்காமல் என் மூக்கை ஒரு நக்கு நக்கியது. முதல் முத்தம்! பச்சக். .. “ஈயா .. அம்மா இது நக்கீட்டுது!”

அம்மா சிரித்தபடியே தலைவரை கையில் வாங்கி, லச்சுமியின் மடியருகே கொண்டுபோய் விட்டார். முதற்பால், கடம்புபால் குடித்தார். அப்போது தான் கவனித்தேன். கொஞ்சம் பிரவுன் கலர். பளிச் என்ற கண்கள். பார்த்துக்கொண்டே இருக்கலாம். “கிடாய் குட்டி, என்னடா பெயர் வைக்கலாம்?” என்று அக்கா கேட்டார். யோசிக்காமல் சொன்னேன்.

குட்டியன்.

குட்டியன் வளர ஆரம்பித்தான். இரண்டு மூன்று நாட்களிலேயே எம்பி எம்பி நடக்க ஆரம்பித்தான். இப்போது எனக்கு தாயையும் குழந்தையையும் பார்க்கும் வேலை. தண்ணி விடாய் என்றால் தலைவர் வீட்டுக்கதவடியில் வந்து நிற்பார். நான் போய் பால்போச்சிக்குள் நிரப்பி வந்து, குட்டியனை மடியில் தூக்கி வைத்து, பருக்குவேன். ஏதோ லச்சுமி மடி என்ற எண்ணத்தில் முட்டி முட்டி குடிப்பான். குடிக்கும்போது அவனின் அடிப்பாதங்களை தடவிப்பார்ப்பேன். மென்மையாக இருக்கும். செவி ரெண்டையும் பிடித்து தூக்கினால் கண்களும் சேர்ந்து மேலெழும். சொக்கிப்போவான் அவன். தூக்கி தோளில் வைக்கலாம். என்னுடைய எல்லா விளையாட்டுக்கும் எடுபடுவான் என்ர குட்டியன்.

பின்னேரம் என்றால் ஓடிப்பிடிச்சு விளையாடுவோம். குட்டியன் செம ஓட்டம் ஓடுவான். துரத்துவான். அதிலும் பயங்கர இன்டெலிஜன்ட். எங்கள் வீடு சண்ஹூடை சுத்தி சுத்தி ஓடுவோம். கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி கலைப்பான், திடீரென்று ப்ரேக் அடித்து மற்றப்பக்கத்தால் வந்து முன்னே நிற்பான். இது என்னைபார்த்து அவன் கற்றுக்கொண்ட டெக்னிக். நான் கலைக்கும்போதும் அப்படித்தான். கலைத்துக்கொண்டே போவன். அண்ணரும் இம்மை மறுமை இன்றி திரும்பிப்பார்க்காமல் ஓடுவார். திடீரென்று நான் மற்றப்பக்கத்தால் ஓடிப்போய் முன்னே நிற்பேன். சட்டென்று என்னை முன்னே கண்ட டென்ஷனில் சடக்கென்று ரிவேர்ஸ் எடுக்க,  தேங்காய்பூவில் போலிஷ் பண்ணப்பட்ட தரையில் தலைவர் சரேலென்று வழுக்கியபடி போய் விழுவார். இந்த விளையாட்டில் நாய்க்குட்டி ஹீரோவும் இணையும்போது சுதி கிளம்பும். அம்மாவின் பூங்கன்று ஒன்று விடாமல் முறித்துக்கொண்டு ஓடிவிளையாடுவோம். அம்மா கத்தியபடி அடிக்கவந்தால், ஹீரோ கேற்றுக்கு வெளியே ஓடிவிடும். குட்டியன் மட்டும் என்னிடம் வந்து முன்னங்கால் ரெண்டையும் தூக்கி என் வயிற்றில் வைத்தபடி தூக்கு என்று அடம்பிடிப்பான். தூக்கி வைத்தபடியே அப்போது பள்ளிக்கூடத்தில் படிப்பித்த பாட்டு ஒன்றை பாடுவேன்.

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி
அருமையான சின்னக்குட்டி
ஓட்டம் ஓடி வந்திடுவாய்
உனக்கும் முத்தம் தந்திடுவேன்

பாடியபடி முகத்தை அதன் முகத்துக்கு கிட்டே கொண்டுபோகும்போது ஒரு நக்கு நக்குவான். முத்தம்! பச்சக். .. சொர்க்கம். அம்மாவை கூப்பிடமாட்டேன்.

ஆட்டுப்பால்.

குட்டியன் பிறந்த கையோடு வீட்டிலே தேத்தண்ணி பிரச்சனை தீர்வுக்கு வந்தது. அதிகாலையிலேயே அம்மா பால் கறந்துவிடுவார். லச்சுமியின் மடியை கழுவி, ஒரு நிமிஷம் குட்டியனை இடித்து குடிக்கவைத்து, பின்னர் பலகக்கட்டை போட்டு உட்கார்ந்தால் கறத்தல் ஆரம்பிக்கும். சில்வர் சட்டியில் சரக்கென்று கறக்க, கைங் கைங் என்று சீறிக்கொண்டு பால் நிரம்பும். அரைவாசி நிரம்பிய பின்னர் கைங் சத்தம் கர் என்று மாறும். கறந்துமுடிந்த பின்னர் மீண்டும் குட்டியனை குடிக்கவிட்டுவிட்டு, அம்மா எங்களுக்கு தேத்தண்ணி ஊற்றித்தருவார். பின்னேரத்துக்கும் எடுத்து வைப்பார். அப்போதும் அரைப்போத்தல் அளவில் மிஞ்சும். தயிர் உறை போட்டு அடுப்படியில் எல்லாம் வைப்பார். அவ்வளவு கறத்தல் கறக்கும் லச்சுமி.

45573_420721816414_3116177_n

கம்பன் விழா

சித்திரை மாசம் என்றால் அனேகமாக கம்பன் விழா தொடங்கிவிடும். பள்ளிக்கூடம் முடிய அப்படியே நல்லூர் வடக்கு வீதிக்கு போய் ஆவென்று அவ்வளவு நிகழ்ச்சியையும் கேட்டுவிட்டு வீடு போய் கைகால் முகம் கழுவி சாப்பிட்டுவிட்டு பத்திக்கு போவேன். அங்கே நித்திரை கொள்ளும் ஹீரோவை இழுத்துக்கொண்டு, தாயோடு நிற்கும் குட்டியனையும் கூட்டிக்கொண்டு முற்றத்துக்கு போய், பக்கத்து மூன்றாய் கதிரைகள் போட்டுவிட்டு அண்ணர்மார் ரெண்டுபேரையும் இருங்கடா என்பேன். கம்பன் விழா தொடங்குகிறது.

“எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடிகளை என் சிரமேற் பணிந்து வணங்கி”…

ஹீரோ தூங்கி வழியும்…  40039_420717296414_1382296_n

“அவையில் உள்ள பெரியோர்களே, தாய் மார்களே,  குழந்தைகளே, ஹீரோவே” …

ஹீரோ கண்விழிக்காமலேயே வாலை கடமைக்கு ஆட்டிவிட்டு தொடர்ந்து தூங்கும்..

“குழந்தைகளே… என் இனிய குட்டியனே” ..

கேட்டவுடன் சடக்கென்று ஓடிவந்து மார்பில் இரண்டு கால் வைப்பான் அவன். கொஞ்சிவிட்டு மீண்டும் கொண்டுபோய் இருத்திவிட்டு கம்பவாரிதி பேச்சை தொடருவார்.

“’மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ’, கம்பன் என்ன சொல்லுகிறான்? … அம்மா கைகேயி, என் தந்தை சொன்னால் தான் நான் மறுக்கமாட்டேனோ? நீ சொல்லியிருந்தாலும் மறுக்கமாட்டேனே” என்பான் இராமன். அதை மட்டும் சொல்லிவிட்டு போயிருந்தால் அது இராமன் கிடையாது. அங்கே தான் கம்பன் கவிச்சக்கரவர்த்தியாகி தனித்து நிற்கின்றான். ம்ம்ம் ’மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ’ …’என் பின்னவன் பெற்ற செல்வம், அடியனேன் பெற்றதன்றோ’”

பெற்றதன்றோ என்ற இடத்திலே குரலை தளைய விடும்போது ஹீரோ வாலை சடக்கென்று இலையான் துரத்த அடித்துவிட்டு தொடர்ந்து நித்திரை கொள்ளும். குட்டியன் மட்டும் ங்கே என்று முளித்திருப்பான். பட்டிமன்றம் முடிந்தபின் நானே கரகோஷம் செய்ய, தன்னைத்தான் கூப்பிடுகிறேன் என்று மீண்டும் மடியில் வந்து கிடப்பான். இப்படித்தான் ஒரு நாள் வந்துகிடந்தவனின் தலையை தடவிப்பார்த்தேன். ஏதோ முட்டுப்பட்டது. அட மென்மையான கொம்பு. குட்டியனுக்கு கொம்பு வளர தொடங்கியது.

அந்த நாள்.

வருடங்கள் கழிந்தது. குட்டியன் இப்போது பெருங்கடா. முன்ன மாதிரி விளையாட்டு குறைந்துவிட்டது. ஆனால் இன்னமும் நெருங்கிப்போனால் சர்க்கென்று பாய்ந்து கொஞ்சு என்று மூஞ்சியை நீட்டும். டேய் கொம்பு கண்ணுக்க குத்திடும் எண்டு அம்மா வெருட்டுவா. எனக்கு என்ர குட்டியனில பயம் இல்லை. நல்ல நீட்டு கொம்பு. என்னளவுக்கு இப்போது குட்டியன் வளர்ந்து நின்றான். லச்சுமியை விட நல்ல உயரம். நான் வளர்த்த குட்டியன் அல்லோ.

45573_420721821414_4275775_n

அன்றைக்கு ஒருநாள், பொன்னுச்சாமி மாஸ்டரின் தமிழ் கிளாஸ் முடிந்து வீடு திரும்பினேன். என்றுமில்லாதவாறு ஒரு வித அமைதி வீட்டில் இருந்தது. “அப்பன் தேத்தண்ணி குடிக்கிறியா?” என்று அம்மா திடீரென்று பாசம் பொழிந்தார். என்னைக்கண்ட அக்கா தெரியாத கெமிஸ்ட்ரி வாய்பாட்டை உரத்துச்சொன்னார். சம்திங் ரோங் என்று தெரிந்துவிட்டது. பாத்ரூமுக்கு போகவென பத்திக்கு போனேன். லச்சுமி என்னை கண்டத்தும் மே மே என்று கத்தியது. வழமைக்கு மாறான ஒரு கத்தல் அது. சந்தேகத்தில் அதனிடம் நெருங்க, இன்னமும் கத்தியது. தலையை தடவ உதறியது. இப்போது கத்தல் கூடி காட்டுக்கத்தல் ஆனது. என்னடா என்று குட்டியனை தேடினால் அவனை காணவில்லை. நெல்லிமரத்தடியில் பார்த்தால் அங்கேயும் இல்லை. குட்டியன் என்று கத்தினேன். ஹீரோ தான் ஓடிவந்து வாலாட்டியது. “டேய் குட்டியன் டேய் குட்டியன்.. அம்மா குட்டியன் எங்கே?” என்று கத்தினேன். “இப்ப எதுக்கு கத்திறாய், அதை கூட்டிக்கொண்டு போயிட்டாங்கள்” என்று சொல்ல தடுக்கென்றது.

“எங்கே கூட்டீட்டு போட்டாங்கள்? யாரு கூட்டிப்போனது?”

“அதுக்கு தவிடும் புண்ணாக்கும் வச்சு கட்டுமே … வளர்ந்திட்டுது .. அதான் இறைச்சிக்கு வித்தாச்சு”

“இறைச்…. என்ன சொல்லுறிங்க அம்மா?”

அக்கா உடனே ஓடிவந்து சொன்னார்.

“இல்லையடா .. அத வளர்க்கபோறன் என்று ஆனந்தம் அண்ணே வந்து கேட்டார் .. குடுத்திட்டம்..”

“போய் சொல்லாதீங்க அக்கா .. அது என்ர குட்டியன் … எப்பிடி குடுக்கலாம்?.. அது எப்பிடி என்னை விட்டிட்டு இருக்கும்? … மெய்யா சொல்லன .. இறைச்சிக்கா குடுத்தீங்க .. ஐயோ ..”

நான் கேட்க கேட்க அம்மா பேசாமல் இருந்தார். அக்கா ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டார். எனக்கு முகம் எல்லாம் சிவந்து உடல் திடீரென்று குளிர்ந்தது போல தோன்றியது.  ஹீரோ காலடியில் வந்து வாலாட்டிக்கொண்டு நின்றது. என்ன செய்வது என்று புரியவில்லை. மே மே என்று லச்சுமி அழைத்தது. போனேன். தண்ணீர் வாளியை தட்டி விழுத்தியது. தடவி விடப்போக மிரண்டது. லச்சுமி என்றேன் திரும்பிப்பார்க்காமல் சுற்றி சுற்றி வந்து கயிறு இறுகியது. மே என்று இன்னமும் கத்தியது. இளக்கவென நெருங்கினேன். மூசி மூசி என்னை கலைத்தது.  பக்கத்திலேயே குழைகுத்தும் கம்பி தொங்கியது. குட்டியனுக்கு என்று பாதிக்குழை இன்று போடவென விட்டு வைத்திருந்தேன்.

குட்டியன் போகும் போது காட்டுக்கத்தல் கத்தி இருப்பானா? என்னை நினைத்திருப்பானா? மனம் இறுகிப்போய் ஆட்டுக்கல்லின் மேல் போய் இருந்தேன். நான் வந்து இருந்தவுடன் குட்டியன் ஓடி வந்து நெஞ்சிலே குதிப்பது போன்ற உணர்வு. தலையை தடவிவிடும்போது அன்று தான் அந்த முளை கொம்பை தொடுவது போன்ற உணர்வு. செவி இரண்டையும் பிடித்து தூக்கும் போது கண்கள் சரேலென்று எகிறும் உணர்வு. போச்சியில் பாலூட்டுவது போன்ற உணர்வு.  அது தன் முகத்தை எனக்கு கிட்டே நெருங்க கொண்டுவருவது போன்ற உணர்வு.

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி
அருமையான் சின்னக்குட்டி
ஓட்டம் ஓடி வந்திடுவாய்
உனக்கு முத்தம் தந்திடுவேன்.

என்று நானும் நெருங்கும்போது குட்டியன் என் முகத்தை நக்கி .. பச்சக் … குட்டி…யன்…..

ஓ என்று அழ தொடங்கினேன்.

&&&&&&&&&&&&&

ஏனைய கொல்லைப்புறத்து காதலிகள்

வியாழமாற்றம் 17-10-2013: எப்பவோ முடிந்த காரியம்!

$
0
0

 

சைக்கிள் கடைச்சாமி

PR9A0398

யாழ்ப்பாணம் கம்பஸ் பக்கம் வந்து சைக்கிள் கடை சாமி என்று விசாரித்துப்பாருங்கள்.  சின்னக்குழந்தை கூட கடையை காட்டும். கம்பசுக்கு முன்னாலே, பழைய பாஸ்கட் கோர்ட்டு மதில் தாண்டி ரோட் தாண்டினா இங்காலப்பக்கம் அபிராமியோட ஒட்டி இருக்கிறது தான் சாமிண்ட சைக்கிள் கடை.  கடை என்றால் வேறொன்றுமில்லை. ஒரு தகரக்கொட்டில் தான். உள்ளே ஒரு பத்து பதினைந்து பழைய டயர்கள், ஒன்றன் மேல் ஒன்றாய் கறல் பிடித்த சைக்கிள்கள். கிரீஸ் கறை அடைப்புகள். வேலியில் கூட டயர் தொங்கும்.

சாமி ஒரு கடவுள் பக்தன். காதில் ஒரு கோன் பூ எப்பவுமே இருக்கும். கடை மூலையில் செவ்வரத்தம்பூவை பார்த்தபடி யோகர் சுவாமிகள் குனிந்தபடி இருப்பார். கொஞ்சம் தள்ளி இயக்கத்தின் கடை பெர்மிட் பிரேம் பண்ணி தொங்கும். கொட்டிலின் நடுவில் இரண்டு சைக்கிள் செயின்கள், ஒட்டுச்சைக்கிள் தூக்குவதற்காக தொங்கும். வெளியே ஒரு வெள்ளை ஒயில் கான் அரைவாசியாக வெட்டப்பட்டு, டியூப் ஒட்டு கண்டுபிடிக்க பாவிப்பதற்காக ஊத்தை தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். ஒரு தேர்மோ பிளாஸ்க், பேணி, சுருட்டு, நெருப்புக்கு என்று எரி கயிறு … இருக்கும். அடிக்கடி ஷெல் அடிக்கும் பொன்னுக்கோனை கவர் பண்ணுவதற்காக கடையில் எந்நேரமும் சாம்பிராணி புகை போடப்படும். இதற்கு மத்தியில் சக்கப்பணியாரமாய் பலகைக்கட்டையில் குந்தியபடி சைக்கிள் கடைச்சாமி இருப்பார். சிரிப்பார். மூன்று பல்லுகள் புடுங்கப்பட்டு மிச்சம் எல்லாமே வெற்றிலைச்சிவப்பாக இருக்கும்…. டியூப் கழட்டும்போது சாரத்தை ஒதுக்கவும் மாட்டார்.  சாமி உள்ளுக்க போட்டதா ரெக்கோர்ட் இல்ல. லலிட்ட ஒருக்கா கேக்கோணும்.

“ஒரு பொல்லாப்பும் இல்லை”

அந்த ஏரியாவில் சைக்கிள் கழுவிப்பூட்டுறது, செக்கன்ட்ஹாண்ட் டயரில இருந்து வால்டியூப், ரிம் வரை எந்த சைக்கிள் பார்ட்ஸ் என்றாலுமே வாங்குவது என எல்லாமே சாமியரிண்ட கடையில தான். சாதாரணமாக சொலிசன் பூசி ஓட்டுற ஓட்டுக்கு பத்து ரூபா. அதுவே டியூப் ஜோயின்டால காத்து போகுது என்றால் பைண்ட் வைத்து நெருப்பில் வாட்டவேண்டும். காசு கூடவா கேட்பார். இருபது ரூபா.  சாமிக்கு கால் கொஞ்சம் ஊனம். ஒருவாறு கெந்தி கெந்தி தான் நடப்பார். சைக்கிள் காற்றடிக்க ஒரு ரூபா. பெடியங்கள் கடன் சொன்னால் தேவையில்லாமல் அம்மாவை இழுத்துவிட்டு “அடுத்தநாள் கொண்டுவந்து தா” என்பார். பம்ப் கூட அவர்களே எடுத்து அடிக்க வேண்டும். பெட்டைகள் என்றால் தானே போய் அடித்துவிடுவார், “அங்கிள்” என்றால் காசு வாங்கமாட்டார்.  “காத்து வெளியே போகுது, வடிவா அமத்தி பிடி பெட்டை” என்று சொல்ல அதுகளும் விளங்காம குனிஞ்சு வால்கட்டையை பிடிக்குங்கள். கம்பஸ் பெட்டைகள்.

“நாம் அறியோம்”

PR9A0388சாமிண்ட கடைல ஒரு பழைய வாங்கு இருக்கும். ஒரு பக்க கால் உடைஞ்சு சீமெந்து கல்லு வைக்கப்பட்டிருக்கும். அதில தான் குமாரசாமிரோட்டில இருந்த ரிட்டையர் ஆன ஓவசியர் காலமை வெள்ளன வந்து இருப்பார். டோறா கவிழ்ப்பில் எத்தினை ஆமி செத்தது எண்டு ஆரம்பித்து, செத்துப்போன கரவெட்டி அன்னம்மாளுக்கு சுவிஸில எத்தின பேரப்பிள்ளைகள் எல்லாம் பாடமாக்குவார். சில்லாலையை சேர்ந்த முப்பத்திரண்டு வயதான சைவ உயர் வேளாளர் ஆசிரியை மணமகள் யார் என்று எப்பிடியோ கண்டிபிடித்து பெயர் சொல்லுவார். சைக்கிள் ஒட்ட குடுத்துவிட்டு, வெயிட் பண்ண அந்த வாங்குல நீங்கள் இருந்தீர்கள் என்றால் கதை சரி. உங்கள் வீடு, அப்பா அம்மா பெயர் தொட்டு பக்கத்து வீட்டு வேலைக்காரி வரை எல்லாமே விசாரித்து கடைசியில் “ஆர் ஆக்கள்?” என்று கண்டுபிடித்துவிடுவார். இடையிடையே தன் மகன் பிரான்ஸில் இருக்கிற கதையும் அவன் சம்பளத்தை இலங்கை ரூபாவிலும் சொல்லுவார் … சாமி வாங்கி கொடுக்கும் பிளேன்ரீயை குடித்தபடி.

சாமிக்கு சைக்கிள் கடை வெறும் “சப்” தான். அதை வச்சு ஆட்களோட லிங்க் எடுத்து சாமி சீட்டு பிடிக்கத்தொடங்கினார். காசு கொட்டியது. சீட்டு பிடிக்கும் ஆளுக்கு, முதல் சீட்டு மொத்தமா அப்படியே கையில வரும். சாமிக்கு நான்கு ஆம்பிளை பெடியளும் ஒரு பெட்டையும். ஐந்து தரம் பிடித்த சீட்டில் மூத்த மகன் ரவியை டென்மார்க் அனுப்பீட்டார். மூத்தபெடியன் போய் ரெண்டாவதை கூப்பிட்டுது. ரெண்டாவது மூண்டாவத கூப்பிட்டுது. மூண்டாவது போய் வெள்ளைக்காரி ஒருத்தியை கலியாணம் கட்டினதில, சங்கிலி உடைஞ்சு போய், நாலாவது பாவம் சைக்கிள் கடைல ஸ்டக் ஆயிட்டுது. பெட்டை சைக்கிள் கடைல அடிக்கடி காத்தடிக்க வந்த சோமர்ட மூத்தவனோட ஓடிப்போய், பிறகு காதல்துறை வந்து விலக்கு வைச்சு .. அது வேண்டாம் இப்ப. 95 இடம்பெயர்வுக்கு ஒரு கிழமைக்கு முதல் மீட்பு நிதி விஷயமாய் சாமி பங்கரை வேறு விசிட் பண்ணீட்டு வந்திருக்கவேண்டும். இடம்பெயருவதற்கு முதல் சாமி பிடித்துக்கொண்டிருந்த சீட்டு என்ன ஆனது என்று, “கூறு” எடுக்காத ஆட்கள் மட்டும் சாமியை தேடிக்கொண்டு திரிஞ்சினம். பிறகு என்னானது எண்டு தெரியேல்ல.

“எப்பவோ முடிந்த காரியம்”

கடைசிக்காலத்தில் சாமியும் மனிசியும் தனியே தான் வாழ்ந்தார்கள். பிள்ளைகள் கவனித்தார்களா? என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்றபோது அதே சாமி, அதே கடை, அதே ஆட்கள் இருந்தார்கள். பெயர்கள் மட்டும் மாறியிருந்தன. ஓவசியர் போய் ஹெட்மாஸ்டர் வந்திருந்தார்.  யாழ்ப்பாணத்தில் மூலைக்கு மூலை கூவி கூவி வங்கிகள் வந்துவிட்டதால் சீட்டு மூவ் பண்ணுதில்லை என்றார்.  மோட்டர்சைக்கிள் ஒட்டுக்கென்று செட்டப் அப்கிரேட் பண்ணியிருந்தார். லுமாலாக்கள் ஹீரோ ஹோண்டாக்களாக மாறி இருந்தன. லேடீஸ் சைக்கிள்கள் ஸ்கூட்டர்கள் ஆகியிருந்தன. பெண்கள் பஞ்சாபி, ஜீன்ஸ் டீஷர்ட் போட தொடங்கிவிட்டார்கள். சாமிக்கும் வயசாகிவிட்டது. கம்பசுக்கு வெளியே நிற்கிற மப்டிகாரரும் அடிக்கடி தலை காட்டினார்கள். யோகர் சுவாமிகள் படம் புது பிரேம் போட்டு இருந்தது. வாசகமும் மாறி இருந்தது.

“முழுதும் உண்மை”

PR9A9613[10]


 

நேற்று அவள் இருந்தாள்

pp_thumb[4]ஒருநாள் மெல்பேர்ன் புகையிரதத்தில் புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்” வாசித்துக்கொண்டிருந்தேன். பஞ்சத்தில் வாடும் பிரமநாயகம் பிள்ளையும் மனைவி செல்லம்மாளும் தனிய இருந்து குடித்தனம் நடத்துகிறார்கள். செல்லம்மாள் ஒரு சீக்காளி. தீரா வியாதிக்காரி. உடம்பில் சக்தி எதுவுமில்லாமல் எழுந்து நடக்ககூட அவளுக்கு துணை வேண்டும். ஆனால் அவள் வாயோ சும்மா இருக்காது. தொணதொணத்துக்கொண்டே இருக்கும். சுரம் வந்தால் உளறுவாள். “என்னைய எதுக்கு கட்டிப்போட்டு வச்சிருக்கீக? நான் பொடவை எல்லாம் இனி கேக்க மாட்டேன், அவுத்து விடுக, ஆக்க வேணாமா? அம்மைய பாத்துட்டு வரவேணாமா?” என்பாள். “அம்ம எங்க போயிட்ட .. தந்தி குடு .. அம்ம வரோணும்” என்பாள். திடீரென்று “அட அம்மைய .. நீயி எப்ப வந்த? ஆரு தந்தி கொடுத்தா?” என்பாள். “இப்ப தான் வந்தேன், தந்தி வந்தது .. ஒடம்புக்கு இப்ப எப்படி?” என்று பிரம நாயகமும் அவளது தாய் போல நடித்து பதில் சொல்லுவார்.

எந்நேரமும் தொணதொணக்கும் நோயாளி மனைவி, அவள் தொணதொணப்புக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி, பார்த்து பார்த்து பணிவிடை செய்யும் ஏழை கணவன். இவனுக்கு திடீரென்று பணிவிடை செய்ய அவள் கிளம்புவாள். தோசை சுடுவாள். தோசை எங்கே தண்ணியில் சுடுவது? செம கியூட்டாக இருக்கும் இந்த இருவரின் வயோதிப காதலும். காதல் தான் அது. காதல் என்றால் சும்மா அன்பே, ஆருயிரே என்று மடியில் விழுந்து கிடக்கும் காதல் இல்லை. வயோதிபத்தில் வரும் வாஞ்சை கொண்ட காதல். ஆளாளுக்கு உரிமை எடுத்து உபத்திரம் தர தயங்காத காதல் அது. அதில் ஒரு சந்தோசம். “நோயாளி ஆனாலும் இவள் என்ர மனிசி, இவள விட்டா எனக்கு வேற யாரு இருக்காக?” என்ற பாசம் பிரமநாயகத்துக்கு. “ஆம்படையான் தானே என்னைய கவனிச்சா என்னவாம்?” என்ற விறுமாப்பு செல்லம்மாளுக்கு. சும்மா பின்னும். வாசிக்க வாசிக்க .. ப்ச் .. இப்படி இருக்கவேண்டும் என்று தோன்றும்.

கடைசி அத்தியாயத்தில் செல்லாம்மாள் இறந்துவிடுவாள். அதற்கு பிறகு பிரமநாயகம் செய்தது தான் என்னை துவட்டிப்போட்டது. இதுவரை வாசித்தவர்கள் இந்த கதையைதேடி வாசியுங்கள். துவட்டும்.

PR9A9628

“செல்லம்மாள்” வாசித்து இரண்டு நாளாய் தூக்கமில்லை. எப்படி ஒரு காதல் இது? எவ்வளவு கியூட்டாக தலைவர் எழுதியிருக்கிறார்? கை துறுதுறுத்தது. ஆனால் காதலை எழுத அல்ல. இதை அப்படியே புரட்டிப்போட்டு, அந்த தொணதொணப்பில் காதல் இல்லாமல் எரிச்சல் மட்டுமே இருந்தால் என்ன ஆகும்? யோசித்தேன்.  காதலே இல்லாமல் கடமைக்கு வாழ்ந்தவர்கள் இறுதியில் தனித்துப்போனால் எப்படி இருக்கும்?

அப்படி யோசிக்க பிறந்தது தான் “நேற்று அவள் இருந்தாள்”. என் கதைக்கு வலுவான ஒரு ஆண் பாத்திரம் தேவையாய் இருந்தது. யாரைப்போடலாம் என்று நினைத்த பொது தான் சைக்கிள் கடை சாமி மனதில் வந்தார். அப்புறம் எழுத தொடங்க கதை அருவி போல ஓடியது. புதுமைப்பித்தன் எழுதியது காதலை. நான் எழுதியது வன்மத்தை.  கேதா வாசித்துவிட்டு “அண்ணே இது உங்கட பெஸ்ட்” என்றான். ஒரு வாரம் கழித்து வாசித்துவிட்டு “கலக்கீட்டடா ஜேகே” என்று யாருமே இல்லாத சமயம் நானே கண்ணாடியை பார்த்து கொலரை தூக்கிவிட்டேன்.  வழமை போல பென்ஸ் காரை கனபேர் ஒட்டுவதில்லை என்பதால் படலை வெறிச்சோடியது!

தனுஜா ரங்கநாத். எவா அவா என்று தெரியவில்லை. நம்ம ஜெயமோகனுக்கு இந்த கதையை அனுப்ப, வாசித்த ஜெயமோகனும் அதை தனது தளத்தில் பதிவேற்றிவிட்டார்.  சுமுகன் அதிகாலையிலேயே அண்ணே “உங்கட கதை ஜெமோ தளத்தில் இருக்கு” என்றவுடன் ஓடிப்போய் பார்த்தேன். இருந்தது. அட “கலக்கீட்டடா ஜேகே”.  ஒரே வினாடி தான். எழுதியவர் பெயர் பார்த்தேன். “தனுஜா ரங்கநாத்” இருந்தது. அடப்பாவிகளா. கிணற்றை இப்படியுமா திருடுவீங்கள்? ஜெர்க்காகிட்டேன் பாஸ். திருடுறது தான் திருடுறீங்க. எங்க கிட்ட எதுக்கடா திருடுறீங்க? நமக்கு வடக்கு மாகாணசபை அமைச்சர் பதவி கூட இல்லடா. அப்பிரசிண்டுகளா.

DSC_0829

ஜெமோவுக்கு விஷயத்தை சொல்லி உடனேயே மெயில, அவர் உடனேயே தவறை திருத்தி தன் தளத்தில் போட்டார். மிக்க நன்றி எழுத்தாளரே.

அன்புள்ள ஜேகே
மன்னிக்கவும் thanuja.thanu91@gmail.com என்ற மின்னஞ்சலில் இருந்து இக்கதை அனுப்பப்பட்டது. ஒரு மோசடி என அறிந்தது வருத்தமளிக்கிறது.
இதைச்செய்தவர் இதன்மூலம் புத்திசாலி என்று தன்னை நிரூபிக்க முயல்கிறாரா அல்லது அசடு என நிரூபித்துக்கொண்டிருக்கிறாரா என்பதுதான் குழப்பமாக இருக்கிறது
-ஜெ
http://www.jeyamohan.in/?p=40666

சரி பரவாயில்ல. அட்லீஸ்ட் இப்பிடியாவது நம்ம கதையை ஒரு எழுத்தாளர் வாசித்துவிட்டாரே என்று ஒரு பிளேன்ரீ குடிச்சிட்டு கோடிங் எழுதுவோம் என்று உட்கார்ந்தால், இன்னொரு நாதாரி, நான் எழுதின கடல்திரைப்பட விமர்சனத்தை ஜெமோவின் பேஸ்புக் பக்கத்தில ஷேர் பண்ணி வச்சிருக்கு. எழுதினத நானே மறந்துபோனேன். ஒருதடவை போயி வாசிச்சு பார்த்தன். “என்ர அம்மாளாச்சி!”. பதிவில ஜெமொவிண்ட டங்குவாரு அறுந்து தொங்குது. எனக்கு அண்டைக்கு எழுத்துல சனி நின்று நர்த்தனமாடி இருக்கிறது என்று இண்டைக்கு தான் தெரிஞ்சுது. இந்த பதிவை கிண்டி எடுத்து ஷேர் பண்ணினவன் மட்டும் என் கையில கிடைச்சான் …. ம்ம்ம். எங்கேயிருந்தடா கிளம்பி வரீக?

Kadal-Movie-Stills-837i00001162013i

அவ்வ்வ்!


திருப்தியும் நெகிழ்ச்சியும்

"திருமணத்துக்கு வாற ஆக்களுக்கு என்ன குடுக்கலாம்?”

ஜீவா கேட்டபோது உடனேயே “பாரதியார் கவிதைகள்” என்றேன். "பழைய ஐடியா ஜேகே வேற சொல்லுங்க"என்றாள். வித்தியாசமாக இளையராஜாவின் “How to name it?” சிடி கொடுப்பதாக தீர்மானித்து கஜனிடம் சொல்லி ஓர்டரும் குடுத்தாயிற்று. ஆனாலும் ஒரு சந்தேகம் உறுத்திக்கொண்டிருந்தது. வரும் ஆட்களில் எத்தனை பேர் Bach ஸ்டைல் ரசிப்பார்கள்? சிடி எங்கேயாவது மூலையில் முடங்கும் அபாயம் இருந்தது. குழம்பினோம். திடீரென்று ஜீவா

"யோவ் பேசாமல் புத்தகமே குடுப்போம், ஆனா இந்த திருக்குறள், பாரதியார் இல்லாம contemporary எண்டால் நல்லா இருக்கும்".

அட ஆமால்ல. புத்தக வேட்டை தொடங்கியது.

வருகைப்பட்டியலை வைத்து யாருக்கு என்னென்ன புத்தகம் என்று தீர்மானித்தோம்.  இறுதியில் நூற்றைம்பது கவிதை தொகுப்புகள். நூறு நாவல்/கட்டுரை வகை புத்தகங்கள். நூறு ஆங்கில நூல்கள் என்று பிரித்தோம்.

நாவல்/கட்டுரைகவிதை தொகுப்புஆங்கில நூல்கள்
 

கடவுள்களின் பள்ளத்தாக்கு

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

Outliers

கடவுள்

கம்பனின் அரசியல் கோட்பாடுகள்

Alice in wonderland

எழுத்தும் வாழ்க்கையும்

தமிழுக்கு நிறமுண்டு

Madal Doova

நகரம்

தண்ணீர் தேசம்

Hitchhiker's guide galaxy

என் இனிய இயந்திரா

வைகறை மேகங்கள்

Life Of Pi

மீண்டும் ஜீனோ

சிகரங்களை நோக்கி

Interpreter of Maladies

ஆட்டக்காரி

பெய்யேன பெய்யும் மழை

The Namesake

திசை கண்டேன் வான் கண்டேன்

 

Two States

 

 

Animal Farm

கெத்தாக பிளான் பண்ணிவிட்டோமே ஒழிய இதை செயற்படுத்துவது இலகுவாக இருக்கவில்லை. முதலில் புத்த்தகங்களின் விலையை கூட்டிப்பார்த்தால் தாலிக்கொடியின் விலைக்கு மேலே போகும் போல இருந்தது. ஆரம்பத்தில் தெரிவு செய்த பல புத்தகங்களை தூக்கவேண்டி வந்தது.  ஈழத்து படைப்புகள் எழுதுவுமே ஸ்டோக்கில் இல்லை என்றார்கள். இந்தியாவில் இருந்து வர லேட்டாகும் என்றார்கள். “என்னடா இது வழமை போல குங்குமச்சிமிழும் தாங்க்யூ கார்டும் தான் குடுக்கோணுமா?” என்று இரண்டு பெரும் குழம்பிப்போய் இருந்த சமயம் தான் ஆபத்பாந்தவனாய் துஷி வந்து சேர்ந்தான். “அண்ணே இந்த ஐடியாவுக்கு ஹாட்ஸ் ஒப், மிச்சத்தை நான் பார்க்கிறேன்” என்றான். எனக்கு நம்பிக்கையில்லை. “சொதப்பிடாத மச்சி” என்றேன்.

