அத்தியாயம் 4
நிலவு மிகவேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. வழியில் கடந்துபோகின்ற எந்த முகிலுக்கும் வணக்கம் வைக்காமல், அவற்றுக்குள்ளே மூழ்கி, எழுந்து, மறைந்து, வெளியேறி, என்ன அவசரமோ, யாரையோ தேடி ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சத்தூரம் அப்படி ஓடிய நிலவு திடீரென்று அசையாமல் நின்று சுற்றும் முற்றும் பார்த்தது. அட தன்னைச்சுற்றி எதுவுமேயில்லை. ஓடி ஓடி கடைசியிலே தனியனாக வானத்திலே நிற்கிறேனே என்று வருந்தியது.. நிலவுக்கு இப்போது தான் எதற்காக இதுவரையும் ஓடினேன் என்பதுகூட மறந்துவிட்டது. நான் எங்கிருக்கிறேன்? என்று சத்தமாகவே கேட்டது.
“எங்கேயும் போகவில்லை, இங்கேயேதான் இருக்கிறாய். ஓடினது முகில்தானே ஓழிய நீயல்ல. அதுபுரியாமல் மூச்சுக்கூட உனக்கு இரைக்கிறது பார்”
கோடன் நிலவைப்பார்த்து சொல்ல, அது மூச்சிரைப்பதை நிறுத்திவிட்டு முகில்களை தேடத்தொடங்கியது.
மேலும் வாசிக்க »