கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள்.
“என்ன அதுக்குள்ள எண்ணை முடிஞ்சுதா?”
“இல்ல கோமளா … சரியானகியூ .. நாச்சிமார் கோயிலடி வரைக்கும் போய் நிக்குது”
”அதுக்கு?”
நமசிவாயம் தயங்கினார்.
” .. மினக்கட்டு ஒரு லீட்டர் எண்ணைக்கு போய் ரெண்டு கட்டை கியூவில நிண்டுகாயோணுமா? எண்டு வந்திட்டன்.”
”ஏன் இங்கவந்தீங்கள்? .. அப்பிடியே எங்கேயும்போய்துலைஞ்சிருக்கலாமே”
குத்தினாள். அவருக்கு இது புதுதில்லை. குரலெழுப்பாமல் பதில் சொன்னார்.
மேலும் வாசிக்க »“இல்ல பிள்ள .. கொஞ்ச நேரம் நிண்டு பார்த்தன் .. வெயில் தாங்கேலாம போட்டுது .. தலைய சுத்திச்சுது....”
“ஏன் கியூல நிக்கிற மத்தவனுக்கு சுத்தாதா? வேலைவெட்டி இல்லாம சும்மா தானே கிடக்கிறீங்கள்.. அதில போய் நிண்டு வாங்கினா குறைஞ்சாபோயிடும்? வேளாவேளைக்கு அள்ளிக்கொட்டி தின்ன மட்டும்தெரியுது .. கறுமம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் வாங்க தெரியேல்ல”