பாலர் வகுப்பில் தமிழ் பாடத்தில் படித்த கதை இது.
முருகனும் கிருஷ்ணாவும் சந்தையிலே வியாபாரம் செய்யும் சிறுவர்கள். முருகன் காய்கறி, பழங்கள் விற்பவன்; கிருஷ்ணா தேங்காய்க்கடை. ஒருநாள் மாலை, வியாபாரம் முடிந்து சந்தை கலையும் சமயம்; ஒரு பெரியவர் சாமான் வாங்க வருகிறார். முருகனுடைய கடையில் எல்லாமே விற்றுத்தீர்ந்து ஒரேயொரு முலாம்பழம் மட்டுமே எஞ்சியிருந்தது. அது ஒரு பெரிய முலாம்பழம். பெரியவருக்கு பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது.
"அடடா நல்ல பெரிய பழமாக இருக்கிறது .. என்ன விலைடா தம்பி?"
முருகன் எந்த தயக்கமுமில்லாமல் சொன்னான்.
மேலும் வாசிக்க »"அந்த முலாம்பழத்தில் பழுது இருக்கிறது ஐயா "