“அண்ணே பொண்ணு மாட்டர்ல வேணுமெண்டா சொதப்புவன் ஆனா பொத்தக விஷயத்தில சொதப்பமாட்டேன்”

என்றான். அட நம்ம பயல்!

நான் கொழும்பு போயிறங்க புத்தகம் எல்லாம் வந்திறங்கியது. எல்லாவற்றிலும் நாங்களே கை பட எங்கள் பெயர்கள் எழுதி இரண்டு குடும்பங்களும் சேர்ந்து கவர் கவர் போட்டோம். மணவறையில் ஆட்களுக்கேற்றபடி பார்த்து தெரிவு செய்து கொடுப்போம் என்று ஜீவா சொன்னாள். சூப்பர் ஐடியா, ஆனால் திருமணத்தன்று நம்மாளுங்க மின்னல் மாதிரி வந்து போனதில நாங்கள் திணறிப்போனோம். பிளான் பி போட்டு இந்தூஷனை அழைத்து “தம்பி நீயி ஒரு ஜட்ஜ்மெண்ல குடுடா” என்று சொல்லி அவனும் சரியாகவே வேலையை முடிய மனதில் சந்தோசம். ஆனாலும் ஒரு உறுத்தல். என்னடா இது உயிரை குடுத்து ஒரு வேலை செய்திருக்கிறோமே. ஒருத்தருமே அதை கண்டு கொள்ளவில்லையே என்ற ஒரு சஞ்சலம். சொதப்பீட்டோமோ?

இல்லை.. உண்மையிலேயே இது நல்ல முயற்சி என்று கலியாணத்தன்றே நம்ம லோஷன் படமும் போட்டு இப்படி எழுதியிருந்தார்.

1185125_10153220889725368_1497750989_nவழமையாகத் திருமணவீடுகளில் தாம்பூலப் பைகளையும் நினைவுச் சின்னங்களையும் (அநேக நேரங்களில் விநாயகர் சிலை அல்லது குங்குமச் சிமிழ்) வீட்டில் கொண்டுவந்து சேர்க்கும் எமக்கு இன்று Jeyakumaran Chandrasegaramதிருமணத்தில் கிடைத்த இனிய ஆச்சரியம்...

சுஜாதா பைத்தியமான எனக்கு மட்டும் தான் சுஜாதா நூல் தரப்பட்டதா? எனவும், மற்றவர்களுக்குக் கிடைத்த நூல்கள்/நூல்களா பற்றி அறியவும் ஆவல்.
(JK ஆறுதலாகச் சொல்லட்டும் )

பலதரம் வாசித்தும் என் வீட்டு நூலகத்தில் இல்லாத புத்தகத்தை எனக்கு அளித்த மற்றொரு சுஜாதா சிஷ்யன் புது மாப்பிள்ளையின் மணவாழ்க்கை மேலும் மகிழ்வாக அமைய மீண்டும் வாழ்த்துக்கள்.

(இதே ஐடியாவை இனித் திருமணம் முடிக்கப்போகும் எல்லோரும் பின்ப�ற்றுக... என்னிடம் இல்லாத நூல்களின் பட்டியலைப் பிறகு தருகிறேன்)

 

திருப்தியாக இருந்தது. நேரில் அழைக்காவிட்டாலும் நண்பர்களும் வாசகர்களும் என் திருமணம் என்று நிஜமாக உவப்பெய்தி வந்து வாழ்த்தினார்கள். திருமண பரிசில்களை ஆவலாக நானும் ஜீவாவும் பிரித்து பார்த்துக்கொண்டிருக்கும் போது (சரிடா சரிடா மொய்யையும் தான்) இன்னொரு ஆச்சர்யம். ஜனனி என்ற வாசகி திருமணத்துக்கு வராதுவிட்டாலும், கௌரி மூலம் தான் கைப்பட வரைந்த இந்த ஓவியத்தை அனுப்பியிருந்தார்.

IMG_54802

தலைவரே வைகுண்டத்தில் இருந்து எங்களை வாழ்த்தியது போல… எழுத்து எப்படிப்பட்ட ஆட்களை சேர்த்திருக்கிறது பாருங்கள்.

வேறென்ன வேண்டும் பராபரமே?


வாரிதி வரும் கம்பன் விழா!

“தம்பி விழாவுக்கு கம்பவாரிதியும் வாறார், நீங்கள் மூன்று நிகழ்ச்சியில பேச வேண்டி வரும்”

என்று ஜெயராம் அண்ணா சொன்ன நாள் தொட்டு கால் தரையில் படவில்லை. என்னுடைய முதலாவது கொல்லைப்புறத்து காதலி. தூர நின்று பார்த்து வளர்ந்த ஒழுங்காக வித்தை பயிலாத ஏகலைவன் நான். தலைவரை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் இப்போது. இலேசுல கிடைக்குமா என்ன? கூடவே ஒரு நப்பாசை. மூன்று நிகழ்ச்சியிலே ஒன்றில் கூடவா அவரோடு கூட மேடையேறும் சந்தர்ப்பம் கிடைக்காது? அது பிறந்த பலன் அன்றோ?

Vizha 2013 Large Poster VIC 

சிட்னியில் சனிக்கிழமை (26-10-2013) காலை அமர்வில் இளையோர் அரங்கில் “இன்றெம்மை உயர்த்த இவரே துணையாவார்!” என்ற தலைப்பில் இலக்குவனை எடுத்து பேசுகிறேன். அடுத்தநாள் ஞாயிறு (27-10-2013) மாலை அமர்வு கவியரங்கில் “பேசாப்பொருட்கள் பேசினால்” என்னும் தலைப்பில் “சூர்ப்பனகை மூக்கு” என்று வாசம் பிடிக்கிறேன். இங்கே மெல்பேர்னில் ஞாயிறு (03-11-2013) மாலை அமர்வில் சுழலும் சொற் போர். “சிறந்த இல்லாள் எனும் தகுதிக்கு உரியவள்” என்ற தலைப்பில் என்னது “தாரை”.  கம்பன் மேடை. அதற்கென்று ஒரு தரம் இருக்கிறது. அதனால் டிஆர்பி குறைந்த டைம் ஸ்லாட்டில் எங்கள் நிகழ்ச்சிகள் இருந்தாலும் தரத்தில் குறையாது என்று உறுதி கூறலாம். நான் சொதப்பினாலும் நம்ம தல கேதா இருக்கிறான். இப்பவே ஆள் வேட்டி கட்டி நிற்பதாக கேள்வி. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்களை வரவேற்க பத்து வரி கவிதை எழுதித்தா என்றார்கள். மொக்கை போட்டேன். கவிதை என்றார் அமைப்பாளர். நீங்க என்ன சொல்லுதீக மக்களே?

கண்ணோடு கண்ணினை கவ்வி
உம்மை எல்லாம் உண்ணவும்
கம்பன் கவி பாடி
உள்ளத்தை கொள்ளை கொள்ளவும்
எம்மவர் வருகிறார்.
ஏகலைவர் பலர் இங்கிருந்து வில்லேற்ற
இவர்க்கு ஆழி தாண்டி கொஞ்சம் வாளி பயிற்ற
வாரிதியும் அவர்தம் வாரிதியும்
995198_341655659295645_1782746374_nசாரதியின் புகழ் பாட
ஊர்தி ஏறி வருகிறார்.
பாரதியும் வியந்தேற்றும்
நாடனவன் மொழியாலே
கன்னி எங்கள் தமிழினையே
காதலுற்று, மோகமுற்று
வதுவை செய்து, காமுற்று
கூடி, அமுதுண்டு கொண்டாடி
ஆடி பாடி
அது அடங்கும் போதினிலே,
தேடுகின்ற வாழ்க்கையெல்லாம்
உணரவைக்கும் உரைகளாற்ற
முனைவர் எல்லாம் வருகிறரே.
அசையும் உலகின் அசையா மொழியின்
அரவம் கொஞ்சம் அழகாய் கேட்க
அன்புடையீர் நீவீர் வந்திடுவீர்.
வந்துமே கம்பர் அவையறிவீர்.
அவையறிந்து தமிழறிந்து
அகுதின் பொருள் சுவை அறிந்து
உரையறிந்து கருவறிந்து
அறியாதன பல அறிந்து – ஈற்றில்
உமை அறிவீர்!
செம்புலப் பெயல் பாய்ந்திட்ட
வானுடை நீரை போல!
வந்தவரை வாழவைக்கும்
தமிழோடு உம்மையும் கலந்திடுவீர்.

கவிதை எப்படி என்று கஜனிடம் கேட்டேன். வாசிக்காமல் சொன்னான்.

வழமை போல விளங்க இல்ல . அத விடு.. கம்பவாரிதியோட ஒரே மேடைல நீயும் ஏறுவியா?
இல்ல மச்சி … நாம இன்னமும் இளையோராம்.. இப்பவே ஏற முடியாதாம்.
அட பாவி .. உனக்கு தானேடா தாடி கூட லைட்டா நரைச்சிட்டுது ..அத சொன்னீயா?
இல்லையாம்டா நாங்க ஸ்டில் யூத்து தானாம்
இன்னுமாடா நீயி யூத்து? மனிசி கூட நம்பாதேடா?
மூத்த கலைஞர்கள் இருக்கும் வரை நாமெல்லாம் ஸ்டாலின்கள் தான் மச்சி .. அவ்வ்வ்வ்

 


வா வா வா கண்ணா வா

maxresdefaultசிம்லாவில ஷூட்டிங். சூப்பர்ஸ்டார் அமலா டூயட். மெலடி என்று சிட்டுவேஷன் குடுத்தால் தல சதிராடும் என்பது உலகறிந்தது. ரத்தமாக இரண்டு சரணம், ராஜாவின் விருப்பத்துக்குரிய ராகம் ஹம்சத்வனி (பூ முடித்து போட்டு வைத்த வட்ட நிலா, மாலைகள் இடம் மாறுது மாறுது, எங்கு பிறந்தது? எல்லாம் ஒரே ஆக்கள் தான் பாஸ்). தல பின்னிப்பெடல் எடுத்து இருக்கும். இன்டர்லூட் எல்லாம் வயலின், பேஸ் கிட்டார் என்று சதிராடும் இசை, சரணம் வந்ததும் ஆளை அடிக்கும் மெலடிக்கு மாறும். “ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே” என்று சித்ரா சிணுங்கும் போது ஐயோடா சொல்லி காதலியின் அருகாமையை நாடி மனம் சிலிர்க்கும். அப்படி ஒரு பாடல்.

இந்த பாடலை எப்படி படமாக்கவேண்டும்? சும்மா புது வெள்ளை மழை போன்று எடுக்கவேண்டாமா? ஆனால் எஸ்பி முத்துராமன் ரஜனிக்கும் அமலாவுக்கும் உடற்பயிற்சி பழக்கியிருப்பார். அவ்வளவு மொக்கை. எடுத்த சீனை இவர் இளையராஜாவுக்கு கொண்டுவந்து போட்டு காட்டியிருக்கிறார். ராஜா சீனை பார்த்திட்டு எஸ்பி முத்துராமனின் செவிட்ட பொத்தி ஒரு அறை விடுகிறார்.

“என்னையா பாட்டு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறே? … முப்பது வயலின் போட்டு மூசிக் வாசிச்சா நீயி அவுங்களை விட்டு கிச்சு மூச்சு விளையாட விட்டிருக்கிறே… அந்த மாதிரி ஒரு பரதநாட்டிய கலைஞர்,  மொத்த உருவமே ஸ்டைலா நம்ம தல… பாட்டை பின்னி இருக்கவேண்டாமா… இதோ பாரு இன்னொரு சரணம் போட்டு தர்றேன்.. என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது .. பாட்டு அப்பிடி இருக்கோணும்.. போய் எடு என்றிருக்கிறார்”

ராஜா போட்டுக்கொடுத்த மூன்றாவது சரணம் தமிழிசையின் ஒரு மைல்ஸ்டோன் இசை. அந்த இன்டர்லூடில் கர்னாடக சங்கீதத்தை தல அப்படியே நுழைக்கும். மிருதங்கம் முழங்கும். இதை சவாலாக எடுத்து காட்சி அமைத்திருப்பார் எஸ்பி.

ஆலாப்புடன் பெண்கள் கோரஸ். இன்டர்லூட் ஆரம்பிக்கிறது. அப்படியே பனி மழையில் இருந்து கமராவை இறக்கினால், பனிமேடையில் கம்பளம் விரித்து அமலா பரதம் ஆடிக்கொண்டிருப்பார். நம்ம ஸ்டைல் மன்னன், சும்மா, விஷுக்கேன்று ஒரு ஷோலை உதறிப்போட்டுக்கொண்டு சுற்றுவருவார். மிருதங்கம் முழங்கிக்கொண்டிருக்கும். அப்படியே காட்சி மலைப்பாதைக்கு வர மனோ தொடங்குவார்.

r11031

காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்

அப்படியே தல ஸ்டைலாக நடந்து வர அமலா நடனமாடிக்கொண்டிருக்க நடையா நடனமா வென்றது என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

எனக்கொரு சிறுகதை நீ – இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் – தனிமையில்
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா!

இது பாட்டுடா!

 


அரோகரா

அண்ணே அரசியல் எழுதுங்க என்று ஒரு அல்லக்கை காலைலேயே மெசேஜ் அனுப்பினான். நான் அரசியல் எழுதினா மாண்புமிகு கால்நடை தீவன அமைச்சர் ஐங்கரநேசன் ஓட்டைச்சிரட்டைக்குள்ள தண்ணியை ஊத்தி விழுந்து சாகவேண்டி இருக்கும். அவ்வளவு இருக்கு அவரை பற்றி. வேண்டாம். அரசியல் வேண்டாம் என்று மனிசி குரல்வளையை பிடிக்குது. ஆனாலும் விதி எவன விட்டுது? சும்மா இருந்த என்னட்ட, “அண்ணே ஒரு கவிதை இருக்கு, தாக்குவமா?” என்று கேட்டு எமன் ஸ்கைப்பில கேதா மூலமா சாட் பண்ணியிருக்காப்ள. சூப்பர் கவிதை. இத போடாட்டி பேந்தென்ன வியாழமாற்றம்?

1391988_10151902924641037_646086721_nவேல் முருகன் துணை இருக்கு
அவர் துணைக்கு பொலிஸ் இருக்கு
அவர் கேட்கும் பொலிஸ் காணி
அதுக்கேனோ இழுத்தடிப்பு?

ஒற்றுமையே பலம் என்றார்
ஒன்றாய் எம்மை நிற்க சொன்னார்
தம்பிக்கொரு கதிரை வேண்டி
இப்போ தனித்தனியே பிரிந்து நின்றார்

அப்ப சொன்ன கதை மறந்து இப்ப என்ன சொல்லுறியள்
எட கொஞ்சம் பொறுங்கோவன் இது இராச தந்திரமாம்
கல்லறையின் அரசியல் காலம் கடந்திட்டுதாம்
இனி கற்றறிந்தோர் செய்யும் காய்நகர்த்தல் வித்தைகளாம்

-- கேதா

&&&&&&&&&&&&&&&&&&


நன்றிகள்
சைக்கிள் கடை படம் வேண்டுமென்றவுடன், வீட்ட ஓடிப்போய் உடனேயே படத்தை அனுப்பிய கஜனுக்கு.
விக்கி படத்தை வச்சு கவிதையை உடனே அனுப்பு என்று சொல்லி முடிக்கமுதலே அனுப்பிய கேதாவுக்கு.

Disclaimer : சாமிக்கதை “யாவும்” உண்மை அல்ல!

பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு

$
0
0

 

IMG_55332
அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்னது “சூர்ப்பனகை மூக்கு”. கேதாவும் உடன் ஏறிய(அகலிகை கல்), அரங்கின் தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா என்பதும் அவையிலே என்னுடைய கொல்லைப்புறத்து காதலி கம்பவாரிதிஅவர்கள் இருந்து கேட்டு ரசித்ததும் வாழ்நாள் பெருமை. இருப்பத்துமூன்று வருட தவமும் கூட!



கறந்த பால் கன்னலொடு கலந்த நெய் கடையவல்லர்.
கம்பநாடன் காவியத்தின் இதயம் புக்கி ஆவி கொள்வர்.
இவரெல்லாம் இருக்கும் அவையீர், இவனை ஆசி வழங்கிடுவீர்.
உவரெல்லாம் இருக்கும் கவி, உறை போட்டு வடித்திடுவீர்!

சுடர்மிக்க அறிவுடனே இடம் தவறி பிறந்திட்ட
இடர் கண்ட மூக்கு நான். என் உரை கொஞ்சம் கேட்டிடுவீர்.
அறிஞரெல்லாம் கூடி இங்கே சிறந்த கவி பாடையிலே
அறுந்த என் கதையை சொல்லி அறுக்கபோறன் சகித்திடுவீர்!

சடைமுடியான் முடியிழந்து கொடுங்காடு எய்தினனே.
அவன் உடையாள், கொடி இடையாள் கூடவே வந்தனளே.
இளையவனும் காத்திருக்க இருவருமே பருகிட்ட – கோதாவரி
கரையருகே என்கோதாரியும் வந்தனளே.

25206-1324227430-0
வந்தவளும் மையலுற வரிசிலை அண்ணலுமே நின்றனனே.
நின்றவனை கொண்டவனாய் கண்டதுமே எண்ணினளே.
வெந்ததுவோ காமம். விளைந்ததுவோ மோகம்
மோகத்தின் பசலைத்தீ பொய்யின் சுவைபோல படர்ந்ததுவே.

கோமகனை தன் அழகில் யாசகனாய் மாற்றிடவே
பங்கயத்தின் மந்திரத்தால் (பியூட்டி)பார்லர் போயும் வந்தனளே.
பொன்மகளின் வண்ணமதில் மன்னவனும் தயங்கினனே
இங்கிவளும் வந்தனை நீ, எங்கனம்? என இயம்பினனே.

கேட்டவனின் காதினிலே காமுற்ற கதை சொல்லி
ஏற்றிடு நீ என்னை என்று நொய்யலும் பையநின்றாள்.
உண்டாட்டம் புரிந்தவனின் உள்ளார்த்தம் அறியாது
தப்பாட்டம் புரியஏனோ திண்டாட்டம் அன்பே? என்றாள்.

பன்னசாலை வெளியே வந்த பெண்ணரசி அழகை கண்டு
அடங்காத அழுக்காற்றால் அழகியைப்போய் அரக்கி என்றாள்.
கவர்ந்திவளை கொண்டுசென்று மறைத்திட்டால் – மன்மதனை
கந்தர்வம் புரிய இனி தடையில்லை என நினைத்தாள்.

சூர்ப்பனகை சூழ்ச்சியினை அறிந்திட்ட இளையானும்.
பேச்சுவார்த்தை இவளோடு பேதைமை என உணர்ந்தானே.
உடைவாளை உரிந்தானே. முடிபற்றி உதைத்தானே
முலைக்காம்பு காதிரண்டை மூக்கோடு அரிந்தானே

அரிகரனின் அவதாரம் தமக்கில்லை ஆனபின்னர்.
அரிந்தவனை மணந்திடவே அரக்கியவள் இசைந்தாளே.
சண்டைக்காரன் காலில்விழும் இந்தகால வழக்கம்போல – தனை
ஒறுத்தவனை காதலித்து, மீள, மூக்கறுபட்டு போனாளே!

மனிதஉரிமை மறுக்கும்மண்ணில் அறுந்துபட்ட பெண்மணிக்கு
மனுநீதி காத்தருள இராகவனும் மறந்தானே.
அவதார நோக்கத்தை அடைய வேறுவழியின்றி
அரசியல் போல் மூக்கறுத்து இராவணனை சென்றடைந்தானே.

தம்பியுடை மன்னவரின் சட்டாம்பிதனம் போல
அம்பி நீயும் செய்த செயல் அடுக்காது கண்டீரோ.
இன்றைக்கும் அன்றைக்கும் இதுவே எம் இழிவுநிலை
இதை சொல்லும் எவருக்குமே மூக் கறுபட்டஅவலநிலை.

மூக்கறுந்த பின்னாலும் மோகம் அடங்கும் நோக்கமில்லை
ஏக்கமுற்ற மூச்சினிலே இராமன் வாசம்எங்கும் நீக்கமில்லை.
மோகத்தின் வாசத்தை முகர்ந்து அவள் தொடர்வள் என்றோ
மூக்கரிந்து போட்டுவிட்டு காட்டினின்று நீங்கிவிட்டீர்?

அவளுக்கென்ன அரக்கியன்றோ? அடுத்த மூக்கை ஆக்கிடுவாள்.
அறுந்து கிடக்கும் எனைஎடுத்து எவன் முகத்தில் ஓட்டிடுவான்?
ஆரியனும் அறுத்த புழை, ஊடாக ஓடும் சொரி
ஆயிராமாம் ஆண்டு கழிந்தும் இன்றும் ஆறாக ஓடுதடி.

ஆற்றருகே அனாதையாய் அரற்றும்என்னை விட்டுவிட்டு
கம்பநாடன் காப்பியமும் கடந்து சென்று போனதுவே.
ஆழிதாண்டி சீதையினை ஈழம் சென்று மீட்டபின்னும்
மூளி என்னை மீட்காது புய்ப்பகத்தில் பறந்ததுவே.

அருந்தகையை ஆசையுற்ற தவறு என்ன சொல்லீரோ?
பரம்பொருளில் மயங்காதோர் தரணியிலே எவருமுண்டோ?
ராதையோடு கோபியரை கோகுலத்தில் கொண்டவரே – சீதையோடு
மாதர் இரண்டை சிந்தை ஏற்றமாட்டீரோ?

பிரிந்துபோன காதலரின் இறுதி வார்த்தை துடிப்பு போல
அணைந்துபோன அகல்விளக்கின் எஞ்சியிருக்கும் திரிபோல
இறுமாப்பாய் வாழ்ந்து வீழ்ந்த ஈழத்தமிழன் நிலை போல – ராமா
மூக்கறுந்து கிடக்கேன் நான். மீட்டுப்போக வருவாயோ?

IMG_55192
அகலிகையின் விமோசனத்தை அடிஎடுத்து முடித்துவைத்தாய்.
அணைகட்ட மணல் கொடுத்த அணிலுக்கும் அருள் செய்தாய்
அய்யனுனை கண்டுவிட்டே சபரியவள் முத்தி எய்தாள் – ராமா
அறுந்த இந்த மூக்கைமீட்க அவ|தாரம் ஒன்று எடுப்பாயா?

அரிந்த நாசி சாபத்தாலே அடைந்த நாசம் கொஞ்சமில்லை
பிரிந்த தேவி தேடி நீயும் அலையா இடம் எங்குமில்லை
பறந்து திரிந்த சடாயுவும் இறந்துபட்டு போயினனே
புறத்து நின்று வாலியை வென்று தீரா.. பழி சுமந்தாயே

வானுயர்ந்த இலங்கை தேசம் வால் நுனியில் எரிந்ததுவே.
சாமகானம் இசைத்த வேந்தன் தலைகள் பத்தும் சிதைந்ததுவே
காடு விட்டு நாடு போயும் கண்டகோலம் என்ன சொல்லும்? – நீரு
மீட்டெடுத்த சீதை கூட சென்றுவிட்டாள் காடு மீண்டும்.

மூக்கறுத்த சாபம் உமை முச் சந்தியிலே நிறுத்தியதே – மீண்டும்
பிறப்பெடுத்து வந்துஎந்தன் கோபத்தினை குறைப்பீரோ?
வரும்போது சீதையினை மிதிலையிலே விட்டுவாரும்
அவசரக்காரனையும் அயோத்தியிலே இட்டுவாரும்.

அம்பு ஒன்றும் இங்கு வேண்டாம். அன்புமட்டும் கொண்டுவாரும்.
அண்ணலோட அவதாரத்தில் இனி அகிம்சை கொஞ்சம் சொல்லவேண்டும்.
அரக்கியோட சூழ்ச்சிக்கெல்லாம் மூக்கை இனி அறுக்காதீம்.
அன்பேசிவம் என்று (அவள்) மனதைதிருத்த முயற்சி செய்யும்.

இல்லுக்காக வில்லெடுக்கும்
வில்லங்கம் இனி வேண்டாம்.
இம்சை என்று பெண்ணொன்றை
பங்கப்படுத்தும் நிலை வேண்டாம்.

கங்கை கொண்ட சிவனை போல
பெண்ணை உந்தன் கொண்டை மேலே
தங்க இடம் கொடுத்திருந்தால்
சண்டை ஏதும் வந்திராதே!

போக்குமிடம் வழி இன்றி புலம்பலுற்ற கவியன்றி
வாக்கு சொன்ன மூக்கின் கதையில்  - மனதை
தாக்க எதுவும் சொல்லவில்லை.
தப்பு என்றால் மன்னித்திடும். நாக்கை வேண்டின் நறுக்கிவிடும்.
வம்பு என்றால் சொல்லிவிடும்.
பாவம்... தம்பிதானே விட்டுவிடும்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஏனைய கவிதைகள்
உயிரிடை பொதிந்த ஊரே!
மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!
கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(
ஹைக்கூ எழுதிய கூப்பாடு!
காத்திருப்பேனடி!
எங்கள் வீட்டில் இலக்கியம் ...

மனதை நெகிழவைத்த குட்டி கதை.

$
0
0

காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் வாங்கில் எழும்பி நில்லுங்கோ"என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது. ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா"என்று அழைத்தார்.
"வீட்டுப்பாடம் செய்தியா?"
"இல்ல சேர், எனக்கு அது விளங்க இல்ல"
"வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே"

குழந்தை தயங்கியபடியே சொன்னது.

"எனக்கு அம்மா இல்ல"
ஆசிரியர் துணுக்குற்றுபோனார். அடடா அவசரப்பட்டு வாங்கில் ஏற்றிவிட்டோமோ என்று வருந்தினார்.

"அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே கண்ணா"
"எனக்கு அப்பாவும் இல்லை சேர்"

குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்? ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று வருந்தினார். குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின் கண்கள் கலங்கிவிட்டது.

"கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? .. பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே .. கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?"
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.

"மம்மி டாடியோட"
&&&&&&&&&&&&&&&&&&
சிட்னியில்  பேராசிரியர் ரெங்கராஜா சொன்ன குட்டி கதை.

வியாழமாற்றம் 07-11-2013 : என்னாச்சு?

$
0
0

 

அடேல் அன்ரி

Adele-Balasingham
முல்லைத்தீவிலிருந்து படகு மூலமாக பாலாவும் அடேலும் வெளியேறுகிறார்கள். கூடவே துணைக்கு சூசையும் சில போராளிகளும். தூரத்தில் சக்கையோடு இரண்டு படகுகள் காவலுக்கு. ஆபத்து மிகுந்த இந்த பயணம் முடிவில் ஒரு சரக்கு கப்பலை அடைகிறது. அந்தக்கப்பலில் சிலநாட்கள் பயணம். பின்னர் அதிலிருந்து இன்னொரு சரக்கு கப்பலுக்கு தாவுகிறார்கள். அதில் பலநாட்கள் பயணம். முடிவில் தாய்லாந்து நாட்டு கரையிலே மேலும் இரண்டு படகுகள் மாறி, நள்ளிரவில் கரையை அடையும் அதி பயங்கர அனுபவத்துடன் அடேல் பாலசிங்கம் எழுதிய “The Will To Freedom”, தமிழில் “சுதந்திர வேட்கை” நூல் ஆரம்பிக்கிறது.

adelஅடேல் பாலசிங்கத்தின் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது. மெல்பேர்னில் இருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பண்ணை ஊரான வராகுளில் பிறந்து வளர்ந்தவர். தாதியாக பயிற்சி பெற்றவர். சொந்த ஊரிலேயே இருந்தால் பெரிதாக ஒன்றும் கிழிக்கமுடியாது என்று தெரிந்து இருபத்திரண்டு வயதில் வன்வே டிக்கட்டோடு இங்கிலாந்து பயணமாகிறார். அங்கேயும் நாடோடி வாழ்க்கை, தன்னம்பிக்கையின்மை, மனம் ஒத்துக்கொள்ளாத வேலை என்று எதுவித நிம்மதியும் இல்லை. ஒரு கட்டத்தில் இதெல்லாம் வெறுத்துப்போய் சமூக விஞ்ஞான பட்டப்படிப்பை தொடங்குகிறார். இரண்டாம் ஆண்டில் காலடி வைத்தபோது தான், அதே பாடநெறியில் கலாநிதி ஆய்வு செய்துகொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்தை சந்திக்கிறார்.  கொஞ்ச நாள் பழக்கத்திலேயே காதல்.  இருவரும் சேர்ந்து ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்,  கிழக்கு திமோர், எரித்திரியா, பாலஸ்தீன விடுதலை அமைப்பு சார்ந்த கூட்டங்களுக்கெல்லாம் போய் வருகிறார்கள். கலந்துரையாடுகிறார்கள்.  அவர்கள் இவர்களின் வீட்டுக்கு வந்து சாப்பிடுவார்கள். பேசுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக லண்டனில் இருந்த தமிழர் இயக்க உறுப்பினர்கள் இவர்கள் வீட்டுக்கு வந்து போக, அனைத்துலக விடுதலைப்போராட்டங்கள் பற்றிய முழு அறிவோடு பிற்காலத்தில் இடம்பெறப்போகும் அரசியல் நெறியாழுகைகளின் வித்து இங்கே போடப்படுகிறது.

1979ம் ஆண்டு அன்டனும் அடேலும் இந்தியா பயணமாகி பிரபாகரனை சந்திப்பதிலிருந்து இவர்களின் அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்டம் நிகழ்கிறது. அதன் பின்னரான பேச்சு வார்த்தைகள், இலங்கை இந்திய ஒப்பந்தம், புலிகள் பிரேமதாசா தொடர்புகள், சந்திரிகா என்று அச்சுக்கு சென்ற ஆண்டான 2001ம் ஆண்டு வரையிலான புலிகளின் சார்பான கோணத்தை இந்த புத்தகம் சொல்லுகிறது. அடேலும் தன் எல்லைக்குள் உச்சபட்டமாக காட்டக்கூடிய நடுவுநிலையையும் காட்டியிருப்பதால், ஓரளவுக்கு உள்ளிருந்து முதன்முதலில் உணரச்சிவசப்படாத தொனியில் வெளிவந்த முதல் புத்தகம் என்று “The Will To Freedom” நூலை சொல்லலாம்.

இந்த நூல் வெளிவந்தது 2002 சமாதான காலத்தில். கொழும்பில் இருக்கும்போது வாசித்த புத்தகம்.  எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலுமான தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றை அறியவேண்டுமானால், திறந்த மனதுடன் நான்கு புத்தகங்களை வாசித்தல் வேண்டும். அனிதா பிரதாப்பின் “Island Of Blood”, அடேல் பாலசிங்கத்தின் “The Will To Freedom”, எஸ். எம். கார்மேகத்தின் “ஈழத்தமிழர் எழுச்சி” மற்றும் ரஜனி திரணகமவின் “The Broken Palmyrah”. நான்கு புத்தகமுமே ஓரளவுக்கு தட்டுத்தடுமாறி போராட்டம் என்ற யானையை தத்தமது கண்ணோட்டத்தில் புரியவைக்க உதவக்கூடிய புத்தகங்கள். முடிக்கும்போது அளவுக்கதிகமான சோர்வும், அயர்ச்சியும், இயலாமையும் வந்து சேர வைக்கும் புத்தகங்கள். இத்தோடு கூடவே The Cageஉம் Still Counting The Deadஉம் வாசித்தால் தாளாமையோடு கொஞ்சம் தனிமனித பொறுப்பும் சேர்ந்துவரும். வாசிக்கும்போது எனக்கும் பீறிட்டுக்கொண்டு வரும். கொஞ்ச நாளில் அடங்கிவிடும்.

நூலின் மிக நுணுக்கமான பகுதி புலிகள் பிரேமதாசா இருபகுதியும் ஆடிய மங்காத்தா ஆட்டத்தை பற்றியது. ஒரு கட்டத்தில் இந்திய இராணுவத்தை எதிர்த்து போராட என்று பிறேமதாசாவிடமே ஆயுதம் கேட்கிறார் அன்டன். அன்டனின் இந்த கோரிக்கையை கேட்ட அமைச்சர் ஹமீது கொஞ்சம் ஆடித்தான் போனார். ஆனாலும் அன்டனின் ஆளுமை அவர்களை சம்மதிக்கவைத்தது.  அன்டன் எப்படி கேட்டார் தெரியுமா?

“புலிகளுக்கு ஆயுதம் கிடைப்பது முக்கியம். வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் நாட்டுப்பற்றுடைய அணியான விடுதலைப்புலிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்டால், இந்தியப்படைகளை வெளியேற்றவேண்டும் என்ற பிரேமதாசாவின் உறுதியான எண்ணம் என்றுமே நிறைவேறாது போகலாம்”

என்கிறார். “நாட்டுப்பற்றுடைய அணியான விடுதலைப்புலிகள்” என்று சொல்லும்போது அன்டன் எப்படி சிரிப்பை கட்டுப்படுத்தியிருப்பார் என்று யோசித்தேன். அதை வாசிக்கும்போது எனக்கு “கந்தசாமியும் கலக்ஸியும்”நாவலில் சுமந்திரன் சொமரத்னவை படுக்கவைத்துவிட்டு கந்தசாமியோடு கள்ளுக்கடைக்கு போகும் சம்பவம் ஞாபகம் வந்தது! சுமந்திரன் இப்படி செம கில்மாக்களை அந்த நாவல் பூராக செய்வார். நம்ம நிஜ சுமந்திரனுடைய பேச்சுகள் கூட சிலசமயம் இந்த வகையிலேயே இருக்கும்!

