புங்கைதேவனை பறங்கியர் சிறைப் பிடித்துவிட்டனர். இம்முறை காட்டிக்கொடுத்தவன் சாவகசேனன். நல்லகாலம். நான் மட்டும் இல்லாதிருந்தால் புங்கைதேவன் செத்தே இருப்பான்.
யாழ்ப்பாணக் கோட்டையின் மத்தியில் உள்ள மைதானம். அதன் நடுவே புங்கைதேவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலைகுனிந்தபடி நிற்கிறான். அன்றைக்கு மைதானத்தைச் சுற்றி, யாழ்ப்பாணப் பட்டினமே குவிந்திருந்தது. விசேட விருந்தினருக்கென இரண்டு கொட்டகைகளைக் கொண்ட பார்வையாளர் மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்துக் கோட்டைக் கொமாண்டர்கள், வைஸ் கொமாண்டர்கள், கப்பித்தான்கள், அவர்களின் மனைவிமார், பாதிரியார்கள் என்று ஒரு கொட்டகை வெள்ளைக்காரத் துரைமார்களால் நிரம்பியது. மற்றக்கொட்டகையில் வன்னிமைகள், முதலியார்கள், சிறாப்பர்கள் என உள்ளூர் துரைமார். சாவகசேனனுக்கு மூன்றாம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாண்டு வாத்திய அணிவகுப்பு தயாராக நிற்கிறது. எல்லோரும் யாழ்ப்பாணக் கோட்டையின் கொமாண்டர் ரோட்ரிகோ டி சொய்சாவின் வரவுக்காக காத்திருக்கிறார்கள்.
புங்கைதேவன் மெதுவாக தலை நிமிர்த்தி, சுற்றிவர நோட்டம் விடுகிறான்.
மேலும் வாசிக்க »“மரியா எங்கிருக்கிறாள்?”