சிவனே என்று இருப்பேன்.
திடீரென்று முகம், பேர், ஊர் தெரியாத வாசகர் தேடி வந்து ஒரு கேள்வி கேட்பார். எடக்கு முடக்கான ஒரு கேள்வியாக இருக்கும். “யார் அந்த மேகலா?”, “நீங்கள் காந்தன் என்று கஜனைத்தானே நக்கல் அடிச்சிருக்கிறீங்கள்?”, “அந்த தாரிணி இப்ப கனடாவிலா இருக்கிறா?”, “புத்தகம் அடிச்சதில எவ்வளவு காசு உழைச்சீங்கள்?”, “பேமஸ் ஆகலாம் எண்டோ எழுதிறனீங்கள்?” இப்படி கேள்விகள் பல வகைப்படும். அவர் தம்பாட்டுக்கு கேட்டுவிட்டு போய்விடுவார். அனேகமான கேள்விகளை அவுட் சைட் ஒப் ஸ்டம்ப் லீவ் பண்ணீட்டு அடுத்த பந்துக்கு தயாராவேன். ஆனால் சிலது விக்கட்டுக்கு குளோசாக எகிறினால் துடுப்பை கொடுத்தே ஆகவேண்டும். அதுவும் சில கேள்விகள் இரண்டு மூன்று நாட்களாகவும் தொடர்ந்து அரித்துகொண்டிருக்கும்.
அப்படி ஒரு கேள்வியை வாசகர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் கேட்டுத்தொலைத்தார்.
“அண்ணே .. நீங்க நல்லா எழுதுறீங்கள் .. ஆனா எதுக்கு நீங்கள் இப்பிடி எழுதுறீங்கள்? என்ன காரணம்”
“என்ன புள்ள, இப்பிடி பொசுக்குன்னு கேட்டுப்புட்ட” என்றுதான் மனதில் தோன்றியது. ஐந்தரைக்கு எலார்ம் வைத்து, ஒரு பிளேன்ரீயும் கையுமாக அமுதவாயனை ஆரம்பிப்போம் என்றால் இப்படி ஒரு கேள்வி வரும் என்று எவன் கண்டான்?
மேலும் வாசிக்க »