31l-yB54IcL._SL500_SY344_BO1,204,203,200_

அடேல் இப்போது தென் இங்கிலாந்திலே அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவருவதாக தெரிகிறது. இவரை பெண்புலி என்றும், யுத்தக்குற்றவாளி என்றும் ஒரு ஆவணப்படத்தை அண்மையில் இலங்கை அரச சார்பு நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருந்தது. ராஜபக்ஸவை கேள்விகேட்க முதல் அடேலை கைதுசெய்யவேண்டும் என்ற தொனி அதில் இருந்தது. பிரிட்டன் அரசாங்கம் அதனை கணக்கெடுக்கவில்லை. இந்நாட்களில் ஈழத்தமிழர்களின் போராட்டங்கள், கூட்டங்கள் என்று எந்த தொடர்புமில்லாமல் அவர் விலகியே இருக்கிறார். இருக்கவும் விரும்புகிறார் என்று தெரிகிறது. தொடர்புகொள்ள முயன்றவர்களிடம் கூட முடியாது என்று சொல்லி தன்மையாக மறுத்தும் இருக்கிறார். முப்பது வருடங்களாக தன் வாழ்க்கையை ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் நீரிழிவு கணவனுக்கும் அர்ப்பணித்த மதிப்பிற்குரிய பெண்மணி அடேல் அன்ரி.

மனிசி நிம்மதியாக வாழட்டும்.


அகலிகை

பந்தை தேடிக்கொண்டிருந்த அவசரத்தில் கவனிக்காமல் மிதித்துவிட்டு மிதித்த வேகத்திலேயே “ச்ச்சிக்” என்று காலைத்தூக்கிப்பார்த்தான் இராகவன். நாய்ப்பீ அடிக்காலில் அப்பிக்கிடந்தது. மீண்டும் “ச்ச்சிக்”கினான். வடிவாக தேய்த்து துடைக்கவெண்ணி நல்ல கல்லாக ஒன்றை தேடினான். சற்றுத்தள்ளி தம்பிக்காரன் லக்கி நாயுண்ணி பற்றைக்குள் ஒரு தடியை விட்டு விலக்கியபடியே பந்தை தேடிக்கொண்டிருந்தான். “அடிச்சவர், நல்லா தேடட்டும்” என்று நினைத்தபடி இராகவன் மீண்டும் ஒருமுறை காலைப்பார்த்தான். குப்பென்று மூக்குக்குள் அடித்தது. கொஞ்சம் அடிக்கால் கடிக்கவும் செய்தது. “சொறிநாயிண்ட” என்று நினைத்துக்கொண்டான். பீயை நன்றாக உரசித்தேய்த்து அகற்ற கல்லுவேண்டும். சொன்னமாதிரியே தூரத்தில் ஒரு கருங்கல் தெரிந்தது. காலை ஊன்றாமல் ஒற்றைக்காலிலேயே கெந்தி கெந்தியபடியே கல்லை நோக்கி நகர்ந்தான்.

47593835_thumb[1] (1)

“அண்ணே .. பந்தை தேடாம கெந்திக்கொண்டு போறாய்? … ஆணி ஏதும் ஏறிட்டோ?”

பந்தை தேடுவதை நிறுத்திவிட்டு லக்கி இவனைப்பார்த்து கேட்டதை இராகவன் பொருட்படுத்தவில்லை. தட்டுத்தடுமாறி கெந்தியபடியே அந்த கருங்கல்லை அடைந்தான். ஆயாசமாய் பீ அப்பிய காலை உயர்த்தி நன்றாக தேய்க்கவென்று கல்லை தொட விளைந்தபோது… திடுக்கென்று அந்த கருங்கல் ஒரு தேவதையாக உருமாறியது.

தேவதை, தமிழில் இவ்வளவு காலமும் இந்த சொல்லை காதலிக்கு பயன்படுத்தி வீணடித்துவிட்டார்களே என்று எண்ணியபடியே வேறு சொல்லை தேடினான் இராகவன். ஏஞ்சல். பொருத்தமாக இருக்கும்போல் தோன்றியது. கருத்த நீண்ட முடி, அள்ளிக்கோதி அலிஸ்பாண்ட் போட்டிருந்தாள். மேக்கப் என்று பெரிதாக இல்லை. கொஞ்சம் லிப்ஸ்டிக், ஐப்ரோ ட்ரிம் பண்ணி… பேஸியல் செய்திருப்பாள் போல. இல்லை இவள் இயற்கையாகவே பிரம்மனால் பேஸியல் செய்யப்பட்டே படைக்கப்பட்டிருக்கலாம்.. மார்பில் “I LOVE JAFFNA” பொறித்த டீஷேர்ட போட்டு டைட் டெனிமுக்குள் நுழைந்திருந்தாள்.   கால்களில் சிம்பிளான சப்பல் அணிந்திருந்தாள். நகத்துக்கு ஊதா கலர் போலிஷ் போட்டு, பாதம் வெள்ளை வெளேர் என்று ஸ்பஷ்டமாக தெரிய கல்லில் தேய்க்கப்போன தன் காலை அனிச்சையாக தன்னுடைய மற்றக்காலில் தேய்த்தான் இராகவன். அதைப்பார்த்த ஏஞ்சல் இவனைப்பார்த்து சிரித்தாள். நீ, நிலா பனித்துளி … சடக்கென்று கவிதை எழுத முயன்று தோற்றுப்போனான். இதுக்கு மேல் தாமதித்தால் மீண்டும் கல்லாகிடுவாளோ என்ற பயத்தில் மெல்ல தைரியத்தை வரவழைத்த படியே செருமிக்கொண்டு பேசத்தொடங்கினான்.

“எக்ஸ்கியூஸ் மேடம் .. யு நோ .. வாட்ஸ் யுவர் நேம்?”

ஏஞ்சல் இவனை முதுகு வளைந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு சொன்னாள்.

“அகலிகை”
“அகலிகை?”
“யியா .. அகலிகை”

இராகவன் கொஞ்சம் குழம்பிப்போனான். இந்த கல், அகலிகை விஷயங்கள் தமிழ் பாடத்தில் படித்ததாக ஞாபகம். அவள் தானோ இவள்? அவளைத்தான் இராமன் மீட்டுவிட்டானே? வாட் ஹாப்பின்ட் தென்?

“விச் அகலிகை?”
”நான் தான் இவன் கௌதமன்ட வைப்”

கனபேர்ம்ட். இது அவளே தான். எனதர் சாபவிமோசனம் என்று நினைத்துக்கொண்டான். பட் ஒரு டவுட்.

”ஓ .. உங்களை தான் இராமன் சாபம் நீக்கி புருஷன்காரனிட்ட சேர்த்து வச்சிட்டாரே… பிறகு எப்பிடி திரும்ப கல்லு ஆனீங்கள்?”
”அது ஒரு ஸீன் ஆயிட்டுது”
”ஏற்கனவே ஒரு ஸீன் ஆகி தானே கல் ஆனீங்கள் … ”
”மெய் தான் .. ஆனா நானும் மனுஷி தானே .அவன் கௌதமன் ஒரு பேக்கு .. காலமை தவம் செய்ய தொடங்கினா சந்தியா காலம் வரைக்கும் கொண்டினியூ பண்ணுவான். பிறகு ஸ்நானம் சாப்பாடு ...”
”அப்புறம்?”
”அப்புறம் திரும்பவும் இரவு தவம்”
”ஷிட்”
”ஸீ .. உங்களுக்கே இவ்வளவு ஷாக்காக இருக்கு என்றால் எனக்கு எப்பிடி இருக்கும்?”

ahalya_ram1

அகலிகையை முதன் முதலாய் கொஞ்சம் பாவமாய் பார்த்தான் இராகவன். பேதைப்பெண். என்ன செய்வாள்? “குரங்கு கையில பூமாலையை குடுத்தாலும் அது அட்லீஸ்ட் பிச்சாவது எறியும். இது பன்னாடை கௌதமன் போட்டு பூசை பண்ணியிருக்கு” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். உச்சுக்கொட்டினான்

”வாஸ்தவம் தான்”
”எனக்கென உணரச்சிகள் தனியாக இல்லையா?”

இப்போது தான் உறைத்தது. ஓ மை கோட்.

”அப்படி எண்டால் திரும்பவும் இந்திரனா? ஐயோ .. அவனுக்கு கிடைச்ச சாபம் தெரியுமே ..தாங்கேலாதே ..  எண்ட கடவுளே”
”இல்ல இல்ல .. நீங்க நினைக்கிற மாதிரி அப்பிடி ஒன்றும் நடக்க இல்ல”
”ஓ .. சொறி  அப்ப எப்பிடி மீண்டும் கல்லாக மாறினீங்கள்?”
”எவ்வளவு காலத்துக்கு தான் உணர்ச்சிகள் மரத்துபோன கல்லாகவே உலாவுறது? அதுக்கு பேசாக வெறுங்கல்லாகவே மாறினால்?”
“லொஜிக் விளங்கேல்ல”
”வெறுங்கல்லாக மாறினா அட்லீஸ்ட் உணர்ச்சிகளும் சேர்ந்து உறைந்து போயிடுமில்லையா?”
”ஓ ஐ ஸீ. ஸோ. நீங்களே .. இந்திரன் வந்ததா … ஒரு பொய்யை ..சொல்லி .. கௌதமனிட்ட சாபம் வாங்கி .. பிரில்லியண்ட் .. பட் .. எதுக்காக இந்த கல்லாய் சமைந்த வாழ்க்கை?”
”தெரியாமல் தான் கேக்கிறியா இராகவா?”
”வாட் டூ யு மீன்?”
”கல்லாக சமைந்ததால் தானே உன் பாதம் பட்டு இப்பிடி ஒரு விமோசனம் எனக்கு கிடைச்சிருக்கு”
”வாட் தெ ஹெல் ஆர் யூ டோக்கிங்?”
”எஸ் இராகவா .. நீ என்றாவது ஒருநாள் வந்து என் மேல் பாதம் படிவாய் என்று தான் செல் அடி பொம்மர் அடி கூட சமாளிச்சுக்கொண்டு இவ்வளவு காலமும் இருந்தனான்”
”என்ன சொல்லுற? .. அப்படி என்றால் … நான் தான் இந்த …”

குழப்பத்தோடு இராகவன் தூரத்தே தம்பி லக்கியை பார்த்தான்.  லக்கி இன்னமும் தொலைந்த பந்தை கண்ணும் கருத்துமாய் தேடியவாறே பற்றைகளுக்குள் திரிந்தான்.  அகலிகை மீண்டும் குனிந்து ஒரு கும்பிடு போட்டாள். பக்கத்துவீட்டு சிடி ப்ளேயரில் இளையராஜா பாடல் ஒலித்தது.

கல்லான பெண் கூட உன்னாலே
பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே
இராகவனே ரமணா ரகுநாதா…
பாற்கடல் வாசா,
ஜானகி நேசா ..
பாடுகின்றேன் .. வரம் தா.


மௌன ராகம்

ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்தபின்னர்,  கிளைமாக்ஸுக்கு பிறகு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும் கிறுக்கு குணம். ஆனால் சுவாரசியமாக இருக்கும்.

“மறுபடியும்” படம் பார்த்துவிட்டு, நிச்சயமாக அரவிந்த்சாமியும் ரேவதியும் பின்னர் சேர்ந்திருப்பார்கள் என்று அக்காவோடு வாதிட்டு இருக்கிறேன். அதன் முடிவே அப்படித்தான் எடுத்துப்பார் பாலுமகேந்திரா என்பது என் நீண்டகால வாதம்.

தளபதியில் அந்த ரஜனியின் “வெறுங்காவல்” டயலாக் தொடர்ந்திருக்க சாத்தியமில்லை. ரஜனிக்கும் பானுப்பிரியாவுக்கும் இயல்பாக காதல் மலர்ந்திருக்கும். இதயம் படத்தில் முரளியும் ஹீராவும் நிச்சயம் சேர்ந்திருப்பார்கள். மூன்றாம்பிறையில் அவ்வளவு உணர்வு பூர்வமாக கிளைமாக்ஸை முடித்திருந்தாலும் யோசித்துப்பார்த்தால் அந்த முடிவு ஒரு சப்பை தான். ஸ்ரீதேவி எப்படியும் தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை கேட்டுத்தெரிந்திருப்பாள். அவளை கண்டுபிடிப்பது கூட கமலுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்திருக்காது. இந்தியன் கமல் சந்தனக்கட்டை வீரப்பன் போல ஒருநாள் அம்புலன்சுக்குள் சுடப்பட்டு கிடந்திருப்பார்! ஆனால் ரசிகன் இதெல்லாம் யோசிக்கமாட்டான்.  இது  ஒருவித கண்கட்டி வித்தையே.

 

sadma7 

சில படங்களில் அப்படிப்பட்ட காட்சிகளையும் இயக்குனர்கள் வைப்பார்கள். நியூ படத்தின் இறுதிக்காட்சி அப்படிப்பட்டது. அதிலே அப்பா சூர்யாவும் மகன் சூர்யாவும் பேசும் காட்சியில் ஒரு இன்டலிஜென்ஸ் இருக்கும். சூர்யா அகத்தியனுக்கு பிறகு தமிழில் உருவான சிறந்த இயக்குனர். நடிப்பாசையால் நாதாரி தறிகெட்டு போயிட்டுது.

மௌனராகம் படத்து மோகனும் ரேவதியும் எப்படி குடும்பம் நடத்தியிருப்பார்கள் என்று யோசித்துப்பார்த்தேன். இருவருக்குமே செம் ஈகோ. அமுசடக்கிகள். உள்ளே இருக்கும் காதலை சொல்ல கூட ஈகோ தடுக்கும். அதற்காக பிரிவது வரைக்கும் போய்விட்டு சேருவார்கள். இந்த குணவியல்புகள் ஆதாரமானவை என்று வைத்துப்பார்த்தால், வாழ்க்கை பூராக இருவரும் சண்டை பிடித்திருக்கவே சாத்தியம் அதிகம். ஒவ்வொருமுறை சண்டையிலும் கூட முதலில் சமாதானமாவதும் ரேவதியாக தான் இருக்கும். எனக்கென்றால் அந்தப்படத்தின் முதல் காட்சி இப்படி வைத்திருக்கவேண்டும்.

மௌனராகம் கிளைமாக்ஸ்

ஒரு வயதான அம்மாவும் வயதான ஐயாவும் ரயில் நிலையத்துக்கு முன்னாலே இருந்து பம்மிக்கொண்டு நிற்கிறார்கள். அம்மாக்காரி ஏதோ அவரைப்பார்த்து அழுதபடி சொல்கிறார். பின்னர் அந்த ஐயா கொடுத்த பேப்பர்களை கிழித்து எறிகிறார். திடீரென்று ரயில் ஹோர்ன் அடிக்கிறது. இந்தம்மா மெதுவாக ஓடுது. இப்ப கமரா கோணம் திரும்பி மூலையில் இருந்த பெட்டிக்கடையை காட்டுகிறது. அப்போது தான் ரயிலில் இருந்து இறங்கிய ஒருவன் பெட்டிக்கடை முதலாளியிடம் பேசும் சீன்.

“என்னண்ணே அந்த அம்மாவுக்கும் ஐயாவுக்கும் இடையிலே ஏதும் சண்டையா?”
”கண்டுக்காதீங்க தம்பி”
”இல்லண்ணே அந்த அம்மா அழுதுகொண்டே ஓடுது..தள்ளாத வயசில”
”பின்னால அந்த ஐயா விக்கித்துப்போய் கிழிஞ்சு போன பேப்பர்களை பார்த்துக்கொண்டு இருப்பாரே!”
”ஓமண்ணே”
”இப்ப ஏதோ நினைவு வந்தவராய் ரெயிலை நோக்கி ஓடுவாரே”
”அட ஆமா!”
”இந்தம்மாவும் அழுதுகொண்டே வந்து .. ஒரு சின்ன பிரேக் போட்டு..”
”ரெண்டு பெரிசும் கட்டுப்பிடிக்குதுங்க அண்ணே
”இதே சீன் தான் தம்பி ...கருமம் ..அம்பது வருஷமா நடக்குதாம் .. என்ர அப்பாரு சொல்லியிருக்காரு… முன்னெல்லாம் இதுக பசங்களும் அழுதுகிட்டே வருவாங்க .. இப்ப அவிகளுக்கும் அலுத்து போச்சு!”


டொலி

இந்த செம்மறியை ஞாபகம் இருக்கிறதா? முதன் முதலில் குளோனிங் மூலம் உருவான விலங்கு. ஒரு பெண் செம்மறியாட்டின் பால் சுரப்பியில் இருந்து ஒரு செல்லை பிரித்தெடுத்து இன்னொரு பெண் செம்மறியாட்டின் முட்டை செல்லோடு இணைக்கவேண்டும்.  முன்னையதன் கருவும் பின்னையதன் முட்டையும் சேர்ந்த பின்னர், இந்த முட்டைக்கரு மாட்டரை கொஞ்சம் ஷோக் குடுத்து அருட்டினால், ஒன்று இரண்டாகி, நான்காகி .. ஒரு நூறு செல்லுகள் உருவாகும் என்று வையுங்களேன். இப்போது இதை கொண்டுபோய் ஒரு வாடகைத்தாயின் கருப்பையில் வைத்தால் அந்த தாய் பிள்ளைத்தாய்ச்சி. ஆண்களே தேவையில்லை. மூன்று தாய்மார்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும்.

dolly

டொலிக்கும் மூன்று தாய்மார்கள். ஒரு வெள்ளை செம்மறியாட்டின் பால் சுரப்பியில் இருந்து ஒரு செல்லை எடுத்தார்கள். அந்த செல்லின் கருவை புடுங்கினார்கள். இந்த கரு தான் மாட்டர். டிஎன்ஏ. இன்னொரு கருப்பு செம்மறியாட்டின் முட்டையை எடுத்து அதன் உட்கருவை (அட கோழி முட்டை இல்ல பாஸ், இது வேற, நீ எதுக்கும் எஸ்கேப் ஆகு. அடுத்த ஐட்டத்தில மீட் பண்ணுவோம்), அகற்றிவிட்டு அந்த வெள்ளை ஆட்டின் கருவை இந்த முட்டைக்குள் பொருத்தினார்கள். பின்னர் அருட்டல், ஷோக், பல செல்கள் உருவானது, அது தான் குளோனிங். எல்லா செல்லுகளையும் இன்னொரு செம்மறியாட்டின் கருப்பையில் கொண்டுபோய் வைக்க கொஞச நாட்களில் அழகான பெண் செம்மறிகுட்டி ஒன்று பிறந்தது.

டொலி ஆறுவயது வரைக்கும் வாழ்ந்து கான்சரில் இறந்து போனாள். அந்த கான்சருக்கு குளோனிங் காரணமில்லை. சாதரணமாக ஆடுகளிடையே வருவது என்றார்கள். பொதுவாக செம்மறி ஆடுகள் பன்னிரண்டு வயது வரை வாழுமாம். டொலி ஆறு வயதில் இறந்தமைக்கு , ஆறு வயது முதிர்ந்த செல் டிஎன்ஏ இல் இருந்து அதனை உருவாக்கினது காரணம் என்கிறார்கள். அதாவது எண்பது வயதில் ஐன்ஸ்டீன் இறந்துபோகும்போது அவரின் டிஎன்ஏ ஐ எடுத்து குளோன் பண்ணினால், பிறக்கும் குழந்தைக்கு எண்பது வயதுக்குரிய அங்க முதிர்ச்சி இருக்குமாம். சுவாரசியமானது. இதுக்கு மேலே போகவேண்டாம். ஆனால் பரலல் யூனிவெர்ஸ் கொஞ்சம் தெரிந்தவர்கள் இதனோடு தொடுத்து பாருங்கள். ஆர்வம் இருந்தால் டிஸ்கஸ் பண்ணலாம்.

டொலி இறக்கும்போது அதற்கு ஆறு குட்டிகள் இருந்தன. டொலியை தொடர்ந்து வேறு பல மிருகங்களையும் உருவாக்க தொடங்கினார்கள். பூமியில் இருந்து அழிந்து போன இனமான மலைக்காட்டு ஆடு ஒன்றை உருவாக்க முயன்றார்கள். பிறந்த ஆடு உடனேயே இறந்து போனது. ஐன்ஸ்டீன் உதாரணத்தை இப்போது மீண்டும் யோசியுங்கள்.

அப்பிரசிண்டுகளுக்கு ஒரு உதிரிச்செய்தி! அது என்ன டொலி? எப்படி பெயர் வைத்தார்கள்? டொலியின் டிஎன்ஏ ஐ இன்னொரு ஆட்டின் பால் சுரப்பியில் இருந்து எடுத்ததால், அதற்கு பொருத்தமான பெயரை தேடியிருக்கிறார்கள். அப்போது தான் ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்த களைப்பில் ஆயாசமாய் மாக்ஸிம் மக்ஸினை திறந்திருக்கிறார். உள்ளே அட்டைப்படத்தில் டொலி பார்டன் படம். விஸ்தாராமாய்!

dolly-parton-premiere-joyful-noise-01

Makes sense.


சூர்ப்பனகை மூக்கு!

கொஞ்சக்காலத்துக்கு முன்னர் கதை சொல்லாத கதைஎன்று ஏகலைவனை பேஸ் பண்ணி சிறு கதை எழுதினேன். குருஷேத்திர போரின் பொது ஏகலைவன் என்ன செய்துகொண்டிருந்தான் என்பதை கொஞ்சம் பின்நவீனத்துவம் (or whatever) சேர்த்து எழுதியது. அதற்கடுத்த வியாழமாற்றத்தில்ஏகலைவன் பெருவிரல் அறுத்தபின்னர் என்ன ஆனான் என்று ஒரு சின்ன ரிசெர்ச் இருக்கும்.

25206-1324227430-0[9]கம்பன் விழாவில் “பேசாப்போருட்கள் பேசினால்”என்ற தலைப்பில் அறுந்த சூர்ப்பனகை மூக்கை பற்றி எழுதுவதாக தீர்மானித்ததும் இந்த ஐடியா வந்தது. வெறுமனே புலம்பலாக இல்லாமல் அதற்குள் புதிதாக, கம்பராமாயணத்தில் இல்லாத ஒரு கோணத்தை கொண்டுவரவேண்டும் என்று, ஸ்கைப்பில் மனைவிக்கும் அலுப்படித்து, ஐடியா எடுத்து எழுதியது தான் அந்த அரங்குக்கவிதை.

அவளுக்கென்ன அரக்கியன்றோ? அடுத்த மூக்கை ஆக்கிடுவாள்.
அறுந்து கிடக்கும் எனைஎடுத்து எவன் முகத்தில் ஓட்டிடுவான்?

என்ற வரிகளின் படிமத்தை கேதா புரிந்து அரை மணிநேரம் போன் பண்ணி பேசியபோது திருப்தியாக இருந்தது. அண்ணே இந்த மூக்கை, முகமாலைல தலையில்லாம கிடக்கும் பனைமரங்களுக்கும் ஒப்பிடலாம். உதவியின்றி கைவிடப்பட்டிருக்கும் நம் உறவுகளையும் சேர்க்கலாம் என்றான். யோசிச்சுப்பார்த்தால் நாமே சூர்ப்பனகை, நாமே இராமன் என்றாகிறது. மூக்கை ஆக்கி ஆக்கி அறுத்துக்கொண்டே இருக்கிறோம், மூக்குகள் அறுக்கப்படவில்லை விதைக்கப்படுகின்றன என்பதை உணராமல். இப்போது கவிதையை மீண்டும் வாசித்துப்பாருங்கள்.

15A

அரங்கில் கவிதையின் சாரம் ஓரளவுக்கு போய்ச்சேர்ந்தது என்றே நினைக்கிறேன். “நீ சுஜாதா ரசிகன், நவீனமா தான் இருப்பாய் எண்டு யோசிச்சன், மரபும் உனக்கு நல்லாவே வருது, நிறைய வாசி, நிறைய சொல்லறிவு தேடு” என்றார் கம்பவாரிதி. சொல்லவந்த பொருளை சரியாக சொல்லுவதற்கு தேவையான மொழியறிவு எனக்கு போதாது என்ற குட்டும் அதில் இருந்தது. “நீங்கள் எல்லாம் இந்தளவில, பாரதியை கரைச்சு குடிச்சு முடித்திருக்கோணும்” என்று அவர் சொல்ல குற்ற உணர்வு துருத்தியது. வாசிப்பது காணாது காணாது என்று அறிஞர்கள் எல்லோருமே சொல்லிப்போகிறார்கள். நான் பிஸியாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எனக்கோ நிறைய நேரம் கிடைக்கிறது. சுப்பர் சிங்கர் பார்க்கிறேன். சாப்பிட்ட பின்னர் வெட்டியாக டிவி பார்க்கிறேன். வார இறுதியில் அதிகாலை எழுந்தாலே மெல்பேர்ன் விழிக்கமுதல் ஒரு புத்தகமே வாசித்து முடிக்கலாம். எழும்புவது என்னவோ எட்டு மணிக்கு. எல்லோரும் நல்லபடம் என்று சொன்னதால் ஓநாயும் நாய்க்குட்டியும் என்று ஒரு இரண்டரை மணிநேரத்தை வேஸ்ட் பண்ணியாயிற்று.

இதெல்லாத்தையும் நிறுத்திட்டு நிறைய வாசிக்கோணும்.

 


தேடித்தேடி தேய்ந்தேனே

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய இசைப்பதிவுஇது. திடீரென்று ஒருநாள் இந்த பாடல்கள் எல்லாம் எங்கேயாவது கிடைக்குமா என்று நாள் முழுக்க தேடினேன். அவ்வளவு பிடித்த பாடல்கள். அதிலும் இந்த பாடல் இன்னும் ஸ்பெஷல். எனக்கு மட்டுமே பிடித்த பாடல். “அன்பே டயானா” என்ற ஒரு மொக்கைப்படத்தில் வெளிவந்தது. இந்தப்பாடல் அடிக்கடி ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் போடுவார்கள். பார்க்க சகிக்காத ஹீரோயின் ஒருத்தி கைகளை அகட்டி விரித்த படியே வானத்தை பார்த்து “ஒரு முறை சொன்னால் போதுமா?” என்று பாட கமரா மேலிருந்து கீழே போகஸ் பண்ண, ஹீரோயினோட செமிக்காத வயிறு, எங்களை வவுத்தாலே போக வைக்கும். பதட்டத்தில் டிவியை ஆஃப் பண்ணாமல் கண்ணை மூடி கேட்டிருந்தீர்களானால், கனவு அனுபவம் ஒன்று கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட பாட்டு இது.

90களில் ராஜா, ரகுமானுக்கு சளைக்காத ஏகப்பட்ட தரமான பாடல்களை கொடுத்த புண்ணியவான் நம்ம தேவா. ஒரு துளி விஷம் போல ஒரு படத்தில் இரண்டு பாடல்களை சுட்டு போடுவதால், அவர் சொந்தமாக போட்ட பாடல்களையும் எல்லோரும் சுட்டது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னைப்பொறுத்தவரையில் தேவா இல்லாமல் தமிழ் திரை இசையை எவனும் கடந்து போக முடியாது.

இது டிப்பிகல் தேவா மெட்டு. புல்லாங்குழல், உயர் ஸ்தாயி வயலின், ஹரிஹரன் ஆலாபனை என்று களை கட்டும் இன்டர்லூட். சுஜாதாவின் மென்மையான பெண்மையும் ஹரிஹரனின் ஆண்மையும் அழகான இசை தாம்பத்யம் நடத்தும். “நேற்று வரையிலும் வெறும் வண்ணமாக வாழ்ந்தேன், இன்று காதலால் நான் வானவில்லும் ஆனேன்” என்ற இடத்தில் ஹரிகரன் போலவே சங்கதி எல்லாம் பயப்படாமல் போட்டு மற்றவரை பயப்படுத்துவதுண்டு.

இனி முடியாது!


என்னாச்சு?

anthaku-mundu-aa tharuvatha-movie-stills6

திடீரென்று இவர்கள் என்ன ஆனார்கள்? என்ன ஆகியிருப்பார்கள்? என்று தேடுவோமில்லையா? நேர்சரி படிக்கும்போது என்னோடு ராதிகா என்று ஒரு நண்பி படித்திருந்தாள். செம குண்டு. அம்பாசடர் காரில் அவள் மாத்திரம் பின் சீட்டில் வனிலா ஐஸ்கிரீம் பாக்ஸோடு வந்திறங்குவாள். பணக்காரி. யாரோடும் கதைக்கமாட்டாள். ஐஸ்கிரீம் தரமாட்டாள். காரைத் தொட்டால் டிரைவர் திட்டுவான். அந்த பெண் என்ன ஆகியிருப்பாள் என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. அதே கார், அதே ஐஸ்கிரீம் என்றால் இத்தனைக்கு ஒன்று அவள் பிரிந்திருப்பாள். இல்லை கார் பிரிந்திருக்கும். அவளை கண்டாலும் சுவாரசியமிருக்காது. ஏனென்றால் அவள் இப்படி ஆகியிருப்பாள் என்று ஒரு காட்சி நாங்கள் அமைத்திருப்போம்.

இந்த  வார வியாழமாற்றம்   கூட பல்வேறு ராதிகாக்களை தேடும் முயற்சி தான்.

Are you getting it?

&&&&&&&&&&&&&&&&&&

நன்றி:
படங்கள் இணையம்.

கம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!

$
0
0

 

kampavaruthy_jeyaraj

திரு ஜே.கே அவர்கட்கு,                                                                                         06.11.2013
அவுஸ்திரேலியா.

அன்புத்  தம்பிக்கு,
நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
நலமே நாடு சேர்ந்தோம்.
மனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது.
அவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது.
மண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர்.
கம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப் பெருக்குகின்றனர்.
நீண்டநாள் எதிர்ப்பார்த்த உங்கள் சந்திப்பு,
நிகழ்ந்து நெஞ்சை நெகிழ்வித்தது.
ஆற்றல் கண்டு அதிசயித்தேன்.
பேச்சாள நிலைகடந்து, சிந்தனையாளனாய் என் உளம் புகுந்தீர்கள்.
எழுத்தாற்றல் வியப்பேற்படுத்துகின்றது.
சுஜாதாவின் ஆன்மா நிச்சயம் மகிழும்.
கருத்துக்களை மக்கள் மனதேற்றும் நுட்பம் வாய்த்தது பெரிய பேறு.
விமர்சகளுக்காய் மட்டுமே எழுதும் எங்கள் எழுத்தாளர்கள்,
மக்கள் மனமேறி மகிழ விரும்புவதில்லை.
நீங்கள் நினைந்தால் ஈழத்து எழுத்துலகை எழுச்சியுறச் செய்யலாம்.
இந்திய சஞ்சிகைகளுக்கு நிறைய எழுதுங்கள்.
வெளிநாட்டு எழுத்து அங்கே வரவேற்கப்படும்.
மற்றை இனத்தார் தமது தகுதிகளை,
அன்றாடம் உலகறியச் செய்து உயர்கின்றனர்.
ஈழத் தமிழினத்தார் உலகெலாம் பரவியும்,
தம் ஆற்றல்களை, தமிழுலகிற்குத்தானும் காட்டத் தவறி நிற்கின்றனர்.
ஈழத் தமிழர்தம் ஆற்றல்கள் உலகலாவி விரிய,
உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் வழி செய்ய வேண்டும்.

* * *
ஆற்றல்மிகுந்த உங்களைப்போன்ற இளைஞர்கள்,
விருட்சமாய் விரிந்து நின்று வித்தாய் எமை இனங்காட்ட,
உளம் விதிர்விதிர்க்கின்றது.
இதுநாள் வரையிலான வாழ்வின் பயன் கண்டு மகிழ்கிறேன்.
புத்தியுள்ள பிள்ளையொன்று “இது இவன் தந்தது” என்று உரைக்கும்போது,
கற்றார் நெஞ்சு களிக்காமல் விடுமா?
நான் துரோணரா? தெரியவில்லை. நீங்கள் ஏகலைவன் என்பதில் ஐயமில்லை.
எனது முயற்சி, தொண்டு, ஆற்றல் அனைத்தும்,
எம் மண்ணில் விழலுக்கிறைத்த நீராயிற்றோ? என ஏங்கி நின்றேன்.
எங்கோ இருந்து இல்லையென்கிறீர்கள்!
மனம் நிம்மதியுறுகிறது.
நீள நினைந்திருப்பேன்!

* * *
உங்கள் கொல்லைப்புறத்து காதலியானதில்,
கொள்ளை மகிழ்ச்சி!
நம் மண்ணின் அறிஞர்கள், விமர்சகர்கள் அனைவராலும்
நிராகரிக்கப்பட்டவன் நான்.
என்னை எனக்கு தெரியும் என்பதால்,
அதுபற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை.
பட்டங்களால் மட்டுமே தம்மை அறிஞர்களாய் உரைத்து நின்ற,
அவர்கள் பற்றி நான் எப்போதும் அக்கறைப்பட்டதில்லை.
இன்று அறிவின் சுயவீரியத்தோடு ஓர் இளைஞன்,
என்னைக் காதலியாய் உரைக்கையில் கனிந்து கரைகிறேன்.
நன்றி!
ஹீரோவும் குட்டியனும் இப்போது எங்கே?

* * *
மாறுபாடு அறிவின் அடையாளம்.
மாறுபடும் இடங்களை மனம்திறந்து பேசுவோம்.
கம்பனைக் கடப்பது கடினம்.
நீங்கள் சொன்னவர்களை எல்லாம் வாசித்திருக்கிறேன்.
அவர்களெல்லாம் கம்பன்முன் புள்ளிகளாய்ப் போவார்கள்.
அறிவு வாசிப்பிலில்லை, யோசிப்பிலிருக்கிறது.
சிந்திக்கச் சிந்திக்க கம்பன் தொடுவானமாய் விரிவான்.
இஃது கம்பன்மேல் காதலால் உரைக்கும் கருத்தன்று.
உள்நுழைந்தால்  உண்மை உணர்வீர்கள்.

* * *
கவிதைத்திறனை இன்னும் வளர்க்க வேண்டும்.
எல்லோர்க்கும் தெரிந்த ஒன்றைப்பற்றி,
எவரும் சிந்திக்காதவகையில் சிந்திக்கப்பழக,
கவித்துவம் தானே வளரும்.
11171_10151967347455791_1285103450_nபின்னர், சொற்களில் அவற்றை ஏற்றலாம்.
முயன்று பார்ப்போமா?

பொருள் – சீப்பு.
பற்கள் இருந்தும் சிரிக்கத்தெரியாத ஜீவன்.
மற்றவர்களை ஒழுங்குபடுத்த,
தான் ஒழுங்காதல் வேண்டுமென்பதை,
உலகுக்கு உரைத்துநிற்கும் உயர்ந்த பிறவி.


இன்னும் சில முயலுங்களேன்.
பத்துக் கற்பனைகள் (கட்டளைகளை அல்ல),
பார்க்க விரும்புகிறேன்.
கவியரங்கில் கலந்த அனைவரும் முயலலாம்.

* * *
தொடர்வோம்.
”இன்பமே ஒருநாளும் துன்பமில்லை”

அன்பன்
இ.ஜெயராஜ்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அகில இலங்கை கம்பன் கழக தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா ஊடாக கம்பவாரிதி திரு இ.ஜெயராஜ் அவர்கள் எனக்கு அனுப்பிவைத்த மடல்.

வேறென்ன எழுத்தாளனுக்கு வேண்டும்?

தொடர்பான பதிவுகள்
கம்பவாரிதி ஜெயராஜ்
பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு
எப்பவோ முடிந்த காரியம்!
அசோகவனத்தில் கண்ணகி
காடு திறந்து கிடக்கிறது

வியாழமாற்றம் 14-11-2013: ஐங்கரநேசன் மரத்தில காய்ச்ச ஆடு!

