பண்டைய தமிழ் வரலாற்றில் ஒரு வழக்கம் உண்டு. ஏதாவது திருவிழா, கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டம் கூடினால், அங்கே அறிஞர்கள் பலர் கூடி தமக்குள்ளே வாதப்போர்களில் ஈடுபடுவர். எப்படி? என்றால் வாதப்போர் செய்ய விரும்புபவர் ஒரு நாவல் மரக்கிளையை தனக்கு முன்னே நட்டுவைத்துக்கொண்டு “நாவலோ நாவல்” என்று கூவுவார். உடனே அவரோடு வாதப்போர் செய்யவிரும்புவர் முன்னே வருவார். வாதப்போர் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். சைவ, வைணவ, சமண, பௌத்த விவாதங்களாக இருக்கலாம். கடவுள் இருக்கிறார் இல்லை என்ற வாதமாக இருக்கலாம். அறிவியல் வாதமாக இருக்கலாம். அல்லது மூல வியாதிக்கு காரணம் சோழ மகராசனா? என்ற அபத்தமான டொபிக் கூட பேசப்படும். ஏதோ ஒரு வாதம். வாதத்தில் தோற்பவர், தான் உடுத்தியிருக்கும் துணியைத்தவிர மிச்ச எல்லாவற்றையும் இழக்கவேண்டும். இறுதியில் வெல்பவர் அந்த நாவல் கிளையை பிடுங்கி உயர்த்தி “நாவலோ நாவல்” என்று கூவிவிட்டு மீண்டும் தனக்கு முன்னே நாட்டுவார். கிட்டத்தட்ட WWF கணக்கில் இந்த வாதப்போர் நடைபெறும்.
மேலும் வாசிக்க »