$
0
0

 

tumblr_mr85b0zzI41qbh26io1_1280 (1)

பொன் ஐங்கரநேசன்
வேளாண் விஞ்ஞானி
ஆவரங்கால்.

ஒட்டியிருந்த தகரத்தில் கைவைத்து தள்ளிக்கொண்டே படலையை திறந்தேன். முற்றத்தில் மாமி விளக்குமாற்றால் கூட்டிக்கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு செம்பரத்தை மரம் பூராக பல வகைகளில் பூக்கள் பூத்து தொங்கின. கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு இருந்தது. அருகில் நின்ற எலுமிச்சையின் கிளைகளில் ஆங்காங்க பொச்சுமட்டை சுற்றிக்கட்டப்பட்டிருந்த பதியத்தில் தண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. வாழைமரங்களில் ரோசா மல்லிகை என்று குத்தப்பட்டு குறுக்கும் மறுக்கும் நீட்டிக்கொண்டு இருந்தன. ஒன்றில் மஞ்சள் நிறத்தில் பூத்தும் இருந்தது.

“அந்த வாழைத்தண்டில குத்தின ரோசா பூத்திருக்கு மாமி”

மாமி நிமிரவில்லை. கூட்டின புழுதி நாசியில் அடித்தது. அவர்  நல்ல மூடில் இல்லை என்று புரிந்தது.

“மாமா வீட்டில இல்லையே?”
”கழுதை கெட்டா குட்டிச்சுவர்”

நானா மாமாவா கழுதை என்ற டவுட்டை கிளியர் பண்ணாமல் மெதுவாக சைக்கிளை நிறுத்திவிட்டு பின்கோடியில் இருந்த மாமாவின் ஆய்வுகூடத்துக்கு போனேன்.

“பொன் ஐங்கரநேசன், வேளாண் ஆய்வுகூடம்” என்று மட்டைப்பேப்பரில் என்று பெயிண்டிங் ஸ்டிக்கால் எழுதிக்கிடந்தது. மூன்றடி அகல தடுப்பு வாசல். பத்தடிக்கு பத்தடி வடலி அடைப்பு.  கூரை என்ற சமாச்சாரத்துக்கு மாமியின் பழைய வெள்ளை சேலைகள் இரண்டு மூடப்பட்டிருந்தது. ஆங்காங்கே வெளிச்சம் வர ஓட்டைகள்.  சரியாக வேயாத அடைப்புக்குள்ளால் எல்லாமே தெரிந்தது. தூக்கி நகர்த்திவிட்டு நுழைந்தால், மூலையில் சின்ன மேசை, கதிரை போட இடம் போதாது. விதம் விதமான அங்கர் பை மரங்கள், மண் வகைகள். ஜாடிகளில் செத்த எலிகள், கரப்பான்கள், மண் புழுக்கள், நிறைய நெருப்புப்பெட்டிகள், பட்டுப்பூச்சிகள் என்று பரவிக்கிடந்தது.

உடைத்து குடித்து முடிக்காமல் ஒரு கோக் டின் இருந்தது. உள் வேலியில் உதயனில் வெளிவந்த, மாமா டக்லஸ் தேவானந்தாவிடம் “பசுமை வேளாண்” விருது வாங்கும் படம் லேமினேட் பண்ணப்பட்டு தொங்கியது. எதிர் மூலையில் மாமா முதுகுகாட்டி குந்தியிருந்தார். வெறும் மேல். வெள்ளை பாண்ட்ஸ். பாண்ட்ஸ் பின் பக்கம் நடுவாலே மாமியில் தையலோடு சண்டைபோட்டு பிரிந்திருந்தது.

மாமா குனிந்து பூதக்கண்ணாடியால் ஒரு செடியின் உச்சியை நுணுக்கமாக அவதானித்துக்கொண்டிருந்தார்.

மாமா…
உஷ்ஷ் ...

சொல்லிக்கொண்டே திரும்பினார். கண்ணிலே மலர்ச்சி தெரிந்தது. பூதக்கண்ணாடியை என் கையில் வைத்தார்.

”தெரியுதா எண்டு பாரு”
”எது மாமா”
”வால்… பத்து கிழமைல வால் தான் முதலில வரும்”

குனிந்து அந்த செடியை கவனித்தேன். ஒற்றை தண்டில் ஆங்காங்கே இலைகள் இருந்தன. இந்த செடியை இதற்கு முன்னே எங்கேயும் கண்டதாக ஞாபகம் இல்லை. ஐந்தடிக்கு வளர்ந்திருந்தது. கிளைகள் இல்லை. உச்சியில் மொட்டு போல ஒன்று மொத்தமாக இருந்தது.

copy-of-veglamb“இது என்ன மரம் மாமா?”
”டார்டாரி லாம்ப் பிளான்ட் … வெஜ்ஜிக்ரோஸ் பாமிலி”
”அப்பிடி எண்டால்?”  
“அந்த மொட்டை கவனி”
”மொட்டுல என்ன மாமா?”
”மொட்டிண்ட நுனி சாதுவா ..”
”விரிஞ்சிருக்கு .. அதுக்கு?”
”அதுக்குள்ளால இந்த பூதக்கண்ணாடியால பாரு.. ஒரு வால் தெரியும்”
”வாலா?”
”ஆட்டு வால்”

திரும்பி மாமாவை பேசாமல் பார்த்தேன்.

“ஓமடா .. ஆட்டிண்ட வால் தெரியும் .. வடிவா பாரு”

மாமா கொஞ்சம் தயங்கினார். போய் ஆய்வுகூட தடுப்பை அகற்றி வெளியே எட்டி அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் கவனமாக மூடிவைத்துவிட்டு வந்தார். காதுக்குள் கிசுகிசுத்தார்.

”இந்த செடியில இருந்து ஒரு ஆட்டுக்குட்டி காய்க்கப்போகுது!”

“என்ன கொட்..” என்று ஆரம்பித்துவிட்டு படக்கென்று நிறுத்தினேன். மாமாவை கொஞ்சம் பதட்டத்தோடேயே பார்த்தேன். அவரில் எந்த சலனமும் தெரியவில்லை.

“புறநானூறில இது இருக்கு .. தமிழன் என்னெல்லாம் கண்டு பிடிச்சிருக்கிறான் தெரியுமா .. ஆறுமாசமா குத்தி முறிஞ்சு .. மொட்டு வந்திருக்கு.. பார்த்தியா?”

பகீர் என்றது. மாமா ஒரு லூசர் என்று குமரன் அப்பவே சொன்னவன். நான் தான் கேட்கவில்லை. “அந்த ஆளுக்குள்ள ஏதோ இருக்கடா” என்று சொல்லியிருந்தேன். இந்த கதையை குமரனிடம் போய் சொன்னால் கதை கந்தல். மாமாவை மாமா வழியிலேயே போய் மடக்கலாம் என்று நானே ஆரம்பித்தேன்.

“என்ன சொல்லுறிங்க மாமா? இந்த செடில காய்க்கிறத ஆட்டுக்குட்டியள் சாப்பிடுமா?”
”இல்ல தம்பி .. இந்த செடில ஆட்டுக்குட்டியே காய்க்க போகுது”

“முடியல” என்ற வடிவேலு டயலாக் வாய்நுனி வரைக்கும் வந்தாலும் அடக்கிக்கொண்டேன்.

”என்ன மாமா லூசுத்தனமா கதைக்கிறீங்கள்… மரத்தில ஆடு எங்கேயும் காய்க்குமா?”
”நான் லூசன் தாண்டா … உன்ர மாமி கூட இத தான் சொன்னவா”

மாமி யாரை கழுதை என்று சொன்னார் என்ற டவுட் கொஞ்சம் கிளியர் ஆனது. மாமா செம கடுப்பில் இருந்தாற்போல தோன்றியது.

“ஐன்ஸ்டீனை கூட லூசு எண்டு தான் முதலில சொன்னவை.. “
”ஆரு?”

மாமா என் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஜாடியில் இருந்த ஒரு சில மண்புழுக்களை எடுத்து செடிக்கு போட்டார்.  பின்னர் ஒருவகை திரவத்தை எடுத்து ஊற்றினார். மீண்டும் ஒருமுறை அந்த மொட்டை உற்றுப்பார்த்தார்.

“முதலில வால் வரும் .. மூன்றாம் வாரத்தில் பின்னங்கால் தொடங்கி இரண்டு நாளில் தலை வந்திடும் ..”

என்பக்கம் திரும்பாமலேயே சொல்லிக்கொண்டிருந்தார்.

“எங்க கிடந்து இந்த மரத்தை கண்டு பிடிச்சீங்கள்?”
”இது ஒருவித ரைசொம் ப்ரோசஸ். இஞ்சி, உள்ளி, பருத்தி விதைகளையும் எலியின் கல்லீரலையும் பிணைஞ்சு, மூண்டு நாளு ஊறவிட்டு.. ச்சே .. இதுக்கு பேட்டண்ட் எடுக்கோணும் .. அமைச்சரோட கதைக்கோணும்”
”ஆடு காய்ச்சா பாரத்தில தண்டு முறிஞ்சிடாதா மாமா?”

நான் கேள்வி கேட்க மாமாவுக்கு உற்சாகம் தாளவில்லை.

”ஆடு வளர வளர நடுத்தண்டு பாரத்துக்கு வளையும். நல்லா ஆடு முத்தின உடன, அது தரைக்கு வந்திடும். சுத்திவர இருக்கிற புல்லை எல்லாம் மேயும்”
”கழனித்தண்ணியும் வைக்கலாமா?”
”அந்த தண்டு முறிஞ்சுது எண்டால் ஆடு செத்துப்போயிடும்… இந்த ஆட்டில இருந்து பால் கறக்க ஏலாது. புழுக்கையும் போடாது .. ”
”அப்ப இந்த ஆட்டால என்ன பிரயோசனம்?”
”ஆக்கள் சாப்பிடலாம் … மரத்தில காய்க்கிறபடியா சுத்த சைவ ஆடு தானே .. ஐயர்மார் எல்லாம் இனிமேல் ஆட்டுக்கறி வெளுத்துக்கட்டலாம்”

இதுக்குமேலே கேட்டால் நானே நம்பிவிடுவேன் போல தோன்றியதால் சொல்லிவிட்டு நைசாக நழுவினேன். வளவு முழுக்க ஆட்டுமர தோட்டம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க சிரிப்பு வந்தது. மாமி கிணற்றடி கல்லில் உடுப்பு அடிச்சு தோய்த்துக்கொண்டிருந்தார். சொல்லாமல் கிளம்பினேன்.

ஒரு மாசம் ஓடியது. கிரிக்கட்,  தலைவா ரிலீஸ், பரீட்சை என்ற பரபரப்பில் மாமாவின் ஆட்டை நான் மொத்தமாக மறந்துபோனேன். தீபாவளியன்று ஆடு அடிக்கும் கதை வீட்டில் வந்தபோது தான் “அட மறந்துவிட்டோமே” என்று ஞாபகம் வந்தது. உடனேயே சைக்கிளை ஆவரங்காலுக்கு விட்டேன். அதே மாமி, அதே விளக்குமாறு, அதே ஒட்டு செம்பரத்தை, எலுமிச்சை. அதே கழுதை இருக்கும் இடத்தை அவர் சொல்ல நைசாக ஆய்வுகூடத்துக்கு போனேன். மாமா குனிந்து இருந்து எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இம்முறை சாரம் கிழிந்திருந்தது.

“மாமா ..”
”நீயா வா .. இஞ்ச ஒருக்கா பாரு .. இந்த மொட்டில ஒரு செட்டை தெரியுது பாரு”

பூதக்கண்ணாடியை நீட்டினார். விலகி வழி விட்டார்.

“கவனமா .. பாரு .. மொட்டை தொட்டிடாத .. புறா பறந்திட்டு எண்டால் பிடிக்க ஏலாது .. சனியன் .. ஏற்கனவே ஒண்டு ஓடிப்போயிட்டுது”

சொல்லிக்கொண்டே பூதக்கண்ணாடியை கையில் அழுத்தினார். அசையாமல் நின்றேன்.

“அந்த ஆடு பேந்து காய்ச்சதா மாமா?”

கேட்டுக்கொண்டே அவர் கண்ணை பார்த்தேன். மாமா சலனமே இல்லாமல் சொன்னார்.

“ஓ அதுவா .. தீபாவளிக்கு அடிக்கலாம் எண்டு பார்த்தன்.. ஆனா போன கிழமையே முத்தீட்டுது. சாரதா தான் சமைச்சவள். அப்பிடி ஒரு பொரியல் கறி வாழ்க்கைல சாப்பிட்டிருக்க மாட்ட”

சாரதா மாமி கிணற்றடியில் ஊத்தை உடுப்பை கிழிய கிழிய அடிச்சு தோய்க்கும் சத்தம் கேட்கதொடங்கியது.

--- யாவும் கற்பனை!--



மரத்தில் காய்க்கும் ஆடு

images

மரத்தில் நிஜமாகவே ஆடு காய்க்கும்என்று அண்மைக்காலம் வரை நம்பியிருக்கிறார்கள். ஒற்றை தண்டால் ஆட்டின் வயிறு இணைக்கப்பட்டிருக்கும் என்றும், ஆடு காய்த்து, தனக்கு எட்டக்கூடிய இடத்தில் கிடைக்கும் புல்லை மேய்ந்துவிட்டு, பின்னர் பசி தாளாமல் இறந்துவிடும் என்றும் இட்டுக்கட்டியிருக்கிறார்கள். கண்ணால் கண்டதாக கதைவிட்டிருக்கிறார்கள். தண்டை ஓடித்துவிட்டால் ஆட்டின் கதை கந்தல்.

CottonPlantநான்காம் நூற்றாண்டில் அலக்சாண்டர், இப்போது இந்தியா என்று அழைக்கப்படும் பிரதேசத்தை ஆக்கிரமித்தபோது அங்கே மக்கள் பருத்தி உடைகள் உடுத்தியிருந்ததை பார்த்தார்கள். கம்பளி போல இருக்கிறது, ஆனால் மரத்தில் இருந்து எடுக்கிறார்களே என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம் சீனத்து புராதன கதைகளில் இப்படி செடியில் இருந்து ஆடு, கோழி முதல் மனிதன் வரை வளருமாம். அதையும் இதையும் இணைத்து இந்தியர்கள் மரத்தில் வளரும் செம்மறி ஆட்டில் இருந்தே கம்பளி எடுக்கிறார்கள் என்று கதை ஐரோப்பாவில் பரவிவிட்டது. இந்த விலங்கை/தாவரத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைக்கும் ஆராய்ச்சியாளர்கள் தேடியிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். ஜூதர்கள் மரத்தில் காய்க்கும் மனிதன் இருப்பதாகவும் நம்பியிருக்கிறார்கள்.

ஹென்றி லீ என்பவர் “The Vegetable Lamb of Tartary: A Curious Fable of the Cotton Plant” என்று ஒரு ஆராய்ச்சி நூலே எழுதியிருக்கிறார். அதில் கிடைக்கின்ற தகவல்கள் சுவாரசியமானவை.

he told me that this plant, if plant it should be called, had blood, but not true flesh: that, in place of flesh, it had a substance similar to the flesh of the crab, and that its hoofs were not horny, like those of a lamb, but of hairs brought together into the form of the divided hoof of a living lamb. It was rooted by the navel in the middle of the belly, and devoured the surrounding herbage and grass, and lived as long as that lasted; but when there was no more within its reach the stem withered, and the lamb died

அட! என்ன இது லூசுத்தனமா யோசிச்சிருக்கிறாங்கள்? என்று நினைத்தால் அது தவறு. நம் அறிவியல் இப்படித்தான் வளர்ந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சரி என்று ஒன்றை நிரூபித்து பின்னர் “ம்ஹூம் அதில்ல இதான் சரி” என்றது. நியூட்டனின் விதிகள் ஓடும் இயக்கத்தில் முரணாக இருந்தது என்று ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்கும் வரைக்கும் யாருக்கும் தெரியாது. தெரிந்தபோது நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சம் கொஞ்சம் தெளிவானது. நீல்ஸ்போர் குவாண்டத்தின் கற்பனைக்கெட்டாத சாத்தியக்கூறுகளை விவரித்தபோது ஐன்ஸ்டீன் நக்கலாக சிரித்தார். குவாண்டம் சரி என்று இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. நீல்ஸ் போர் அதை இப்படி சொல்வார்.

“நாங்கள் நிஜமென்று நினைக்கும் எல்லாமே நிஜமற்ற பொருட்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது”

இதை புரிய கொஞ்சம் அணுவுக்குள் போய் uncertainity principle ஆராயவேண்டும். இன்னொருநாள் பார்ப்போம். ஐன்ஸ்டீன் இல்லை எல்லாமே certain என்றார். இதுதான் அறிவியல். Science is revision in progress என்பார்கள்.  அந்த தேடல் கூர்ப்பின் அடிப்படை. அதனால் தான் தப்பி பிழைத்திருக்கிறோம். இப்போதைய நிஜங்கள் கூட இன்னொரு இருநூறு ஆண்டுகளில் யாரோ ஒருவனால் உடைக்கப்படும். முதல் உடைபடும் நிஜம் கடவுளாக இருக்கலாம். கடவுளே வந்துகூட அதை உடைக்கலாம்!

நிஜத்தை அறியும் வரை தேடல் தொடரும்… நிஜம்? தேடல் தொடரும்வரை நிஜம் என்பதே கிடைக்காது. இந்த ஆட்டம் ஒன்றே சாத்துவதம்.

Goundamani-Sathyaraj-250_18072008

 

   வர வர ஜேகே ஜக்கி ஆகிட்டு இருக்கான்டா.. ஜாக்கிரதை

 




ராமர்பிள்ளை

இவரும் ஒருவகையில் நம்ம வேளாண் விஞ்ஞானி பொன் ஐங்கரநேசன் போல தான். மூலிகையில் இருந்து பெட்ரோல் உருவாக்குவேன் என்று சொல்லி ஒரேநாளில் உலக பிரபலமானார். புறநானூற்றில் இருக்கும் மூலிகை சம்பந்தமான விஷயங்களை வைத்தே பெட்ரோல் தயாரித்ததாக சொன்னார். லீட்டர் ஐஞ்சு ரூபாய்க்கு விற்கலாம் என்றார். நம்பி தமிழ்நாடு அரசாங்கம் மூலிகை பயிரிட என்று 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இரண்டு வருடங்களில் தலைவர் போலி ஆசாமி என்று கண்டறிந்து சிபிஐ உள்ளே தூக்கி போட்டது.  டெட்ராஹைட்ராபூரா, லோலிக் அமிலம் என்று வாயினுள் நுழையாத சில விஷயங்களை தண்ணீரில் கலந்து அண்ணர் உலகம் பூரா பேமஸ் ஆயிட்டார்.

23-ramar-pillai200

சிங்கன் இப்போது என்ன செய்கிறார் என்று கூகிளினேன். செம போர்ம்ல தான் இருக்காப்ல. சிபிஐ விசாரணை இன்னமும் முடியவில்லை. இப்போதும் மூலிகை பெட்ரோல் கொண்டுவரப்போவதாக தான் சொல்கிறார். திசைகாட்டிகள்என்ற தளத்தில் பேட்டி என்ற பெயரில் ஒரு பன்னாடை இவரை சம்பந்தமே இல்லாதை கேள்விகளை கேட்க, அண்ணரும் அடி பின்னியிருக்கிறார். சாம்பிளுக்கு ஒன்று.

நீங்கள் பேசுவதை பார்த்தால் நீங்கள் தமிழ் உணர்வாளர் என்று தெரிகிறது மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
என் வாழ்வில் நான் இருவரை மாவீரன் என்று சொல்வேன் ஒருவர் அண்ணன் பிரபாகரன் மற்றொருவர் வீரப்பன்! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த இனத்திற்காக வாழ்ந்தவர் அவர் அவரை எவராலும் அழிக்க முடியாது. மேலும் ஒன்றை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன் ஒருவேளை நான் ஈழத்தில் பிறந்திருந்தால் என் கண்டுபிடிப்புகள் உலக அளவில் போற்றப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

senthil-goundamani-250_19022008தமிழ்நாட்டில் மூலிகை பெட்ரோல்காரனுக்கு கூட பிரபாகரன் கிள்ளுக்கீரை ஆகிவிட்டார். அப்புறம் ஜெயலலிதா ஏன் முள்ளிவாய்க்கால் முற்றத்து சுவரை இடிக்கமாட்டா? அடிங்கடா அடிங்க … நல்லா அடிங்க. எவ்வளவு அடிச்சாலும் ஈழத்தமிழன் தாங்குவாண்டா.


 
காதல் டைம்.

அக்கா திடீரென்று கோல் பண்ணி, ஹலோ கூட சொல்லாமல், “டேய் இதை கேளு” என்றார். அந்தப்பக்கம் போனுக்கூடாக சிஸ்டத்தில் பாட்டு “டன் டின் டன் டின்” என்று ஆரம்பிக்க, அந்த நிமிஷமே தடால் என்று விழுந்தேன். என்ன பாட்டுடா.

Vaagai Sooda Vaa1“சர சர சாரைக்காத்து வீசும்போது”
”சாரைப்பாத்து பேசும்போது”
”சாரைப்பாம்பு போல நெஞ்சு”
”சத்தம்போடுதே”

சுஜாதா வாசித்துக்கொண்டே இந்த பாட்டை இயர்போனில் ஒருமுறை கேளுங்கள். மெல்லிய குளிரில் வீட்டுமுற்றத்தில் இருந்தால் நல்லது. மெல்பேர்ன் ஐடியல். மிதமான ஒலியில் கேட்கவேண்டுமே. காதலி காதுக்குள் வந்து மூக்கு நசு நாடு என்று முட்ட கிசுகிசுப்பது போல கூசசித்தள்ளும். தலை கொஞ்சம் மடங்கி அனிச்சையாய் சிரிப்பீர்கள். ஒத்தை சொல்லில் சொன்னால், காதலிப்பீர்கள்.

உருமியில் வரும் “சின்ன சின்ன கண்ணனுக்கு”பாட்டை கொஞ்சமே ஞாபகப்படுத்தும் இந்த பாட்டுக்கு இசை ஜிப்ரான். மின்னியிருக்கிறார். பாடிய சின்மயிக்கு ஏன் தேசியவிருது கிடைக்கவில்லை?

வரிகளில் கவிப்பேரரசரின் ஆட்சி. ஏறி இருந்து மனுஷன் எழுதியிருக்கு. பாடல் காட்சியும் அதகளம். இவளுக்கு உள்ளம் உடம்பு என்று யாவுமான காதல். அவனோ படித்த அசடு. ஒரு இடத்தில் கரும்பலகையில் “மதி” என்று இவளுக்கு அவன் எழுதக்கற்று தருவான். அவளோ இவனை காதலாய் பார்ப்பாள். “என்ன சனியண்டா, ஒண்டுமே விளங்குதில்ல” என்ற ஒரு ரியாக்ஷன் குடுப்பாள். சின்மயிகுரல்  கீச்சென்று உயர் ஸ்வரத்தில் பாடும் இடம்.

மீனுக்கு ஏங்குற கொக்கு நீ…
கொத்தவே தெரியல … மக்கு நீ…

இதுக்கு மேலே எவன் தாங்குவான். கோல் போட்டேன்.

Vaagai Sooda Vaa Movie Stills 001 04039ஹலோ ..
என்னடா ..இந்த டைம்ல .. வியாழமாற்றம் எழுதேல்லையா?
இல்ல சும்மா … வந்து
என்ன வந்து போய்?
இல்ல .. அது .. காதல்
போனை வச்சிட்டு போய் எழுது!


சொன்னோட வச்சிட்டுது … ..சரியான மொக்கு



கம்பவாரிதி வாங்கச்சொன்ன சீப்பு

அலுவலகத்தில் இருந்தபோது தான் ஈமெயில் வந்து. “ஜெயராஜ் அண்ணா எழுதித்தந்தவர்”என்று இருந்தது. விறுவிறு என்று கொம்பியூட்டரில் எழுத்துரு இன்ஸ்டோல் பண்ணி வாசிக்க தொடங்கினால், முடியவில்லை. கண்ணீர் முட்டி ரெஸ்ட் ரூம் போகவேண்டியிருந்தது. என்ன தவம் செய்தனை ஜேகே?

kampavaruthy_jeyaraj (1)

நான் எந்த மேடை ஏறினாலும் சுஜாதாவுக்கும் கம்பவாரிதிக்கும் மானசீக வணக்கம் சொல்லியே பேச்சை ஆரம்பிப்பேன். அதிலே முன்னவர் எம்மோடு இல்லை. மற்றவர் என்னை வாசித்து, நெருங்கி வந்து கையைப்பிடித்து “முருகா முருகா முருகா” என்று குரல் தழுதழுத்து, ஊரு திரும்பி இப்படி மனம்விட்டு ஒரு கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் எனக்கு?

என் படலை எனக்கு இன்னொரு அம்மாவை தெரிந்தது.

கம்பவாரிதி வெறும் கடிதத்தோடு நின்றுவிடாமல் கொஞ்சம் வீட்டுப்பாடமும் தந்திருக்கிறார். சீப்பு பற்றி அவரும் ஒரு கவிதை எழுதி, அதே போல பத்து கற்பனையில் எழுதி அனுப்பு என்றிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் ஒரு கவிதை என்று ட்ரை பண்ண போகிறேன். நேரிசை, விருத்தப்பா, புதுக்கவிதை, ஹைக்கூ என்று கொஞ்சம் விதம் விதமாக ஆடிப்பார்க்கலாம். இது இந்தவாரத்து கவிதை.

மொட்டைதலை முருகேசன்
        தொப்பிஒண்டு மாட்டிகொண்டு
பெட்டிக்கடை ஓடிபோயி
        சீப்புரெண்டு வாங்கிவந்தான்.
கண்ணாடி முன்னநிண்டு
         கரைஉச்சி பிரிச்சுவார
முடியாம தவிச்சபோது
        முன்னாடி வாழ்ந்தவாழ்க்கை
முடியாக முளைச்சுவந்து
        வெடியாக சிரிக்ககண்டான்.

காயா? பழமா?



என் கொல்லைப்புறத்து காதலிகள் - சச்சின்

வெட்டிக்கிடந்த வாழைமரத்தின்  அடித்தடலை எடுத்து, இரண்டு அடிக்கு வெட்டி இரண்டு காலிலையும் முழங்கால் வரைக்கும் வைத்து கட்டுவேன்.  அதுதான் பாட். இன்னொரு தடலை சின்னனா வெட்டி காற்சட்டை ஒருபக்கம் செருகினால் அது சைட் பாட். போல் கார்ட் என்ற மாட்டர் இருப்பது அப்போது தெரியாது. அப்பா அந்தக்காலத்தில யமாகா-350 வச்சிருந்தவர். அதிண்ட பிஞ்சுபோன ஹெல்மட்டை எடுத்து தலையில் மாட்டி பட்டி இழுத்து டைட் பண்ணியாயிற்று. கையில் தென்னைமட்டையில் சரிக்கட்டின பேட். வீட்டு சன்ஹூட் படியில ஜம்மென்று ஹீரோ குந்தியிருக்கிறார்.

இப்போது இரண்டு விக்கட்டுகள் டவுன். அடுத்தது தலைவர். இரண்டுகால்களையும் ஸ்ட்ரெச் பண்ணியபடி முற்றத்துக்குள் இறங்கும்போது கிரவுண்ட் பூரா ஒரே சத்தம். சூரியனை பார்த்து கும்பிட்டுக்கொண்டே கேட்டடில போய் நின்று அம்பயர் லெக்ஸ்டொம் கேட்டு சுற்றும் முற்றும் திரும்பிப்பார்க்க வேண்டும். “அந்த ஏரியா”வில் கைவைத்து கொஞ்சம் மேலே இழுத்து விடவேண்டும். பின்னர் ஸ்டாண்ட் எடுத்து ரெடியாகியாச்சு.

அடுத்ததாக தேசிக்காய் மரத்தடில நிண்டு  அப்துல் காதர் பந்தை நக்கி நக்கி போடுவதாக நினைத்துக்கொண்டு ஒரு சல்லிக்கல்லை பொறுக்கி தூக்கிப்போட்டிட்டு, அது ஒரு கூக்ளி, டவுன் த ட்ராக் சார்ஞ் பண்ணி வந்து அந்தக்கல்லுக்கு ஓங்கி ஒரு அடி.

கல்லு சர்ர்ர்ர் என்று சன்ஹூட் தாண்டி, எழுமிச்ச மரம் தாண்டி, கிணற்றடி அன்னமுன்னா மரம் தாண்டி, சீமை கிழுவைக்குள்ளாள போயி முன்வீட்டு கமலராணி அக்காவீட்டு ஒட்டு கூரையில விழுந்து டக்கடடிக்கடடிக் என்று உருண்டு பின்னர் எங்கேயோ செருகியிருக்கவேண்டும். அடுத்த கல்லு புரக்டர் வளவுக்குள். நான்காவது சிக்ஸர் நம்வீட்டு புகைக்கூண்டுக்குள், அம்மாவிடம் இருந்து “டேய் கல்லு விளையாடாத” சத்தம் கேட்கும். பெருமிதமாக பூங்கன்று சுற்றுவட்டார மரத்தையல்லாம் பார்க்க, கரகோஷம் வானை பிளக்கும்.

சச்சின் … சச்சின் … சச்சின் ...

sachin2

வார இறுதியில்!

&&&&&&&&&

தொடர்பான பதிவுகள்
கம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!
வியாழமாற்றம் 27-12-2012 – சச்சின்
பிடிச்சதும் பிடிக்காததும் 2012

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சச்சின் &சச்சின் &சச்சின் &…

$
0
0

 

sachin-tendulkar-when-young

சனிக்கிழமை காலை பாணும் சம்பலும் இறக்கியபிறகு சரியாக ஒன்பது மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிறது.

வெட்டிக்கிடந்த வாழைமரத்தின்  அடித்தடலை எடுத்து, இரண்டு அடுக்கு சரிக்கட்டி, இரண்டு கால்களிலும் முழங்கால் வரைக்கும் வைத்து கட்டுவேன்.  இன்னொரு தடலை சின்னனா வெட்டி காற்சட்டையின் ஒருபக்கம் செருகினால் அது சைட் பாட். கயர் ஊறி, தோய்க்கும்போது அம்மா திட்டுவார் என்று தெரியும். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். போல் கார்ட் என்ற விஷயம் இருப்பது அந்த வயதில் தெரியாது. அப்பா அந்தக்காலத்தில யமாகா-350 மோட்டர்சைக்கிள் வச்சிருந்தவர். அதிண்ட பிஞ்சுபோன ஹெல்மட்டை எடுத்து தலையில் மாட்டி, பட்டி இழுத்து டைட் பண்ணியாயிற்று. லக்ஸ்பிறே பை இரண்டை கொளுவினால் கிளவ்ஸ். பிரவுன் கலருக்கு மாறியிருந்த பழைய லேஸ் தொலைந்த டெனிஸ் ஷூவை, கரப்பான் கலைத்து, போட்டுக்கொண்டு, தென்னைமட்டையில் சரிக்கட்டின பேட்டை கையில் தூக்கினால், ஐயா ரெடி.

இன்னிங்க்ஸ் ஆரம்பித்துவிட்டது. வீட்டு சன்ஹூட் படியில ஜம்மென்று ஹீரோ குந்தியிருக்கிறார்.

மூன்று விக்கட்டுகள் டவுன். அடுத்தது தலைவர். இரண்டுகால்களையும் ஸ்ட்ரெச் பண்ணியபடி முற்றத்துக்குள் இறங்கும்போது கிரவுண்ட் பூரா ஒரே சத்தம். சூரியனை பார்த்து கும்பிட்டுக்கொண்டே கேட்டடில போய் நின்று அம்பயர் லெக்ஸ்டொம் கேட்டு சுற்றும் முற்றும் திரும்பிப்பார்க்க வேண்டும். “அந்த ஏரியா”வில் கைவைத்து கொஞ்சம் மேலே இழுத்து விடவேண்டும். பின்னர் ஸ்டாண்ட் எடுத்து ரெடியாகியாச்சு.

தேசிக்காய் மரத்தடி முனையில் இருந்து பந்து போட அப்துல் காதர் தயார். அவன் பந்தை அரியண்டத்துக்கு நக்குவான். பந்தை கைகளால் அப்படி எந்தி எந்தி வந்து போட .. போடுவதாக நினைத்துக்கொண்டு தயாராக வைத்திருந்த சல்லிக்கல்லை எடுத்து கொஞ்சம் தூக்கிப்போட, அது ஒரு கூக்ளி! கண்கள் பிரகாசிக்கிறது. தடாலென்று டவுன் த ட்ராக் சார்ஞ் பண்ணி வந்து அந்தக்கல்லுக்கு ஓங்கி ஒரு அடி. சர்ர்ர்ர் என்று சன்ஹூட் தாண்டி, எழுமிச்ச மரம் தாண்டி, கிணற்றடி அன்னமுன்னா மரம் தாண்டி, சீமை கிழுவைக்குள்ளாள போயி முன்வீட்டு கமலராணி அக்காவீட்டு ஒட்டு கூரையில விழுந்து,

டக், டன், டிக், டின், டிங், டக் என்று பந்து ஒவ்வொரு ஓடாக உருண்டு உருண்டு உருண்டு ஒரு இடத்தில் செருகிநிற்கிறது.

அடுத்த கல்லு புரக்டர் வளவுக்குள். இடையில் ஒரு பந்தை ஸ்டைலாக புளோக் பண்ண அது ரோசா சாடிக்குள். நான்காவது சிக்ஸர் நம்வீட்டு புகைக்கூண்டுக்குள், அம்மாவிடம் இருந்து “டேய் கல்லு விளையாடாத” சத்தம் கேட்கும்.  அம்மா கிடக்கிறா. அடுத்த அடி கவர்ஸுக்கும் நொட்டிட்டு ஒரு சிங்கிள் எடுக்க ஐம்பது ஓட்டங்கள். பெருமிதமாக பூங்கன்று சுற்றுவட்டார மரத்தையல்லாம் பார்க்க, கரகோஷம் வானை பிளக்கும்.

ஸ்ட்ரைட் டிரைவ் எழுமிச்சையடி, பொயிண்ட் மாமரம், லெக்கிளான்ஸ் குருமணல் கும்பி, மிட் ஒன் வாழையடி என்று கல்லுகள் நாலாபக்கமும் விளாசியடிக்கப்பட இன்னிங்க்ஸ் முன்னேறிக்கொண்டே இருக்கும். நூறு இருநூறு, முன்னூறு நானூறு எல்லாம் அடித்திருக்கிறார். மத்தியானத்துக்குள் மனசு வைத்தால் தான் அவுட் ஆவார். அதுவும் கல்லை தூக்கிப்போடும்போது மூன்றாவது தடவையும் அடி படாமல் மிஸ் பண்ணினால் தான். ஆட்டம் இழந்து மீண்டும் வீட்டுக்குள் போகும்போது மீண்டும் கூட்டம் ஏகஸ்தாயியில் ஒரே பெயரை உச்சரிக்கும்.

சச்சின் … சச்சின் … சச்சின் …. சச்சின் … சச்சின்

**********

சச்சின். பெயரைக்கேட்டாலே ஒரு இளமை பீறிடும். “சச்சின் எண்டு ஒரு பெடியன், பதினாறு வயசிலேயே டீமுக்கு எடுபட்டிருக்கிறான்” என்று அண்ணா முதன்முதலில் அறிமுகப்படுத்தியபோது எனக்கு ஒன்பது வயது. இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தில இருந்த டைம். கரண்ட் வந்துகொண்டிருந்தது. தூர்தர்ஷனில் அந்த பாகிஸ்தான் சீரிஸ் பார்த்த ஞாபகம் இன்னமும் சன்னமாய் இருக்கிறது. சஞ்ரே மன்ஜ்ரேகார் கலக்கிய சீரிஸ் அது. ஆனால் பெயர் என்னவோ சச்சின் தான். இவ்வளவு சின்னபையன் இம்ரான், வாசிம், வக்கார் என்ற புயல்களை சமாளிப்பானா? என்ற டவுட். ஆனால் தல இரண்டாவது ஆட்டத்திலேயே ஐம்பது அடித்தது.

92 உலககிண்ண டைம். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எமக்கு கிரிக்கட் என்றால் அது உதயனும் ஸ்போர்ட்ஸ் ஸ்டாரும் தான். உதயனில் முன் பக்கத்தில் அணிகளின் நிலவரம் அட்டவணையாக வந்துகொண்டிருந்தது. நியூசிலாந்தும் இங்கிலாந்தும் முதல் இரண்டு இடத்தில் இருந்தன. அரையிறுதி நகைச்சுவை எல்லாம் அரங்கேறி இறுதியில் எங்கிருந்தோ வந்த பாகிஸ்தான் கடைசியில் கிண்ணத்தை வென்றது. அந்த சமயம் தலயின் முழுப்படம் ஒன்று டார்க் ப்ளு ஜெர்சியில் வெளிவந்தது. பட்டோடு சாய்ந்துகொண்டு ஒயிலாக நிற்கும் கிளாஸ் படம். என்வீட்டு புத்தக அலுமாரியில் ஒட்டி வைத்திருந்தேன்.

SACHIN_TENDULKAR_11208g

தொண்ணூறுகளில் கிரிக்கட் என்றால் எங்கள் மொத்த குடும்பமும் இந்தியா இந்தியா என்று அலறும். சாமியறையில் இருந்து ஹோல், கொரிடோர், குசினி வரைக்கும் அண்ணா ரன்அப் எடுத்து “கபில்தேவ் போலிங் ஓவர் த விக்கட்” என்றபடி வேகமாக ஓடிப்போய், குசினுக்கு முன்னாலே நின்று அக்சன் கொம்பிளீட் பண்ணிவிட்டு தான் பின்னாலே பாத்ரூம் போவார். உதயன் பேப்பர் வாங்கிவரும்போது, அதை உருட்டி குழாய் ஆக்கிவிட்டு இரண்டு ஸ்ட்ரைட் டிரைவ் அடிக்காவிட்டால் தூக்கம் வராது. சந்தைக்கு போகும்போது பாக்கை சும்மா விசுக்கி அடிப்பது, CR கொப்பியால் டிரைவ் அடிப்பது, மரத்தில் கிடக்கும் தேசிக்காய் எல்லாத்தையும் எடுத்து ஸ்பின் போல் போடுவது, என்று ஒவ்வொரு விஷயம் செய்யும்போது அடிமனதில் சச்சின் என்ற நினைப்பே இருக்கும். சச்சின் இல்லாமல் எங்களுக்கு கிரிக்கட் இல்லை. ஏன் விளையாட்டே இல்லை.

எப்போதுமே இலங்கை அணியை எங்களுக்கு கண்ணிலே காட்டக்கூடாது. அதுவும் அக்காமார்கள் எல்லாம் யாராவது இலங்கை அணிக்கு சப்போர்ட் பண்ணினால் செருப்பால் அடிப்பார்கள். அரவிந்தா நல்ல பாட்ஸ்மேன் என்றால் அடிவிழும். அவ்வளவு கோபம். ஒருமுறை கபில் தலைமையில் இலங்கை வந்தபொது, இலங்கை இந்தியாவை அலாப்பி வென்றது. சும்மா சும்மா காலில படாமலேயே எல்பி குடுப்பாங்கள். போகும்போது கபில், நியூட்றல் அம்பயர் இல்லாதவரைக்கும் இலங்கையை இலங்கையில் வெல்லவே முடியாது என்று சொல்லிவிட்டு போனார். அது விளையாட்டுக்கு மட்டும் உண்மை இல்லை, எல்லா விஷயத்திலும் தான் என்பது புரிய இருபது வருடங்கள் பிடித்தது! எங்கள் வீடு என்றில்லை. யாழ்ப்பாணத்தில் அனேக குடும்பங்களின் ஆதர்ச அணியும் இந்தியா தான். சோகம் என்னவென்றால் ஒருமுறை இந்தியா பாகிஸ்தான் மட்சில் இந்தியா தோற்றுவிட, எங்கே தமிழர்கள் இந்தியர்களின் தோல்வியை கொண்டாடுவார்களோ என்ற கடுப்பில் இந்தியன் ஆர்மி பலாலியில் இருந்து குடியிருப்புகளை நோக்கி செல் அடிக்க தொடங்கியது! அதில கூட யாரோ ரெண்டு மூண்டு பேரு செத்துப்போயிற்றினம்.

sachin95ம் ஆண்டு இடம்பெயர்வுவோடு இரண்டு வருடங்கள் வன்னிவாசம். அங்கே தான் 96ம் ஆண்டு உலக கிண்ணம் ஆரம்பிக்கிறது.  “அண்ணே எப்பிடியும் பாத்திடோணும்” என்று சுபாகரன் அண்ணாவிடம் சொல்ல அவர் ஒரு பிளான் போட்டார். வட்டக்கச்சில் நாமிருந்தவீட்டில் இரண்டு மிஷின்கள்(டிராக்டர்கள்) நின்றன. இடம்பெயர்ந்தபோது சுபாகரன் அண்ணே மறக்காம கொண்டுவந்த 12 இன்ச் கறுப்பு வெள்ளை டிவியும் இருந்தது. பழுதாய்ப்போய் கிடந்த அதை திருத்தி, நாமே அண்டனா சரிக்கட்டி, தடி கட்டி மிஷின் கொட்டிலுக்கு மேலே உயர்த்தி, மூன்று மூலைகளில் இழுத்துக்கட்டினால் சன்னமாக தூர்தர்ஷனில் ஒரு பழையபடம் போனது. “பிச்சுவா பக்கிரி கச்சிதமா அலுவல முடிப்பான்” என்று ஒருத்தன் சொல்லியபடி இருந்தான். பகல் என்றால் படம் கிளியர் ஆக தெரியாது. இரவில் பனி ஏற ஏற கிளியர் கிடைக்கும். அன்ரனா எந்நேரமும் திருப்பிக்கொண்டு இருக்கவேண்டும். ஒரு சின்ன அணுக்கம் என்றாலும் குழம்பிவிடும். இப்படியெல்லாம் செட் பண்ணி, மிஷின் போனட்டுக்கு மேலே டிவியை வைத்து தயார் பண்ணினால் மொத்த வட்டக்கச்சியும் கிரிக்கட் பார்க்க கூடியது. நானும் சுபாகரன் அண்ணாவும் படம் காட்டும் ஹீரோக்கள் ஆனோம். அதற்குள் வேறுபல சீன்களும் போனது. வேண்டாம்.

காலிறுதியில் பாகிஸ்தானை துவம்சம் பண்ணியாயிற்று. அரையிறுதி, என்னதான் நடுப்பிட்சில் நின்று ஜெயசூர்யா குரோஸ்பட்டோடு சுழன்றாலும், ஒரு சச்சினுக்கு முன்னே அதெல்லாம் சாதாரணம். சனத், களு, குருசிங்க எல்லாம் மார்ச்பாஸ்டில் பவிலியன் திரும்பியதால் சந்தோசம். இலங்கை அவ்வளவு அடிக்கவில்லை. சச்சின் இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கிறது. மரண அடி. மன்ஜ்ரேகாரும் சச்சினும் நின்று நிதானமாக விளையாடுகிறார்கள். தல ஐம்பது அடித்துவிட்டது. நான் ஒரு நெல்லுமூட்டையில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாத்ரூம் வந்து ஒரு மணிநேரம் ஆகிவிட்டிருந்தது. ஆனால் எழுந்தால் விக்கட் விழுமோ என்ற பயத்தில் கம்மென்று அடக்கியபடி இருந்தேன். ஒரு கட்டத்தில் இதற்குமேல் இருந்தால் நெல்லுமூட்டை நாசமாக போகும் என்று தோன்றியதால், அவசரமாக எழுந்து ஓடினேன். மாட்டுக்கொட்டில் பக்கம் போய் மாட்டர் பண்ணிக்கொண்டு இருக்கும்போதுதான், “ஓ” என்று ஒரு முப்பது பெருமூச்சுகளும் “சிக்” என்று இன்னொரு இருபதும் ஏகசமயத்தில் மிஷின் கொட்டிலுக்குள் இருந்து வெளிவர ஒழுங்காக சிப்பை கூட இழுக்காமல் உள்ளே திரும்பி ஓடினேன். சிவப்பு விளக்கு எரிந்து சச்சின் ரன் அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார். கண்டறியாத தேர்ட் அம்ப்யரால் வந்தவினை. சரி என்ன இப்ப. இரண்டு விக்கட் தானே. அசார், ஜடேஜா, கம்பிளி எல்லாம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கைகள் தகர்ந்து, 120 ஓட்டங்களுக்கு இந்திய அணி கொட்டிண்டு போக, கல்கத்தாகாரர் ஸ்டேடியத்தை எரித்ததும், கம்பிளி அழுதுகொண்டு போனதும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

96 உலக கிண்ணத்துக்கு பின்னர் வந்த ஈழத்து தலைமுறைகள் இலங்கை அணியை ரசிக்கதொடங்கியதை ஒருவித பதட்டத்துடன் பார்க்கவேண்டியிருக்கிறது. அரசியலையும் விளையாட்டையும் போட்டு குழப்பவேண்டாம் என்ற பக்குவத்தையும் கூடவே அந்த தலைமுறை எமக்கு பாலபாடம் எடுப்பார்கள். இந்தியா செய்யாததா? என்று, இலங்கை இன்றைக்கு இங்கிலாந்தின் மனிதஉரிமை மீறல்களை தட்டிக்கேட்பது போல கேட்பார்கள். விளையாட்டு வெறும் விளையாட்டு அல்ல. அது அரசியலுக்கான ஒருவித தளமே. தென்னாபிரிக்க, சிம்பாப்வே நாடுகளில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்காக அந்த நாடுகளை தடை செய்ததும் புறக்கணித்ததும் நடந்தது. சிம்பாப்வேயில் இருக்கும் வெள்ளை இனத்தினர் அந்த அணியை பின்பற்றுவார்களா என்பது சந்தேகமே. நாடுகளும், அரசியல்வாதிகளும் ஏன் விளையாட்டுவீரர்களும் கூட அரசியலை விளையாடுக்கூடாக பயன்படுத்துவார்கள். விளையாட்டுவீரர்கள் இளைஞர்களின் ரோல் மொடலாக சிறுவயதில் இருப்பதால் விளையாடுவீரர்களின் பால் இருக்கும் அபிமானம், அந்த அணி, நாடு என்று முன்னேறும். அவர்கள் என்ன சொன்னாலும் கேட்க தொடங்குவோம். அது தெரிந்தே முரளியை இலங்கை அரசாங்கம் புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறது. அதில் இரண்டு சிறுவர்கள் எடுபட்டால் கூட அவர்களுக்கு வெற்றி தான். அன்றைக்கு ஒருநாள் “எங்கள் நாட்டு அணியை நாங்கள் சப்போர்ட் பண்ணாமல் யார் பண்ணுவது” என்று ஒரு பெடியன் கேட்டான். ஆச்சர்யமாக பார்த்தேன். இலங்கை எங்கள் நாடு என்று மனதார பெருமையாக நினைக்கும் எந்தக்கணமும் எனக்கு எப்போதாவது வாய்த்ததாக ஞாபகம் இல்லை. புதிய தலைமுறை அப்படி நினைக்கிறது. அது சரியா தவறா என்று சொல்லதெரியவில்லை. தேவையும் இல்லை. இதுதான் நியதி என்றால் அது நிகழ்ந்தே தீரும். யாரும் யாரையும் தடுக்கமுடியாது.

***************

97, 98, 99, 2000 காலப்பகுதி, சச்சினின் பொற்காலம். சிம்பாப்வேயோடு ஒரு ஆட்டம். ஹென்றி ஒலங்கா என்று ஒரு நூடில்ஸ் தலையன். சச்சினை இரண்டு மூன்று பவுன்சர்கள் போட்டு திணற அடிப்பான். இறுதியில் சச்சின் பத்தோ பதினைந்தில் ஆட்டமிழந்துவிட எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. என்னடா இது ஒரு சிம்பாப்வேகாரனுக்கு நம்ம தல திணறுவதா? விசர் பிடித்தது. இரண்டு நாளில் இறுதியாட்டம். கங்குலி தான் காப்பாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டோம். ஆட்டமும் வந்தது. டிவிக்கு முன்னால் நாங்கள். அம்மா வெள்ளனையே புட்டு அவித்து வைத்துவிட்டு ஈஸிசெயாரை பிடித்துவிட்டார். நாங்கள் ஐந்தடி முன்னே டிவிக்கு நெருக்கமாக இருந்து பார்க்கிறோம்.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 194 ஆட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தது. இப்போது இருபெரும் தலைகளும் களத்தின் இறங்குகிறார்கள். நூடில்ஸ் தலையன் போடுறான், போடுறான், எப்பிடிப்போட்டாலும் அடி இடி என இறங்கியது. நாங்களெல்லாம் சச்சின் சச்சின் என்று டிவி முன்னாலே நின்று அலறுகிறோம். சச்சினின் ஒவ்வொரு அடியிலும் ஒரு கோபம் தெரியும். “மவனே எனக்காடா விளையாட்டு காட்டுற” என்ற ஒர்மத்தில் அடித்த அடிகளில் அந்த கிரிக்கட் பந்து பாடாய் படும். மறக்கமுடியாத ஆட்டம் அது. சச்சின் செஞ்சரி அடித்து, கங்குலி அறுபத்து சொச்சம் அடித்து பத்துவிக்கட்டுகளால் இந்தியா கிண்ணத்தை வென்றது. ஒருமுறை டாக்காவிலும், இந்தியா பாகிஸ்தான் பைனல். பாகிஸ்தான் 314 அடித்துவிட்டது. தல வந்து ஐந்தாறு ஓவர்கள் சதிராடிவிட்டு போய்விட, அப்புறமாக கங்குலியும் ராபின்சிங்கும் நின்று விளையாடி சேஸ் பண்ணினார்கள்.

அப்போது சார்ஜாவில் அடிக்கடி கிரிக்கட் நடக்கும். அனேகமா பாகிஸ்தானும் இந்தியாவும் இன்னொரு துக்கடா அணியும் விளையாடும். சிலநேரங்களில் அவுஸ்திரேலியா போன்ற சிறந்த அணிகளும் வருவதுண்டு. சச்சின் பாகிஸ்தான், சச்சின் அவுஸ்திரேலியா ஆட்டங்கள் சுவாரசியமானவை. சச்சின் ஷேன் வோர்னை துவம்சம் செய்த ஆட்டங்கள் பிரபலமானது. அப்போது சச்சின் களத்தில் இருக்கும்வரைக்கும் தான் இந்திய அணி வெல்லும் வாய்ப்பு இருக்கும். சச்சின் ஆட்டமிழந்தால், அடுத்து பத்துரன்கள் அடிக்க இருந்தாலும் கூட இந்தியா டென்சனில் துவண்டு தோற்றுவிடும். அப்படி தோற்ற ஆட்டம் தான் 99 இல் சென்னையில் நிகழ்ந்த இந்தியா பாகிஸ்தான் ஆசியக்கிண்ண டெஸ்ட் மாட்ச்.

நான்காம் நாள் ஆட்டம். வெல்லுவதற்கு 271 ஓட்டங்கள். 82 ஓட்டத்துக்கு ஐந்து விக்கட்டுகள் போய்விட்டது. ஆனால் சச்சின் களத்தில் நிற்கிறார். நல்லூர் முருகனுக்கு பல நேர்த்திகளோடு டைனமோ சைக்கிளில் மிதி மிதி என்று மிதிக்கிறேன். அப்போது யாழப்பாணத்தில் இரவில் தான் துளி துளியாக கரண்ட் வரும். பகலில் டிவி பார்ப்பது என்றால் டைனமோவில் சுற்றிப்பார்க்கும் பிளக் அண்ட் வைட் டிவி தான். சச்சினும் மொங்கியாவும் பார்ட்னர்ஷிப். 218 ஓட்டம் இருக்கையில் மோங்கியா ஆட்டமிழக்க ஸ்டில் சச்சின் களத்தில். பரபரவென்று மிதிக்கிறேன். அன்றைக்கு ஞாயிற்றுகிழமை. டியூஷன் எல்லாம் கட். வெல்லுவதற்கு வெறும் பதினேழு ஓட்டங்களே இருக்கும் நிலையில் சச்சின் ஆட்டமிழக்க, பின்னால் வந்த மூன்று எருமைகளும் வாசிம் அக்ரமை பார்த்து மிரள,  அடுத்த நான்கு ஓட்டங்களில் இந்தியா ஆட்டமிழந்துவிட்டது. எ ட்ராஜடி.

சச்சின் இருபத்திரண்டு வயதில் தன்னை விட ஏழு வயது மூத்தவரான அஞ்சலியை திருமணம் முடித்தது பரப்பரப்பாக பேசப்பட்டது. விஷயம் என்னவென்றால் பதினேழு வயதிலேயே இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அந்தகாலத்தில் வயது போன பெண்களை சைட் அடித்த அண்ணைமார்களுக்கெல்லாம் சச்சின் தான் ரோல்மொடல். இதைசொல்லியே நிறைய அன்ரிமாரி மடக்க ட்ரை பண்ணியிருக்கிறீனம். ஆனா நம்ம ஊரில, அப்பிடி நடக்க இவையள் சச்சினும் இல்ல. அவையள் அஞ்சலியும் இல்ல!

தொண்ணூறுகளில் வரும் சச்சினின் விளம்பரபடங்களில் ஒருவித கியூட்னஸ் இருக்கும். இளைஞர்களை கவருவது என்று சொல்லிக்கொண்டு நடிகைகளை சொறிஞ்சுகொண்டு சச்சின் நடிக்கமாட்டார். பெரும்பாலும் சிறுவர்களோடு தான் சேர்ந்து நடிப்பார். ஷாருக்கானோடு சேர்ந்து நடித்த பெப்ஸி விளம்பரங்கள் அந்நாளில் பிரபலம். “ஓ சச்சின் வந்தாரய்யா, ஓ சச்சின் வந்தாரய்யா.. மனதை தந்தேனய்யா” என்ற பாடல் எமக்கு தேசிய கீதம். யூடியூபில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஆனால் இது கிடைத்தது.

************

2000ம் ஆண்டுகளில் சச்சினின் ஆட்டத்தில் கூடுதல் பொறுப்பு சேர்ந்துகொண்டது. Calculated Aggression வந்தது. நல்ல பல திறமையான வீரர்கள் அணியில் வந்ததால் டென்ஷனும் குறைந்தது. கிரிக்கட்டின் கடவுளான சச்சின், கடவுள்களின் கடவுளாக மாறிய தொடர் தான் 2003 உலககிண்ண தொடர். அதுவும் அந்த காடிக்குக்கு எதிரான சிக்ஸர். எவன் மறப்பான்?

அந்த ஓவரின் முதல் போல் டொட் போல். இரண்டாவது பந்து ஓவர் பிட்ச்சாக போட்ட ஒரு ஹால்ப்வொலி. அதற்கு எக்ஸ்ட்ரா கவருக்குள் சச்சினின் ட்ரேட்மார்க் செக் டிரைவ் அடிக்கு பவுண்டரி கிடைத்தது. இதுவரைக்கும் ஓகே.  அடுத்த பந்து. காடிக் அந்த பந்தை ஷோர்ட் ஒப் த லென்த் தான் போடுவார் என்று சச்சின் கணிக்க, காடிக்கும் அப்படியே போட,  தல பக்புட்டில் நின்று முன்காலை ஒப் ஸ்டம்புக்கு வெளியே வைத்து அடிச்சுது ஒரு புள் ஷோட். சோய்ங்ங்ங்… என்று பந்து பறந்து ஸ்டேடியம் தாண்டிப்போய் தொலைந்துபோனது. நான், எழில், அனுசன், கஜன், ஆதவன் எல்லாம் ஏக நேரத்தில் எம்பிக்குதித்தோம். மறக்கமுடியாத அடி அது. இன்றைக்கும் யூடியூபில் அடிக்கடி அந்த ஷோட்டை பார்ப்பதுண்டு.

அது ஒரு ஷோட் தான். ஆனால் நாங்கள் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்தபோது ஒரு இன்னிங்சையே ஒரிஜினல் டிவிடி வாங்கி தேய தேய பார்த்துகொண்டிருந்தோம். அது வேறொன்றுமில்லை. அதே 2003 உலககிண்ணத்தில் இடம்பெற்ற இந்தியா பாகிஸ்தான் ஆட்டம். சச்சின் ருத்ரதாண்டவம் ஆடிய ஆட்டம் அது.

வாசிம், வக்கார், அக்தர், ரசாக் என்று பாகிஸ்தான் அணி முழுக்க ஏவுகணை பந்துவீச்சாளர்கள். முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 273 ரன்கள் அடிக்க எமக்கெல்லாம் கலக்கம். சேஸ் பண்ணுவது சிரமமாயிற்றே. இவங்கள் வேறு உயிரைக்கொடுத்து பந்து போடுவாங்களே. அதுவும் சோயிப் அக்தர், இடம் கிடைத்தால்,  கிரவுண்டுக்கு வெளியே நின்று கூட ரன்அப் எடுத்து ஓடிவருவான். செம நடுக்கம். ஆளாளுக்கு அசையாமல் உயிரை கையில்பிடித்தபடி பார்த்துக்கொண்டிருக்க …. தல இறங்குகிறது.

வழமையாக ஒபினாக இறங்கும்போது சச்சின் முதல் ஸ்ட்ரைக் எடுப்பதில்லை. அம்பயர் பக்கம் போய்நின்று விடுவார். கங்குலி கூட இதை பேட்டி ஒன்றில்  சொல்லியிருப்பார். ஆனால் இந்த ஆட்டத்தில் தல நேரே ஸ்ட்ரைக் எடுக்கப் போய் நின்றது. அது எங்களுக்கு புதுசு. முதல் பந்து டொட். இரண்டாம் பந்து டொட். மூன்றாம் பந்து போயிண்டுக்குல்லால் சீறியது. அடுத்த ஓவர் அண்ணர் ஷோயிப் அக்தர். வழமை போல இரண்டு வைட் அது இது என்று மூன்று போல் போட்டுவிட்டார். நான்காவது போல்,  ஒப்ஸ்டோம்புக்கு வெளியே பவுண்ஸர். சீறிக்கொண்டு வந்தது. வந்தவேகத்துக்கு தல பட்டை கைட் பண்ணி விளாச, பந்து தேர்ட்மானுக்கு மேலாக பறந்துபோய் ஸ்டேடியத்துக்குள் விழுந்தது. அக்தர் கடுப்பாயிட்டாப்ள. அடுத்த பந்து, மிடில் அண்ட் லெக், தலய எல்பிடபிள்யூ ஆக்கும் ஐடியா. ஆனால் நடந்தோ சச்சினின் ஆஸ்தான பிஃளிக். சர்ரென்று ஸ்குயார்லெக் பவுண்டரி. அக்தர் முகத்தில் ஈயாடவில்லை. இறுதிப்பந்து, கிளாஸ் போல். இன் லைன். சரியான லென்த். ஆனால் சச்சின் அன்றைக்கு சச்சினாக விளையாடிக்கொண்டிருந்தது பாகிஸ்தானின் துரதிர்ஷ்டம். டிபிகல் செக் டிரைவ். ஸ்ட்ரைட். மிட்ஒன் காரன் கலைத்து களைத்துப்போனான். 6, 4, 4. பாகிஸ்தான் தோல்வி வாசிமின் முகத்தில் அப்போதே தெரிந்தது.

எனக்கு அந்த ஆட்டத்தில் பிடித்த இன்னொரு அடி, எட்டாவது ஓவர் முதல் பந்தில் சச்சின் அடித்த இன்னொரு எக்ஸ்ட்ரா கவர் பக்புட் செக் டிரைவ். அடிச்சிட்டு அப்படியே ஒரு ரெண்டு செக்கன்கள் போட்டோபோஸ் குடுத்து நின்றது இன்னமும் கண்களுக்குள் இருக்கிறது….

எங்கிருந்து வந்தாயடா? எமைப்பாடு படுத்த … நீ .. எமைப்பாடு படுத்த?

அன்றைக்கு சச்சின் ஐம்பது அடித்தபோது பொதுவாக congratulations என்று சொல்லும் வர்ணனையாளர், இப்படி சொன்னார்.

“Thank you Sachin for the entertainment”

சச்சினின் பல இன்னிங்க்ஸ் அப்படிப்பட்டவை. ஆனால் ஒரு வித்தியாசமான டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஒன்றும் இருக்கிறது. அது தான் சிட்னியில் அவர் அடித்த 241. அந்த தொடர் முழுதும் இந்தியா பிரகாசித்தாலும், சச்சின் அடிக்கடி அவுட்சைட் ஒப்ஸ்டம்பில், கீப்பரிடமோ, இல்லை ஸ்லிப், கலியிடமோ பிடிகொடுத்து ஆட்டமிழந்துகொண்டிருந்தார். ஆக சிட்னியில் ஒரு முடிவு எடுத்தார். “மவனே நீ எப்படி வெளியே போட்டாலும் நான் அடிக்கமாட்டேன். என்னை அவுட் ஆக்கவேண்டுமேன்றால் ஸ்ட்ரைட் ஆக பந்துவீசு” என்ற சொன்ன ஆட்டம் அது. ஆஸிக்காரரும் என்னவெல்லாம் ட்ரை பண்ணிப்பார்த்தார்கள். ஐம்பது, நூறு, நூற்றைம்பது, இருநூறு தாண்டியும் சச்சின் வெளியே போன பந்தில் கைவைக்கவில்லை. இறுதிவரைக்கும் சச்சினை அந்த இன்னிங்க்ஸில் ஆட்டமிழக்க வைக்கமுடியவில்லை. டெஸ்ட் கிரிக்கட்டை ட்வென்டி ட்வென்டி போன்று விளையாடி, மூன்று நாட்களில் ஆட்டமிழந்து, அதன் அழகியலை குறைக்கும் ஒரு தலைமுறைக்கு மத்தியில், determination என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள சச்சினின் அந்த ஆட்டம் பார்க்கவேண்டிய ஒன்று.

sachin_tendulkar_2732720b

சென்னையில் அண்மையில் இடம்பெற்ற இங்கிலாந்து டெஸ்டிலே நான்காவது இன்னிங்க்ஸில் அடித்த செஞ்சரி, ஆஸியை ஒருநாள் போட்டி ஒன்றில் கலைத்துக்கொண்டு போய், 175ரன்கள் அடித்தும் கூட பின்னாலே வந்த ஆசாமிகளால் இந்தியா தோற்றது, 99 உலக கிண்ணத்தில், தந்தையின் மரணத்துக்கு இரண்டுநாட்களுக்கு பிறகு அடித்த செஞ்சரி, என்று ஏகப்பட்ட ஆட்டங்கள், சொல்லிக்கொண்டே போகலாம். எழுதவும் அலுக்காது. வாசிக்கவும் அலுக்காது. சச்சின் என்றால் எதுவுமே அலுக்காது.

இந்த ஆதர்ச நாயகனின் ஆட்டத்தை நானும் நேரடியாக கண்குளிர பார்த்து ரசித்திருக்கிறேன். 2011ம் ஆண்டு MCG இல், பொக்ஸிங்டே ஆட்டம். இரண்டாம் நாள் சச்சின் பட் பண்ணலாம் என்று, கூட இருந்த தவாவையும் இழுத்துக்கொண்டு போனபோது கூட்டம் அள்ளியது. உள்ளே போய் ஆஸ்திரேலியர்களுக்கு மத்தியில் அம்மிக்கொண்டு இருக்க, மதியத்துக்கு பிறகு சச்சின் களம் இறங்க ஆட்டம் சூடு பிடிக்கிறது. அன்றைக்கு சச்சினுடையது ஒரு அசத்தல் ஆட்டம். அடிக்கடி பவுண்டரிகள் தாண்டிக்கொண்டிருந்தன. என்ன ஒன்று, மாலை ஆனால் அவுஸ்திரேலியர்களுக்கு சுதி ஏறிவிடும். மைதானத்திலேயே பியர் ஆறாய் ஓடி, நாலு மணிக்கெல்லாம் அவனுகளுக்கு சச்சின் யாரு பொண்டிங் யாரு என்று தெரியாத குழப்பம் வந்துவிடும். எல்லோரையும் நாலெழுத்து கெட்டவார்த்தையால் சகட்டு மேனிக்கு திட்டுவார்கள். இந்த வண்டவாளத்தில் சச்சினின் ஒரு பவுண்டரிக்கு தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து கைத்தட்டிவிட, பின்னால் இருந்த ஒரு பெட்டை, தேவையே இல்லாமல் என் அம்மாவை அங்கே இழுத்து கெட்டவார்த்தையால் திட்டினாள். நான் திரும்பி அவளை இழுத்திருந்தால், இருந்தவங்கள் சேர்ந்து எனக்கு இழுத்திருப்பாங்கள்! சச்சினின் அடுத்த பவுண்டரிக்கு நானே பேசாமல் சச்சினின் அம்மாவை இழுத்துவிட்டேன். தமிழண்டா! சச்சின் மன்னிப்பாராக.

**************

சச்சின். இந்த சொல்லு எம்மோடு கூடிப்பிறந்து வளர்ந்த ஒன்று. அதை இலகுவில் எம்மிடமிருந்து பிரிக்கமுடியாது. என்வயசுக்கார்கள் எல்லோருமே மனதளவில் சச்சின்கள் தான். நாம் எல்லோருமே ஷோயிப்அக்தர் பந்துகளை மனசளவில் துவம்சம் செய்திருக்கிறோம்.  எங்களுக்கு இந்திய அணியை தெரியாது. தெரிந்தது எல்லாமே சச்சின், கங்குலி, டிராவிட், கும்ளே, லக்ஸ்மன் தான். எப்போது தோனியும் இன்னொரு தலைமுறையும் அணியை சுவீகாரம் செய்ததோ, அன்றிலிருந்து இந்திய அணியும் எங்களுக்கு இலங்கை அணியாகிப்போனது. நண்பர் மயிலன் அடிக்கடி சொல்லும்விஷயம். சச்சின் இளைப்பாறுவது கிரிக்கட் இளைப்பாறுவதற்கு சமம். RIP கிரிக்கட் என்பார். எப்படி ரோஜர் பெடரரின் உச்சிக்காலம் அடங்கியபின்னர் டெனிஸில் இருக்கும் ஆர்வம் குன்றியதோ, அதேபோல சச்சின், எங்கள் இளமையின் கடைசி சின்னம், போனபின்னர் எமக்கும் கிரிக்கட் இல்லை என்றாகிறது.

காலையில் எழுந்தபோது சச்சின் இனி விளையாடமாட்டார் என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. சுஜாதா மறைந்ததுக்கு மறுநாளும் இதே எண்ணம். மைக்கல்ஜாக்சன் இறப்புக்கு மறுநாளும். பதினாறுவயதில் சச்சின் இந்திய அணியில் விளையாடிய போது, ஒன்பது வயதான நான் இன்னமும் ஏழு வருடங்களில் சச்சின் போன்று வருவேன் என நம்பினேன். என்வயது சிறுவர்கள் எல்லோரும் நம்பினார்கள். சச்சின் எங்களுக்கு அப்போது ஒரு ஹீரோ. இன்றைக்கு சச்சின் நாற்பது வயதில் அப்படி ஒரு அழகான இன்னிங்க்ஸ் விளையாடி ஓய்வுபெற்று பாரதரத்னா வாங்கும்போது, அடடே இன்னமும் ஏழு வருடங்களில் நமக்கும் நாற்பது ஆகிவிடுமே. என்ன கிழிக்கப்போகிறோம் என்ற பதட்டம் வருகிறது. இத்தனை வருடங்களுக்கு பிறகும் நமக்கு செக் வைத்து நீ எவ்வளவோ சாதிக்க இருக்கிறது என்று சொல்லுவதால் தான் சச்சின் இப்போதும் ஹீரோ. உலகத்துக்கு ஒன்றும் கிழிக்கத்தேவையில்லை. மனசுக்கு பிடித்த வாழ்க்கையையாவது வாழவேண்டாமா? வாழு என்பது தான் சச்சின் எமக்கு சொல்லுகின்ற பாடம். உனக்கு எது பிடிக்கிறதோ அதை சமரசங்கள் இல்லாமல் முழுமுயற்சியோடு செய் என்கிறார். மற்றவன் கூக்குரலிட்டான் என்று ஓய்வுபெறவுமில்லை. தனக்கு எப்போது தோன்றியதோ அப்போதே செய்தார். அது தான் சச்சின்.

“உன்னுடைய கனவுகளை துரத்து, ஆனால் குறுக்குபாதையால் அதை அடைய முயலாதே, பாதை கடினமாக இருந்தாலும் முயற்சியை கைவிட்டுவிடாதே, எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதனாக இரு”

இது சச்சினின் தந்தை சொன்ன அறிவுரைகள். சச்சினின் வாழ்க்கை இந்த அறிவுரைகளின் குவியல் தான். அவர் முயற்சியும், உழைப்பும், எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய நெறியான வாழ்க்கையும் நம் எல்லோருக்குமே ஒரு பாடம். விளையாட்டோடு மட்டுமில்லாமல் தன்னை பின்பற்றுவர்களுக்கு ஒரு சிறந்த ரோல்மொடலாக வாழ்பவர் தான் நம்ம சச்சின்.

இனியும் கிரிக்கட் ஆட்டம் நடக்கும். ஹீரோக்கள் வருவார்கள். விறுவிறுவென்று ஆட்டங்கள் போகும். இருநூறு, முன்னூறு ஏன் ஐநூறு கூட அடிப்பார்கள். ஆனால் அவுட்சைட் ஒவ்ஸ்டம்பில் சரியான லெந்தில் விழும் பந்தை கூட, மினிமம் புட் மூவ்மண்டுடன் சடக்கென்று ஒரு செக் டிரைவ் அடித்துவிட்டு இரண்டு செக்கன்கள் நாங்கள் ரசிக்கவென்று ஆடாமல் அசையாமல் நிற்கும் அந்த அழகு … ச… ச்…. சி…..ன்.

ஓ சச்சின் வந்தாரைய்யா .. ஓ சச்சின் வந்தாரையா .. மனதை தந்தேனய்யா!

M_Id_434030_Sachin_Tendulkar

&&&&&&&&&&&&&

தொடர்பான பதிவுகள்

யாழ்ப்பாணத்து கிரிக்கட் பாகம் 1
யாழ்ப்பாணத்து கிரிக்கட் பாகம் 2
என் கொல்லைப்புறத்து காதலிகள்

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

$
0
0

 

images

என் அன்புக்குரிய டமில் மக்களே,

ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

 

mervin_silva

(சிராவ மஷான்.. சிராவ)


ஜாப்னாவுல ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க தானே. அந்த ஜனங்களை யாரோ தப்பா தூண்டியிருக்கிறாங்க.  .. டரெல் ஹயர் நான் எறியறேன் எண்டு சொன்னப்போ, அம்பயர் சொன்னத மதிச்சு அர்ஜூன நடந்தாரு. அதபோல நீங்களும் எங்க பிரசிடெண்ட் சொன்னத கேட்டு நடக்கோணும். திருப்பி பேசபடாது. பசங்க காணாம போனா அத பத்தி யோசிக்காம வேற பசங்க உருவாக்கிறதில வர்க்அவுட் பண்ணனும். அத வுட்டுட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுறது றோங். கமரூன் வரும்போது கள்ளு குடுக்கிறத வுட்டிட்டு மகஜர் குடுக்கிறீங்க.

8(கியல வடக்னா முரளி)

நம்ம பிரசிடெண்டை நீங்கல்லாரும் பிலீவ் பண்ணனும். அவரு டெவலப்மென்ட் முழுசும் நோர்த்துக்கு தான் செய்யுறார். ஏர்போர்ட், ஹார்பர், ப்ளே கிரவுண்ட், ஹைவே எல்லாமே நோர்த்துக்கு னே!.. நீங்க வேணும்னா அந்தார்டிகாவுக்கு போயி நின்னுகிட்டு நோர்த்து பாருங்க .. அம்பாந்தோட்டை தானே தெரியும்?

mervin(கொடாய் முரளி .. நியம)

நெசத்தில வோர்ல பாதிக்கப்பட்டது நானு தான். பாகிஸ்தானில நாங்க போயக்கிட்டுருக்கோம். திடீர்னு டெரரிஸ்ட் ஷூட் பண்ணினாங்க.  நான் உசக்க பணிஞ்சு போனதில தான் உசிர் தப்பினேன். பட் அதில என்னைவிட சிங்களீஸ் தான் ரொம்ப தீவிரவாதத்தால பாதிக்கப்பட்டது. சமரவீரவோட நெஞ்சு பிரிஞ்சு போச்சு. இது கமரூனுக்கு தெரியாது. டமில்ஸ் ஸ்ரீலங்காவுல நடந்ததை மறந்துட்டு பாகிஸ்தான்ல நமக்கு நடந்த தீவிரவாத தாக்குதல பத்தி பேசணும். வெஸ்டேர்ன் போர்சஸ் இன்வோல்வ்ட் இருக்கணும். பாகிஸ்தானில எங்க பஸ்ல எப்படி அமேரிக்கா குண்டு வச்சான்னு இன்டர்நேஷனல் இன்குவாரி வேணும்.

2223035629_de3b6a8af1
(மாற முரளி, மாற)

என்னைய கம்புர் கலகம் பீபில் கூப்பிட்டு பாராட்டு விளா வச்சாங்க. நான் அங்கிட்டு இங்கிலீஷ் தான் பேசினேன். எனக்கு தமிழ் தெரியாது எண்டதால தான் இங்கிலிஷ் பேசினேன்னுறாங்க. பட் தட்ஸ் ரோங். டமில்நாட்ல நடந்த கொஃபி வித் அனு ஷோவுல நான் தமிழ் தான் பேசினேன். என்னமோ தெரியேல்ல ஸ்ரீலங்கால மட்டும் எனக்கு தமிழ் பேச மாற வெட்கம். தட்ஸ் ரியலி குட். எவ்வ்ரி டமில் பேர்சனும் இப்படி தான் வெட்கப்படணும். அப்போ தான் சிங்கள பாஷாவை கத்துகிட்டு பெரிசா வரலாம். ஐ தின்க் மகாவம்சம் ஷுட் பி ட்ரான்ஸ்லெடெட் இன் டமில். அப்போ தான் டமில் எவ்ளோ கெட்ட ஜாதின்னு தெரியும் . ஐ தினக் ஐ ஆல்வேஸ் தாங் அர்ஜூன அண்ட் துட்டகைமுனு யூ னோ. அண்ட் மகிந்த ஆஸ் வெல்.

Mervin-Silva2918

(எல கிரி முரளி)

லாஸ்ட் பட் நொட் லீஸ்ட், உங்க வீட்ல யாராச்சும் காணாம போனா, இல்ல ரேப் பண்ணுபட்டா அத மறந்திடுங்க. எதிர்காலத்தில காணாம போகாம இருக்க கிரிக்கட் வெளையாடுங்க. ஒரு ஐடியா கொடுக்கறேன். ஆர்மியும் ரேப்பண்ணுப்பட்ட பொண்ணுகளும் நட்பு ரீதியான கிரிக்கட் ஆடலாம். இட்ஸ் இன்டரெஸ்டிங். நான் வேணும்னா வந்து போல் போடறேன். கிரிக்கட் மூலம் எல்லாத்தையும் மறந்து சமாதானமா போகலாம். நீங்க எப்புடி ஸ்ரீலங்கன் கிரிக்கட் டீமுக்கு சப்போர்ட் பண்ணுறீங்களோ அப்பிடியே கவர்மந்தையும் சப்போர்ட் பண்ணுங்க. கொடி பிடியுங்க. பிரசிடெண்ட் எல்லாமே செய்வாரு.

அல்லா போலும் மகிந்தாக்கே.

ரொம்ப தாங்க்ஸ்!
முரளி அய்யே

Muttiah-Muralitharan-Images-11-300x242

----------------------------------------------- யாவும் கற்பனை அல்ல -------------------------------------------------

படங்கள் : இணையம்

வியாழமாற்றம் 28-11-2013 : அப்படியே 1984

$
0
0

 

images (1)

 

“சுதந்திரம் என்பது  இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது”

வின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக்களத்திலே அவனுக்கு சாதாரண கிளறிக்கல் உத்தியோகம். கட்சியின் வெளிவட்ட மெம்பர். நாற்பது வயது இருக்கலாம். புத்திசாலி. சுயசிந்தனை உள்ளவன்.

கட்சியின், நாட்டின் தலைவர் பெரிய அண்ணர் (Big Brother). கட்சிக்குள் மூன்று வட்டங்கள். உள்வட்டம; மொத்த சனத்தொகையில் இரண்டுவீதத்துக்கும் குறைவானவர்களே இந்த உள்வட்ட கட்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சகலவித வசதியும் உண்டு. வைன் அடிக்கலாம். வீட்டு வேலையாள் வைத்திருக்கலாம். சீனி, சொக்கலேட், கோப்பி என்று எல்லாமே தண்ணியாக கிடைக்கும்.  சக்திவாய்ந்தவர்கள். தலைமைப்பீடம். முடிவெடுப்பவர்கள். இயக்குபவர்கள். The power house.

வெளிவட்டம் தான் உத்தியோகத்தர் கட்சி. White Collar ஆட்கள். இவர்கள் மாடு மாதிரி உழைப்பார்கள். கட்சி என்ன சொன்னாலும் அதை மானசீகமாக நம்புவார்கள். பெரிய அண்ணர் தான் அவர்களுக்கு கடவுள். அவரை காதலிப்பார்கள். அவர் படம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பெருத்த மீசையுடன் இருக்கும். கீழே “Big brother is watching you” என்று கொட்டை எழுத்துகளில் இருக்கும். பார்த்து ரசிப்பார்கள். வெளிவட்டக்காரர் காதல் செய்ய முடியாது. ஆனால் குழந்தை பெறலாம். குழந்தை பெறுவதற்காக திருமணம் முடிக்கலாம். செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதையும் இச்சையோடு செய்யாமல் சிவனே என்று செய்யவேண்டும். வின்சனின் மனைவி “Lets do it for the party” என்பாள். அது தான் கட்சி மீது உள்ள பக்தி. “கட்சிக்காக இதை செய்கிறோம்” என்று அவசர அவசரமாக செய்துவிட்டு அப்புறம் தத்தம் வேலையை பார்க்கபோய்விடுவாள். மூளையை கட்சிக்காக காவு கொடுத்தவள். வின்சன் சுயசிந்தனை உடையவன். பிரிகிறார்கள்.

இதிலே இருக்கிற மூன்றாவது வட்டம் தான் கீழ்தட்டு மக்கள். Blue Collar வேலை செய்பவர்கள். தொழிற்சாலை, தோட்டம், கமத்தொழில் என்று மாடு மாதிரி வேலை செய்வார்கள். அவர்கள் உலகம் தனி. கட்சி அவர்களை கண்டுகொள்வதில்லை. அவர்களும் கட்சியை கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு என்று லோட்டறி, மது, மாது எல்லாமே விநியோகித்து அவர்களை பதர்களாக கட்சி மாற்றிவைத்திருக்கிறது. இவர்கள் நாட்டின் எண்பது வீதத்தினர். ஒரு நாட்டின் எண்பது சதத்தினர், முட்டாளாக, படிப்பறிவு இல்லாததாக, தம்மை சுற்றி நடப்பது எதையுமே கவனியாமல் இருந்தால் ஆட்சியாளர்களுக்கு கொண்டாட்டம் தானே. இந்த மக்களுக்கு கூசிழிவு படங்கள் எடுத்து காட்டி சீரழிப்பதற்காகவே “உண்மை அமைச்சில்” பிரிவு இருக்கிறது. அங்கு தான் ஜூலியா வேலை செய்கிறாள்.

1984-John-Hurt

முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோஷலிசத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்ற பெயரில் பெரியண்ணனின் தலைமையில் உருவாகி இருக்கும் ஆட்சியில் தான் இதெல்லாமே நடக்கிறது. ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியை உருவாக்கி, நாடு எப்போதுமே போரிலே இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். தாமே அடிக்கடி நாட்டுக்குள் ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் நடத்தி கொலைசெய்வார்கள். இந்த நாட்டில் எந்த குற்றத்துக்கும் விசாரித்து பலவகை தண்டனை உண்டு. ஆனால் சுய சிந்தனை செய்தால் தண்டனை மரணம் தான். சுயமாக சிந்திக்கும் எவனுமே இறுதியில் சாகவேண்டும். இல்லாமல் போகவேண்டும். அப்படி ஒருவர் வரலாற்றில் இருந்தார் என்ற தடயமே அழிக்கப்படும். வரலாறு மாற்றப்படும். மாற்றுவார்கள். மக்களும் கேள்வி எதுவும் கேட்காமல் நம்புவார்கள். போலி நம்பிக்கை இல்லை. உண்மையிலேயே நம்புவார்கள். இரண்டும் இரண்டும் ஐந்தால் என்றால் நம்புவார்கள். சுரேஷ் நம்புவான். ரமேஷ் நம்புவான். சுமதி கைதட்டுவாள். நீயும் நம்புவாய். நான் நம்பிவிட்டேன்.

“He who controls the past controls the future. He who controls the present controls the past.” 

புரிகிறதா? எவன் இன்றைய திகதியில் சக்திவாய்ந்தவனாக இருக்கிறானோ அவனே நாளையை தீர்மானிக்கிறான். நேற்றையையும் தீர்மானிக்கிறான். அப்படி நேற்றையை தீர்மானிக்கும் பிரிவில் தான் வின்சன் கிளார்க் வேலை பார்க்கிறான். என்ன வேலை? இன்றைக்கும் நாளைக்கும் ஏற்றது போல வரலாற்றை மாற்றுவது தான் அவன் வேலை. உதாரணத்துக்கு ஒன்று. “ரேசர் பிளேடுக்கான ஒதுக்கீடு இந்த வருடம் ஆளுக்கு இருபது என்று குறைக்கப்படுகிறது” என்று தகவல் வருகிறது. வின்சன் உடனே சென்ற வருடம் பத்திரிகையில் வந்த அறிக்கையை பார்க்கிறான். அதிலே “அந்த வருடம் ரேசர் பிளேடுக்கான ஒதுக்கீடு ஆளுக்கு முப்பது” என்று இருக்கும். ஆக சென்ற வருடத்தை விட இந்த வருட ஒதுக்கீடு குறைகிறது. வின்சன் உடனே சென்ற வருட அறிக்கையில் முப்பதை பத்து என்று மாற்றுவான். எல்லா இடங்களிலும் அப்டேட் பண்ணுவான். இப்போது சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிகமாக ரேசர் பிளேட் ஒதுக்கிடப்படுவதாக அறிக்கை வெளிவரும்.

அதிர்ச்சியாய் இருக்கிறதா?

இன்னொரு உதாரணம். திடீரென்று மூன்று பேரை துரோகிகள் என்று டிவியில் காட்டுவார்கள். ஐந்து வருடங்களுக்கு முதல் இன்ன திகதியில் எதிரியின் பாசறையில் தாம் நாட்டின் ரகசியங்களை விற்றதாக ஒப்புக்கொள்வார்கள். உடனே வின்சன் ஐந்து வருடங்களுக்கு முதல் வந்த பத்திரிகை செய்திகளை படிப்பான். அதிலே இதே மூன்று பேரும் அதே தேதியில் அமெரிக்காவில் பெரிய அண்ணரோடு கை குலுக்கிக்கொண்டு கொடியேற்றும் படம் இருக்கும். உடனே அந்த செய்தியை அகற்றி, இவர்கள் மீது சந்தேகம் வரும்படியான செய்தியைக் அதற்குள் நுழைப்பான். ஆக ஐந்து வருடங்களுக்கு முன்னரேயே இவர்கள் துரோகிகள் என்று பெரிய அண்ணர் கண்டுபிடித்துவிட்டார் என்று வரலாறு சொல்லும். இப்படி வரலாற்றை மாற்றி மாற்றி, ஆகாயவிமானத்தை கண்டுபிடித்தது கூட கட்சி தான் என்று கதைவிடப்படும்.

கட்சிக்கு மூன்று கொள்கைகள் இருக்கிறது. நாடு முழுக்க அந்த கொள்கைகள் பரப்பப்படும்

யுத்தமே சமாதானம்.
அறியாமையே வலிமை
அடிமைத்துவமே உண்மையான சுதந்திரம்

சிறுவயது முதலே எதிரிகள், முகம் தெரியாத, சிலவேளை உருவகப்படுத்திய எதிரிகள் மீது வெறுப்பு இருக்கும். பொதுமக்கள் மத்தியில் துரோகிகள் தூக்கிலடப்படும்போது மக்கள் கொண்டாடுவார்கள். அகதிகள் சென்ற கப்பலை நாட்டின் படையினர் தாக்கி அழிக்கும் காட்சி டிவியில் போகும்போது மக்கள் விசில் அடித்து கரகோஷம் இடுவார்கள்.

All the war-propaganda, all the screaming and lies and hatred, comes invariably from people who are not fighting.

இலக்கியங்கள் கடவுள், மதம் எல்லாமே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஷேக்ஸ்பியர் படைப்புகளில் கட்சியில் கொள்கைகள் சேர்த்து மாற்றியிருப்பார்கள். மொழி கூட சர்ச்சைக்குரிய வார்த்தைகள் ஒழிக்கப்பட்டு வெறும் வழக்கு சொற்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் மக்களில் வாழ்க்கைத்தரம் அதள பாதாளத்துக்கு போயக்கொண்டிருந்தது. ஆனால் நாட்டில் பொருளாதாரமும், வசதியும் வரலாற்று தகவல்களின் படி சுபீட்சத்தை நோக்கியே செல்லும். எல்லோரும் அதை நம்புவார்கள் அல்லது அக்கறைப்படமாட்டார்கள். ஆனால் சிலர் சிந்திப்பார்கள். “இல்லையே சென்ற வருடத்தை விட இந்த வருடம் மோசமாக போகிறதே” என்று யோசிப்பார்கள். அப்படி யோசிப்பவர்களை வேட்டையாட தான் “சிந்தனை போலிஸ்” என்று ஒரு டீமே இருக்கிறது. கண்டுபிடித்தால் உங்கள் கதை கம்மாஸ்.

வின்சன் அப்படி யோசிக்க ஆரம்பித்தான்.

1984-2

வின்சனோடு கூட வேலை செய்யும் ஜூலியா. அடித்தட்டு மக்களுக்கு கள்ளச்சந்தையில் விநியோகிக்கவென கூசிழிவு படம் தயார் செய்யும் பிரிவில் வேலை செய்பவள். அழகி. புத்திசாலி. கட்சியின் பரமவிசிறி போல காட்டிக்கொள்ளும் சுயசிந்தனை உள்ளவள். கட்சிக்கு உச்சிவிட்டு தன்வேலையை பார்ப்பதே புரட்சி என்பாள். இவளும் வின்சனும் இரகசியமாக காதலிக்கிறார்கள். இடம் மாற்றி இடம் சென்று களவாக சேர்கிறார்கள். உட்கட்சியில் இருந்து கோப்பி சீனி களவாடி போட்டு குடிக்கிறார்கள்.

வின்சனுக்கு இந்த நாடும் மக்களும் இப்படி மாந்தைகூட்டமாக அடிமைப்பட்டு கிடப்பது பிடிக்கவில்லை. புரட்சி வேண்டும் என்கிறான். சிலவேளை அந்த எதிரி நிஜமாகவே இருந்தால் அவனோடு சேரவேண்டும் என்று நினைக்கிறான். அலுவலகத்தில் தொழில் புரியும் ஓபிரையன் அப்படிப்பட்ட புரட்சியாளன் என்று நினைத்து அவனை வின்சனும் ஜூலியாவும் சந்திக்கிறார்கள். கடைசியில் பார்த்தால் ஓபிரையன் “சிந்தனை போலிசின்” ஒரு முக்கிய உறுப்பினர் என்று தெரிகிறது. இருவருமே பிடிபடுகிறார்கள்.

1984-movie-miniluv-3

அப்புறம் ஒரு பாகம் பூரா சிறையில் நடக்கிறது. ஒரு சிந்திக்கும் மனிதனை, எப்படி சொல்லுவதை கேள்வியே இல்லாமல் ஏற்றுக்கொள்ளுமாறு மாற்றலாம் என்பதை, வலியை உளவியல் ரீதியாக எப்படி ஒருத்தனுக்கு கொடுத்து அவன் சிந்தனை, கொள்கைகளையே மாற்றலாம் என்பதை சாத்தியமாக்கிக்காட்டும் வதைக்கூடம் அது.

“நீ ஒரு துரோகி, உன்னை எப்படியோ கொல்லத்தான் போகிறோம், ஆனால் சாகும்போது நீ துரோகியாக சாகக்கூடாது, மனதளவில் நீ இந்த கட்சிக்கும் பெரிய அண்ணருக்கும் விசுவாசியாக மாறியபின்னரேயே உன்னை கொள்வோம்”

என்று ஓபிரையன் சொல்லுவான்.

“நீ சொல்லுவதை நான் வலிக்கு தப்புவதற்காக வேண்டுமானால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் மனதளவில் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? முடியாது.”

என்பான் வின்சன்.

“ஏன் முடியாது. ஏற்றுக்கொள்ளலாம். ஏற்றுக்கொள்வாய். ஏற்றுக்கொள்ளவைப்போம். இது தான் சாஸ்வதம் என்று ஒன்றுமில்லை. நான் மிதக்கிறேன் என்று நானும் நம்பி, நீயும் நம்பினால் பின்னர் நான் மிதக்கிறேன் என்பது உண்மையாகிறது. நான் நம்புகிறேன். உன்னை நம்பவைத்துவிடுவேன்”

ஓபிரையன் சொல்ல முள்ளந்தண்டு சில்லிடும். தொடர்ச்சியான வதையின் இறுதியில் வின்சன் மனசார நடப்பவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள தொடங்கினான். எதற்காக நான் இவ்வளவு நாளும் தவறாக யோசித்தேன்? என்று மனம் வருந்துவான். தனக்கு முன்னாலே இருந்த பெரிய அண்ணரின் பிரமாண்ட படத்தை காதலுடன் பார்க்க தொடங்கினான்.

இனி அவனை ஒரு துப்பாக்கி சன்னம் பிடரியை பதம் பார்க்கும்!


ஜோர்ஜ் ஒர்வல்

என் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர். எனக்கென்று இல்லை. இவரில்லாமல் ஆங்கில இலக்கியம் இல்லை. இவரை வாசிக்காத ஆங்கில வாசகர்களும் இல்லை. இரண்டே நாவல்கள். ஒன்று Animal Farm. மற்றையது 1984. இரண்டுமே உலகத்தை புரட்டிப்போட்ட புத்தகங்கள். இரண்டுமே சர்வாதிகாரத்தையும், இடதுசாரித்துவம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்களையும் போட்டு தாளித்த நூல்கள். ஸ்டாலினின் சோவியத் ஒன்றியத்தின் அநியாயங்களை, முறைகேடுகளை சொல்லிய நூல் தான் Animal Farm. ஸ்டாலின், ஹிட்லர் போன்றவர்கள் என்ன தவறுகளை செய்யாமல் இருந்திருந்தால், அதே போல கொடுங்கோல் ஆட்சியை அழியாமல் தொடர்ந்திருக்கலாம், மக்களை ஒடுக்கியிருக்கலாம் என்று கூறி எம்மை மிரட்டும் நூல் தான் 1984. தலைவர் இந்த இரண்டு நூலையும் எழுதியது நாற்பதுகளில். உலகப்போருக்கு பின்னர், பிரிட்டன் சனநாயகம் சர்வாதிகாரத்துக்குள் நுழைந்துவிடும் என்று அவர் நினைத்தார். சோவியத் யூனியனை கண்டு பயந்தார். ஸ்டாலின் தான் அந்த Big Brother. Animal Farm இல் அவர் நெப்போலியன்.

images

ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டபத்திரிக்கை ஒன்றில் 2+2 = 5 என்று ஒரு சுலோகம் இருக்கும். ஐந்தாண்டு திட்டத்தை நான்காண்டுகளில் முடிப்போம் என்று சொல்லும் அர்த்தத்தில் உருவானது அதை. ஒர்வல் அதை செம தாக்கு தாக்கியிருப்பார்.

In the end the Party would announce that two and two made five, and you would have to believe it. It was inevitable that they should make that claim sooner or later: the logic of their position demanded it. Not merely the validity of experience, but the very existence of external reality, was tacitly denied by their philosophy. The heresy of heresies was common sense. And what was terrifying was not that they would kill you for thinking otherwise, but that they might be right. For, after all, how do we know that two and two make four? Or that the force of gravity works? Or that the past is unchangeable? If both the past and the external world exist only in the mind, and if the mind itself is controllable—what then? 

1984 வாசித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் காலத்தில் நடந்த நடக்கின்ற பல விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அதை என் மனதுக்கு எப்படி தோன்றியதோ அதே நேர்மையுடன் எழுத விளைகிறேன்.


எட்வேர்ட் ஸ்நோடௌன்

ஒரு பொது எதிரியைக்காட்டி மிரட்டிக்கொண்டே மக்களின் மனித உரிமையை மீறும் செயல். அவர்களை தீவிரமாக கண்காணிப்பது. இப்போது ஸ்நோடௌன் மூலம் தெரியவந்திருகிறது. இந்தோனேஷியா அதிபர், மனைவி, பிள்ளைகளின் டெலிபோனை கூட ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள். … அப்படியே 1984.

நாவலில் இந்த கண்காணிப்பு மூலை முடுக்கெல்லாம் இருக்கும். ஒரு டெலிஸ்கிரீன் எல்லா இடமும் இருக்கும். வீட்டில் கூட இருக்கும். காட்டுக்குள் போனால் கூட ஆங்காங்கே மைக்ரோபோன் இருக்கும். வீட்டுக்கு வெளியே எப்போதுமே ஹெலிகப்டர் சுற்றிக்கொண்டிருக்கும்.

orwell_snowden_obama

2011ம் ஆண்டு ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கையையும் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க வாரண்ட் தேவையில்லை என்ற சட்டம் சுப்ரீம் கோர்ட்டுக்கு இழுக்கப்பட்டது. நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

“இந்த சட்டத்தை கொண்டுவந்தால், ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கைகளையும் 24மணிநேரமும் கண்காணிக்க உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடுமே, இது கிட்டத்தட்ட 1984 நாவலில் உள்ள நாடு போலவே அமைந்துவிடுமே?”


மகிந்த - பெரிய அண்ணர்

நாடு முழுக்க கொளுத்த மீசையுடன் பெரிய அண்ணரின் படம் இருக்கும்போது மகிந்த நினைவு வந்தே தீரும். இல்லாத எதிரியை இருக்கு என்று பூச்சாண்டி காட்டியும், வெளிநாடுகளை சாட்டு சொல்லியும், மக்களை மீது தேசப்பற்று என்ற ஆயுதத்தால் கட்டிப்போட்டிருக்கும் தந்திரோபாயம் 1984 இல் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும்.  ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் எல்லா சுகங்களையும் அனுபவிக்க, கொஞ்சம் படித்த மத்தியதர வர்க்கத்தை இவர்கள் மனமாற்றி வைத்திருக்க, அடித்தட்டு எண்பது வீதமான மக்கள் இந்த சர்வாதிகாரம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் கிரிக்கட், சினிமா, பைலா, சுற்றுலா என்று இருக்கும் நிலையும், அடிக்கடி மேலைத்தேய நாடுகளையும், புலிகளையும் சகட்டு மேனிக்கு திட்டுவதும் … அப்படியே 1984.

commonwealth.jpg.size.xxlarge.letterbox

ஓப்ரையன் சொல்லுகின்ற ஒவ்வொரு வசனங்களும் கோத்தா சொல்லுவது போல இருக்கும்.

எஸ். எம். சந்திரசேனா காபினட் அமைச்சராக இருக்கிறார். வடமத்திய மாகாண தேர்தல் வருகிறது. அதிலே அவருடைய தம்பி எஸ்.எம்.ரஞ்சித் முதலமைச்சராக வேண்டும். ஆனால் ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் முக்கிய பொறுப்பில் இருக்கமுடியாது என்று மகிந்த சொல்கிறார்! ஆமாம் மகிந்த தான் சொல்கிறார். ஆக சந்திரசேனா அமைச்சு பொறுப்பில் இருந்து விலக, ரஞ்சித் முதலமைச்சர் ஆகிறார். மக்கள் என்னே ஆட்சி என்கிறார்கள். ஒருவருடம் கழிகிறது. இப்போது அதே ரஞ்சித் முதலமைச்சர் ஆகஇருக்கும்போதே சந்திரசேனவுக்கு மீண்டும் காபினட் அமைச்சு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. எவனும் கேள்வி கேட்கவில்லை. மக்கள் இப்போதும் என்னே ஆட்சி என்கிறார்கள். மனதார வாழ்த்துகிறார்கள். ஆ ஊ என்றால் புலிகளை ஒழித்தவர்கள், நன்றே செய்வார்கள் என்கிறார்கள்.  அப்படியே 1984.

மகாவம்சத்தில் தமிழ் அமைச்சர்கள் பற்றி கதை இல்லை. ஈழத்தில் தமிழர்கள் வந்தேறிகள். சிங்களவர் பூர்வீகர். ஈழப்பிரச்சனைக்கு முழுமுதற் காரணம் தமிழரே. இன்னும் ஒரு இருபதாண்டில் யாழ் நூலகம் எரித்தது தமிழர் ஆகலாம். 83 கலவரத்திலும் சிங்களவரே அதிகம் இறந்து படலாம்.

“He who controls the past controls the future. He who controls the present controls the past.”


மாத்தையா -  சரத் பொன்சேகா - முள்ளிவாய்க்கால் வைத்தியர்கள்

அடெல் பாலசிங்கம் எழுதிய “சுதந்திர வேட்கையில்” மாத்தையா சம்பவத்தை பூடகமாக குறிப்பிட்டிருப்பார்.  மாத்தையாவை கைது செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தபின்னர், அவர் ஓடிவந்து அன்ரன் வீட்டில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினாராம். தன்னை இப்படி கைது செய்வது நியாயம் இல்லை என்று சொன்னாராம். ஆனால் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு றோவோடு தொடர்பு உள்ளது என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் மாத்தையா அப்போதும் உயிருடன் விட்டுவைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஒரு நாள் அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி காண சந்தித்தபோது மாத்தையாவை பார்க்கவேண்டும் என்றிருக்கிறார். மாத்தையாவை காட்டினார்கள். உடல் மெலிந்து, மனம் நொடிந்து மெலிதாக இருந்த மாத்தையாவை அனிதாவுக்கு காட்டுகிறார்கள். “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டபோது “நன்றாக இருக்கிறேன்” என்கிறார் மாத்தையா. … அப்படியே 1984.

நாவலிலும் புரட்சியை ஏற்படுத்திய ஆரம்ப தலைவர்கள் பின்னர் துரோகிகளாக இனம்காண படுகிறார்கள். தம் பிழைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் கடந்த கால தீரச்செயலை வின்சன் துரோகசெயலாக கோப்புகளில் மாற்றி அமைக்கிறான். அந்த தலைவர்கள் இறுதியில் ஒரு தேனீர் கடையில் அழுதபடியே சோர்ந்து போய் இருக்கிறார்கள். கொஞ்ச காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.

images (2)

முள்ளிவாய்க்கால் வைத்தியர்கள் நிலைமையும் இத்தைகையதே. அரசாங்கம் அவர்களை பொய்யை உண்மை என்று சொல்ல வைத்தது. ஆனால் சொன்ன அதே வைத்தியர் அமேரிக்கா போய் வேறுவிதமாக சொன்னார்கள். பொன்சேகா மீதும் போலி குற்றச்சாட்டு. கொஞ்சநாள் உள்ளே. இப்போது ஆள் செத்த பாம்பு.

1984 நாவலில் இல் இந்த வகை கொடுமைகள் அடுத்த லெவலில் இருக்கும். சொல்லுபவர்களை மனதார சொல்ல வைப்பார்கள். அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். உண்மை என்று நம்பியே சொல்லுவார்கள். அப்படி சலவை செய்யப்படுவார்கள். இந்த இடத்தை பாருங்கள்.

The Russians persecuted heresy more cruelly than the Inquisition had done. And they imagined that they had learned from the mistakes of the past; they knew, at any rate, that one must not make martyrs. Before they exposed their victims to public trial, they deliberately set themselves to destroy their dignity. They wore them down by torture and solitude until they were despicable, cringing wretches, confessing whatever was put into their mouths, covering themselves with abuse, accusing in sheltering behind one another, whimpering for mercy. And yet after only a few years the same thing happened over again. The dead men had become martyrs and a degradation was forgotten. Once again, why was it? In the first place, because the confessions that they had made were obviously extorted and untrue. We do not make mistakes of that kind. All the confessions that are ordered here are true. We make them true. And, above all, we do not allow the dead to rise up against us. You must stop imagining that posterity will vindicate you, Winston. Posterity will never hear of you. You will be lifted clean out from the stream of history. We shall turn you into gas and poor you into the stratosphere. Nothing will remain of you: not a name in a register, not a memory in a living brain. You will be annihilated in the past as well as in the future. You will never have existed."


சிங்கப்பூர்

சிங்கப்பூரில் போகும் இடமெல்லாம் கமரா இருக்கும். அல்லது போலிஸ் நடமாட்டம் இருக்கும். ஒன்றுமே இல்லாவிட்டாலும் கூட மக்கள் ஒருவித பயத்திலேயே இருப்பார்கள். கண்காணிக்கப்படுகிறோமோ என்ற அச்சத்திலேயே தவறு செய்யமாட்டார்கள். எதிர்க்கட்சி செயலிழந்து விட்டது. ஒருமுறை ஒரு எதிர்க்கட்சி தலைவர், இலங்கை வம்சாவழி, ஓரளவுக்கு புகழ் பெற்றுக்கொண்டு வந்தார். அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு. முறைகேட்டு குற்றச்சாட்டு. உள்ளே போனார். ஜட்டிவரை சொத்தை இழந்தார். அரசியலில் காணாமல் போனார். அப்படியே 1984. எதிர்க்கட்சி பலம்பெருவதை நாம் விரும்பவில்லை என்பார் லீ சியாங் யுங். எதிர்கட்சிகள் வென்ற ஓரிரு சீட்டுகளிலும் அபிவிருத்தி கொஞ்சம் குறையும். … அப்படியே 1984.

surveillance-cameras

We know that no one ever seizes power with the intention of relinquishing it. Power is not a means; it is an end. One does not establish a dictatorship in order to safeguard a revolution; one makes the revolution in order to establish the dictatorship. The object of persecution is persecution. The object of torture is torture. The object of power is power. Now do you begin to understand me?


1984 திரைப்படம்.

இந்த நாவல் திரைப்படமாக 1954 இலும் பின்னர் 1984 இலும் வந்தது. நாவலை வாசிக்காமல் பார்த்தால் ஒரு மண்ணும் விளங்காது. Vendetta போன்ற படங்களில் இந்த நாவலின் தாக்கம் அதிகம் இருக்கும்.

படத்தை பார்க்கமுதல் நாவலை வாசியுங்கள். முன்முடிபுகள் இல்லாமல் வாசியுங்கள். நாமிருக்கும் உலகத்தை ஓரளவுக்கு புரிய உதவும். திடீரென்று வின்சன் போன்று உணர்வீர்கள்.


இந்த வார நகைச்சுவை கவிதை.

எ எச் எம் அஸ்வர், இலங்கை அரசாங்கத்தின் தேசியப்பட்டியல் எம்பி. இவர் பாராளுமன்றத்தின் மகிந்த பட்ஜட் தாக்கல் செய்தபின்னர் வாழ்த்தி எழுதிய கவிதையின் சில பகுதிகள். (நன்றி வீரகேசரி)

தலைவரே நீடுழி வாழ்க!
photo-6இது முன்னர் வாசித்த
பட்ஜெட் அல்ல
ஒரு மன்னர் வாசித்த
பட்ஜெட்
ஒரு ‘வின்னர்’ (Winner)
வாசித்த பட்ஜெட்
செலவை
அரசு ஏற்றுக்கொண்டு
வரவை
பொதுமக்களுக்கு தந்த
வரவு –செலவுத்திட்டம்
உலக அரங்கிலே
இமாலய உச்சியைவிட
உயர்ந்த இடத்தில்
அதிமேதகு
ஜனாதிபதியே நீங்கள்
இந்த
பொன்மண் ஈன்ற
பொன்மனச்செம்மலே
நாட்டு மக்களை
எல்லா விதத்திலும்
தன்னிறைவு காண வைக்கும்
பட்ஜெட்
தந்தவரே
எங்கள்
இலங்கை தாய்த்திரு மண்ணின்
இடங்களை எல்லாம் பாருங்கள்
நாடு, நகர வனப்பினை
நவின்றிட -
அதன் புகழ் பாடிட
ஓரிருநாள் போதுமா
இலங்கையர்கள் நாங்கள்
பெருமையால் பூரித்துப்போயுள்ளம்
எங்கள் நாட்டு மன்னரே – வின்னரே
பொதுநலவாயத்தின் சக்கரவர்த்தியே – நீங்கள்
வாழ்க - நீடூழி வாழ்க.


பார்சன் என்கின்ற ஒருவர் பெரிய அண்ணரை பார்த்து பரவசப்பட்டு பேசுவதை நாவலில் வாசித்தபோது அஸ்வரின் இந்த கவிதை ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

அப்படியே 1984.

&&&&&&&&&&&&&&

படங்கள் : இணையத்தில் சுட்டது.

இரண்டாம் உலகம்

$
0
0

 

578277_10150989535508313_449493115_n

தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார்.

“சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”

அடுத்தது அவன் தான். பிரேம்நாத்துக்கு கால்கள் உதற ஆரம்பித்தன. விஞ்ஞானம் என்றாலே பிரேமுக்கு ஓடாது. அதுவும் அன்றைக்கு செயன்முறை காட்டவேண்டிய இறுதிநாள். இரண்டு நாட்களாக யோசித்து, யோசித்து ஒன்றுமே சரிவராமல் நேற்று இரவு தான் அவசர அவசரமாக இதை ஒப்பேற்றிக்கொண்டு வந்திருந்தான். வேலை செய்யாட்டி கதை கந்தல்.

மீண்டும் ஒருமுறை மனதுக்குள் பேசவேண்டியதை யோசித்துக்கொண்டான். “கறுப்பு துளை, திண்மம் சுருங்க சுருங்க, ஈர்ப்பு விசை கூடி கூடி, முடிவிலி மையம் உருவாகி வெடித்து …ஒல்ரைட் சமாளித்துவிடலாம்” என்று நினைத்தவாறே தைரியமாக கதிரையில் இருந்து எழுந்தான். முன்னே மணியம் மாஸ்டர் சிரித்தும் சிரிக்காமலும் “வெள்ளன வாடா” என்றார். அவரின் வலக்கை விரல்கள் மூக்கு ஓட்டையிலும், இடக்கை விரல்கள் ஏற்கனவே பிரிந்த மூங்கில் பிரம்பிலும், தாளம் போட்டுக்கொண்டிருந்தன.

நடுங்கியபடியே தன்னுடைய வீட்டுவேலையை எடுத்துக்கொண்டு வகுப்பு முன்னே போகிறான். பிரேம் நடுங்கிய நடுக்கத்தில் இந்தோனேஷியா டெக்கான் தட்டுகள் இடம்மாறி, சுனாமி உருவாகி சுமாத்ரா கரையோரம் வழித்து துடைக்கப்பட்டது. இருபதானாயிரம் பொதுமக்கள் ஜஸ்ட் லைக் தட்டாக இறந்தார்கள்.

தயக்கமாக “வணக்கம் சேர்” என்றான்.

“என்ன செய்தோண்டு வந்திருக்கிற? ஐட்டத்தை எடுத்துவிடு பார்ப்பம்”

பிரேம் கையில் வைத்திருந்த கார்ட்போர்ட் பெட்டியை நிலத்தில் வைத்து திறந்தான். உள்ளிருந்து பட்டும் படாமலும் கவனமாக ஒரு உருண்டை வடிவான பொருளை வெளியே எடுத்தான். அந்த உருண்டை பச்சை நீலம் கலந்த நிறத்தில் இருந்தது. மிகச்சின்னதாக, தன்னைத்தானே சுற்றியபடி …

“என்னடா இது?”
”பூமி சேர்”

“பூமியா?” என்றபடியே மணியம் மாஸ்டர் அந்த உருண்டையை வாங்கினார். தொட்டுப்பார்த்தார். கச கச வென்று இருந்தது. மூக்கை நோண்டிய விரலாலே ஈரலிப்பாக இருந்த பகுதியை நோண்டப்போனார்.

“வேணாம் சேர் .. அமுக்க மாற்றம் வந்திடும் .. ஆக்கள் எல்லாம் செத்துப்போயிடுவினம்”
”ஆக்களா?”
”ஓம் சேர் … ஆக்கள் .. யூ நோ .. பசுக்கள்”
”வலு இன்டரஸ்டிங் .. கொஞ்சம் விளங்கப்படுத்து”

பிரேம் குரலை செருமியபடியே, சட்டைப்பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து வாசிக்கத்தொடங்கினான்.

அனைவருக்கும் வணக்கம். இன்றை வகுப்பில் நான் உங்களுக்கு காட்சிப்படுத்தும் செயன்முறையின் பெயர் பூமி. தோரியத்தை உயர் அழுத்தத்தை உருவாக்கி, செயற்கை முறையில் கறுப்பு துளை ஒன்றை ஏற்படுத்தி, அதற்குள் திணிவு சேர்த்து சேர்த்து …

ஓகே ப்ளக்ஹோல் வெடிக்க வச்சு செய்திருக்கிற .விளங்குது ... அதவிட்டிட்டு இந்த பூமியை பற்றி சொல்லு

பூமி, இதில் எல்லாமே இருக்கிறது. நிலம் கடல் இரண்டுமே ஒரே உருண்டையில் இருக்கிறது. நம்மை போல தண்ணீருக்கு இன்னொரு கிரகம் செல்ல தேவையில்லை. எல்லா மிருகங்களும் ஒரே கிரகத்தில் வசிப்பது போல டிசைன் பண்ணியிருக்கிறேன். ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒவ்வொரு கிரகம் என்று டிசைன் பண்ண எனக்கு டைம் இருக்கேல்ல.

பிரேம் சொல்லிக்கொண்டே போக மணியம் மாஸ்டர் இடைமறித்தார்.

“பொறு பொறு .. அதெப்பிடி எல்லா மிருகங்களும் ஒரே கிரகத்தில்? ஒரே விதமான காலநிலையில் ஒரே மாதிரியான கூர்ப்பு தானே நடக்கோணும்? வேற வேற மிருகங்கள் உருவாக சான்ஸ் இல்லையே?”

பிரேம் அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் சுதாரித்தான்.

“இல்ல சேர் … எல்லா இடத்திலையில் எல்லா நேரத்திலையும் ஒரே காலநிலை இருக்காது. அதால ஓர்கானிக் கொம்பவுண்டுகள் திரிபு அடையிறது எங்கட கிரகத்தில மாதிரி ஒரே சீரா இருக்காது”

மணியம் மாஸ்டர் குனிந்து மார்க்கிங் ஷீட்டில் ஏதோ குறித்துகொண்டார். திடீரென்று அந்த உருண்டையில் இருந்து சின்னதாக பறந்து வந்து நடுவில் வெடித்து சிதறியது.

“என்னடா ஏதோ பறக்குது?”
”மங்கல்யான் சேர்”
”அதென்னது?”
”ரொக்கட் சேர் .. எங்கட பட்டாசு மாதிரி … ”
”வெரி குட் சின்ன சின்ன டிடெயிலிங் எல்லாம் கவனித்து டிஸைன் பண்ணியிருக்கிறாய். ஒவ்வொரு மனிதன், விலங்கு, பறவை .. மரம் மட்டை … அணு”
”குவாண்டம் ஸ்பின் திசை வரைக்கும் புரோகிராம் பண்ணியிருக்கிறன் சேர்”

மணியம் மாஸ்டர் மீண்டும் குனிந்து மார்க்கிங் ஷீட்டில் பதிந்துவிட்டு நிமிர்ந்து வகுப்பை பார்த்து கேட்டார்.

“உங்களில ஆராவது கேள்வி ஏதும் கேக்க போறீங்களா?”

இவ்வளவு நேரமும் தங்களுக்குள் சலசலத்துக்கொண்டிருந்த வகுப்பு திடீரென்று அமைதியானது. சிலர் அப்போது தான் பிரேமின் உருண்டையையே கவனித்தார்கள். பலர் தம்முடைய செயன்முறைக்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

“சேர் ஒரு டவுட்”

545951_10150989535458313_1103390399_nபின் வாங்கிலிருந்து சிவா எழுந்து நின்றான்.

“இந்த பூமில கடவுள் ஆரு?”

கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த கணேஷை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பும் சிரித்தான். பிரேம் அசரவில்லை.

“நீ தாண்டா கடவுள்”

மொத்த வகுப்புமே கோல்லென்று சிரித்தது. மணியம் மாஸ்டரின் கை மீண்டும் மூங்கில் பிரம்புக்கு நெருக்கமாக போக, பிரேம் அவசரமாக விளங்கப்படுத்தினான்.

“சத்தியமா சேர் .. புரோகிராம் பண்ணேக்க சிவா, கணேஷ், கௌதம் இவங்களையே கடவுள் ஆக்கிட்டன். எப்பவுமே வகுப்புக்கு ஹோம்வேர்க் செய்யாம வந்து தோப்புக்கரணம் போடுற கணேஷுக்கு இந்த பூமில ஆக்கள் தோப்புக்கரணம் போடுற … .”

வகுப்பு மீண்டும் கொல்லென்று சிரிக்க, கணேஷ் முகம் கறுத்துவிட்டது. “சத்தம் வரக்கூடாது” என்று மாஸ்டர் மீண்டும் வகுப்பை மிரட்டினார்.

“பிரேம் .. இந்த பூமில ஒரு மனிசனை சாம்பிளுக்கு காட்டினா சரி .. உண்ட அலுவல் முடிஞ்சிடும்”

“சரி சேர்”

நுணுக்குகாட்டி ஒன்றை பிரேம் மணியம் மாஸ்டரிடம் கொடுத்துவிட்டு அதை கொண்டு பூமியைஜூம் பண்ண சொன்னான்.

“சேர் இப்ப நிலப்பகுதி தெரியுதா?”
”ம்ம்”
”இன்னும் ஜூம் பண்ணுங்க .. என்ன சுத்திவர கடல் இருக்கிற நிலமா?”
”யெஸ்”
”ஒகே அது தான் தீவு .. இலங்கை … அப்பிடியே வடக்கு பக்கமா போகஸ் பண்ணி ஜூம் பண்ணுங்க”

அவன் சொல்ல சொல்ல, அவரும் தொடர்ந்து செய்தார். யாழ்ப்பாணம் என்றான். நல்லூர் என்றான். பள்ளிக்கூடம் என்றான். மணியம் மாஸ்டர் நுணுக்குக்காட்டியில் இருந்து கண்களை நகர்த்தாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார்.

“சேர் இப்ப என்ன தெரியுது”
”வகுப்பறை மாதிரி இருக்கு ..”
”முப்பது பெடியள் இருக்கிற வகுப்பில ஒருத்தன் முன்னுக்கு நிக்கிறானா?”
”ஓமடா”
”பக்கத்திலேயே ஒருத்தர் ஒரு உருண்டையை உத்துப்பார்த்துக்கொண்டு …”

கண்களை வெளியே எடுக்காமலேயே ஏதோ சொல்ல முனைந்தவர் திடீரென்று நிறுத்தி அதை கவனித்து கேட்டார். திடுக்கிட்டார். குரல் அடைத்தது.

தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார்.

“சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”

 

************************

நன்றி படங்கள் கேதா (www.colourshades.com.au)


மண்டேலா

$
0
0

 

Nelson-Mandela-by-Eli-Weinberg-1961

கறுப்பின விடுதலைக்கான ஒரு போராளி. போராட்டத்தின் வடிவங்களை, கொள்கைகளை காலத்துகேற்ப மாற்றிய யதார்த்தவாதி. கம்யூனிசம், ஜனநாயகம், இனவாதம், பல்லினவாதம் என்று எல்லாமே இவர் வாழ்க்கையில், காலத்துக்காலம் வந்து போனது. இறுதியில் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்து பயிற்சியும் எடுத்து சிறைக்கு சென்றார். இருபத்தேழு வருடங்கள் சிறைவாசம். அப்போதும் கூட ஆயுதப்போராட்டமே முன்னிலைப்படுத்தப்பட்டது. 2008ம் ஆண்டுவரை அமெரிக்க தீவிரவாத பட்டியலில் அவர் இருந்தாராம்.ஆனால் எழுபதுகளில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அனைவருமே கைதுசெய்யப்பட நிலைமை மாறியது. போராட ஆட்கள் இல்லை. சிறையில் ஒத்துழையாமை நிகழ்ந்தாலும் அது பெரிதாக வெள்ளை ஆட்சியாளரை பாதிக்கவில்லை. ஆனால் இவர்களை சிறைவைத்ததால் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டது. உலகம் இப்பொழுது போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது.

 

Capture2[3]


என்னை பொறுத்தவரையில் மண்டேலா என்ற பெயர் இருபத்தேழு வருடங்கள் சிறையில் வசித்த தனிமனிதனுக்கு சொந்தமானதில்லை. அது அந்த காலத்தில் உலகம் முழுதும் அவரை முதன்மை படுத்தி போராடியவர்கள் அனைவருக்கும் சொந்தமானது. "Free Mandela!"உலகத்தின் தலையாய வாசகம் ஆனது. இவரை கைதுசெய்திருக்காவிட்டால் கறுப்பின விடுதலை பற்றிய எழுச்சி இவ்வளவு வீரியமாக இடம்பெற்று இருக்குமோ? ஆய்வுக்குரியது. ஆனால் அவரின் தளராத மனவுறுதி கேள்விக்கு அப்பாற்பட்டது. ஆட்சிக்கு முன்னரான மண்டேலா என்பவர் ஒரு போராட்ட அடையாளம். கறுப்பின விடுதலைக்கால போராட கிடைத்த சின்னம். அந்த பிடிமானத்தை வைத்து உலகம் முழுதும் நல்லவர்களால் அந்த போராட்டம் நடந்தது. மண்டேலாவை மையப்படுத்தி எப்படி ஒரு இனவிடுதலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.


Frederik_de_Klerk_with_Nelson_Mandela_-_World_Economic_Forum_Annual_Meeting_Davos_1992மண்டேலா என்ற தனிமனிதனின் ஆளுமை ஆட்சி மாற்றத்தின் போது வெளிப்பட்டது. அதிலிருந்து தான் அவர் எம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். மன்னிப்பும் நட்பும் வெட்டிப்பேச்சாக அன்றி நிஜமாகவே வெளிப்பட்டது. "வெள்ளையனே வெளியேறு"என்று உணர்வுகளை தூண்டாமல் அவர்களும் இந்நாட்டு மக்களே என்றார். உடல்களும் உயிர்களும் காயப்படாமல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்த அதிசயத்தை மண்டேலாவும் கிளார்க்கும் நிகழ்த்தி காட்டினார்கள். இந்த இடத்தில் கிளார்க்குக்கு ஒரு சல்யூட். சிறுபான்மை மீது காழ்புணர்ச்சியும் எகத்தாளமும் இருக்கின்ற ஒரு உலகத்தில் எந்த சிறுபான்மை தம்மை அடக்கி ஆண்டதோ அந்த சிறுபான்மையோடு நட்புபாராட்டி மன்னித்து அவர்களையும் உள்வாங்கி ஆட்சி செய்த மண்டேலா வணக்கத்துக்குரியவர். இதை எப்போதுமே நூறுவீதம் செய்யமுடியாது. ஏமாற்றங்கள் மனத்தாங்கல்கள் எப்போதுமே இருக்கும். கறுப்பு இனத்துக்கும் வெள்ளை இனத்துக்கும் இந்த வலி இன்றைக்கும் இருக்கிறது. ஹோர்த்சே எழுதிய "Disgrace"என்ற நோபல் பரிசு நாவலில் அருமையாக விளங்கப்பட்டிருக்கும். இன்றைய தென் ஆபிரிக்க சமூகத்தில் வெள்ளையினர் முகம்கொடுக்கும் பிரச்சனைகளை நினைவுகூருவோம்.


மண்டேலா அந்த வேறுபாடுகள் வெறுப்பாக மாறாத அளவுக்கு ஓரளவுக்கு வேறுபாடுகளை அங்கீகரித்து ஆட்சிசெய்தார். "நடந்ததை மறப்போம், வாங்க பழகலாம்"என்று போலிப்பெச்சு இல்லாமல் நடந்த அநியாயங்களை ஆராய Truth and Reconciliation Commission கொணர்ந்தார். அதை செயற்படுத்தி உண்மைகளை ஆவணப்படுத்தினார். அதன் பின்னர் அதை மன்னித்து முன்னேறினார். ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் தன் மதம், தன் மொழியை முன்னிலைப்படுத்தாமல், தானும் தன் குழந்தைகளுமே ஆட்சியில் இருக்கவேண்டும் என்று நினைக்காமல் ஆபிரிக்காவில் ஜனநாயகம் தளைத்தோங்க அடி கோலினார். தென் ஆபிரிக்கா இன்றைக்கும் பல்லின நாடாக இருக்க அவர் முக்கிய காரணம்.


மண்டேலா காந்தி அல்ல. மண்டேலா செகுவாரோ அல்ல. மண்டேலா லீகுவான்யூவும் அல்ல. மண்டேலா மண்டேலா தான். அவர் போராட்டத்தை, அவர் வாழ்க்கையை அவர் சந்தித்த சூழ்நிலைகளோடு பொருத்திப்பார்த்து எமக்கு தேவையானவற்றை கொண்டாடவேண்டும். சிறைவாழ்க்கையின் போதான அவரின் மன உறுதியும், ஆட்சிமாற்றத்துக்கு பின்னரான அவருடைய தூரநோக்கான பரந்த மனப்பான்மையும் மனிதம் உள்ளவரை மறக்ககூடாத விஷயங்கள்.


இந்த மனிதனை இந்த நாளில் நினைவுகூர்ந்து கொண்டாடுவோம்.

 

mandela1

*********

தொடர்புபட்ட பதிவுகள்

http://www.padalay.com/2012/02/disgrace.html
http://www.padalay.com/2012/03/29-03-2012.html
http://www.padalay.com/2013/03/21-03-2013.html
http://www.padalay.com/2012/03/15-03-2012.html

படிச்சதென்ன? பிடிச்சதென்ன? - கதாவிலாசம்

$
0
0

 

274

ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் வாசகன் தானும் ஒரு படைப்பாளி ஆகிறான். பாத்திரங்களை படைக்கிறான். காட்சிகளை உருவாக்குகிறான். இன்செப்ஷன் படத்தில் அந்த ஆர்கிடெக்ட் பெண், கனவில் கட்டிடங்களையும் மனிதர்களையும் வடிவமைப்பாள். வாசிக்கும்போதும் அது நடக்கும். இராமநாதபுரமும் போஸ்டனும், நல்லூரும் கொழும்பும் அநேகமான நூலகங்களிலேயே அடிக்கடி உருவாகின்றன. மார்கழி மாதத்துகுளிர் வாஷிங்டன் பனி காலத்து நடையை உருவகிக்க போதுமானதாக இருக்கும்.

The namesakeவாசிக்கும்போது நானே கொகுலாகவும் அஷோக்காகவும் ஆஷிமாவாகவும் உருவம் எடுத்திருக்கிறேன். அஷோக் இறந்தசெய்தி கேட்டு ஆஷிமாவுக்கு குளிர முதல் எனக்கு குளிர்ந்தது. பிரிவோம் சந்திப்போம் ரத்னாவுடன் பேசுவதற்கு வெட்கப்பட்டு தலை குனிந்திருக்கிறேன். மஞ்சளழகி கடற்கரையில் நீராடிவிட்டு வருகையிலே வசமிழந்திருக்கிறேன். கோபல்ல கிராமத்து அண்ணாச்சியின் புத்தக அலுமாரியை நோட்டம் விட்டிருக்கிறேன். ஐன்ஸ்டீனோடு பொன் நகரத்து புகையிரத மணிக்கூட்டை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். ஒன்று கதை மாந்தராக நாங்கள் மாறுவோம். இல்லை கதை மாந்தரோடு அசரீரியாக உலாவுவோம்.

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்கும்போது அதை எழுதிய எழுத்தாளன் தான் உலகிலேயே அதி சிறந்த எழுத்தாளன் என்ற எண்ணம் வரும். செல்லம்மாளை வாசித்தபோது புதுமைப்பித்தனை விட எவன் வருவான் என்று எண்ணினேன். கோர்த்சேயின் Disgrace வாசித்தபோது இப்படியும் எழுதமுடியுமா என்று தோன்றியது. கோயில் மண்டபத்து மூலையில் சிவனே என்றிருக்கும் குட்டி பிள்ளையார் சிலையை பார்க்கும்போது அதற்குள் தான் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் வரும். வணங்காமல் போக மனம் வராது. ஒரு அழகான கவர் ட்ரைவை சச்சின் அடித்தாலும் கௌரி அடித்தாலும் மெய் சிலிர்க்கிறது. இதில் பெரியோர் சிறியோர் ஏது?

வாசிப்பும் அப்படியே.

எஸ்ராவின் கதாவிலாசத்தை வாசித்தபோது சேம் பின்ச். மனுஷன் கதாசிரியர்களை கொண்டாடியிருக்கு. கூட வாழ்ந்திருக்கு. ஒப்பிடுதல் என்பது கொண்டாடுவதற்காகவே ஒழிய ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்த அல்ல. அதை எஸ்ரா சொல்லாமல் அழகாக செய்கிறார். தும்பைபூவின் நுனியில் இருக்கும் தேன்துளி சிறிதே என்றாலும் அதன் சுவைக்கு நிகரே இல்லை என்கிறார். தன் வாழ்வில் கண்ட நிகழ்வுகளை, மாந்தர்களை வாசிக்கும்போது கொண்டுவருகிறார். அல்லது அவர்களாக வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். ரசிகன்டா.

வாசித்துக்கொண்டிருக்கும்போதே கேதா வீட்டு கழிவறை கொமெட் டாங்கில் கதாவிலாசம் இருந்த ஞாபகம் வந்தது!

மெசேஜ் அனுப்பினேன். பதில் வந்தது.

"That book changed me, rasikan bass. He get lost and make us get lost and immerse in it."

தன்னை தொலைத்து வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் எழுத்தாளன் ஆகலாம். எஸ்ரா எழுத்தாளன் ஆனதில் ஆச்சரியம் இல்லை. எப்போது எழுத்தாளன் வாசிப்பை நிறுத்துகிறானோ அவன் எழுத்துகளும் ஒரு குறித்த வடிவத்துக்குள் தேங்கிவிடும். அல்லது எழுதுவதை நிறுத்திவிடுவார்கள். வாத்தியார் மரணப்படுக்கையிலும் வாசித்தார். எழுதினார்.

s-ramakrishnan

கதாவிலாசம் … வாசிப்பின் கொண்டாட்டம்.

&&&&&&&&&&

படிச்சதென்ன பிடிச்சதென்ன?

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

$
0
0
நாளைக்கு விடுமுறை.
34 செல்சியஸ் வெக்கை.
வெறிச்சோடிய கார் பார்க்குகள்.
வழமைக்கு மாறான கலகலப்பு.
புதியவர்கள் கூட
நத்தாருக்கு என்ன ப்ளான்?
ஷாப்பிங் முடிஞ்சுதா?
விசாரித்தார்கள்.
ரயிலில் ஒரு சிறுமி
லிண்டொர் தந்தாள்.
ஹாப்பி கிரிஸ்மஸ் என்றேன்.
மெரி கிரிஸ்மஸ் மேட் என்றாள்.
பார்ப்பதை மறைத்து குளிர் கண்ணாடிகள்.
பருவங்கள் காட்டும் உள்ளாடைகள்.
இராமன்கள் கூட இராவணராய்.
சில இராவணர் காமுற்றனர்.
பலர் நாணி நிலம் கிளைந்திட்டனர்.
எங்குமே கலகலப்பு.
எட்டு மணிக்கு வேலை வந்து
அரை மணித்தியாலம் சள்ளடித்து
பத்து மணிக்கு பியர் குடித்து
பதினொன்றுக்கு கட்டி கொஞ்சி
ஹாய் சொல்லி
மதியத்துக்கு வீடு செல்ல
அனைவருமே தயாரானோம்.
உங்கள் வீட்டில் கிறிஸ்மசுக்கு மரம் வச்சாச்சா?
என்றவளிடம்
பொங்கலுக்கு மட்டும் தான் பானை வைப்போம்
என்றேன்.
எங்களுக்கு அதுவே மங்கள விழா.
பானைக்கு மஞ்சள் இலையும்
மாட்டு சாணி, கல்லடுப்பும்
வெடியும் வாங்கும் உற்சாகம்
கிறிஸ்மஸில் வருது இல்ல.
பறவைகள் உயரபறந்தாலும்
வானம் அவைக்கு சொந்தமில்லை.
கூழக்கடாக்களுக்கு
நெடுந்தீவு சொந்தமில்லை.
ஆனாலும் சிறகு விரித்து,
பனை வடலியில் கிடப்பதை
பாதுகாப்பாய் உணர்கிறேன்.
கடல் கரையில் கிடக்கும் மீன்
கண்ணில் நீரை வார்க்குது.
பனி கொட்டி மூடின பயம்
உள் நெஞ்சில் உறைந்து கிடக்கு.
ஊரிலே இன்னும் பனி கொட்டுதா?
பதில் வேண்டாம்.
அங்கே கொட்டுது என்ற எண்ணம்
எனக்கு வெம்மையை தருது.
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

பிடிச்சதும் பிடிக்காததும் 2013

$
0
0

 

IMG_3705

சம்பவங்கள் நாளாந்தம், மணித்தியாலம், நிமிடம், கணம் என்று நடந்துகொண்டே இருக்கும். யாருக்கும் காத்திருக்காது. ஒருநாள் சிட்னி செல்லும் ஹியூம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது கண் சொருக ஆரம்பிக்க, காரை அவசர லேன் பக்கம் நிறுத்தினேன். நண்பன் சிகரட் பற்றவைத்துக்கொண்டான். முகத்தை போத்தல் தண்ணீரால் அடித்து கழுவிவிட்டு, ஆயாசமாய் காரிலே சாய்ந்தபடி நெடுஞ்சாலையை அவதானித்துக்கொண்டிருந்தேன். வாகனங்கள், வேகமாக, மிகவேகமாக மணிக்கு 100, 110, 120, 140 கிலோமீட்டர்கள் என்று பறந்துகொண்டிருந்தன. சில வாகனங்களில் சிரிப்புகள், சிலதில் குழந்தைகள், ஒன்றில் வயோதிபர் ஒருவர் தொப்பியும் அணிந்தவாறு மனைவி சகிதம், இன்னொன்றில் நான்கு இளைஞர்கள் யன்னல் இறக்கி கூக்குரலிட்டுக்கொண்டு. இடையிடையே லாரிகள், கெண்டையினர்கள், பெருத்த உருவத்தில் ஓட்டுனர்கள். எல்லோருக்குமே பொதுவான ஒன்று இருந்தது. அது வேகம். அப்படி எங்கே போகிறார்கள். வேகக்கட்டுப்பாட்டை மீறி அப்படி ஓடுவதற்கு என்ன அவசரம்?

திடீரென்று ஒரு காருக்கு முன்னால் பாய்ந்து தடுத்து நிறுத்தி, ஓட்டுபவனின் குரல்வளையை பிடித்து “எங்கேடா போகிறாய்?” என்று கேட்கவேண்டும் போல இருந்தது. ஒவ்வொருத்தனுக்கு பின்னாலேயும் ஒரு வாழ்க்கை வரலாறு இருக்கிறது என்றான் நண்பன். அவன் அவசரம் அவனுக்கு. அவன் வரலாறு அவனுக்கு.

வரலாறு; கவனிக்கப்பட்டால் தான் அது வரலாறு. கவனிக்கபடாவிட்டால் அது வெறும் சம்பவம். சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கும். யார் கவனிக்கிறார்கள் என்ற கவலை சம்பவங்களுக்கு இல்லை. இந்தக்கணம் என் யாழ்ப்பாண வீட்டின் சாமியறை தட்டுக்கு கீழே இருக்கும் என் ஐந்தாம் ஆண்டு தமிழ் கொப்பியின் மேலாக ஒரு கரப்பான் பூச்சி ஊர்ந்துகொண்டு இருக்கலாம். "C.Jeyakumaran, Year 5A "க்கு மேலே உட்கார்ந்திருக்கலாம். ஆனால் அது வரலாறு இல்லை. வெறும் சம்பவம். ஏன் எதற்கு என்ற காரணங்கள் இல்லாமல் நடக்கும் நிகழ்வுகள். அல்லது எமக்கு தேவையில்லாத காரணங்கள்.

ஆனால் வரலாறு அப்படியில்லை. அதை யாராவது பார்க்கவேண்டும். “History has to be observed, otherwise its not history. Its just … well, things happening one after the other” என்று டெர்ரி பிரச்சடின் “Small Gods” நாவல் சொல்லும். என் பூட்டனார் பெயர் “கந்தர்”. அந்த அளவிலே அவர் வரலாறு ஆரம்பித்து முடிகிறது. அதற்கு மேல் அவர் வாழ்க்கை தலைமுறை தாண்டி கவனிக்கப்படவில்லை. அவர் எப்போது பிறந்தார்? என்ன படித்தார்? முதற்காதலி யார்? நயினாதீவில் அவரை ஏதாவது ஒரு பெட்டை நாய் துரத்தியதா? கள்ளுகுடித்தாரா? மனைவியை முதன்முதலில் முத்தமிடும்போது என்ன சொல்லியிருப்பார், அவருக்கு என் தாத்தாவை விட வேறு பிள்ளைகள் இருந்தார்களா? எப்போது இறந்தார்? … எதுவுமே வரலாற்றில் இல்லை.

IMG_2811

“வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று பகடிக்கு சொன்னாலும் எவ்வளவு சத்தியமான வாக்கு அது. ஒருவர் இறக்கும்போது அந்தியேட்டிக்கு கல்வெட்டு வெளியிடுவதற்கு காரணமே அது தானே. சின்னவயதில் சிரித்திருக்கிறேன். சும்மா கல்வெட்டு வெளியிடுவதற்கு பதிலாக பொது அறிவு புத்தகமாக வெளியிடலாமே என்று நினைத்திருக்கிறேன். இப்போது சில்லிடுகிறது. என் பேரன், பூட்டன் காலத்தில் நான் சார்ந்த விஷயங்கள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டிருக்கும். நான் பத்து நிமிடங்களுக்கு முன்னர் குசினிக்குள் தண்ணீரி குடிக்க போனபோது கால் சறுக்கிவிட்டேன். சம்பவம். நாளைக்கே மறந்துவிடும். மூன்று வாரங்களுக்கு முன்னர் எழுதிய "இரண்டாம் உலகம்"சிறுகதைக்கு கிடந்து மல்லுக்கட்டியதை மனைவி இரண்டு மாதத்தில் மறந்துவிடுவாள். எனக்கு இரண்டு வருடங்களில் மறந்துவிடும். அந்த கதை தமிழில் எழுதப்பட்டதே மறக்கப்படும்.

ஆண்டுகளும் அப்படியே. 2013 முடிந்து 2014 ஆரம்பிக்கிறது. மற்றும்படி இது வெறும் இன்னொரு நாள், மணி, நிமிடம் தானே என்று நினைக்கலாம். உண்மை தான். ஆனால் அப்படி கடப்பதில் ஒரு ஆபத்து இருக்கிறது. வரலாறு ஆக மாறக்கூடிய சம்பவங்கள் வெறும் சம்பவங்களாகவே இருந்துவிடும் ஆபத்து. ஒவ்வொரு ஆண்டுக்கும் கல்வெட்டு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொருவரும் கல்வெட்டு எழுதவேண்டிய தேவையும் இருக்கிறது. இல்லாவிடில் வரலாறு ஒபாமாவுக்கும் மகிந்தாவும் மைந்தன் சிவாவுக்கு மாத்திரம் உரித்தாகிவிடும் அபாயம்.

discworld_terry_pratchett_desktop_1024x768_hd-wallpaper-963407

ஒரு அடர் காட்டுக்குள் மரம் முறிந்து விழும்போது சத்தம் கேட்குமா என்ன? யாருக்கு தெரியும்? நான் இருந்திருந்தால் எனக்கு கேட்டிருக்கும். அல்லது கேட்டவன் சொல்லியிருந்தாலும் தெரிந்திருக்கும். யாராவது இருந்தானா? இருந்தான். இருந்தாள். இருந்தார்கள். அவர்கள் எல்லாம் குட்டி குட்டி கடவுள்கள். பெரிதாக வரம் கொடுக்காத, சின்ன சின்ன செயல்களை கவனிக்கவென்று உருவான கடவுள்கள். ஒரு மரத்தின் சருகு, எங்கே எப்படி விழுந்தால் அது ஒரு ஆற்றில் தத்தளிக்கும் எறும்பு பிழைப்பதற்கு மிதவையாக மாறும் என்பதை தீர்மானிக்கும் கடவுள்கள். அந்த குட்டி கடவுளுக்கும் எறும்புக்கும் சருகுக்கும், அந்த சருகு விழுந்த சம்பவம் வரலாறு. எனக்கும் உங்களுக்கும், எத்தனையோ கோடி உயிரினங்களுக்கும் அதெல்லாம் கவனிக்கபடாத சம்பவம்.

2013ம் ஆண்டு ஒரு சருகு. அதை பற்றிப்பிடித்து பயணம் செய்த எறும்பு நான். சருகை என் கைக்கு எட்டவைத்த எண்ணற்ற இறைவர்கள். என் கூட இருக்கும் குட்டி குட்டி கடவுள்கள். இது எனக்கு வரலாறு. இதை வாசிக்கும், என்னோடு கூட வாழும் குட்டி கடவுள்களுக்கும் 2013 வரலாறு. மற்றவர்களுக்கு இது எங்கோ உதயனில் மூன்றாம் பக்கத்தில் முகம் தெரியாத தாத்தா ஒருவரின் அந்தியேட்டி தின கல்வெட்டு.

என் சக குட்டி கடவுள்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள்.


அரசியல்

இந்த ஆண்டின் முக்கிய அரசியல் ஹீரோக்களுக்கு மூன்று தேர்வுகள்.

ஸ்நோடௌன். இவர் வெளியிட்ட அமெரிக்க உளவு தகவல்கள் உலகையே ஒரு உலுக்கு உலுக்கியது. அவுஸ்திரேலியாவின் உதவி மூலம் இந்தோனேஷியா அதிபர், மனைவி, பிள்ளைகளின் தொலைபேசி உரையாடல்களை கூட அமெரிக்க உளவு பார்த்திருக்கிறது என்ற அதிர்ச்சி செய்தி, இருநாட்டு இராஜதந்திர உறவுகளை அசைத்துப்பார்த்தது. இவர் அமெரிக்காவை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ரஷ்யாவுக்கு தூபம் போட்டது சர்வைவல் சறுக்கல்.

அடுத்தவர் டேவிட் கமரூன். யாழ்ப்பாணம் வந்து, பிரச்சனை பற்றி சரியான தெளிவோடு உரைகளை ஆற்றி சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சனைக்கு ஒரு சின்ன வெளிச்சத்தை கொடுத்தார். உள்நாட்டில் டேவிட் மிலிபாண்ட் தலைமையிலான எதிர்கட்சியை சமாளிக்கத்தான் இந்த ஆக்ரோஷம் என்றாலும் நாம் எதற்கு நாடி பிடித்து பார்க்கவேண்டும்?

மூன்றாவது தேர்வு வேறு எவருமல்லர். கிளிநொச்சி வரை யாழ்தேவி கொண்டுவந்து, பணத்தை அள்ளி கொட்டி, அடங்காதவர்களை மிரட்டி உருட்டி, நாயை வெட்டி வாசலில் போட்டு,  முழு ஆளணியோடு இலங்கை அரசாங்கம் வடமாகாண தேர்தலில் இறங்கினாலும், சிவனே என்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, பின்னர் தேர்தல் நாளன்று கூட்டமைப்புக்கு வாக்களித்து தங்கள் அரசியல் கடமையை சரியாக செய்த ஈழம் வாழ் தமிழ் மக்கள். இவர்களை நம் தலைவர்கள் எப்படி வழிநடத்துகிறார்கள் என்பது 2014 இல் தெரிந்துவிடும்.

2013 ன் மிகச்சிறந்த அரசியல் நாயகர் - ஈழம் வாழ் தமிழ் மக்கள்.

download (1)


விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

2013 Yarl IT Hubக்கு ஒரு முக்கிய ஆண்டு. பாடசாலை மாணவர் மத்தியிலே Yarl Geek Challenge நடத்தியதும், திறமைசாலி மாணவர்களை தம் பக்கம் திரும்ப வைத்ததும் முக்கிய முன்னேற்றங்கள். நாங்கள் வழிநடத்தாமலேயே அடுத்த கட்டத்தை கொண்டு செல்லும் திறமைசாலி மாணவர்கள் இப்போது இருக்கிறார்கள். இவர்களை இனி நாங்கள் நடத்தாமல் எட்ட நின்று கவனிக்கவேண்டும். வெறுமனே ப்ரொஜெக்ட், மீட்டிங் என்று செய்துகொள்ளாமல், ஒரு நல்ல புரஜெக்ட்டை புரோடக்ட் ஆக்கி மக்களை அடையும் வழியை யாழ் மாணவர்களுக்கு காட்டவேண்டும். பணம் பண்ணாமல் எத்தனை புரோஜெக்ட் செய்தாலும் நீண்டநாளைக்கு இந்த மாணவர்கள் தாக்குப்பிடிக்கமாட்டார்கள். இவர்களை சிறந்த வியாபாரிகளாக ஆக்கி, Yarl IT Hub இன் தேவையை இல்லாமல் ஆக்கும் நிலைமை யாழ்ப்பாணத்தில் தோன்றவேண்டும். அதற்கு ராமோஷன், பிருந்தாபன், உதயா போன்ற சிலிக்கன் வாலி சிங்கங்கள் இதில கொஞ்சம் கவனம் எடுக்கவேணும். மற்றவனுக்கு வேலைபார்த்து திருப்திப்படும் மனநிலை எங்கள் தலைமுறையோடு ஒழியட்டும்.

321366_10151367830566415_239903469_n

இந்த ஆண்டு எனக்கு முக்கியமான ஆண்டு. சின்னவயது பௌதீகவியல் ஆசை மீண்டும் துளிர்விட்டு அதற்கென செலவிட நிறைய நேரமும் கிடைத்ததால் ஓரளவுக்கு படிக்க கூடியதாக இருந்தது. விளைவு. கொஞ்சம் சார்புக்க்கோட்பாடு, குவாண்டம் மற்றும் கொஸ்மோ சார்ந்த விஷயங்களோடு மல்லுக்கட்டும் வாய்ப்பு. அலுவலகத்தில் இந்த விஷயத்தை அடிக்கடி விவாதிக்கும் பீட்டருக்கு மிக்க நன்றிகள். ஒரு நாள் மீட்டிங் ரூம் புக் பண்ணி, ஐன்ஸ்டீனின் நகரும் கோல்கள் பரிசோதனை பற்றி மணிக்கணக்காக விவாதித்தது என்னளவில் முக்கியமானது. இந்த அறிவு “கந்தசாமியும் கலக்சியும்” நாவல் எழுதவும் துணை போனது. "ஏண்டா பல்கலையில் பௌதீக விஞ்ஞானம் படிக்காமல் போனோம்"என்று ஏங்க வைத்த ஆண்டு இது.


விளையாட்டு

நம்ம தல பெடரர் தரைவரிசையில் பின்னுக்கு போனாலும் இன்னமும் விளையாடிக்கொண்டிருப்பது நிம்மதி. அவுஸ்திரேலியன் ஒபினில் பெடரருக்கும் முரேக்குமான ஆட்டத்தை பெடரேஷன் சதுக்கத்தில் சுகிந்தன் அண்ண, தவா மற்றும் கொரானா பியர் சகிதம் விசில் அடித்து பார்த்தது யோசித்தால் புன்னகைக்க வைக்கும்.

எழுதும்போது டிவியில் பிரிஸ்பேன் ATP இறுதியாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. மோதுபவர்கள் ஹெவிட்டும் நம்ம தல ரோஜரும். இரண்டாவது செட்டில், ஏஸ், ஏஸ், ஏஸ், ஏஸ் என்று தல ஒரு பொயிண்டை அனாயாசமாய் எடுத்தார். இறுதிவரை உயிரை கொடுத்து போராடி கிண்ணம் வெல்கிறார் ஹெவிட். இருவருக்குமே வயது முப்பதுகளில். டெனிசை பொறுத்தவரையில் கொமென்றி போக்ஸில் இருக்கும் வயது. ஆனால் இறுதியாட்டத்தில். சரக்கென்று தல அடிக்கும் பக்ஹாண்ட் சிலைஸ் ஷாட்டை பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி. எல்லாமே சாதித்தபின்னும் எது இவர்களை இயக்குகிறது? ஆர்வம் மாத்திரமே. இன்னமுமே ராக்கட்டில் படும் அந்த பந்தின் சத்தத்தில் லயிக்கும் ஆர்வம். பெடரர் எமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி. எவருடைய விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யும் உத்வேகம். ஹெவிட்டும் அப்படியே. இவர்களை பார்க்க, ஒரு ஆண்டு முடிந்து ஒரு வயது எகிற, சாதிக்கவேண்டுமே என்கின்ற வெறி அதிகரிக்கிறது. எவர் எதிர்ப்பையும் கடந்து சென்று எமக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யவேண்டும்.

கிரிக்கட்டை பொறுத்தவரையில் இந்த வருடம் சாவு வீடு தான்.  சச்சினும் கலிசும் ஓய்வுபெற்று கிரிக்கட் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது கலங்கவைக்கும். இங்கே லோக்கலில், நம்ம கிரிக்கட் அணி கிட்டு ஞாபகார்த்த கிண்ணத்தில் ரன்னர்ஸ் அப் ஆக வந்தது. வெற்றிக்கு கொஞ்சம் உதவியதும் நமக்கெல்லாம் வரலாறு தான். அதே தொடரில், வைகுந்தன், சுகிந்தன் அண்ணா என்று கொஞ்சபேரை சேர்த்து கரப்பந்தாட்ட அணி அமைத்து விளையாடி மண் கவ்வினோம். வருடம் பூராக ஒவ்வொரு சனிக்கிழமையும் டெனிஸ் விளையாடியும் இன்னமும் ஒழுங்காக ஒரு போர் ஹாண்ட் ஸ்மாஷ் அடிக்கமுடியாமல் இருப்பது இந்த வருடத்தின் துன்பியல் சாதனை.

article-2248050-1421A715000005DC-127_634x447

“பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்” என்று வைரமுத்து சொன்னது போல, ஓய்வுபெற்று இந்த ஆண்டின் ஹீரோவாகிறார் சச்சின்.

 


சினிமா/இசை

Life of Pi

பார்த்த தமிழ்படங்கள் : கடல், விஸ்வரூபம், சூது கவ்வும், என்றென்றும் புன்னகை.
பார்த்த ஆங்கிலப்படங்கள் :  Life Of Pi, The Internship, Jobs, Elysium,  Before Midnight மற்றும் டிவியில் பார்த்த பல பழைய ஆங்கில படங்கள்.

சினிமா சார்ந்த அத்தனை விருதுகளும் Life Of Piக்கே போகும். இப்படி ஒரு படம் இதற்கு முன்னர் நான் பார்க்கவும் இல்லை. இனியும் பார்ப்பேனா என்பதும் சந்தேகமே. ஒரு கல்லை நகர்த்திய படம் இது. இது பற்றி நிறையவே எழுதியாயிற்று.

topimg_19278_ar_rahman_600x400

பிடித்த இசை : ஏ ஆர் ரகுமான் (மரியான், Raanjhanaa)
பிடித்த பாடல் : Tum Tak (Raanjhanaa)
பிடித்த பாடகர் : விஜய் பிரகாஷ் (நேற்று அவள் இருந்தாள்)
பிடித்த பாடகி : ஸ்வேதா மோகன் (சின்னஞ்சிறுகிளியே)



புகைப்படங்கள்

இந்த வருடம் கஜன்மிகவும் போஃர்மில் இருந்த வருடம். அடிக்கடி படம் ஒன்றை அனுப்பி, மச்சி விவரணம் எழுதித்தா என்பான். அனேகமாக எதுவுமே எழுத தோன்றாது. அவ்வளவு விஷயத்தை அந்த படம் கவர் பண்ணியிருக்கும். கேதாவோடு இலையுதிர் காலத்தில் Brightபோய் படம் எடுத்த அனுபவமும், ஒரு நாள் அதிகாலை மெல்பேர்ன் நகரம்முழுதும் ஹர்ஷலோடு அலைந்து திரிந்து படம் எடுத்த அனுபவங்களும் அலாதியானவை. மாலைதீவுகளிலும், பதுளையில் இருந்து கண்டிவரையான ரயில் பயணத்தின் போது கிளிக்கியவையும் இனிப்பவை. கேதா வீட்டில் நான்கைந்து பிளாஷுகளோடு நடந்த ஸ்டூடியோ ஷூட்டை எப்படி மறக்கமுடியும்?
அவ்வப்போது தனிமை கொல்லும்போது கமராவும் காருமே துணையாக இருந்ததை இப்போது மறப்பதும் அழகல்ல!

மிகவும் பிடித்த படம் – கஜன் (www.colorishi.com)

1102510_564196033627751_1147166843_o

நான் கிளிக்கியதில் பிடித்தது.

1391513_10151932021075791_583911598_n1185665_10152017236080791_1079592589_n


வாசிப்பும் எழுத்தும்

சென்ற ஆண்டு புதுவருட சபதமாக “நிறைய வாசித்து கொஞ்சமே எழுதுவது” என்று சொல்லியிருந்தேன். அது ஓரளவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. வாசிப்பது கூட கூட எழுதுவது குறைந்து விட்டது. அதிலே சந்தோஷமே. இந்த வருடம் ஓரளவு கிடைத்த சமயமெல்லாம் வாசித்த புத்தகங்களை தருகிறேன். அநேகமானவை பயணங்களின் போது வாசித்தவையே. அந்த ரயில், விமான இருக்கைகளுக்கும் அவற்றில் யன்னல் திரைகள் காட்டிய கதை மாந்தர் காட்சிகளுக்கும் நன்றி.Frances Harrison உடனான சந்திப்பும், கம்பவாரிதி அனுப்பிய வாழ்த்து மடலும்எழுத்து கொண்டுவந்த நெகிழ்வு தருணங்கள்.

Frances1. Still Counting The Dead – Frances Harrison
2. The mountains echoed – Khalid Hossainei
3. The Code Book– Simon Singh
4. Stephan Hawking – His Life And Work.
5. Albert Einstein – His Life And Universe
6. 1984 – George Orwell
7. Animal Farm – George Orwell
8. Freakonomics
9. Alice In Wonderland
10. The Immigrant – Manju Kapoor
11. Outliers – Gladwell
12. கம்பனைப்போல - ஸ்ரீ பிரஷாந்தன் (தொகுப்பு)
13. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் கவிதைகள் -  ஸ்ரீ பிரஷாந்தன் (தொகுப்பு)
14. கம்பனின் உவமைத்திறன் - ஸ்ரீ பிரஷாந்தன் (தொகுப்பு)
15. கம்பன் என் காதலன் – சிவகுமார்
16. கம்பனின் அரசியல் கோட்பாடுகள் - அப்துல் ரகுமான்
17. மஹாகவியின் ஆறு காவியங்கள் – எம். ஏ. நுஃமான்
18. பூமியின் பாதி வயது - அ முத்துலிங்கம்
19. வானும் கனல் சொரியும் - செங்கை ஆழியான்
20. மீண்டும் வருவேன் - செங்கை ஆழியான்
21. ஆச்சி பயணம் போகிறாள் - செங்கை ஆழியான்
22. ஒரு காதலின் கதை - அராலியூர் ந. சுந்தரப்பிள்ளை
23. கிமு, கிபி – மதன்
24. கதாவிலாசம் – எஸ்.ரா
25. புதுமைப்பித்தன் சிறுகதைகள் (Android Application)
26. 401 காதல் கவிதைகள் – சுஜாதா
27. திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா
28. விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா
29. தண்ணீர் – அசோகமித்திரன்

பிடித்த நாவல் : 1984 – George Orwell
பிடித்த நூல் : Still Counting The Dead – Frances Harrison
பிடித்த சிறுகதை : செல்லம்மாள் – புதுமைப்பித்தன்
பிடித்த இணைய படைப்பு : தூக்குத்தண்டனை (சக்திவேல்)
பிடித்த கவிதை : கம்பன் விழாவிலே “அகலிகை கல்” தலைப்பில் கேதா சொன்ன அரங்க கவிதை. மஹாகவியின் ஏளனம், பெண்ணுக்குரிய ஆதங்கம், காதல், “நான் என்ன பெண் இல்லையா?” வகை அகலிகை ஏக்கம் கேதா குரலில் அட போட வைத்தது. அட போட்டார்கள்.

1984_14_event


பிடித்த கொல்லைப்புறத்து காதலி : குட்டியன்
எழுதியதில் பிடித்த சிறுகதை : எளிய நாய்
எழுதியதில் பிடித்த கவிதை : உயிரிடை பொதிந்த ஊரே
எழுதியதில் முகம் சுழிக்க வைத்த பதிவு :  டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

 

எழுதியதில் பிடித்த குட்டி கவிதை:

யாருமே அற்ற தருணங்களில்
பேசிப்பேசியே கொல்கிறது
மௌனம்.

&&&&&&&&&&&

பிடிச்சதும் பிடிக்காததும் 2012
பிடிச்சதும் பிடிக்காததும் 2011
பிடிச்சதும் பிடிக்காததும் 2010
பிடிச்சதும் பிடிக்காததும் 2009
பிடிச்சதும் பிடிக்காததும் 2008

ஷண்முகி

$
0
0

 

1089730-Clipart-Girl-Under-A-Colorful-Umbrella-Royalty-Free-Vector-Illustration (1)

வாசலில் ஓட்டோ நின்றது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். உயரமான தகர கேட். உள்ளே ஒன்றுமே புலப்படவில்லை.  போன் பண்ணிவிட்டு வந்திருக்கலாமோ? என்று மனைவியிடம் முணுமுணுத்தேன். ஓட்டோ ஓட்டிவந்த ராஜா அண்ணா ஒன்றையும் யோசிக்காமல் கேட்டில் “டங் டங்” என்று தட்டினார்.  பத்து செக்கன் கழித்து கேட் அரை அடி திறக்கப்பட, உள்ளிருந்து ஒரு சிறுமி முகம் எட்டிப்பார்த்தது.

“பாமினி மேடம் … இருக்காங்களா?”

ராஜா அண்ணா கேட்க, பதிலுக்கு அந்த முகம் “வணக்கம் வாங்க” என்று சொல்லி சிரித்தது. அவள் கேட்டை இப்போது நன்றாக திறந்துவிட “வணக்கம் .. எப்பிடி இருக்கிறீங்கள்” என்றபடி நான் உள்ளே நுழைந்தேன். இரண்டு அடி எடுத்து வைத்திருக்கமாட்டேன். “டொக்” என்று என் தலையில் ஒரு குட்டு விழுந்தது.

“கண் என்ன பிடரியிலயா இருக்கு? கோலத்தை மிதிச்சுப்போட்டியள்”

மனைவி திட்ட, “கிளுக்” என்று அந்த சிறுமி சிரித்தாள். அப்போது தான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். மூன்றடி மெலிந்த தேகம். உடல் சைஸுக்கும் மீதமான தொங்கட்டான் பாவாடை சட்டை. நெற்றி முழுக்க வீபூதி, கறுத்தபொட்டு, நடு உச்சி இரட்டைப்பின்னல், சிரிக்கும் போது செந்தழிப்பாக இருந்தாள்.

“அது .. வந்து … கவனிக்க இல்ல .. சொறி .. இந்த புள்ளி கோல டிஸைன் .. நல்லா இருக்கு .. நீங்களா போட்டது?”

இம்முறை கொஞ்சம் வெட்கமும் கூட்டுச்சேர அந்த சிறுமி உள்ளே ஓடினாள்.  அவளை நாங்கள் பின் தொடர, வாசலில் “மலையக இல்லம் உங்களை அன்புடன் வரவேற்..”. சுவரில் எழுதி இருந்ததை வாசித்து முடிக்க முன்னமேயே “வணக்கம் .. உள்ள வாங்களேன்” என்று சிரித்தபடியே வரவேற்றார் ஒரு பெண்மணி. “உட்காருங்க” என்று ஹோல் சோஃபாவை காட்டினார்.

“பாமினி மிஸ் … இவிங்க டான்ஸ் டீச்சரிண்ட மகளும் மருமகனும் … இல்லத்துக்கு எதுனாச்சும் செய்யணுமாம் .. கூட்டிக்கிட்டு வந்திட்டன் ”

“அப்பிடியா .. சந்தோஷம் … என்ன மாதிரி செய்யப்போறீங்க?”

பாமினி கண்ணாடி போட்டிருந்தார். இருபத்தைந்து வயது இருக்கலாம். சத்தமாக பேசினால் நொந்துவிடுமோ என்ற மாதிரிக்கு மிக மென்மையாக பேசினார்.

“எதாவது .. உங்களுக்கு .. என்ன தேவை எண்டு சொன்னீங்கள் எண்டால்”

மனைவியும் பாமினியும் பேச ஆரம்பிக்க நான் ஹோலை நோட்டம் விட்டேன். ஹோலிலேயே சாமித்தட்டு. பூ வைத்து பூசை செய்யும் அடையாளம் இருந்தது. ஒரு பக்கம் தையல் மெஷினில் அரைவாசி தைத்த சட்டையோடு பக்கத்து கதிரை முழுக்க சட்டைகள் நிரம்பிக்கிடந்தன. ஒரு வைட்போர்டில் அந்த இல்லத்துக்கான மாதாந்திர தேவைகளும் உபயகாரர்கள் பெயரும் எழுதியிருந்தது. அரிசி, சீனி, சொயாமீட், பருப்பு, எண்ணை, சவர்க்காரம் என்று சாமான்களும் அதை கொடுத்துதவும் கடைக்காரர் மற்றும் பொதுமக்கள் பெயர்களும். பால்மாவுக்கு மாத்திரம் தனித்தனியாக இரண்டு பெயர்கள். ஆளுக்கு ஒரு கிலோ வீதம் கொடுத்திருந்தார்கள். இரண்டு கிலோ பால்மா பற்றாக்குறை. இன்னமும் உபயகாரர் கிடைக்கவில்லை.

“அதென்ன மில்க் பவுடருக்கு மட்டும் தனித்தனியா டோனர்ஸ் இருக்கு”

”அதுங்களா? இப்ப இந்த மில்க் பவுடர் ஸ்ட்ரைக் தானே … சரியான தட்டுப்பாடு .. இத்தினி நாளா குடுத்தவிங்க இந்த சமயம் ஒண்ணு மட்டும் தான் குடுக்கிறாங்க … ”

”என்ன ஸ்ட்ரைக் .. யாரு …” என்று கேட்க முதல் மீண்டும் “டொக்”. இம்முறை காலில் மிதி விழுந்தது. “வந்த வேலையை பார்க்காம இந்த துலாவாரம் என்னத்துக்கப்பா”.

பாமினி அத்தனை குழந்தைகளையும் கூப்பிட்டார். அனைவரும் ஹோலுக்குள். நான்கு வயதில் இருந்து இருபது இருபத்துநான்கு வயது வரை உள்ள குழந்தைகள். அநேகமானோர் பதுளை தமிழ் பெண்கள் மகாவித்தியாலயத்தில் படிக்கிறார்கள். ஒரு சிலர் உயர்தரம் முடித்து ஆசிரியப்பயிற்சி எடுக்கிறார்கள். அத்தனை பெரும் வரிசையில் வந்து வணக்கம் சொல்லி, காலில் விழ ஆரம்பிக்க திடுக்கிட்டு போனேன். “வேண்டாமே .. யார் காலிலையும் விழாதையம்மா” என்று முதலில் விழ வந்த சுட்டிப்பெண்ணை தூக்கினேன்.

canstock6502700“கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சேர்”

“பெயர் என்ன?”

“ஜூலி”

“ஜூலிக்கு எத்தினை .. ”

நான் முடிக்க முதலேயே உள்ளே நழுவிவிட்டாள்.  எல்லோரும் பொதுவாக வணக்கம் சொன்னார்கள். ஆசிரியப்பயிற்சியில் இருக்கும் பெண் கொஞ்சம் கதைத்தார். விடுமுறையில் வந்திருக்கிறாராம். அங்கே ஊவா பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் வந்திருந்தார்கள். அடிக்கடி வருவார்கள் என்பது அந்த சிறுவர்கள் அவர்களோடு பரிச்சயமாக பேசிக்கதைத்ததில் இருந்து தெரியவந்தது.

“பிள்ளைங்களுக்கு சொக்ஸ் தேவையா இருக்கு .. வாங்கி குடுக்கிறீங்களா?”

அத்தனை பிள்ளைகளின் பெயர், சொக்ஸ் சைஸ் என்று எல்லாமே விறு விறு என்று பாமினி எழுதித்தந்தார். மனைவி அதை வாங்கிப்பார்த்தாள். மனதுக்குள் ஏதோ கணக்கு ஓடியிருக்கவேண்டும்.

“அவ்வளவு தானா .. வேற ஒண்டும் இல்லியா?”

பாமினி தயங்கினார்.

“ஒருதங்கிட்டயும் சோப் கேஸ் எதுவும் கிடையாது  .. முடியுமா?”

”ஓ ஷுவரா… வேற ஏதாவது ..”

”இல்ல.. நீங்களே ஒங்கட வசதிக்கு வாங்கித்தாங்க .. பென்.. பென்சில் எதுனாச்சும்”

”ஓகே .. அவ்வளவு தானா … ஏதாவது எண்டால் சொல்லுங்க .. கையோட வாங்கிக்கொண்டு வாறம்”

மனைவி சொல்ல பாமினி “இப்போதைக்கு இதான்” என்று அதே மென்மையான குரலில் கூறினார்.

“கொடை”

உள்ளே இருந்து பெரிதாக குரல் வந்தது.

“என்னம்மா?”

பாமினி கொஞ்சம் உரத்து கேட்டார்.

“யெனக்கு கொடை வேணும்”

“கொடை எல்லார்கிட்டயும் இருக்கே”

“எங்கிட்ட இல்ல”

பாமினி சங்கோஜப்பட்டு நெளிந்தாற்போல தெரிந்தது. மனைவி கேட்டாள்.

“யார் அந்த பொண்ணு?”

“அதுவா … சண்முகி … ”

பாமினி சொல்ல உள்ளிருந்து மீண்டும் அந்த குரல். இம்முறை குரலில் விசனம் தெரிந்தது.

“சண்முகி இல்ல … ஷண்முகி”

“சொறி .. ஷண்முகி .. அவவுக்கு அப்பிடி சொன்னா தான் பிடிக்கும்”

பாமினி கண்ணடித்து சிரிக்க, புன்னகைத்தோம்.

“ஷண்முகி .. முன்னுக்கு வரமாட்டீங்களா? உங்களுக்கு என்ன வேணும்னு ஹோலுக்கு வந்து சொல்லுங்களேன் ?”

சத்தம் இல்லை. பாமினியிடம் சொன்னேன்.

“குடை இல்லையா?… இல்லாட்டி வாங்கிறம்.. பிரச்சினை இல்ல”

“இல்ல வேண்டாம் .. மளை பெஞ்சுதுன்னு போன மாசம்தான் இவிங்களுக்கு கொடை வாங்கி குடுத்தோம்..”

பாமினி சொல்ல மீண்டும் ஷண்முகி உள்ளிருந்து சொன்னாள்.

”யெனக்கு கெடைக்கல”

”அதை ஏன் அங்கிட்டு உள்ள இருந்து சொல்லுறீங்க .. இங்கிட்டு வாங்களேன்”

இம்முறை நான் அவர்கள் பாணியில் உரத்து சொல்ல, மனைவியிடமிருந்து மீண்டும் ஒரு டொக். உள்ளிருந்து ஒரு சத்தத்தையும் காணும். ஒரே அமைதி. “ச .. ஷண்முகி … ” என்றேன். ”அவுங்களுக்கு கூச்சம்” என்று ஹோலில் இருந்த இன்னொரு பெண் சொல்ல, சிரித்துக்கொண்டே வணக்கம் சொல்லி விடைபெற்றோம்.

“ஷண்முகி .. நாங்க போயிட்டு வாறம்”

பதிலில்லை. சிரித்துக்கொண்டே வெளியேறி நேரே ஒரு மொத்த வியாபார நிலையத்துக்கு சென்று அத்தனை பேருக்கும் விதம் விதமான அளவுகளில் சொக்ஸ் வாங்கினோம். இன்னொரு கடையில் சோப் கேஸ் கட்டு, பேபி சோப், பென்சில், பேனா என்று பொருட்கள் வாங்கி முடிக்கையில்,

“சண்முகிக்கு குடையப்பா”

”..ஷண்முகி”

“ஒண்டு வாங்குவமா?”

”அந்த பொண்ணுக்கு மட்டும் வாங்கி குடுக்கிறது சரியா?”

”அது தானே வாய் விட்டு கேட்டுது ..வாங்காம போகேலாது”

குடை விற்கும் பிரிவுக்கு சென்று, சிறுவர்களுக்கான வானவில் நிற குடை வாங்கி அழகாக பை செய்தோம். திரும்பி போகும்போது “யோவ்.. அந்த கண்டோஸ் பிஸ்கட் எல்லாம் வீட்ட கிடக்கு, எடுத்துக்கொண்டு போவமா” என்று மனைவி கேட்க, ஓட்டோ மீண்டும் வீட்டுக்கு போனது. பிரிட்ஜில் இருந்த கண்டோஸ், பிஸ்கட் எல்லாவற்றையும் பையில் போட்டு கட்டி, திரும்பவும் மலையக இல்லத்துக்கு சென்றோம். அதே சாத்தப்பட்ட உயர கேட். தட்டினோம். அதே பெண். முகம் சிரிக்க திறந்துவிட்டாள். நான் உள்ளே நுழைய, கோலத்தையும் பார்த்து என்னையும் பார்த்து “கிளுக்” என்றாள். அட, நான் மிதித்து கலைந்திருந்த இடம் சரி செய்யப்பட்டிருந்தது. கோலத்தை சுற்றியவாறே உள்ளே நுழைய பாமினி வாசலுக்கு வந்தார்.

“ஓ ஒடனயே வாங்கிட்டு வந்துட்டீங்களா?”

சிரித்தோம்.

“நீங்களே ஓங்க கையால கொடுங்க… பிள்ளைங்க எல்லாம் முன்னே வாங்க”

ஒவ்வொருவராக வந்தார்கள். நன்றி, தாங்க்ஸ், தாங்க்யூ, வெட்கம் .. எல்லாமே வந்தன. வாங்கிவிட்டு எல்லோரும் ஹோலிலேயே கூடி நின்றார்கள். ஒவ்வொருவராக பெயர் கேட்டு விசாரித்தோம்.  ஷண்முகியை தேடினேன். அவள் வெளியே வரவில்லை. வெட்கப்பட்டு உள்ளேயே இருக்கிறாள் என்றார்கள்.

“ஷண்முகி உங்களுக்கு குடை கொண்டு வந்திருக்கோம்.. வந்து வாங்கிறீங்களா?”

”மிஸ்ஸுகிட்ட கொடுங்க .. நான் அப்புறமா வாங்கிக்கறேன்”

உள்ளிருந்து குரல் வந்தது.

”இல்ல ஷண்முகி வந்தா தான் நாங்க குடுப்போம்”

அந்தப்பக்கம் எந்த சத்தமும் இல்லை. “அதுக்கு கொஞ்சம் கூச்சம் அதிகம்” என்றார் பாமினி. “பரவாயில்ல இதை குடுத்துவிடுங்க” என்று மனைவி குடையை நீட்டும்போதே, “நான் கொடுக்கறேன்” என்று இன்னொரு சிறுமி அதை பறித்துக்கொண்டு உள்ளே ஓடினாள். சிரித்தபடியே மற்ற பிள்ளைகளை “அப்புறம் .. சனி ஞாயிற்றுக்கிழமைல என்னெல்லாம் செய்வீங்க?” என்று மனைவி கேட்க, முன்னுக்கு நின்றவர்கள் பேசாமல் நிற்க, பின்னுக்கு நின்றவர்கள் சிரித்தார்கள். ஒரு சிறுமி “படிப்போம்” என்றாள். அதற்கும் சிரிப்பு. இனி என்ன புறப்படலாமா, என்று நினைத்து எழும்போது தான், “பவித்ரா சூப்பரா ஆடுவா” என்று ஒரு குரல் வந்தது. “இன்னிக்கு எத்தினையாவது?” என்று இன்னொரு குரல் கேட்க, மீண்டும் சிரிப்பு.

பவித்ரா என்ற ஐந்து வயது பெண் முன்னே வந்தாள். சிணுங்கினாள். சம்பிரதாய பஃஸ், வெட்கம் எல்லாம் பண்ணி, பின்னர் மொபைல் போனில் பாட்டுப்போடப்பட, ஆட்டம் ஆரம்பித்தது.  “வாங்கண்ணா வணக்கங்கண்ணா .. மை சாங்க நீ கேளுங்கண்ணா”.  டீ வந்தது. நன்றாக இனித்தது. கூடவே கேக், வாழைப்பழம். எல்லோரும் கைத்தட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித உடை. சிலர் சுடிதார். சிலர் பாவாடை சட்டை. சிலர் புரோக். யாரோ கொடுத்த உடுப்புக்கள். ஒருத்தருக்கும் சட்டை சரியான அளவில் இருக்கவில்லை. பவித்ராவின் ஆட்டத்துக்கு அவள் உடையும் ஒத்துழைக்கவில்லை. வியர்த்து வழிந்தது. “குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா, கொட்டுது காதல் தத்துவம் தான்”. “வாங்கண்ணா வணக்கங்கண்ணா .. மை சாங்க நீ கேளுங்கண்ணா”. பவித்ரா தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தாள்.

தேநீர்  கோப்பையுடன் முற்றத்துக்கு வந்தோம். பாமினியும் வந்தார்.

“நீங்க இங்க வேலை செய்யுறீங்களா?”

பாமினியை கேட்டேன்.

”இல்ல .. என்னோட அப்பா தான் இந்த இல்லத்து பிரசிடெண்ட் .. நான் சும்மா..”

சிரித்தார். பாமினியை ஆச்சரியமாக பார்த்தேன்.

“இந்த குழந்தைகளுக்கு சின்னதா ஒரு ஹெல்ப் பண்ண சான்ஸ் தந்ததுக்கு தாங்க்ஸ்”

அதற்கும் சிரிப்பு தான்.

“நீங்கள் இப்படி வந்து போறதே அவுங்களுக்கு மெத்த சந்தோசம் தெரியுமா?”

“ஓ .. இவையள் தங்கட அப்பா .. அம்மா .. குடும்பத்தை மிஸ் பண்ணுவினமா? .. எப்பவாவது ஏதாவது உங்களுக்கு சொல்லுவினமா?”

“ அப்படி பெரிசா .. இல்ல”

நான் எதிர்பார்த்த விடை அதுவல்ல. வியப்பாக இருந்தது.

“என்ன சொல்லுறீங்க .. ஒருத்தரையுமே மிஸ் பண்ணுறதில்லையா?”

“இல்ல சேர் .. இந்த குழந்தைகளுக்கு தாங்க எத மிஸ் பண்ணறோம் எங்கிறது கூட தெரியறதில்ல .. எல்லாரும் ஆறு மாசம் .. ஒரு வயசில இந்த இல்லத்துக்கு வந்தவைங்க .. அம்மா அப்பா .. குடும்பம் .. எல்லாமே இதுகளுக்கு இந்த இல்லம் தான்”

ஒருவித வெறுமை வந்து முகத்தில் அடித்தது.

“அந்தப்பொண்ணு ஷண்முகி?”

“பாவம் சேர் அவ .. நல்ல பொண்ணு அது .. ஒரு மாசம் .. ஹாஸ்பிட்டல்ல .. பொறந்த உடனேயே தாய் வுட்டுட்டு போயிடிச்சு .. போலீஸ் கேஸ் ஆகி, கோர்ட்டு அந்த பொண்ணை இல்லத்தில சேர்த்து வளர்க்க சொல்லிடித்து”

குடித்த தேநீர் மிடறு தொண்டை குழியிலேயே தங்கியது. மீண்டும் பாமினிக்கு நன்றியை சொல்லிவிட்டு, அந்த ஊவா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஒரு நன்றி சொல்லிவிட்டு, அத்தனை பிள்ளைகளுக்கும் வணக்கம் சொல்லி விடை பெற்றோம். குழந்தைகள் எல்லோரும் “தாங்க்யூ அக்கா .. தாங்க்யூ அண்ணா … ஹாப்பி நியூ இயர்” என்றார்கள். சிரித்துக்கொண்டே முற்றத்தில் கால்வைக்க ஒரு சிறுமி ஓடிவந்து என் கையை பிடித்தாள். ஷண்முகியின் குடையை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடின அதே சிறுமி

“என்ன….”

“உஷ்ஷ்…!”

என்று வாயை ஒருவிரலால் மூடி சைகை காட்டியவாறு, என் கையை பிடித்து, இல்லத்து வெளிப்புற யன்னல் பக்கம் கூட்டிச்சென்றாள். “என்னம்மா?” என்று நான் கேட்க மீண்டும் “உஷ்ஷ்..” என்றபடி யன்னலை காட்டினாள். என்னடா என்று எட்டிப்பார்த்தேன்.

நான்கு வயசு இருக்கும். பாவாடை சட்டை. இரட்டை பின்னல் ஜடை. கொஞ்சம் கறுப்பு. அந்த வானவில் நிற குடையை விரித்து பிடித்து சுழற்றிக்கொண்டிருந்தாள். அதற்கேற்றபடி தானும் சுழன்றாள். சுழற்றிய வேகத்தில் ஏழு நிறமும் ஒரே நிறமாய் தெரிய, வாயெல்லாம் விழுந்தும் விழாததுமான பற்களோடு அதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். குட்டியாய் பாட்டு வேறு வந்தது. அட இவள் தானா அது. ஆர்வம் பிடிபடவில்லை.

“ஷண்…”

என்று கூப்பிட நான் விழைகையில், “டொக்” என்று காலை மிதித்தாள் என் மனைவி.

“உஷ்ஷ்…!”

kid-girl-umbrella-drawing-12785108

***************

படங்கள் :
www.clipartof.com
www.canstockphoto.com
http://www.dreamstime.com

Viewing all 494 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>